"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


பணியிடத்தில் தொந்தரவு செய்யும் ஆண்களை ஒடுக்க புது வழி!

பணியிடத்தில் தொந்தரவு செய்யும் ஆண்களை கட்டுக்குள் வைக்க புது சட்டம் வந்திருக்கிறது. அனைத்து மருமகள்களும் இதைப் பற்றி தெரிந்துகொண்டால் தாங்கள் பணி புரியும் இடங்களில் ஆண்களை பின்னுக்குத் தள்ளி எளிதாக பதவி உயர்வு பெறலாம்.

படத்தின் மீது “Right Click” செய்து "Open Link in New Tab" என்பதை “Click" செய்து பெரிதாக்கி அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!!





வெளிநாட்டிலிருந்து வரும் உங்கள் கணவனை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டுமா?

மருமகளுக்கு பிடிக்காத கணவனையும், அவனது குடும்பத்தையும் ஏதாவது செய்ய வேண்டும்போல ஒரு உள்ளுணர்வு பல மருமகள்களுக்கும் உள்மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.   என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது மருமகளின் தந்தை, சகோதரன் போன்றவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்தோ அல்லது செய்தித்தாள், தொலைக் காட்சி போன்றவற்றில் பார்த்து தெரிந்துகொண்டு   ஒரு நல்ல வழிமுறையை மருமகளுக்கு ஆலோசனையாக வழங்குவார்கள்.  அது என்ன என்று கேட்கிறீர்களா?

அதுதான் இந்திய அரசாங்கம் மருமகள்களுக்குக் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம்.  இதன் பயன்பாடுகள் பற்றி இந்த ஒரு பதிவில் எழுதி முடிக்க முடியாது. இந்த சட்டங்கள் மூலம் மருமகள்கள் அளவிடற்கரிய பலன்களை அடையலாம்.  உதாரணத்திற்கு தனிக்குடித்தனம் வராத கணவனையும், அதற்குத் தடையாக இருக்கும் மாமியாரையும் பெட்டிப் பாம்புபோல அடக்கிவிடலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள பின்வரும் முந்தைய பதிவுகளை படித்துப் பாருங்கள்.


எல்லாம் சரி இப்போது கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். மருமகள் ஏதோ காரணத்தால் இந்தியாவிற்கு வந்துவிட்டால் அந்தக் கணவனுக்கு எப்படி பாடம் புகட்ட முடியும்? என்று பல மருமகள்களுக்கும் சந்தேகம் இருக்கும்.  கவலையே படாதீர்கள்.  மருமகளுக்கு பிடிக்காத கணவன் உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் பிடித்து பாடம் புகட்டக் காத்திருக்கிறது இந்திய காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை.  
 
மருமகள் செய்யவேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான்.  தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் கணவன் வரதட்சணைக் கொடுமை செய்தான் என்று ஒரு எளிய புகாரை பதிவு செய்யவேண்டும்.  பிறகு காவல்துறையினரிடம் சொல்லி கணவன் வெளிநாட்டில் இருப்பதால்  மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்தி அவனை தேடப்படும் சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் (Red Corner Notice) செய்துவிடலாம்.  

இதற்கு நடுவே மற்றொரு சிறிய வேலை இருக்கிறது.  நமது காவல்துறை நண்பர்களை பயன்படுத்தி கணவன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை (FIR) பயன்பத்தி இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள்,  தரைவழி எல்லைகள் இங்கெல்லாம் உள்ள இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிவைக்கலாம்.  இதனை தேடப்படும் குற்றவாளி சுற்றறிக்கை (Look Out Circular)  என்று அழைப்பார்கள்.  இந்தியாவிலிருந்து தப்பித்துவிட்ட கொடிய குற்றவாளி எப்போதாவது இந்திய எல்லைக்குள் நுழையும்போது குடியேற்ற அதிகாரிகள் மூலம் குற்றவாளியை கைது செய்ய காவல்துறை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவார்கள்.

இப்போது இதே வழிமுறையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தெரியாமல் அவன் மீது இந்தியாவில் வரதட்சணை வழக்கு பதிவு செய்து அவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வழக்கிலிருந்து தப்பித்து வெளிநாட்டில் ஒளிந்துகொண்டிருப்பதாக சித்தரித்து அனைத்து விமானநிலையங்களுக்கும் அறிவிப்பு செய்துவிட்டால் போதும்.  இங்கு நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று தெரியாமல் கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவனை பிடித்து நாட்டைவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதி போல கைது செய்து  காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள். 

இந்தக் காட்சியை கண்ணாறக்கண்டு களிக்க காவல்துறை நண்பர்களிடம் சொல்லிவைத்திருந்தால் போதும் கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டதும் உங்களுக்கு தொலைபேசியில் தகவல் தருவார்கள்.  உடனடியாக நீங்கள் உங்களது செய்தித்தாள், தொலைக்காட்சி மீடியா நண்பருடன் விமான நிலையத்திற்கு சென்று கணவனை படம் பிடித்து வரதட்சணை வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டான் என்று செய்தி வெளியிட்டு விமான நிலையத்திலேயே தீபாவளியை கொண்டாடிவிடலாம். அதுபோல் ஒரு மருமகள் கணவனை விமானநிலையத்தில் கைது செய்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். படித்து கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனுக்கெதிராக Look Out Circular, Red Corner Notice  போன்றவறை ஒரு எளிய வரதட்சணைப் புகார் மூலம் எப்படி தயார் செய்வது என்ற தகவல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
  1. வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி?
  2. NRI கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி? - இளம் மருமகளுக்கு மட்டும்
  3. NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்
  4. NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?
  5. NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?
  6. NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்

வாழ்த்துக்கள்!!
 

தாம்பரம், அக். 29-
 
மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து இருந்தார்.
 
இதுதொடர்பாக விஸ்வநாதனிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார். அவர் ஜெர்மனி சென்று இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜெர்மனியில் இருந்து வந்த விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
அப்போது வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரல் தேடப்பட்ட விஸ்வநாதன் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்வது ஆபத்தானதா?

இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்களுக்கு கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்யும் வித விதமான கொடுமைகள் என்னென்ன என்று டில்லியைச் சேர்ந்த “மனுஷி” என்ற அரசு சாரா மகளிர் அமைப்பு ஆராய்ந்து ஒரு பட்டியில் வெளியிட்டிருக்கிறது.

இந்திய மருமகள்கள் தாங்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபிறகு அந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த பட்டியலை படிக்கும்போது உள்ளம் நடுங்குகிறது.  இப்படிப்பட்ட இந்திய ஆண்களை நம்பி இந்திய இளம் பெண்கள் திருமணம் செய்வது எவ்வளவு ஆபத்தான செயல் என்று தோன்றுகிறது.


The forms of marital cruelty as recognised by the courts are as follows 
 Laws against Domestic Violence, Manushi (Vol. 137) July-Aug, 2003, New Delhi, pp.24-25

a) Persistent denial of food
(பல நாட்கள் உணவு கொடுக்காமல் மருமகளை துன்புறுத்துதல்)

b) Insisting on perverse sexual conduct
 (தகாப்புணர்ச்சிக்கு வற்புறுத்துதல்)

c) Constantly locking a woman out of the house
(வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுதல்)

d) Denying the woman access to children, thereby causing mental torture
(குழந்தைகளை மருமகளின் கண்ணில்கூட காட்டாமல் விரட்டுதல்)

e) Physical violence
(அடித்து உதைத்தல், சிகரெட்டால் சூடு வைத்தல், தலையில் பீரை ஊற்றி “பீர்” குளியல் செய்வது, இன்னும் பல)

f) Taunting, demoralising and putting down the woman with the intention of causing mental torture
(மருமகளைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பேசி மருமகளின் மனதை காயப்படுத்துதல்)

g) Confining the woman at home and not allowing her normal social intercourse
(மருமகளை வீட்டிற்குள் தனியறையில் அடைத்துவைத்தல்)

h) Abusing children in their mother’s presence with the intention of causing her mental torture
(மருமகளின் கண்ணெதிரே அவரது குழந்தைகளை துன்புறுத்துதல்)

i) Denying the paternity of the children with the intention of inflicting mental pain upon the mother
(மருமகளுக்குப் பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்றுகூறி கணவன் மருமகளின் மனதை புண்படுத்துதல்)

j) Threatening divorce unless dowry is given
(கேட்ட பொருட்களையும், பணத்தையும் கொடுக்க மறுத்தால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டுதல்)


மருமகள்கள் இந்த பட்டியலை கவனமாக படித்து குறிப்பெடுத்துக்கொண்டு கணவனுக்கெதிரான தங்களது வரதட்சணைக் கொடுமை புகாரை எழுதும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!!!


வரதட்சணை வழக்கில் கணவனை அதிரடியாக கைது செய்வது எப்படி?

கணவனையும், அவனது குடும்பத்தையும் மருமகளுக்கு பிடிக்காத சூழ்நிலை ஏற்படும்போது மருமகளுக்கு கைகொடுத்து உதவுபவைதான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும்.  அதுபோன்ற சூழ்நிலையில் கணவனும், அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக் கொடுமை செய்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சில சமயங்களில் காவல்நிலைய அதிகாரி அந்த புகாரை பதிவு செய்ய தயங்குவார்.   இதனை எப்படிக் கையாள்வது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய காவல்துறை பணித் தேர்வு எழுதி பதவிக்கு வரும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் போன்றவர்கள் இந்திய மருமகள்களின் கவலையை போக்குவதற்கு பெரிதும் உதவுவார்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இன்று தெரிந்துகொள்ளுங்கள். 

கணவனை வரதட்சணை வழக்கில் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் புகாரை தெளிவாக எழுதி (புகார் எழுதத் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞரின் உதவியை நாடலாம்) அழகாக தட்டச்சு செய்து, நேர்த்தியாக உடையணிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக காவல் கண்காணிப்பாளரிடம் உங்களது புகாரை கொடுங்கள்.   பிறகு பாருங்கள் புகாரை பதிவு செய்து கணவனை கைது செய்யும்படி காவல்நிலையத்திற்கு உத்தரவு பறக்கும்.

காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு கிடைத்ததும் காவல் நிலையத்தில் உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.  உடனடியாக கணவனின் வீட்டிற்கு காவலர்கள் ஓடிச் சென்று கணவனையும், அவனது குடும்பத்தையும் கூண்டுடோடு  காவல் நிலையத்திற்கு கட்டி இழுத்து வந்துவிடுவார்கள்.  கணவனை கைது செய்து அழைத்துவரும் காட்சியைக் கண்ட மகிழ்ச்சியில் காவல் நண்பர்களுக்கு போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகள்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!

இந்த வழிமுறையில் இன்றைய செய்தியில் பாருங்கள் ஒரு வீரமான மருத்துவ மருமகள் தனது கணவனை காவல்துறை மூலம் அதிரடியாக கைது செய்ய வைத்திருக்கிறார்.


விருதுநகர்: விருதுநகரில், பெண் டாக்டரை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்த, பல் டாக்டர் ஹேமாசங்கரி.
இவர், நஜ்மல் கோதா எஸ்.பி., யிடம் கொடுத்த புகார்: எனக்கும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி உதவி பேராசிரியர் மலைராஜனுக்கும், 2007 நவ., 14 ல், திருமணம் நடந்தது. வரதட்சணையாக 60 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய், 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டன.

கடந்த 2009 ல், மலைராஜன், மாமியார் குருவம்மாள், நாத்தனார் லதாதேவி (மதுரை மீனாட்சி கல்லூரி உதவி பேராசிரியர்), மைத்துனர் அழகுராஜா (தனியார் கல்லூரி பேராசிரியர்) கேட்டதற்கிணங்க, ஒரு லட்சம் ரூபாய், 25 பவுன் நகையை, எனது பெற்றோரிடம் வாங்கிக் கொடுத்தேன்.

மீண்டும் வரதட்சணையாக, ஐந்து லட்சம், 25 பவுன் நகை வாங்கி வர, கணவர், குடும்பத்தார் வற்புறுத்தினர். "என்னால் கொடுக்க முடியாது' என, கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என, குறிப்பிட்டிருந்தார். மலைராஜனை, மகளிர் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
மேற்கண்ட செய்தியை படித்தவுடன் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-3ன் படி  “வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தானே” என்று  சில மருமகள்களுக்கு லேசான சந்தேகம் வரலாம்.  அதைப் பற்றி கவலையே படாதீர்கள்.  புகாரிலும் சரி, செய்தித்தாளிலும் சரி நீங்கள் வெளிப்படையாக வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்ததாக தைரியமாகக் கூறலாம். அப்போதுதானே அதன் தொடர்ச்சியாக கணவன் மேலும் வரதட்சணை கேட்பதாக புகாரை ஒரு கோர்வையாக எழுதமுடியும்?

அதனால் நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தயங்காமல் புகாரில் எழுதலாம்.  அப்படி எழுதினாலும் காவல்துறையோ, நீதிமன்றமோ மருமகளை ஒன்றுமே கேட்கமாட்டார்கள்.  அதுமட்டுமல்லாமல் மருமகள்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7ல் வரதட்சணை கொடுத்திருந்தாலும் தண்டிக்க முடியாதபடி பாதுகாப்பும் இருக்கிறது.

 இப்போது மத்திய அரசாங்கம் மருமகள்களுக்கு சாதகமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்களை கொண்டுவரவிருக்கிறது.  இதனால் மருமகள்களுக்கு அமோகமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லாம்.  முன்பெல்லாம் கணவனுக்கு 5 ஆண்டுகள்தான் தண்டனை, இப்போது அதனை திருத்தி 7 ஆண்டுகள் என்று மாற்றவிருக்கிறார்கள்.  இதன் மூலம் ஏராளாமான பலன்கள் மருமகள்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.  இப்போதைக்கு மத்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து  இந்த சட்டதிருத்தத்திற்கு உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

வாழ்த்துக்கள்!!

வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது
தினமலர்
செப்டம்பர் 01,2012

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும்.

அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். இச்சட்டத்தின் கீழ், குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் என, வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.




ஆண் பல மனைவியரை வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் பல திருமணம் செய்தால் “செக்ஸ் வெறி” என்கிறது!

பெண்களைப் பற்றிய இந்தியர்களின் சிந்தனை மிகவும் விசித்திரமானது.  இந்தியாவில் சட்டத்தை பின்பற்றி நாட்டை வழி நடத்தவேண்டிய பல ஆண்கள் பல மனைவியரை வைத்திருந்தால் வாயை பொத்திக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மக்கள் ஒரு பெண் பல திருமணம் செய்தால் “செக்ஸ் வெறி” என்கிறார்கள். 

பெண்களை அடிமைப்படுத்தும் மனநிலையிலேயே இருக்கும் ஆணாதிக்க சமுதாயம் தான் செய்வது மட்டும்தான் சரி என்று எண்ணி பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்பது பின்வரும் இரு செய்திகளில் தெரிகிறது. 

In South India, more the merrier

May 2, 2006 Times of India


HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.

Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

Actor-director K Bhagyaraj even made a Tamil movie called Chinna Veedu.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate. An academic said, "The social sanction for two wives can be traced to religion and mythology. Lord Muruga, for instance, had two wives."

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.

=====

"செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்
தினமலர் 23 ஆகஸ்ட் 2012
சென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். "செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.





மருமகளின் வரதட்சணை வழக்கை காரணம் காட்டி விவாகரத்து கோரும் கணவனின் முகத்தில் கரி பூசுவது எப்படி?

மருமகள்களே,

இன்றைய பதிவில் விவாகரத்து வழக்கு தொடர்பான மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விளக்குகிறேன்.  குறிப்பெடுத்துக்கொள்ள கையில் நோட்டுப்புத்தகம், எழுதுகோல் எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 

மருமகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்த இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் (IPC498A, Dowry Prohibition Act) பல காலமாக மருமகள்களுக்கு உதவி வருகின்றன என்று பல மருமகள்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்.  இதுவரை தெரிந்துகொள்ளாத அப்பாவி மருமகள்கள் பின்வரும் இணைப்புகளில் சென்று அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.  பொதுவாக வரதட்சணை வழக்கு பதிவு செய்தவுடன் காவல்துறை நண்பர்கள் கணவனையும், அவனது குடும்பத்திலுள்ள அனைவரையும் (மாமியார், நாத்தனார்கள், நாத்தனார்களின் கணவன்கள், கணவனின் அண்ணன்கள், அண்ணிகள்) கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருந்து பிறகு ஜாமினில் விடுவது வழக்கம்.  அதன்பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கை நம் விருப்பப்படி நீட்டித்து பல ஆண்டுகள் கணவனை நீதிமன்றத்தில் அலையவிட்டு வேடிக்கை பார்க்க நீதிமன்றம் மருமகள்களுக்கு ஒத்துழைப்பது மரபு.  இதுபற்றி எல்லா மருமகள்களுக்கும் நன்றாகத் தெரியும். 

இதுபோன்ற சமயத்தில் கணவன்கள் மருமகளை வெறுத்து ஒதுக்க நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது இந்த வரதட்சணை வழக்கை காரணம் காட்டி  விவாகரத்து கோரலாம் என்று வழக்கறிஞர்கள் கணவன்களை தவறாக வழிநடத்திச் செல்வார்கள்.  அதுவும் ஒருவகையில் நமக்கு நல்லதுதான்.  ஏனென்றால் கடைசியில் மருமகளின் அனுமதியில்லாமல் கணவனுக்கு விவாகரத்து கிடைக்காது என்பது அந்த முட்டாள்களுக்கு பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் நடையாய் நடந்த பிறகுதான் புரியும்!

சில துரதிர்ஷ்டமான சமயங்களில் வரதட்சணை வழக்கை நடத்தும் நீதிமன்றம் கணவனையும், அவனது குடும்பத்தாரையும்  மருமகள் தொடுத்த வரதட்சணைக் கொடுமை வழக்கிலிருந்து விடுதலை செய்துவிடும்.  அதுபோன்ற சமயங்களில் கணவன்கள் ஏதோ தங்களை புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு  மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகார் பொய்யானது அதனால் எங்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டது.  மருமகளின் இந்த பொய் வழக்கு காரணமாக எனது குடும்பத்தார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது மருமகளால் கணவனுக்கு மனதளவில் இழைக்கப்பட்ட கொடுமை என்று கூறி இந்து திருமணச்சட்டம் பிரிவு 13-ன் படி விவாகரத்து கோருவார்கள்.

இதுபோல் மருமகளின் வரதட்சணை வழக்கை பொய் என்று கூறி விவாகரத்து கோரும் கணவன்களின் முகத்தில் கரி பூசி விவாகரத்து கிடைக்காமல் செய்து மருமகள்கள் வெற்றி பெற சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

மருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்து அதனால் கணவனின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகார் பொய்யானது என்று கூறிவிடமுடியாது.  அதனால் கணவனின் குடும்பத்தார் சிறையில் அடைக்கப்பட காரணமாக இருந்த மருமகளின் செயல் கணவனுக்கு செய்யப்பட்ட கொடுமையாக கருதமுடியாது.  இதன் அடிப்படையில் கணவன் கோரும் விவாகரத்தை வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கணவன்களுக்கு நெத்தியடி கொடுக்கும்விதமாக மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.  கவனமாக குறிப்பெடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
High Court of Judicature at Madras
23-12-2011
Judge(s)

JUSTICE K. MOHAN RAM & JUSTICE G.M. AKBAR ALI
Parties
P. Abirami Versus D.E. Tamilarasan
Advocate(s)
For the Appellant: D. Ramalingam for Sudha Ramalingam, Advocates.
For the Respondent: M. Venkatachalapathy, Senior Counsel for M. Kempraj, Advocate.
Hindu Marriage Act, 1955 (25 of 1955), Section 13 – Mental Cruelty – Decree of divorce – Grant of - Validity of – Decree of divorce granted in favour of husband by Trial Court on account of mental cruelty – However, no specific acts, which amounted to mental cruelty, have been pleaded with material particulars – Only general allegations made in petition for divorce – Allegation that wife did not behave as a dutiful wife also not substantiated – Moreover, allegations that husband was not informed about pregnancy of wife also proved to be false – Acquittal of mother and sister in Criminal case filed by wife would not prove that Complaint being falseThus, allegation of mental cruelty not established – Decree of divorce granted on ground of mental cruelty, set aside.

இந்த தீர்ப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு கணவனுக்கெதிராக வரதட்சணை வழக்குத் தொடர்ந்த மருமகள்கள் தங்கள் தரப்பு வாதத்தை குடும்ப நல நீதிமன்றத்தில் முன்வைத்து கணவன் கோரும் விவாகரத்தை அவனுக்குக் கிடைக்காமல் செய்து விடலாம்.

ஆனால் பல முறை இந்திய உச்ச நீதிமன்றம் இதுபோல மருமகள் தொடுக்கும் வரதட்சணை வழக்கில் கணவன் குடும்பத்தார் விடுதலை செய்யப்பட்டால் அதனை மருமகள் செய்த கொடுமையாகக் கருதி கணவன் விவாகரத்து கோருவது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  சமீபத்தில்கூட ஒரு விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அதைப்பற்றி கூறியிருக்கிறது.  ஆனால் இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் எத்தனை கணவன்களால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டில்லிவரை சென்று வழக்கறிஞருக்கு பல லட்சம் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி விவாரகத்து பெறமுடியும்?   இந்த "வீக்னஸ்" மருமகள்களுக்கு மிகவும் சாதகமான விஷயம்தானே?! 
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPELLATE JURISDICTION
CIVIL APPEAL NO . 4905 OF 2012
(Arising out of S.L.P. (Civil) No. 16528 of 2007)
July 04, 2012
Vishwanath S/o Sitaram Agrawal .....……..Appellant
Versus
Sau. Sarla Vishwanath Agrawal ………Respondent

35. Another aspect needs to be taken note of. She had made allegation about the demand of dowry. RCC No. 133/95 was instituted under Section 498A of the Indian Penal Code against the husband, father-in-law and other relatives. They have been acquitted in that case. The said decision of acquittal has not been assailed before the higher forum. Hence, the allegation on this count was incorrect and untruthful and it can unhesitatingly be stated that such an act creates mental trauma in the mind of the husband as no one would like to face a criminal proceeding of this nature on baseless and untruthful allegations.
இப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவது உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதவரை மருமகள்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தேவையானபடி உயர்நீதிமன்றங்களில் பெற்றுக்கொண்டு கணவனை ஒரு வழி செய்துவிடலாம்.

அப்படியே குடும்பநல நீதிமன்றத்தில் மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் அதனை எதிர்த்து மாவட்ட நீதிமன்றம் செல்லலாம், அதற்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அங்கும் மருமகளுக்குத் தேவையான தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்லாம்.  இந்த நீதிமன்றங்களில் தீர்ப்பு கிடைக்க சுமார் 25-50 ஆண்டுகளாவது ஆகிவிடும்.  அதுவரை கணவன் வேறு திருமணமும் செய்ய முடியாது. 

இந்த விஷயங்கள் தெரிந்த புத்திசாலிக் கணவனாக இருந்தால் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் வழக்கின் ஆரம்ப நிலையிலேயே மருமகளின் காலடியில் விழுந்து மருமகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தனக்கு வேண்டிய நிவாரணத்தைப் பெறலாம்.  இது புரியாத முட்டாள் கணவன்கள் 25 - 50 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்து கடைசியில் சோர்ந்துபோய் மருமகளின் கட்டளைக்கு கட்டுப்பட்டு காலடியில் விழுவான்.  

எது எப்படியோ மருமகளின் வரதட்சணை வழக்கை காரணம் காட்டி விவாகரத்து கோரும் கணவனின் முகத்தில் கரி பூசுவது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.  இது எவ்வளவு அருமையான வழிமுறை!

வாழ்த்துக்கள்!!


இந்தியாவில் இருக்கும் மருமகள் வெளிநாட்டில் வசிக்கும் NRI-கணவனிடம் பணம் பெறுவது எப்படி?

இந்திய மருமகள்கள் பலவித வண்ணக் கனவுகளோடு வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அயல்நாட்டில் இந்திய மருமகள்களுக்கு காத்திருப்பதோ கணவனும் அவனது குடும்பமும் செய்யும் வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் கொடுமை!

வரதட்சணைக் கொடுமையோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பும் இருக்கும். இதற்கிடையே போராடி வாழ்க்கையை நடத்தலாம் என்று பல மருமகள்கள் மன உறுதியுடன் இருந்தாலும் சில சமயங்களில் கணவனும் அவனது குடும்பமும் செய்யும் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். உதாரணத்திற்கு தொலைபேசி இணைப்பை துண்டிப்பது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, வீட்டில் வைத்து பூட்டி வைப்பது, குடிக்க தண்ணீர் கொடுக்க மறுப்பது, உடுக்கும் உடையை ஒளித்துவைத்து மருமகளை பாலியல் கொடுமை செய்வது இப்படி பல கொடுமைகள் செய்கிறார்கள் என்று பல மருமகள்கள் தங்கள் புகாரில் எழுதியிருக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களைக் கூறி மருமகள்கள் இந்தியாவிற்கு வந்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தார் மீதும் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுப்பது வழக்கம். இதை நீங்கள் பலமுறை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.

மருமகளின் “வெளிநாட்டு வண்ணக் கனவுகளை” சிதைத்ததற்கு வரதட்சணைக் கொடுமை வழக்கு கொடுத்தபிறகு மருமகள்கள் இந்தியாவில் தங்களது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டம் தீட்டுவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில் “கைச்செலவிற்கு” பணம் தேவைப்படும் அல்லவா?

பணத்தை நினைத்து மருமகள்கள் கவலையேபடத் தேவையில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மருமகள்களுக்கு கைகொடுத்து உதவக் காத்திருக்கிறது இந்திய சட்டங்கள். இந்திய சட்டங்கள் மூலம் கணவனிடம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். பணம் கொடுக்க கணவன் இந்தியாவில் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய நீதிமன்றத்தின் மூலம் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று பின்வரும் செய்தியில் மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


டெல்லி: மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொமைப்படுத்திய கனடா வாழ் இந்தியரை, மாதந்தோறும் ரூ.33,000 ஜீவானம்சம் அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் பெற்றோருடன் வசித்து வருபவர் இந்தியர் புனித். கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது மனைவியை கனடாவிற்கு அழைத்து சென்ற புனித், அவரை அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி புனித் உடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புனித் வீட்டார் கேட்ட வரதட்சனை முழுமையாக அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்த 2 வாரங்களில் புனித் மீண்டும் கனடாவிற்கு சென்றுவி்ட்டார்.

அதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு, நான் கனடா செல்ல விசா அனுப்பினார். நான் கனடாவிற்கு சென்ற உடன் புனித் மற்றும் அவரது உறவினர்கள் என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். புனித் வீட்டார் என்னை அடித்து உதைத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் புனித் என்னை தனது மனைவியாக ஏற்று கொள்ளாமல், கனடாவை சேர்ந்த ஒரு பெண் உடன் தகாத உறவு கொண்டிருந்தார்.

கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் எனக்கு கணவர் புனித் எந்த உதவியும் அளிக்க மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட புனித் அரோரா, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நாளை கணக்கில் கொண்டு, தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.33,000 வீதம் ஜீவானம்சம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


இந்த செய்தியை படிக்கும்போது “நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருமகள்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாகவும், வெளிநாடு வாழ் மருமகள்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்துகொள்ளவேண்டுமென்றால் இந்தியாவிற்கு வந்து கணவன் மீது வழக்கு தொடுத்தால் நினைத்ததை சாதிக்கலாம்” என்று நமது தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருப்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று உங்களுக்கே தெரியும்.
"Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries." Report on “Problems Relating to NRI Marriages” by National Commission for Women

செய்தியை நன்றாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!


NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழலாம் என நினைத்துக்கொண்டு வெளிநாடு வாழ் இந்தியரை (NRI) திருமணம் செய்து பின்பு தாங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் வெளிநாட்டில் கிடைக்காதபோது தாங்கள் உடலாலும், மனதாலும் கொடுமைகளை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் கொடுமைக்கும் உள்ளாகிறோம் என்று திடீரென்று விழிப்புணர்ச்சி பெறும் அப்பாவி மருமகள்கள் தங்கள் NRI கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்வதற்காக இந்தியாவிற்கு வருவது மரபு.

அப்படி NRI கணவன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர விரும்பும் மருமகள்கள் புகார் எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. மருமகள் கொடுக்கும் வரதட்சணை புகாரிலிருந்து கணவன் தப்பித்து விடமுடியாதபடி சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் இந்த விஷயங்கள் அடைத்துவிடும். அவற்றை பட்டியலிட்டு சொல்கிறேன். அதற்கு நல்ல செயல் முறை உதாரணமாக ஒரு அருமையான செய்தி பத்திரிக்கையில் வந்திருக்கிறது. அதையும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

பின்வரும் “பாயிண்ட்டுகளுக்கு” பொருத்தமான வரிகள் பின் வரும் செய்தியில் இதே எண்ணிக்கை வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. வரதட்சணை புகார் எழுதும்போது உங்களது திருமணத்தில் கொடுத்த சீர்வரிசையை கணவன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை என்று திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதும் வரதட்சணைப் புகாரில் தயங்காமல் எழுதலாம். வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன்படி வரதட்சணை கொடுப்பது குற்றம். நீ ஏன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தாய்? என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது என்பது மருமகள்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

  2. திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்காமல் உடனடியாக நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டாலும் புகார் கொடுக்கும்போது இந்தியாவில் கணவன் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களில் கணவனும் அவனது குடும்பமும் கொடுமை செய்ததாக இந்தியாவில் சில சம்பவங்கள் நடந்ததாக எழுதவேண்டும். அப்போதுதான் வழக்கு நன்றாக உறுதியாக இருக்கும். குற்றம் வெளிநாட்டில் மட்டும் நடந்ததாக சொன்னால் சட்டத்தில் இருக்கும் சில நெறிமுறைகளை (Jurisdiction) மேற்கோள் காட்டி கணவனும் அவனது குடும்பமும் தப்பித்துவிடும். அதனால் இந்த “பாயிண்ட்டை” நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

  3. திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து நம் வசதிக்கேற்ப வரதட்சணை புகார் கொடுக்கும்போது அனைவருக்கும் சிறிது சந்தேகம் வரும். இத்தனை ஆண்டுகளாக நன்றாகத்தானே இருந்தாய் இப்போது என்ன? என்று கேட்பார்கள். அதனால் புகார் எழுதும்போது “திருமணம் ஆன அடுத்த நாள் முதலே கணவனும், அவனது குடும்பமும் கொடுமை செய்தார்கள், இருந்தாலும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அந்தக் கொடுமைகளையெல்லாம் பல ஆண்டுகள் பொறுத்துக்கொண்டேன். இப்போது அந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் புகார் கொடுக்கிறேன்”. என்ற வரிகளை கட்டாயம் புகாரில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் புகாரை படிப்பவர்கள் உங்களின் பொறுமையான குணத்தைப் பார்த்து பரிதாபப்படுவார்கள்.

  4. வெளிநாட்டில் வாழும் மருமகள்களுக்கு மற்றொரு வசதி என்னவென்றால் வெளிநாட்டில் பல கொடுமையான குற்றங்களை செய்து கணவன் என்னை துன்புறுத்தினான் அதனால் நான் இந்தியாவிற்கு வந்து புகார் கொடுக்கிறேன் என்று சொன்னால் இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் போலிஸ் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நம்பி விடுவார்கள். அதனால் வெளிநாட்டில் பல வித கொடுமைகள் நடந்ததாக இந்தியாவில் புகாரில் எழுதலாம். உதாரணத்திற்கு ஓடும் காரிலிருந்து கணவன் என்னை தள்ளிவிட்டான். அந்த நாட்டில் போவோரும் வருவோரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்தார்கள், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூட சொல்லாம். வெளிநாட்டில் என்ன நடக்கிறது என்று இந்தியாவில் யாருக்கும் தெரியாது! குறிப்பாக புகாரை பதிவு செய்யும் காவல்துறைக்கும், வழக்கை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கும் சுத்தமாக ஒன்றுமே தெரியாது. இது மருமகள்களுக்கு நல்லதுதானே!!

  5. மருமகள்களின் கடைசி ஆயுதம் இதுதான். NRI கணவன் செய்த எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு கடைசியில் NRI கணவனின் பெற்றோரிடம் அதாவது மாமியார், மாமனாரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் நான் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் மேலும் வரதட்சணை கொடுக்குமாறு மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் என்று புகாரில் எழுதினால் IPC498A, 5o6 (1), வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 4 இவற்றின் கீழ் கண்டிப்பாக மாமியார், மாமனார் கைதாவது உறுதி.

  6. சில சமயம் மருமகள்களுக்கு மாமியார் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் தேவைப்படலாம். அப்படி ஏதாவது தேவையென்றால் ஒரு பட்டியல் தயார் செய்து அவையெல்லாம் தனது திருமணத்திற்கு தனது பெற்றோர் கொடுத்தவை . இப்போது மாமியார் வீட்டில் அதை திருப்பித் தராமல் மிரட்டுகிறார்கள் என்று ஒரு வரி புகாரில் எழுதினால் போதும் IPC406 என்று மற்றொரு சட்டப் பிரிவையும் வழக்கில் சேர்த்து நன்றாக வலையை பின்னி விடுவார்கள். பிறகு இந்த வழக்கிலிருந்து கணவனையும், அவனது குடும்பத்தையும் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது.
உங்கள் புகாரை பதிவு செய்ததும் உடனடியாக காவல்துறை நண்பர்கள் மாமியார் வீட்டு கதவை தட்டி வீட்டில் இருப்பவர்களை அள்ளிக் கொண்டு வந்து சிறையில் அடைத்து விடுவார்கள். பிறகு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டால் நீங்கள் பட்டியலிட்டு கொடுத்த பொருட்களை திரும்பக் கொடுக்காதவரை ஜாமின் கிடையாது என்று நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் சொல்லிவிடுவார்.

NRI கணவன் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் கொடுப்பதற்கு முன் இவ்வளவு விஷயங்களையும் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கு புகார் சரியாக எழுதத் தெரியவில்லையென்றால் உங்கள் தெருவில் இருக்கும் ஏதாவது ஒரு வழக்கறிஞரை நேரில் சென்று பார்த்து உங்களது தேவைகளை சொல்லுங்கள். அவர் தனது சட்ட அறிவை நன்றாக பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானபடி புகாரை அழகாக எழுதித் தந்துவிடுவார். பிறகென்ன காவல்நிலையத்திற்குச் சென்று NRI கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளி தீபாவளி கொண்டாடி விடவேண்டியதுதான்!!!!! இப்படி புகார் கொடுக்கும்போது மறக்காமல் “மீடியாக்களுக்கும்” உங்களது புகாரின் நகலை கொடுத்து விடுங்கள். அவர்கள் மருமகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிடுவார்கள்.

இனி செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!



COIMBATORE: A couple was arrested in connection with a dowry harassment case on Tuesday by city police. Police have registered a case against the couple's son who is a software engineer in USA.

The couple has been identified as P A S Raj (65), a retired Air Force Commander and his wife Vimala Raj, 58, a retired school teacher of Rajiv Gandhi Nagar near Sowripalayam in the city.

Police said, a 24-year-old A Jenifer, hailing from Selaiyur in Chennai had completed a diploma in business management and got married to R Ajayraj (31), hailing from Rajiv Gandhi Nagar, on May 20, 2009. (1) Her parents gave 135 sovereigns of gold jewels and Rs 5 lakh as dowry to the groom's family. After the wedding, Jenifer moved to Coimbatore along with her husband and lived with her in-laws. Three weeks later, the couple left for USA.

On Tuesday, Jenifer lodged a complaint with the all women police station in Ramanathapuram alleging that (2) her husband Ajayraj mentally and physically tortured her both in India and USA. (3) Earlier, she had complained to her parents about the abuse but they had advised her to adjust and live with him. (4) Unable to bear the trauma, she overdosed on sleeping pills in an attempt to commit suicide. Her husband rushed her to a hospital in America. He also pleaded with her not to reveal the truth, promising not to torture her again, as he would go to prison.

However, Ajayraj failed to keep his word and began torturing Jenifer again. (5) She complained to her in-laws Raj and Vimala Raj and was taken aback with their response. They informed her that since they had not got the dowry they expected from her, they were looking for a bride for their son.

Jenifer came to India on January 3, 2012, and stayed at her parent's house in Saleiyur. (6) When she asked her in-laws to return the gold they had given as dowry, they refused to do so. Stuck in a rut, she eventually approached the police and registered a case against them under section 498(A), 406, 506 (i) and under section 4 of Tamil Nadu women harassment act against Ajayraj and his parents.

On Tuesday, Raj and Vimala Raj were arrested and they have been lodged in Coimbatore central prison. Presently Ajayraj is in USA.

"We have arrested the parents-in law of the victim," said Inspector K Munirabegam, Ramanathapuram.




கணவன் என்ன கடவுளா?

இந்திய மருமகள்களின் நலனில் தனக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது என்பதை திருமதி. கனிமொழி நன்றாக் நிரூபித்திருக்கிறார். அவருக்கு மருமகள்கள் தங்களது ஆதரவை நல்கவேண்டும்.

இவரைப்போல அனைத்து தலைவர்களும் மருமகள் நலனுக்காக குரல் கொடுத்தால் இந்தியா விரைவில் முன்னேற்றம் அடைந்துவிடும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

விரைவான விவாகரத்து சரியா ? தவறா ? கனிமொழி ஆதரவு

ஜெயாபச்சன் எதிர்ப்பு
மே 05,2012 தினமலர்


புதுடில்லி: பெண்களுக்கு விவாகரத்து கேட்ட மாத்திரத்தில் கொடுத்து விடுவதால் எந்தவொரு தவறும் இல்லை என்றும், இதன் மூலம் பெண்கள் உணர்வுப்பூர்வமாக பாதிப்பதில் இருந்து விடுதலை பெற்றுத்தருவதுடன், இவர்களின் இன்னல்கள் விரைந்து தீர்ந்து போகும் என்றும் பார்லி.,யில் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க,. எம்.பி.,கனிமொழி வாதிட்டார்.

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நடிகையும் எம்.பி.,யுமான ஜெயாபச்சன்; விவகாரத்து என்பது உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கும் முடிவுஇதனால். கால அவகாசம் குறைக்காமல் இருந்தால் இருவரும் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றார்.

நடப்பு பார்லி,. கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் ஒன்றான திருமண சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை பொறுத்தவரை கணவன், மனைவி இருவரும் ஒருமித்த கருத்துடனோ பெண்கள் தனியாகவோ விவகாரத்து கோரும் பட்சத்தில் இதில் தாமதம் செய்யக்கூடாது என்ற ஒரு சரத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ., சமாஜ்வாடி, திரிணாமுல், அகாலிதள் உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு சட்டம் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் திருமண பந்தம் அற்றுப்போவது அதிகரித்து விடும் என கவலைப்படுகின்றனர்.

ஆனால் தி.மு.க.,தரப்பில் ராஜ்யசபாவில் வாதித்த கனிமொழி எம்.பி., பேசுகையில்; ஒரு பெண் எவ்வாறு நடத்தப்படுகிறார், அவருடைய சுதந்திரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது, மற்றும் அவள் அடையும் உணர்வுப்பூர்வ வேதனையையும் நாம் நினைத்து பார்ப்பதாக தெரியவில்லை. ஆண்களுக்கென வழங்கப்பட்டுள்ள உரிமை பெண்களுக்கும் இருக்கிறதா என்பதை கேள்வியாக எழுப்பி பாருங்கள்.

திருமண பந்தம் என்ற பெயரில் கணவன் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறார். அதே உறவில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என நினைக்கும் போது ஏன் சமூகம் மறுக்க வேண்டும். கணவரை பிரிய வேண்டும் என நினைக்கும் போது அதில் தாமதப்படுத்த என்ன இருக்கிறது. மேலும் அவர்களது ஜீவனாம்சம், சொத்தில் பங்கு என்பதிலும் முழு அக்கறை வரவேண்டும் . திருமணத்தை பெண்களின் சரணாலயமாக நினைப்பதை தவிர்க்க வேண்டும். திருமண உறவு தொடர்வதில் சிரமம் எழும் போது இதனை முறித்து கொள்வதில் அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்றார். பெண்களுக்கு நன்மை தரும் இந்த சட்டத்தை நான் மனதார வரவேற்கிறேன்.இவ்வாறு கனிமொழி பேசினார்.