"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகளின் புத்தாண்டுப் பரிசு!

நான் விளக்கமாகச் சொல்வதை விட நீங்களே படித்து மகிழுங்கள். இதுதான் மருமகள்களுக்கு இந்தப் புத்தாண்டின் பரிசு.



A local court has rejected anticipatory bail application of Inspector General of Police Ajit Kumar Shrivastava and his wife in a dowry case filed by their daughter-in-law.

Additional District and Sessions court judge Shailendra Shukla rejected their application yesterday saying Shrivastava was a top police officer and at a time when investigations into the case were at a preliminary stage, a bail will not be appropriate.

According to prosecution, Shrivastava and his wife Manjulata sought anticipatory bail after a dowry case was registered against them by their daughter-in-law Namrata.

Namrata, who tied the knot with Shrivastava's son Abhishek on April 18, 2008, had lodged a complaint against him, his parents and her sister-in-law Apurva in the Mahila Police Station here last month for demanding a dowry of Rs 30 lakh and harassing her when their demand was not fulfilled.

After investigating her complaint, a case was registered against the Shrivastavas.


இந்த புத்தாண்டில் ஒவ்வொரு மருமகளும் தங்கள் கணவனின் குடும்பத்திற்கு இதுபோலஅதிர்ச்சியான புத்தாண்டு பரிசு கொடுத்து மகிழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள்!





இந்திய மருமகள்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி!

மருமகள்களே,

கொடுமைக்கார கணவன் மற்றும் மாமியாரின் வன்முறைகளிலிருந்து உங்களைக் காப்பாற்ற நமது தோழிகள் பல ஆண்டுகளாகப் போராடி வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), IPC498A (1983), Protection of Women Against Domestic Violence Act-2005 போன்ற பல அருமையான சட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். அவை நமக்கு எப்படியெல்லாம் இன்றும் உதவிக் கொண்டிருக்கின்றன என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றைப் பற்றித் தெரியாமல் இருக்கும் அப்பாவி மருமகள்கள் பின்வரும் முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.


இந்த இந்திய சட்டங்கள் நமக்குப் பலவாறு உதவிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சமீபத்தில் அமெரிக்க அரசாங்கமும் நமக்கு நிதியுதவி செய்து மேலும் பல புதிய சட்டங்களை உருவாக்கித்தர மனமுவந்து முன்வந்திருக்கிறது. அந்த புதிய சட்டத்திற்குப் பெயர்தான்

The International Violence Against Women Act (IVAWA) - Shaping U.S. Polices That Help Women Lift Themselves.

இந்திய மருமகள்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடும் அமெரிக்க அரசின் இந்த உயர்ந்த கொள்கைக்கு உங்களது ஆதரவைத் தெரிவிக்க பின்வரும் இணைப்பில் சென்று உங்களது ஆதரவுக் கருத்துக்களை எழுதுங்கள்.


இப்படி அந்நிய நாடுகளே இந்திய மருமகள்களின் நலனில் அக்கறை கொண்டு நிதியுதவி அளித்து புதிய சட்டங்களை இயற்ற உதவிசெய்யும்போது நமதுநாட்டில் மருமகள்களுக்கெதிராக ஒரு புதிய சதித்திட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் யாரோ ஒருவர் இந்திய ராஜ்ய சபாவிற்கு மனு கொடுத்து மருமகள்களின் தோழியான IPC498A சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்தக் கொடுமையை இங்கே Petitions with the Committee டவுண்லோடு செய்து படித்துக்கொள்ளுங்கள். இதற்குப் பல உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து ராஜ்ய சபா பரிசீலணைக் குழுவிற்கு கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டுவிட்டால் IPC498A சட்டத்தில் திருத்தம் செய்துவிடுவார்களேயானால் இந்திய மருமகள்களுக்கு குடும்பத்தில் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் போய்விடும். அதைப் பற்றி அனைத்திந்திய ஜனனாயக மாதர் சங்கம் தங்களது கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த செய்தியையும் படித்துக்கொள்ளுங்கள்.

Friday, Dec 24, 2010 The Hindu

NEW DELHI: The All India Democratic Women's Association (AIDWA) has opposed the proposed dilution of dowry-related Section 498-A of the Indian Penal Code on a petition filed before the Rajya Sabha by Anupama Singh.

In a memorandum to the Rajya Sabha Petitions Committee, the AIDWA has expressed shock and distress over the proposal demanding that offences under Section 498-A be made non-cognisable, bailable and compoundable. This Section recognises that acute domestic violence and dowry-related torture are a serious offence, and prescribes a jail punishment of up to three years, the AIDWA has pointed out.


Make ineffective


The attempt in the petition before the committee is to make Section 498-A totally ineffective so that no guilty husband or in-laws can be prosecuted under it. Section 498-A was incorporated in the IPC after a long, sustained struggle by women's organisations and others. However, dowry-related torture and domestic violence continued to escalate even after this Section and 304 (B) (dowry death) were incorporated in the law, the memorandum said.


Making 498-A non-cognisable would mean the police not responding to any complaint made under this Section by a woman in distress, and their not embarking on any investigation into cases, in which a woman suffered physical and mental violence as defined in Section 498-A or/and who was harassed or tortured for dowry. In effect, no case would be registered under this Section and women would have to go to court to file complaints before a magistrate. “Very few women in our country will have the means or ability to do so,” the memorandum pointed out.


“Our organisation has dealt with, and continues to deal with, several thousand complaints of dowry harassment, dowry death and domestic violence on a daily basis. It is our experience that women victims of violence do not file complaints under this Section unless they have suffered prolonged harassment and torture in their marital homes. Even then, we have found that the women who make complaints under Sec. 498-A have to face the brunt of gender bias, corruption and inefficiency in the criminal justice system. They have faced several obstacles to using the law. It would have been more relevant to consider strengthening of the dowry laws to ensure that women live a life free from violence.”



இந்த அதிர்ச்சியான செய்திக்கு நடுவே மற்றொரு அதிர்ச்சி மருமகள்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது. பின்வரும் புள்ளிவிவரத்தைப் பார்த்தீர்களா? மருமகள்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்துவருகின்றது. இந்த நிலை நீடித்தால் குடும்பத்தில் மருமகள்களின் ராஜ்ஜியத்தை அழித்துவிடுவார்களே.

12/26/2010
தினமலர்


தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தமிழக காவல் துறை, பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தமிழக குற்ற ஆவண காப்பக பதிவின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்கள், கடந்தாண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, கணவன், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற குற்றங்கள் பெண்களுக்கெதிராக அதிகளவில் பதிவாகும். அந்த வகையில், 2008ல் 6,262 வழக்குகள் பதிவாயின. கடந்தாண்டு, 5,126ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டில் நவம்பர் வரை 5,508 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


கற்பழிப்பு: கடந்தாண்டில் குறைந்தாலும், இந்தாண்டு மீண்டும் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில், 626 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் சென்னையில் தான் அதிகளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. ஊட்டி மற்றும் கோவையில், தலா ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது என, கற்பழிப்பு பட்டியல் நீள்கிறது. கற்பழிப்பு சதவீதம், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் அதிகம்.


வரதட்சணை: வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்தாண்டு 183 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இந்தாண்டு 534 புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 31 சதவீதம் குறைவு. இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 97, கன்னியாகுமரி 96, திருச்சியில் 87, சென்னை புறநகரில் 78 புகார்கள் பதிவாகியுள்ளன. இன்னும் டிசம்பர் மீதமிருக்கையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் காக்கிச்சட்டை அதிகாரிகள்.


இதுபோன்ற ஆபத்தான காலகட்டத்தில் வாழும் மருமகள்களுக்கு இருக்கின்ற சட்டத்தையும் வலுவிழக்கச் செய்தால் பிறகு மருமகள்களால் இந்திய நாட்டில் வாழ முடியுமா? ஓநாய்கள் போல வட்டமிடும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தை மருமகள்களின் கட்டுப்பாட்டில் காலடியில் கிடக்கும் நாய் போல வைத்திருக்க மேலும் பல மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள்தான் தேவையே தவிர இருக்கின்ற சட்டங்களை திருத்தக் கூடாது. அதனால் நீங்கள் இன்றே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு உங்களது ஆதரவை அளித்து IPC498A சட்டதிருத்தத்திற்கு உங்களது எதிர்ப்பை தெரிவியுங்கள்.

மருமகள்கள் இந்த சட்டத் திருத்தத்தைப் பற்றி அக்கறையில்லாமல் தங்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் விட்டுவிட்டால் பிறகு இந்திய மருமகள்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டத்தை இயற்றுவதற்கு அமெரிக்க அரசு கொடுக்கப்போகும் நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.

இருக்கின்ற IPC498A சட்டத்தையே விட்டுவிட்டீர்களே பிறகு எப்படி புதிய சட்டத்திற்கு நிதியுதவி கொடுப்பது என்று வெளிநாட்டுக் கொடைவள்ளல்கள் நிதிகொடுக்கத் தயங்குவார்கள் அல்லவா? மருமகள்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் போய்விடுமே. தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நிதியுதவி நின்று போனால் பிறகு இந்திய மருமகள்களின் வாழ்க்கையே இருண்டுபோய்விடுமே. கணவனையும் அவனது குடும்பத்தையும் நம்பி எத்தனை ஆண்டுகள் வாழமுடியும்? மருமகள்கள் என்ன கணவன் வீட்டு அடிமைகளா? இதற்குமேல் என்னால் சொல்லமுடியாது.

அதனால் அனைத்து தன்னார்வ மருமகள் நல சங்கங்களுக்கும் உங்களது ஆதரவை தெரிவித்து மருமகள்களின் உரிமையைப் பாதுகாக்க தடையில்லா நிதியுதவி கிடைக்க உங்களது மேலான ஆதரவை நல்கி உங்களது எதிர்காலத்தில் சுதந்திரமான பெண்ணாக வாழுங்கள்.

ஆகவே IPC498A சட்டத்திருத்தத்திற்கு உங்களது குடும்பத்தோடு சேர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து இந்திய ராஜ்ய சபாவிற்கு கடிதம் அனுப்புங்கள். அதே சமயம் அமெரிக்க அரசின் நிதியுதவியில் உருவாகி இந்தியாவிற்கு வரப்போகும் புதிய சட்டமான The International Violence Against Women Act (IVAWA) - சட்டத்திற்கு உங்களது முழு ஆதரவினை தெரிவியுங்கள்.

மருமகள்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருகரம் கூப்பி இந்த புதிய சட்டத்தை இந்தியாவிற்குள் வரவேற்று கணவன்களையும், அவர்களது குடும்பங்களையும் அடக்கி மருமகள்களின் வெற்றிக்கொடியை நாடெங்கும் பட்டொளி வீசி பறக்கவிடுவோம் என்று சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்றே நீங்கள் இதைச் செய்தால்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் மருமகள்கள் தங்களது கணவனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் தங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உங்களது தோழிகளுக்கும் இந்த விழிப்புணர்வுச் செய்தியை தவறாமல் அனுப்பிவையுங்கள்.

வாழ்த்துக்கள்!




சென்னையில் ஆண்கள் செய்த அட்டகாசம்

சென்ற வாரம் ஏதோ ஆண்கள் தினம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அருகே சென்று பார்த்தபோது ஏதோ நோட்டிஸ் கொடுத்தார்கள். அதில் ஆண்களுக்கு என்று தனியாக ஒரு அமைச்சகம் மற்றும் தேசிய அளவில் ஆண்கள் நல வாரியம் மற்றும் மாநில அளவில் ஆண்கள் நல வாரியம் வேண்டும் என்று கோரிக்கை எழுதப்பட்டிருந்தது.

தற்போது மருமகள்களுக்கு மட்டுமே தனியாக அமைச்சகம் மற்றும் வாரியங்கள் இருக்கின்றன. இது தவிர NGO என்று சொல்லப்படும் அரசு நிதியுதவி பெறும் பல அமைப்புகள் நாடு முழுதும் மருமகள்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆண்கள் தங்களுக்கும் மருமகள்களுக்கு இருப்பதுபோல தனியாக அமைச்சகம் வேண்டும் என்று கேட்பது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கை.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மருமகள்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று வினோதமான கோரிக்கைகளும் காதில் விழுந்தது. அதைக்கேட்டபோது மிகவும் சிரிப்பாக இருந்தது. இவர்கள் போடும் கூப்பாடுகளை யாரும் காதில் வாங்கமாட்டார்கள் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதைப்பற்றி கீழுள்ள வீடியோவில் கூட இரண்டு பொதுமக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி இதுபோன்று கூச்சலிடும் ஆண்களை கட்டுப்படுத்தினால்தான் வருங்காலத்திலும் இந்திய மருமகள்கள் தங்கள் குடும்பங்களிலும், நாட்டிலும் செல்வாக்குடன் வாழமுடியும்.

உங்களுக்காக அந்த வீடியோவையும் கீழே கொடுத்திருக்கிறேன். பார்த்து தெளிவாக சிந்தித்து வரதட்சணை சட்டங்கள் மூலம் இவர்களை எப்படி அடக்கலாம் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!