"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்திய மருமகளை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள்!

இந்திய மருமகள்களுக்காக பெண்கள் அமைப்புகளும், தலைவிகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குச் சமமாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற பல அரிய சட்டங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பல மருமகள்களுக்கு இவற்றை எப்படி பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியவில்லை. இதுபோன்ற ஒரு பரிதாபமான சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி சில மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த மருமகள்களை மிரட்டி ஏமாற்றும் அநியாயங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளைப் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் - மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்" .

ஆனால் இந்தக் கொடுமை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பின்வரும் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்.



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கணவர் மனைவியிடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளபோது, கணவரை விட்டு கொடுக்க மனைவியிடம் மகளிர் தினத்தன்று, போலீசார் பேரம் பேசிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாரதி(36). இவர் 18 ஆண்டுகளுக்கு முன் வழுதூரை சேர்ந்த மத்திய போலீஸ் செல்வத்தை திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில், கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். ராமநாதபுரம் சி.ஜே.எம். கோர்ட்டில் விவகாரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி, மதுரையை சேர்ந்த முருகன் மகள் உஷாராணியை திருமணம் செய்தார் செல்வம். "இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியிடம் மனு கொடுத்தார் ஜெயபாரதி.

இதை விசாரிக்க ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். "இனி உன்னால் சேர்ந்து வாழ முடியாது. உனது கணவர் கொடுப்பதை வாங்கி கொண்டு செல்,'' என, ஜெயபாரதியிடம் பேரம் பேசியுள்ளனர் போலீசார் . இச்சம்பவம் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயபாரதி கூறியதாவது: வருமானம் இன்றி எனது தாலியை விற்று மகனை படிக்க வைத்து வருகிறேன். கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது மறுதிருமணம் செய்த எனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என போலீசில் கூறினால், "கொடுக்கும் பணத்தை வாங்கி செல். இல்லையேல் உனது மகன் வாழ்க்கை சீரழிந்துவிடும்,'' என மிரட்டுகின்றனர் என்றார்.

பஜார் இன்ஸ்பெக்டர் குணசுந்தரத்திடம் கேட்டபோது, "இரண்டாவது திருமணம் செய்ததற்கு உரிய ஆதாரங்களை கொண்டுவந்தால், நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூறினோம். கோர்ட்டில் வழக்கு உள்ளபோது குடும்ப பிரச்னையில் தலையிட மாட்டோம். அதுவும் இந்த வழக்கை கூடுதல் எஸ்.பி., விசாரித்து வரும்போது நான் எப்படி பேசுவேன்,''என்றார்.


இப்படி ஏமாற்றப்படும் இந்திய மருமகள்களுக்கு தீர்வே கிடையாதா? என்று ஏக்கத்தோடு தவிக்கும் மருமகள்களுகு வழிகாட்டுவதற்காக ஒரு செய்தி வந்திருக்கிறது.

பின்வரும் செய்தியில் பாருங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பது போலவே ஒரு மருமகள் கணவனுக்கெதிராக காவல்நியைத்தில் புகார் கொடுத்ததை கவனிக்காமல் ஒதுக்கியிருக்கிறார்கள். புத்திசாலியான மருமகள் தேசிய பெண்கள் வாரியத் தலைவியை நேரடியாக சந்தித்துப் புகார் கொடுத்தவுடன் இப்போது “வேலை” நடக்க ஆரம்பித்திருக்கிறது.

மருமகள்களே,

அடங்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்குவதற்காக இந்திய சட்டங்கள் உங்களுக்கு இலவசமாக வேலை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் போகும்போதுதான் நீங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பதுபோன்ற தடைகளை சந்திக்க நேரிடுகிறது.

உங்களைப் போன்ற மருமகள்களுக்கு உதவுவதற்காகவே அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து தனியாக ஒரு அமைச்சரகத்தையும், வாரியத்தையும் அமைத்திருக்கிறது. அவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த வாரியம் எங்கு இருக்கிறது, எப்படிப் போகவேண்டும் என்றுகூட நீங்கள் தவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் உங்கள் வீட்டு நாற்காலியில் அமர்ந்தபடியே “ஆன் லைனில்” புகார் கொடுக்கும் வசதியை உங்களுக்காகவே தந்திருக்கிறார்கள். இதுபோன்ற வசதிகள் இருக்கும்போது அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமையில் சிக்கி கணவனிடமும் அவனது குடும்பத்திடமும் துன்பப்படலாமா?

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கணவனை சிறையில் அடைக்க மருமகள்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தேசிய மருமகள் வாரியத்தில் புகார் கொடுக்கலாம்!!!
 Online Complaint Registration for NRI's

இந்த வசதியை ஒவ்வொரு இந்திய மருமகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது தோழிகளுக்கும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.



GURGAON: The wife of a reputed Gurgaon-based industrialist has lodged a police complaint against her husband, accusing him of domestic violence. She has alleged that the accused had been harassing her for the past 23 years.

Geeta Sachdeva, wife of industrialist and owner of Su-Kam Power Systems, Kunwer Sachdeva, has also filed a written complaint with the National Commission for Women (NCW) accusing him of physical and mental torture. According to Geeta, she probably would have still endured it, but for the brutal way in which he allegedly beat her up a few weeks ago at Ramgarh, which compelled her to approach authorities.

Geeta lodged an FIR at Ramgarh police station on March 12. The investigating officer in Ramgarh, Ram Bhardwaj said, "We have filed an FIR under sections 107 and 116 of CrPC and the investigations are on."

On returning to Gurgaon from Ramgarh, in the face of police reluctance to register a complaint, she approached the women's cell, which summoned Sachdeva, but he did not turn up.

Gurgaon police commissioner S S Deswal said, "It is a social problem and not a criminal act. They have been married for 25 years. If they are unable to adjust, a counselor should be able to help them. We will try to counsel them and resolve the matter. If that does not help, we will register a case of domestic violence."

Geeta later met Girija Vyas, chairperson of National Commission for Women (NCW) and lodged a complaint.

In his defence, the accused denied having beaten his wife. "I don't know what you are talking about. I was not in Ramgarh that day."

Sachdeva also added that they have already filed for mutual divorce and that his legal team has lodged a complaint with the police.

வாழ்த்துக்கள்!


மருமகள்னா இப்படித்தான் தைரியமாக இருக்கவேண்டும்

கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்க அஞ்சி நடுங்கும் மருமகள்கள் இந்த செய்தியைப் படித்தபிறகாவது கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கணவன் மீது புகார் கொடுப்பது மட்டும் பெருமைக்குரிய விஷயமல்ல. வழக்கின் கடைசியில் கணவனின் குடும்பத்தில் எத்தனை பேர் சிறைக்குச் செல்கிறார்கள் என்பதில்தான் மருமகளின் ஒட்டுமொத்த வெற்றியே அடங்கியிருக்கிறது.


சாத்தான்குளம் : பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர், மாமியார், நாத்தனார் உட்பட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது நாசரேத் மேலவெள்ளமடத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகள் முத்துமாலை என்ற பாப்பாத்தி(30). இவருக்கும் பாளையங்கோட்டை சுப்பையா மகன் சங்கருக்கும் திருமணம் நடந்தது. சங்கரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு பாப்பாத்தியை கொடுமை படுத்தினார்களாம்.

இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாப்பாத்தி புகார் செய்தார். எஸ்.ஐ., காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தி கணவர் சங்கர்(40), மாமியார் பத்ரகாளி(68), கணவரின் சகோதரர்கள் சண்முகசுந்தரம்(48), ஆறுமுகசேகர்(43), அருணாசலம் ரவி(46), சகோதரிகள் குமரேசன் மனைவி செல்வி(42), மாடசாமி மனைவி முத்துமாலை(38) ஆகியோரை கைது செய்தனர்.

வழக்கு சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்தது. இதில் அருணாசலரவி இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த சாத்தான்குளம் நீதிபதி ஜெயசிங் ஆறு பேருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் 13ஆயிரத்து 300ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வரதட்சணை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியில் இருப்பது போல ஒவ்வொரு இந்திய மருமகளும் கணவனின் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் இந்தியாவில் வரதட்சணை என்ற வழக்கமே ஒழிந்திருக்கும். மருமகள்கள் அனைவரும் ஒன்றுபட்டால் எல்லா மருமகள்களும் வளமாக வாழலாம். அதனால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மருமகளும் இந்த புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.


தைரியமான மற்றொரு எதிர்கால மருமகள்

திருமணத்தை நிறுத்திய பிளஸ்2 மாணவி; போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதினார் மார்ச் 24,2011 தினமலர்

கோவை : கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய பிளஸ்2 மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேர்வு எழுதினார். கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் கணேசன்(47); வியாபாரி. [...]

வாழ்த்துக்கள்!


பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி?

முந்தைய பதிவில் வாசகர் ஒருவர் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அவருக்கு விளக்கம் அளிப்பதற்காக இந்தப் பதிவு. மருமகள்களே நீங்களும் கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். சிலசமயம் உங்களிடம்கூட இதுபோன்ற கேள்வியை யாராவது கேட்பார்கள்.
பின்வரும் கேள்வியைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு கேள்வியிலுள்ள முக்கியமான விஷயங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் காண்போம்.

abiramamnatham said...

சஹோ தாங்கள் கூறுவது சரிதான் . எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ? சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் . எனென்றால் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் பொய்யான வழக்கு கொடுத்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் குடும்பத்துடன் கைது செய்யப்படுவார்கள் .ஆனால் மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் எற்றுக்கொள்ளாது.இதனால் நிரபராதிகலான மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றம் என்று அலைய வேண்டும் .இதற்கு தாங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகள் என்ன?



மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளாது.

இந்தியாவில் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் (99%) வரதட்சணை வாங்கும் அல்லது மருமகளை கொடுமை செய்யும் குற்றவாளிகளே. அதனால்தான் நீங்கள் கூறியிருப்பதுபோல மாப்பிள்ளை வீட்டார் நிரபராதி என்று சொன்னாலும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யை நீங்களே ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் பிறகு சட்டம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இது எப்படி பொய் என்று பின்வரும் பதில்களில் விளக்கமாகப் புரியும்.

எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ?

இந்த சட்டங்கள் அனைத்தும் 100% சரியாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல மருமகள்கள் தங்களது அறியாமையால் இதை எப்படி பக்குவமாகப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறு செய்துவிடுகிறார்கள். அதற்கு சிறு உதாரணம் சொல்கிறேன்: கணவனிடம் உள்ள பொருட்களை பெறுவதற்கு IPC406 என்ற குற்றப்பிரிவையும் சேர்க்க வேண்டும். ஆனால் தவறுதலாக சில மருமகள்கள் வெறும் IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் இவற்றை மட்டுமே பயன்படுத்துவதால் கணவன் வீட்டார் எங்களிடம் மருமகளின் பொருட்கள் எதுவுமே இல்லை. அதனால்தான் பாருங்கள் IPC406 இல்லை. வெறும் 498A மட்டும்தான் இருக்கிறது. அதனால் இது பொய் வழக்கு என்ற அவதூறு பேசிவருகிறார்கள்.

உங்களைப்போல இந்திய தலைமை நீதிபதியும் ஒருமுறை மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதாக கூறியதற்கு மருமகளின் அறியாமைதான் இதுபோன்ற மாயத்தோற்றத்திற்குக் காரணம் என்று தேசிய மருமகள் வாரியத் தலைவி இந்திய தலைமை நீதிபதிக்கே மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி அதற்கு எதுவும் மறுப்பு சொல்லவில்லை. தலைவி சொல்லியதுதான் உண்மை.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் .

இதுதான் மிகமுக்கியமான கேள்வி.

எந்த மருமகளும் இந்த சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில்லை.

மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை முழுவதும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டவை.

இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் சட்டமாமேதைகளின் ஆலோசனைப்படி இயற்றப்பட்டு பிறகு பார்லிமெண்டின் இரு அவைகளிலும் பரிசீலனை செய்யப்பட்டு அகில இந்திய உறுப்பினர்கள் அனுமதித்த பிறகே சட்டமாகிறது. அதனை கடைசியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுமதி தந்த பிறகே நடைமுறைக்கு வருகிறது.

இப்படி இந்திய மாமேதைகளின் கடினமான பரிசீலணைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் சட்டம் மருமகள்கள் முறைகேடாகப் பயன்படுத்தும் விதத்திலா இருக்கும்? இந்திய சட்டமேதைகளையும், தலைவர்களைம் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

இந்த சட்டங்களை நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனித்துப் படித்துப்பார்த்தால் இந்திய மருமகள்கள் அனைவரும் அப்பாவிகள், தவறே செய்யத் தெரியாதவர்கள் என்று உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்.

1. 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று இந்த சட்டத்தில் எழுதிய சட்டமேதைகள் மருமகள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்திருந்தாலும் மருமகள் மீதோ, அவரது குடும்பத்தார் மீதோ எந்தவித சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அழுத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள். அதே சமயம் கணவன் தன்னிடம் வரதட்சணை கேட்டதாக மருமகள் புகார் கொடுத்தால் கணவன்தான் தான் வரதட்சணை கேட்கவில்லை அல்லது வாங்கவில்லை என்று தன்னை நிரபராதி என்று நிரூபித்துக்கொள்ளவேண்டும். மருமகள் எந்தவித ஆதாரத்தையும் காட்டத்தேவையில்லை.

இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். சட்டத்தை இயற்றிய மாமேதைகள் மருமகள்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். பிறகு உங்களது கேள்வி எப்படி எடுபடும்?

2. கணவன்களின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போனதால் 1984ல் மீண்டும் நமது சட்ட மாமேதைகளும், பெருந்தலைவர்களும் IPC498A என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்திலும் கணவனைச் சார்ந்த யார் மீதுவேண்டுமானாலும் மருமகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்ற முழு உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் மருமகள் பொய்வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் தண்டனை உண்டு என்று இந்த சட்டத்தில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். மருமகள்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் என்ற நம்பிக்கையினால்தான் இப்படி ஒரு உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியத் தலைவர்களின் நம்பிக்கை தவறு என்கிறீர்களா?

3. இந்த சட்டங்கள் இருந்தாலும் கணவன்களின் கொடுமை தாளமுடியாமல் மருமகளின் நலன் விரும்பும் நமது தலைவர்கள் மீண்டும் 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதிலும் மருமகள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் எளியோர்கள் என்றும், கணவன்கள் அனைவரும் வன்முறை மட்டுமே செய்யும் கொடிய மிருகங்கள் என்றும் வரையரை செய்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா சட்டங்களிலும் மருமகள்களுக்கு முழுச்சுதந்திரமும், நல்லவர்கள் என்ற முத்திரையையும் நம்நாட்டு சட்டமேதைகளும், தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு சாதாரண விஷயமா?

நீங்கள் கூறுவது போல மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் 1961 முதல் 2005 வரை எப்படி இதுபோல மருமகள்களுக்கு மட்டுமே சாதகமாக பல சட்டங்களை இயற்றியிருப்பார்கள்? நம்நாட்டுத்தலைவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்துதான் சட்டத்தை இயற்றுவார்கள்.

உண்மை நிலவரம் நாட்டில் இப்படி இருந்துகொண்டிருக்கும்போது மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அவர்களை எப்படி தண்டிப்பது என்று அபாண்டமாக கேள்வி கேட்டிருக்கிறீர்களே?

உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். சிந்தித்துப் பாருங்கள். அப்போதுதான் மருமகள் அனைவரும் அப்பாவிகள், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், கணவன்கள்தான் தவறு செய்பவர்கள் என்று உங்களுக்கே புரியும்.

1. 1961 முதல் இன்றுவரை மருமகள்களுக்காக அடுக்கடுக்காக பல சிறப்புச் சட்டங்களை இயற்றிய அரசாங்கம் நீங்கள் கற்பனையாகக் கூறும் நிரபராதி மாப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் இயற்றவில்லையே? அது ஏன்?

மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அரசாங்கம் இன்றுவரை ஒரு சட்டம் கூட இயற்றவில்லை. ஆனால் மருமகள்கள் அனைவரும் நல்லவர்கள். 1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டம் முதல் 2005ல் வந்துள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்வரை 1984ல் வந்த IPC498A உட்பட எந்த சட்டத்தையும் இன்றுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை. அதனால்தான் மருமகள்களின் பாதுகாப்பிற்காக அடுத்தடுத்து பல சட்டங்கள் வந்துள்ளன.

2. இங்கே இந்த பதிவில் நீங்கள் கேட்டிருப்பதுபோல உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டார் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் அரசாங்கத்திடம் இதுவரை தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் கேட்கவில்லை?

மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நிரபராதி கணவன்களை சிறையில் அடைக்கிறார்கள் என்று இந்த பதிவிற்கே நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்கும்போது உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால் மாப்பிள்ளை கூட்டத்தார் அரசாங்கத்திடம் என்றோ இந்தக் கேள்வியை கேட்டு தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை கொண்டுவந்திருப்பார்களே! அதை இதுவரை யாரும் செய்யவில்லையே? அது ஏன்?

தவறு செய்யாமல் இருந்தால்தானே மாப்பிள்ளை தரப்பினர் தைரியமாக அரசாங்கத்திடம் கேட்கமுடியும்! அதனால் நீங்கள் கூறும் மாப்பிள்ளை கூட்டம் 100% தவறு செய்கிறார்கள் என்று நிரூபணமாகிவிட்டதல்லவா? அதனால்தான் தாங்கள் நிரபராதி என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மாப்பிள்ளை கூட்டத்தை சிறையில் தள்ளுகிறார்கள். இதுதான் உண்மை. இதற்கு மருமகள்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

3. ஏதோ சில வழக்குகளில் போனால் போகட்டும் என்று கணவனை மன்னித்து விடுவித்தால் அதை பொய் வழக்கு என்று சொல்வது முறையாகுமா?அப்படியே நீங்கள் கூறுவதுபோல மருமகள் பொய் வழக்குப்போட்டிருந்தால் நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரிந்துவிடும். அப்படியிருக்கையில் பொய் வழக்குப் போட்டதாக எத்தனை மருமகள்கள் நீதிமன்றத்தால் இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

4. இந்தியாவில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் முதல், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வரதட்சணை வழக்குகள் செல்கின்றன. ஆனால், இதுவரை எந்த நீதிமன்றமும் பொய் வழக்கிற்காக மருமகளை தண்டித்து சிறைக்கு அனுப்பியதாக சரித்திரமே கிடையாது. அப்படியென்றால் நீதிமன்றங்கள் என்ன மருமகள்கள் போடும் பொய் வழக்குகளை வேலை வெட்டியின்றி நடத்திக்கொண்டு மருமகள்களே சபாஷ்! நன்றாகப் பொய்வழக்குப் போடுங்கள் என்று பொய் வழக்குகளை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனவா? இந்திய நீதிமன்றங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? கண்டிப்பாக இந்திய நீதிமன்றங்களை குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள்.

5. அப்படியே நீதிமன்றங்கள் பொய் வழக்குப்போட்ட மருமகளை விட்டுவிட்டாலும் அந்த வழக்கிலிருந்து விடுதலையான நீங்கள் சொல்லும் “நிரபராதி கணவன்கள்” எத்தனை பேர் மறுவழக்குத் தொடர்ந்து பொய்யான புகார் கொடுத்த மருமகள் மீதும், அதற்குத் துணையாக பொய் வழக்குப்போட்ட காவல்துறை மீதும், பொய் வழக்கை தங்கள் மீது திணித்து வாழ்வை அழித்து சிறைக்கு அனுப்பிய அரசாங்கத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு போட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அல்லது குறைந்தபட்சம் வழக்காவது தொடர்திருக்கிறார்களா?

இதற்கு உங்களிடம் இருக்கும் பதில் “ஒருவர்கூட இல்லை” என்பதுதான். நான் நிரபராதி என் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டார்கள் என்று சும்மா புலம்பிக்கொண்டிருக்கும் சிலரை பார்த்துவிட்டு நீங்கள் மருமகள்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால் மருமகள் பொய்வழக்குப்போடுகிறார், அவரை தண்டிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்காமல் கணவன்களையும், அவர்களது குடும்பத்தாரையும் மருமகள்களிடம் சரணடையச் செய்வது எப்படி என்று மாத்தியோசித்தால் கணவன்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

அறிவுப்பூர்வமாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கு மிக்க நன்றி. இதுபோல தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் தயங்காமல் எழுதுங்கள். தங்களின் கேள்வி மூலம் பல மருமகள்கள் பலன் பெறுவார்கள். நன்றி!

வாழ்த்துக்கள்!


மருமகளே குதிரை சவாரி செய்யக் கற்றுக்கொள்

இந்தியாவில் மருமகள்களுக்கு காலம் காலமாக நடந்துவரும் வரதட்சணைக் கொடுமை உலகத்திற்கே தெரிந்த விஷயம். படித்தவர், படிக்காதவர், பணக்காரன், ஏழை, அரசியல்வாதி, அரசு அலுவலர், வியாபாரி, திரைத்துறைக் குடும்பம், உள்நாட்டு மருமகள், வெளிநாட்டு மருமகள் என எல்லா இடங்களிலும் மருமகள்களுக்கு எதிரான வரதட்சணை வன்முறை இந்தியாவில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தடுப்பதற்கு 1961லேயே வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் மருமகள்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்தாததால் இன்றுவரை மருமகள்களுக்கு எதிரான இந்தக் கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்தாத மருமகள்களை தட்டி எழுப்புவதற்காகவே மீண்டும் 1984ல் IPC498A என்ற சட்டத்தையும், 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தையும் மருமகள் நலம் போற்றும் பெண்கள் நலவாரியத்தின் அயராத முயற்சியால் அரசாங்கம் அமலுக்குக் கொண்டுவந்தது.

ஆனால், என்ன பிரயோஜனம் இன்றும் பின்வரும் செய்தியைப் போல பல கொடுமைகளை நாம் படித்து அழவேண்டியிருக்கிறது.

மார்ச் 16,2011 தினமலர்

ஐதராபாத் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார்.


மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார். இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர்.


காதல் திருமணம்: சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி - ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.


மருமகள்களே,

மேலுள்ள செய்தியிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். சட்டங்களை உங்கள் கைகளில் அரசாங்கம் என்றோ கொடுத்துவிட்டது. அவற்றை எங்கு, எப்போது, எப்படி பயன்படுத்தவேண்டும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள்தான் முடிவுசெய்து கொள்ளவேண்டும். வருமுன் காப்பதே நல்லது! கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்து எந்த புண்ணிமும் இல்லை! பிறகு அரசாங்கத்தை குறை கூறி எந்த பலனும் இல்லை.

உங்கள் திருமண வாழ்க்கைப் பயணத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்ற சக்திமிக்க சாட்டையை மருமகள்கள் கையில் திருமணத்தன்றே அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. குதிரை கட்டுக்கடங்காமல் ஓடுவதற்கு முன்பே இரண்டு சாட்டையடி கொடுத்து அதன்மீது சவாரி செய்தால்தான் பயந்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கும். கட்டுக்கடங்காமல் குதிரை அறுத்துக்கொண்டு ஓடிய பின்பு சாட்டையை சுழற்றினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

குதிரை எதுவென்று மருமகள்களுக்கு மட்டும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்!

வாழ்த்துக்கள்!


ஐயோ பாவம்! ஆணியைக்கூட பிடுங்க முடியாத இந்தியக் கணவன்கள்

மருமகள்களே,

உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி! அரசாங்கமும், நீதிமன்றங்களும்
எப்போதும் மருமகள்பக்கம்தான் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. கவனமாகப் படியுங்கள்.

கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடுக்கும் மருமகள்களுக்கு எதிராக
சமீப காலமாக கணவன்கள் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்துவருகிறார்கள். அதனால் மருமகள்கள் சற்று பயந்துபோய் இருந்தார்கள் . இப்போது அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த செய்தியை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 7 இவற்றை ஒருமுறை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். மருமகள்களுக்காக அந்த முக்கியப் பிரிவுகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன். படித்து கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more,

4. Penalty for demanding dowry.-
If any person demands directly or indirectly, from the parents or other relatives or guardian of a bride or bridegroom as the case may be, any dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years and with fine which may extend to ten thousand rupees


மேலுள்ள சட்டப் பிரிவுகளில் பார்த்தீர்களா? பிரிவு 3ன்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவரை மருமகள்கள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்கும்போது திருமணத்திற்கு முன்பே கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டதாகவும், தாங்கள் அதைக் கொடுத்துதான் திருமணம் செய்ததாகவும் புகார் எழுதிக் கொடுத்து வருவதுதான் வழக்கம். அதற்கேற்றார்போல காவல்துறையும் கணவன் மீது மட்டுமே வரதட்சணை கேட்டதற்காக பிரிவு 4 மற்றும் வரதட்சணை பெற்றுக்கொண்டதற்காக பிரிவு 3 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துவந்தார்கள்.

ஆனால் பிரிவு 3ல் உள்ள சட்டத்திற்கு எதிராக நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தைரியமாக புகாரில் எழுத்துமூலமாக எழுதித்தந்தாலோ அல்லது பல லட்சங்களும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்ததாக செய்தித்தாளில் செய்தி வெளியிட்டாலோ யாரும் அதைப் பற்றி கவலையே படமாட்டார்கள்.

ஆனால், வெறிபிடித்த இந்தியக் கணவன்களின் கூட்டம் சமீபத்தில் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கி வரதட்சணை கொடுப்பதும் சட்டப்படி குற்றம். உயர்கல்வி கற்ற என்னுடைய மனைவி சட்டத்திற்கு எதிராக வரதட்சணை கொடுத்ததாக தானாகவே புகாரில் எழுதித்தந்திருக்கிறார். அதனால் அவர் மீதும் பிரிவு 3ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மருமகள்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ்வழக்குப் பதிவு செய்ய முயற்சித்து வந்தார்கள். சில நீதிமன்றங்களும் இந்த வெறிபிடித்த கணவன்களின் பேச்சைக் கேட்டு மருமகள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பெருமைக்குரிய மருமகள் ஒருவர் இந்தப் பிரச்சனையை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று கணவன் மீது வரதட்சணை வழக்குப்பதிவு செய்யும் தனது உரிமையை வெற்றிகரமாக நிலை நாட்டியிருக்கிறார். மருமகள்கள் வரதட்சணை கொடுத்ததாகச் சொன்னாலும் சட்டங்கள் கணவனை மட்டுமே தண்டிக்கவேண்டும் என்று சட்டத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்.

இந்திய மருமகள்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்வதற்காக நீதிமன்றமும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 7-ஐ காரணம் காட்டியிருக்கிறது. அதாவது பிரிவு 7ன் படி வரதட்சணை தொடர்பாக புகார் கொடுப்பவர் மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியாது. இதைத்தான் பல மருமகள்கள் இதுவரை சாதகமாக பயன்படுத்தி வருகிறோம் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது!

7. Cognisance of offences.- (2) Nothing in Chapter XXXVI of the Code of Criminal Procedure, 1973 (2of 1974), shall apply to any offence punishable under this Act.)

Notwithstanding anything contained in any law for the time being in force, a statement made by the person aggrieved by the offence shall not subject such person to a prosecution under this Act.


இந்த சட்டப்பிரிவு 7ல் உள்ள நுணுக்கத்தை நான் உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன். குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


ஒரு அரசு அலுவலகத்தில் உங்களுக்கு ஒரு பணி நடைபெறவேண்டுமென்றால் அந்த அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நான் லஞ்சம் கொடுக்கமாட்டேன் வேறு அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்சார அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் போ என்று சொல்லிவிட்டு குடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கேட்கமுடியாது. அதனால் புகார்தாரர் வேறுவழியின்றி லஞ்சம் கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால் லஞ்ச வழக்குகளில் லஞ்சம் கொடுப்பவரை விட லஞ்சம் கேட்பவர்தான் குற்றவாளி என்று சொல்லலாம்.


ஆனால் வரதட்சணை என்று வரும்போது, திருமணத்திற்கு முன்பே ஒருவன் வரதட்சணை கேட்டால் அவனை தூக்கியெறிந்துவிட்டு வேறு ஒரு ஆண்மகனை தேடிக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இது லஞ்ச வழக்குப்போன்ற விவகாரம் கிடையாது. இந்த ஆள் இல்லையென்றால் வாழ்க்கையில் நமக்கு திருமணமே நடக்காது என்று சொல்லமுடியாது.


அதனால் இந்த விஷயத்தில் வரதட்சணை கேட்பவனும் அதை ஏற்றுக்கொண்டு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்பவளும் சரி சமமாக குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என்று புத்திசாலித்தனமாக யோசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நீதிமன்றங்களில் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ? என்று மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். உங்களுக்கு தெம்பூட்டுவதற்காகத்தான் இந்த பின்வரும் செய்தியைத் தந்திருக்கிறேன்.



Hindustan TimesNew Delhi, March 09, 2011

A woman and her family members cannot be treated as accused under the Dowry Prohibition Act for giving dowry at the time of marriage, the Supreme Court has said.


A bench of Justices HS Bedi and CK Prasad upheld the Delhi High Court verdict that quashed a criminal case against a girl stating a dowry harassment victim was protected under the law and, could not be charged under the Act.


Two separate benches of the Delhi HC had taken divergent views on the issue. While Justice SN Dhingra (since retd) held the woman and her family could be prosecuted for giving dowry, Justice Ajit Bharihoke had said it could not be done.


The latter judgment held that section 7 of the Dowry Prohibition Act provided protection to the person who was a complainant under the law. Section 3 of the Act makes giving, accepting or abetting dowry an offence.


The SC order clarifies the legal position regarding the culpability of an alleged dowry-giver bride. It dismissed the appeal against Justice Bharihoke’s verdict filed by the husband who claimed that the judge could not have delivered it as the law was settled by Justice Dhingra.


The bench, however, dismissed the petition and said, “The girl is a victim and you want her to be prosecuted also. Then 498A (dowry harassment section) would be rendered nugatory.”

Vijary Aggarwal counsel for the woman who faced the case for giving dowry, contended there should be harmonious construction of the Act.


Justice Bharihoke had in October 2010 quashed a metropolitan magistrate’s order that directed registration of a case under the Act against a woman. The case was registered following a complaint made before the court by the husband.


Cases against women

Delhi police issues circular in 2007 asking its officers to register cases under the Dowry Act against women who marry despite dowry demand


Mar 19, 2010: Delhi court orders case against a woman saying she had willfully given dowry


Dec 4, 2008: Noida court orders case against woman.



சட்டங்களும், நீதிமன்றங்களும், அரசாங்கமும் எப்போதுமே மருமகள் பக்கம்தான் என்று தெரியாத முட்டாள் கணவன்கள் மருமகள்களுக்கு எதிராக முட்டி மோதிப் பார்த்து கடைசியில் ஆணியைக் கூட பிடுங்க முடியவில்லை. இவர்கள் எங்கே மருமகள்களுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தப் போகிறார்கள்?! அதனால் மருமகள்களுக்கு அடங்காத கணவனுக்கெதிராக வரதட்சணை சட்டங்களை கொஞ்சமும் தயங்காமல் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 7 இருக்கின்றவரையிலும், நீதிமன்றங்கள் அதை ஆராய்ந்து அறியாமல் அப்படியே படித்து பொருள் கொள்ளும் வரையிலும் மருமகள்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. வானமும், பூமியும் உள்ளவரை வரதட்சணை வழக்குகளில் உள்ள இந்த இரண்டு நடைமுறையிலும் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுவரை இந்திய மருமகள்களுக்குக் கொண்டாட்டம்தான்!

அதனால் கணவனுக்கெதிராக புகார் கொடுக்கும்போது சிக்கனமாக இல்லாமல் புத்திசாலித்தனமா கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக எழுதிக்கொடுங்கள். அப்போதுதான் நீதிமன்றங்கள் நீங்கள் சொல்வதில் பாதி அளவாவது கணவனிடமிருந்து வாங்கிக்கொடுக்கும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பாக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7 இருக்கின்ற வரையில் மருமகள்களுக்கு அடங்கி நடக்காத கணவன்களுக்கு 71/2தான்!

வாழ்த்துக்கள்!