"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனின் சொத்தில் மருமகள் சரிபாதி பெறுவது எப்படி?

கணவனின் சொத்தில் சரிபாதி பெறுவது எப்படி? இனி இந்தக் கேள்வியே இந்திய மருமகள்களின் மனதில் எழவேண்டாம். ஏனென்றால் கணவனின் சொத்தில் சரிபாதி மருமகளுக்கு கிடைக்கும் விதமாக நமது அரசாங்கமே இப்போது புதிய சட்டத்தை இயற்றப்போகிறது!

அத்தோடு மட்டுமல்லாமல் மற்றொரு இனிப்பான செய்தியும் மருமகள்களுக்கு காத்திருக்கிறது. அதுதான் விவாகரத்து தொடர்பான புதிய சட்டம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியாவில் இனி கணவன்கள் தலைகீழாக நின்றாலும் விவாகரத்தே கிடைக்காது.

மருமகள் விரும்பி விவாகரத்து கேட்டால் அதற்கு கணவனால் சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியாது ஆனால் அதே சமயம் கணவன் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தால் மருமகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருமகள் நினைத்தால் கணவனின் தலையெழுத்தையே மாற்றி விடலாம்!

இதுவரை வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), மருமகள் கொடுமை தடுப்புச் சட்டம் (IPC498A), மருமகள்களை கணவனின் குடும்ப வன்முறையிலிருந்து காக்கும் சட்டம் (Protection of Women from Domestic Violence Act 2005) போன்ற சட்டங்கள் மூலம் பலனடைந்து வந்த மருமகள்களுக்கு இந்த புதிய சொத்துரிமை சட்டமும், கணவனுக்கு விவாகரத்து வழங்கும் அதிகாரத்தை மருமகளுக்கு கொடுக்கும் சட்டமும் வாழ்வில் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கப்போகிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை!

இதுவரை கணவனின் வருமானம் எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு, சொத்து மதிப்பு எவ்வளவு போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் மருமகள்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு இப்போதே பட்டியலிட ஆரம்பித்து விடுங்கள். தக்க சமயத்தில் கணவனின் சொத்தை சரிபாதியாக கணக்கிட உதவும்!

பின்வரும் செய்தியை கவனமாகப் படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

புதுடில்லி: திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.

"திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவும் தன் பரிந்துரைகளை அளித்தது. அவற்றில், நான்கு முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. அதேபோல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியர், அதன்பின் விவாகரத்து பெற நேரிட்டால், அந்தத் தத்து குழந்தைக்கும், மற்ற குழந்தைகளைப் போல சொத்தில் பங்கு பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் விவாகரத்து பெற்றாலும், கணவரின் சொத்துக்களில் பங்கு பெற உரிமையுண்டு. இருந்தாலும், எந்த அளவுக்கு சொத்தில் உரிமை பெறலாம் என்பதை, ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கோர்ட்டுகளே முடிவு செய்யலாம். ஒரு தம்பதியரில் விவாகரத்து கோரி கணவன் மனு தாக்கல் செய்தால், அதை மனைவியானவர் எதிர்க்கும் வகையில், புதிய சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தம்பதியரில் மனைவியானவர் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகினால், கணவர் அதை எதிர்க்க முடியாது. இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.





வெளிநாடுவாழ் மருமகள்களே உங்களை NRI கணவன் மிரட்டுகிறாரா?

இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தால் வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்களை நம்பி தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகப் பின்பற்றவேண்டும்.

இந்த விதிமுறையை மீறி NRI ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் பிறகு வாழ்க்கை முழுதும் அழுதுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பதை “47 நாட்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்டிவிட்டார்கள் நமது திரைப்பட மேதைகள்.

இந்த விஷயம் தெரியாமல் இன்றும் பல பெற்றோர்கள் தங்களது மகளை NRI -க்கு திருமணம் செய்துவைத்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று நினைத்து தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது மகளை பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள்.

பிறகு திருமணமான சில மாதங்களிலேயே அந்த புதுமணப்பெண் தான் கண்ட கனவெல்லாம் நிறைவேறாமல் புதுக்கணவன் தன் சொற்படி நடக்காமல் இருக்கிறானே என்று ஏங்கி பெருத்த ஏமாற்றம் அடையும்போதுதான் NRI கணவன் தனக்கு வரதட்சணைக் கொடுமை மற்றும் ||Sex Torture|| செய்வதை உணர ஆரம்பிக்கிறார்.

கடைசியில் இந்த புது மருமகள் தாங்கள் NRI கணவனுடன் குடும்பம் நடத்தும் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறையை நம்பாமல் இந்தியாவிற்கு ஓடிவந்து இந்தியக் காவல்துறையிடம்தான் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுப்பேன் என்று கண்ணை கசக்குவதைக்கண்டால் காண்பவர் மனம் என்ன பாடுபடும்? இதுபோன்ற துயரமான சூழ்நிலையில் பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இனி இதுபோல வெளிநாடுவாழ் மருமகள்கள் இந்தியாவிற்கு வரும்வரை காத்திருக்க வேண்டாம். அவரவர் இருக்கும் நாடுகளிலேயே இருந்துகொண்டு தங்களது NRI கணவனின் கொட்டத்தை ஒடுக்கி வழிக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் தனது உதவிக் கரத்தை நீங்கள் இருக்கும் நாடுவரை நீட்டியிருக்கிறது.

உங்களது NRI கணவன் கொடுமை செய்தாலோ அல்லது விவாகரத்து செய்ய முயற்சித்தாலோ முதலில் அந்த நாட்டிலேயே இந்திய அரசாங்கம் கொடுக்கும் நிதி உதவியைப் பயன்படுத்தி எளிதாக கணவனை அடக்கிவிடலாம். இந்த நிதி உதவியை நீங்கள் இருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். குறைந்தது $2000 - $3000 வரை உங்களுக்கு நிதியுதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை உங்களுக்காகத் தருகிறேன். படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.


SCHEME FOR GIVING LEGAL /FINANCIAL ASSISTANCE TO WOMEN DESERTED BY THEIR OVERSEAS INDIAN SPOUSES

MOIA’s Scheme for giving legal / financial assistance to Indian women deserted by their overseas Indian / foreigner husbands (revised w.e.f 30th November, 2011)

I. Objective:

The objective of the scheme is to provide some financial assistance to needy women in distress who have been deserted by their overseas Indian spouses for obtaining counseling and legal services. The term “Overseas Indian” would include NRIs and foreign citizens of Indian origin. The counseling and legal services would be provided through credible Indian Women’s Organizations/Indian Community Associations and NGOs identified for providing such services and empanelled with the Indian Missions in the USA, the UK, Canada, Australia, New Zealand and the Gulf. The scheme is a welfare measure to support women of Indian origin in distress, through the mobilization of the local Indian community in the endeavor and with some financial assistance from the Government.

II. Scope of and Eligibility for the Scheme:

The scheme would be available to the women who have been deserted by their overseas Indian spouses or are facing divorce proceedings in a foreign country subject to the following conditions:-

    1. The woman is an Indian passport holder.
    2. The marriage of the woman has been solemnized in India.
    3. The woman is deserted within five years of the marriage.
    4. Divorce proceedings are initiated within five years of the marriage by her overseas Indian spouse.
    5. An ex-parte divorce has been obtained by the overseas Indian spouse within 10 years of marriage and a case for maintenance and alimony is to be filed
    6. The scheme would not be available to a woman facing criminal charges or having a criminal case decided against her.
    7. Assistance will be limited to meeting initial cost and incidental charges for documentation and filing of the case by the Indian women’s organization/NGO on the woman’s behalf.
    8. The assistance will be limited to US $1500 per case and will be released to the organizations/NGO concerned to enable it to take steps to assist the woman in documentation and preparatory work for filing the case.
    9. The women’s organization/NGO will make efforts to enlist community advocates to extend further legal assistance/ appearance in court etc on a pro-bono basis.

      (x) The assistance will be limited to US$ 3000 per case for developed countries and US$ 2000 per case for developing countries and will be released to the empanelled legal counsel of the applicant or Indian Community Association / Women’s organization / NGO concerned to enable it to take steps to assist the woman in documentation and preparatory work for filing the case.

      (xi) The Indian Women’s Organizations / Indian Community Associations / NGOs will make efforts to enlist community advocates, preferably women advocates, to extend further legal assistance / appearance in court etc on a pro-bono basis.
      Note: *NGOs would also include local NGOs that are empanelled with the Indian Missions/Posts abroad.

Pattern of Assistance

Under the scheme Indian Missions in the countries concerned would empanel credible Indian Women’s Organizations/ Indian Community Associations/NGOs. The applications for providing legal aid received by the Missions would be examined by an officer designated by the Head of the Mission on case-to-case basis and approved by Head of Mission/Deputy Chief of the Mission.


முதல் கட்டமாக இந்திய அரசு கொடுக்கும் நிதியைப் பயன்படுத்தி நீங்கள் இருக்கும் நாட்டிலேயே கணவனுக்கு பாடம் புகட்ட முயற்சி செய்யுங்கள். அந்தக் கணக்கு தவறும் பட்சத்தில் கொஞ்சமும் கவலையே படாதீர்கள். இருக்கவே இருக்கிறது மருமகள்களின் சொர்க பூமி இந்தியா!

நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருமகள்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாக தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருக்கிறது.
Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries - National Commission for Woman
உலகத்தில் வேறு நாடுகளில் கிடைக்காத மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் (Daughter-in-law Friendly Laws) இந்தியாவில் மட்டுமே இருப்பதால் இந்தியாவிற்கு வந்தால் பல விதமான சட்டங்கள் (Dowry Prohibition Act, IPC498A, IPC406, IPC502, Domestic Violence Act, Maintenance, etc.,) மூலம் வெளிநாட்டில் வசிக்கும் கணவன் மீதும், இந்தியாவில் வசிக்கும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் பல வித குற்ற வழக்குகளை இந்திய காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவியுடன் எளிதாகவும் இலவசமாகவும் பதிவு செய்து NRI கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தலையெழுத்தையே நீங்கள் நினைத்தவாறு மாற்றிவிடலாம். மருமகள்களுக்கு எல்லாமே இந்தியாவில் இலவசம்தான்!! இந்த இலவச வழிமுறைகளை எப்படி பயன்படுத்துவது என்று முந்தைய பதிவுகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


வாழ்த்துக்கள்!!!


வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்திருக்கும் மருமகள்களுக்கு இந்த செய்தி

இப்போது பல மருமகள்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு குடும்ப சிக்கல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்திய நீதிமன்றத்தின் உதவியோடு சிக்கலிலிருந்து விடுபடும்போது தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி இது.

இந்த செய்தியில் “Quash” என்ற வார்த்தையை கவனமாக குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்படும் இந்த சட்ட நுணுக்க வார்த்தைதான் மருமகள்கள் தங்கள் கணவன் மீது தொடுக்கும் வரதட்சணை வழக்கில் மிகவும் முக்கியமான சட்ட நடைமுறை. இதைப் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!

NRI agrees to pay Rs 67 lakhs to wife in matrimonial dispute

New Delhi, Thu Dec 24 2009, The Indian Express


A London-based NRI, accused of attempting to kill his wife in a matrimonial dispute, has been granted anticipatory bail by the Delhi High Court after he agreed to pay her the permanent alimony of Rs 67 lakhs towards her and their child's maintenance.

Justice Kailash Gambhir in a recent order allowed a bail plea of Anuj Kapoor(name changed), an Indian origin British National, after he and his wife entered into an agreement and the original copy of the agreement was furnished before the court.

"In the event of arrest, the petitioner(Kapoor) shall be granted bail subject to his furnishing of personal bond in the sum of Rs 50,000 with one surety of the like amount to the satisfaction of the SHO of the concerned police station", said Justice Gambhir.

Directing the wife to co-operate, the Court asked both of them to file petitions for quashing of the FIRs lodged by her following their settlement and later they can approach the family court for mutual divorce.

The Court said Kapoor, a businessman, will deposit the amount in three instalments. Out of Rs 67 lakhs, he will deposit Rs 32 lakhs with the trial court which will hear their mutual divorce case, Rs 25 lakhs will be given by way of a demand draft and rest Rs 10 lakhs will paid by him to the wife after quashing of the criminal cases against him.

It was directed that after compliance of the court order, Kapoor will be allowed to visit abroad.

The couple's marriage took place in August 2007 and within a few months they moved to England. After the birth of their son and due to their differences the wife moved back to India.

Kapoor, in the petition, claimed he had come to India to resolve the differences with his wife but following some arguments, she filed two FIRs against him for alleged attempt to murder with Rajouri Garden police station.




NRI கணவனை விமான நிலையத்தில் இலவசமாக கைது செய்வது எப்படி? - Part 2

இரண்டு வாரங்களுக்கு முன்பு மருமகளின் சொல்லுக்கு கட்டுப்படாத NRI கணவனை இந்திய போலிஸின் துணையோடு இந்திய விமான நிலையத்தில் இலவசமாக கைது செய்வது எப்படி என்று எழுதியிருந்தேன். அதற்கு உதாரணமாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஒரு கணவனை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கைது செய்த செய்தியையும் எழுதியிருந்தேன் . அதனை படிக்காத மருமகள்கள் இந்த இணைப்பில் சென்று படித்துக் கொள்ளுங்கள்: NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?

அந்த வரிசையில் இப்போது மருமகளின் சொற்படி நடக்காத மற்றொரு NRI கணவனை “வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து” தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச குற்றவாளி வரிசையில் சேர்த்து கைது செய்திருக்கிறார்கள் என்பது மருமகள்கள் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி.

இதுபோன்று மருமகளுக்கு அடங்காத NRI கணவன்களுக்கு எதிராக இந்தியாவில் “வரதட்சணை வழக்கு” பதிவு செய்து காவல்துறை நண்பர்களின் உதவியோடு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்த NRI கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் கைது செய்வதோடு மருமகள்களின் வேலை முடிந்துவிடாது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மருமகள்கள் செய்ய வேண்டிய மற்றொரு காரியமும் இருக்கிறது.

இதுபோன்று காவல்துறை நண்பர்களின் இலவச உதவியோடு NRI கணவனை விமான நிலையத்தில் கைதுசெய்யும்போது மருமகள்கள் மறக்காமல் “மீடியா” நண்பர்களின் இலவச சேவையையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கணவன் கைது சம்பவத்தை உடனடியாக செய்தித்தாள், தொலைக்காட்சி நிருபர்களுக்கு சொல்லிவிட்டால் போதும் மற்ற வேலையை அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

இதுபோன்ற “பரபரப்பான” செய்தியை அவர்களுக்கு அளிக்கும்போது “மீடியா” நண்பர்கள் தங்களின் நன்றிக்கடனை மருமகள்களுக்கு செலுத்தத் தவறுவதில்லை. செய்தி வெளியிடும்போது கணவனைப் பற்றி தெள்ளத் தெளிவாக எல்லா விவரங்களையும் எழுதிவிட்டு மருமகளின் பெயர் மற்றும் தகவல்களை இருட்டடிப்பு செய்து மருமகளின் பெயர் வெளியே தெரியாமல் மருமகளின் “கண்ணியத்தை” பாதுகாத்து தங்களது நன்றிக் கடனை மருமகளுக்கு செலுத்திவிடுவார்கள். அதற்கு உதாரணமாக பின்வரும் இன்றைய பரபரப்பான செய்தியை படித்துப் பாருங்கள்.


திரிசூலம்:வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பி, சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர், நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் சிக்கினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சோமசுந்தர சுப்ரமணி, 38, இவருக்கும்,
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாக, சோமசுந்தர சுப்ரமணி மீது அவரது மனைவி, தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சோமசுந்தர சுப்ரமணி, சிங்கப்பூர் சென்று தலைமறைவானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தஞ்சாவூர் போலீசார், அவர் குறித்த தகவல்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சோமசுந்தர சுப்ரமணி நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு, ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திறங்கிய போது, குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்தனர். பின், தஞ்சாவூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

அதனால் மருமகள்கள் NRI கணவனை வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து விமான நிலையத்தில் கைது செய்யும்போது மறக்காமல் “மீடியா” நண்பர்களின் சேவையையும் பயன்படுத்திக் கொண்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும்.

வாழ்த்துக்கள்!!


மருமகளை வாழவிடாமல் தடுக்கும் மாமனாரின் மீது புகார் கொடுப்பது எப்படி?

பல குடும்பங்களில் கணவன் மருமகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி நடந்தாலும் அவனது குடும்பத்தில் இருக்கும் கிழடுகளான மாமியார், மாமனார் இரண்டும் சும்மா இருக்க முடியாமல் கணவனை மருமகளிடமிருந்து பிரிக்கும் வேலையில் ஈடுபடும். உதாரணத்திற்கு மருமகள் தனிக்குடித்தனம் போக விரும்பினால் பெரும்பாலான குடும்பங்களில் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பது இந்த கிழடுகள்தான்.

இதுபோன்ற சமயத்தில் மருமகள் சாதாரண காவல் நிலையத்தை அனுகாமல் தன்னுடைய புகாரை தெளிவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையர் இவர்களை நேரில் சென்று பார்த்து தன் கைப்பட புகாரை நேரடியாகக் கொடுத்தால் உடனடியாக மாமனார், மாமியார் மீது நடவடிக்கை பாயும் என்பது பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதாவது பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

ஒன்இந்தியா

நெல்லை: திருச்சி பரஞ்சோதிக்கு வந்த பஞ்சாயத்தைப் போல இப்போது சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி குடும்பத்திற்கும் ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது அவரது 2வது மனைவி டாக்டர் ராணி புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் தேர்தலில் பரஞ்ஜோதி ஜெயித்தார், பின்னர் அமைச்சரும் ஆனார்.ஆனால் ராணியின் புகார் வலுவானதாக இருந்ததால் அமைச்சர் பதவியை இழந்தார்.

இந்த நிலையில், சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் குடும்பத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் இளையராஜா. இவரது மனைவி சமுத்திரக்கனி. இவர் நெல்லை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில்,எனது கணவர் இளையராஜா. இவருக்கும், எனக்கும் கடந்த மே மாதம் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் என்னையும், எனது கணவரையும் அவரது தந்தை சங்கரலிங்கம் சேர்ந்து வாழ விடவில்லை. மேலும், நான் எனது கணவருடன் வசித்து வந்த வீட்டையும் பூட்டி விட்டார்.

என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்காமல் தடுத்து வரும் சங்கரலிங்கம் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு சங்கரன்கோவில் மகளிர் போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சங்கரலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியின் தந்தை மீது அவரது மருமகள் கொடுத்துள்ள புகாரால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.