"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்வது ஆபத்தானதா?

இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்களுக்கு கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்யும் வித விதமான கொடுமைகள் என்னென்ன என்று டில்லியைச் சேர்ந்த “மனுஷி” என்ற அரசு சாரா மகளிர் அமைப்பு ஆராய்ந்து ஒரு பட்டியில் வெளியிட்டிருக்கிறது.

இந்திய மருமகள்கள் தாங்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபிறகு அந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த பட்டியலை படிக்கும்போது உள்ளம் நடுங்குகிறது.  இப்படிப்பட்ட இந்திய ஆண்களை நம்பி இந்திய இளம் பெண்கள் திருமணம் செய்வது எவ்வளவு ஆபத்தான செயல் என்று தோன்றுகிறது.


The forms of marital cruelty as recognised by the courts are as follows 
 Laws against Domestic Violence, Manushi (Vol. 137) July-Aug, 2003, New Delhi, pp.24-25

a) Persistent denial of food
(பல நாட்கள் உணவு கொடுக்காமல் மருமகளை துன்புறுத்துதல்)

b) Insisting on perverse sexual conduct
 (தகாப்புணர்ச்சிக்கு வற்புறுத்துதல்)

c) Constantly locking a woman out of the house
(வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுதல்)

d) Denying the woman access to children, thereby causing mental torture
(குழந்தைகளை மருமகளின் கண்ணில்கூட காட்டாமல் விரட்டுதல்)

e) Physical violence
(அடித்து உதைத்தல், சிகரெட்டால் சூடு வைத்தல், தலையில் பீரை ஊற்றி “பீர்” குளியல் செய்வது, இன்னும் பல)

f) Taunting, demoralising and putting down the woman with the intention of causing mental torture
(மருமகளைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பேசி மருமகளின் மனதை காயப்படுத்துதல்)

g) Confining the woman at home and not allowing her normal social intercourse
(மருமகளை வீட்டிற்குள் தனியறையில் அடைத்துவைத்தல்)

h) Abusing children in their mother’s presence with the intention of causing her mental torture
(மருமகளின் கண்ணெதிரே அவரது குழந்தைகளை துன்புறுத்துதல்)

i) Denying the paternity of the children with the intention of inflicting mental pain upon the mother
(மருமகளுக்குப் பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்றுகூறி கணவன் மருமகளின் மனதை புண்படுத்துதல்)

j) Threatening divorce unless dowry is given
(கேட்ட பொருட்களையும், பணத்தையும் கொடுக்க மறுத்தால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டுதல்)


மருமகள்கள் இந்த பட்டியலை கவனமாக படித்து குறிப்பெடுத்துக்கொண்டு கணவனுக்கெதிரான தங்களது வரதட்சணைக் கொடுமை புகாரை எழுதும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!!!


வரதட்சணை வழக்கில் கணவனை அதிரடியாக கைது செய்வது எப்படி?

கணவனையும், அவனது குடும்பத்தையும் மருமகளுக்கு பிடிக்காத சூழ்நிலை ஏற்படும்போது மருமகளுக்கு கைகொடுத்து உதவுபவைதான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும்.  அதுபோன்ற சூழ்நிலையில் கணவனும், அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக் கொடுமை செய்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சில சமயங்களில் காவல்நிலைய அதிகாரி அந்த புகாரை பதிவு செய்ய தயங்குவார்.   இதனை எப்படிக் கையாள்வது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய காவல்துறை பணித் தேர்வு எழுதி பதவிக்கு வரும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் போன்றவர்கள் இந்திய மருமகள்களின் கவலையை போக்குவதற்கு பெரிதும் உதவுவார்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இன்று தெரிந்துகொள்ளுங்கள். 

கணவனை வரதட்சணை வழக்கில் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் புகாரை தெளிவாக எழுதி (புகார் எழுதத் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞரின் உதவியை நாடலாம்) அழகாக தட்டச்சு செய்து, நேர்த்தியாக உடையணிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக காவல் கண்காணிப்பாளரிடம் உங்களது புகாரை கொடுங்கள்.   பிறகு பாருங்கள் புகாரை பதிவு செய்து கணவனை கைது செய்யும்படி காவல்நிலையத்திற்கு உத்தரவு பறக்கும்.

காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு கிடைத்ததும் காவல் நிலையத்தில் உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.  உடனடியாக கணவனின் வீட்டிற்கு காவலர்கள் ஓடிச் சென்று கணவனையும், அவனது குடும்பத்தையும் கூண்டுடோடு  காவல் நிலையத்திற்கு கட்டி இழுத்து வந்துவிடுவார்கள்.  கணவனை கைது செய்து அழைத்துவரும் காட்சியைக் கண்ட மகிழ்ச்சியில் காவல் நண்பர்களுக்கு போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகள்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!

இந்த வழிமுறையில் இன்றைய செய்தியில் பாருங்கள் ஒரு வீரமான மருத்துவ மருமகள் தனது கணவனை காவல்துறை மூலம் அதிரடியாக கைது செய்ய வைத்திருக்கிறார்.


விருதுநகர்: விருதுநகரில், பெண் டாக்டரை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்த, பல் டாக்டர் ஹேமாசங்கரி.
இவர், நஜ்மல் கோதா எஸ்.பி., யிடம் கொடுத்த புகார்: எனக்கும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி உதவி பேராசிரியர் மலைராஜனுக்கும், 2007 நவ., 14 ல், திருமணம் நடந்தது. வரதட்சணையாக 60 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய், 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டன.

கடந்த 2009 ல், மலைராஜன், மாமியார் குருவம்மாள், நாத்தனார் லதாதேவி (மதுரை மீனாட்சி கல்லூரி உதவி பேராசிரியர்), மைத்துனர் அழகுராஜா (தனியார் கல்லூரி பேராசிரியர்) கேட்டதற்கிணங்க, ஒரு லட்சம் ரூபாய், 25 பவுன் நகையை, எனது பெற்றோரிடம் வாங்கிக் கொடுத்தேன்.

மீண்டும் வரதட்சணையாக, ஐந்து லட்சம், 25 பவுன் நகை வாங்கி வர, கணவர், குடும்பத்தார் வற்புறுத்தினர். "என்னால் கொடுக்க முடியாது' என, கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என, குறிப்பிட்டிருந்தார். மலைராஜனை, மகளிர் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
மேற்கண்ட செய்தியை படித்தவுடன் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-3ன் படி  “வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தானே” என்று  சில மருமகள்களுக்கு லேசான சந்தேகம் வரலாம்.  அதைப் பற்றி கவலையே படாதீர்கள்.  புகாரிலும் சரி, செய்தித்தாளிலும் சரி நீங்கள் வெளிப்படையாக வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்ததாக தைரியமாகக் கூறலாம். அப்போதுதானே அதன் தொடர்ச்சியாக கணவன் மேலும் வரதட்சணை கேட்பதாக புகாரை ஒரு கோர்வையாக எழுதமுடியும்?

அதனால் நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தயங்காமல் புகாரில் எழுதலாம்.  அப்படி எழுதினாலும் காவல்துறையோ, நீதிமன்றமோ மருமகளை ஒன்றுமே கேட்கமாட்டார்கள்.  அதுமட்டுமல்லாமல் மருமகள்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7ல் வரதட்சணை கொடுத்திருந்தாலும் தண்டிக்க முடியாதபடி பாதுகாப்பும் இருக்கிறது.

 இப்போது மத்திய அரசாங்கம் மருமகள்களுக்கு சாதகமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்களை கொண்டுவரவிருக்கிறது.  இதனால் மருமகள்களுக்கு அமோகமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லாம்.  முன்பெல்லாம் கணவனுக்கு 5 ஆண்டுகள்தான் தண்டனை, இப்போது அதனை திருத்தி 7 ஆண்டுகள் என்று மாற்றவிருக்கிறார்கள்.  இதன் மூலம் ஏராளாமான பலன்கள் மருமகள்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.  இப்போதைக்கு மத்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து  இந்த சட்டதிருத்தத்திற்கு உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

வாழ்த்துக்கள்!!

வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது
தினமலர்
செப்டம்பர் 01,2012

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும்.

அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். இச்சட்டத்தின் கீழ், குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் என, வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.