"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


பெண்களின் ஆடை சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்


முன்னொரு காலத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இப்போது எந்த உடையை பெண்கள் அணியவேண்டும், எந்த உடையை அணியக்கூடாது என்று கட்டளையிட்டு பெண்களை அடிமைப்படுத்த முற்படுகிறது இந்த ஆணாதிக்க சமுதாயம்.

இப்போது வார இதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் பெண்களின் உடை விஷயத்தில் மூக்கை நுழைத்து பெண்ணுரிமையை பறிக்க முயல்கின்றன. 

இதுபோன்ற அடிமைத்தனம் உங்கள் வீட்டில் தலையெடுக்க ஆரம்பித்தால் உடனடியாக நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
உங்கள் வீட்டில் இருக்கும் அண்ணன், தம்பி, அப்பா, கணவன்,  ஆண் நண்பன், கூடி வாழும் துணைவன், அல்லது மற்ற ஆண் உறவினர்கள் யாராவது உங்களை குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலோ அல்லது உங்களுக்குப் பிடித்த உடையை அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாலோ உடனடியாக “பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தின்”  [Protection of Women from Domestic Violence Act,2005, (Come into Force on 26/10/2006)] கீழ் அந்த ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடலாம்.  சட்டங்கள் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள்.  பிறகு சுதந்திரத்தை இழந்து அடிமைகளாகிவிட நேரிடும்.

உடை விஷயத்தில் எப்படி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது..... மேலும் தொடர்ந்து படியுங்கள்.  இந்தப் பதிவை படித்து முடிக்கும்போது “நான் என் விருப்பப்படி எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து வீதியில் உலா வருவேன், அதை யாரும் தட்டிக் கேட்கவோ அல்லது தடுக்கவோ முடியாது” என்று உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறந்திருப்பதை உணர்வீர்கள்.

பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்பவன்முறை தடுப்புச்  சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்படியே கொடுத்திருக்கிறேன் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
An Act to provide for more effective protection of the rights of women guaranteed under the Constitution who are victims of violence of any kind occurring within the family and for matters connected therewith or incidental thereto.
மேலுள்ள முக்கியமான வார்த்தையை கவனித்தீர்களா? பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம்.  அப்படியும் உங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம்.  நான் அணியும் உடையை அணியக்கூடாது என்று கூறுவது குடும்ப வன்முறையாகுமா? என்று எண்ணுவீர்கள்.   குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் வரையறைபடி அதுவும் ஒரு குடும்ப வன்முறைதான். 
Under the PWDVA, domestic violence is defined as any form of physical,sexual, emotional, economic and/or verbal abuse that injures, threatens,or endangers the physical, mental and emotional well being of the aggrieved person. 
உங்களுக்குப் பிடித்த உடையை அது கவர்ச்சியாக இருக்கிறது அதனால் அதை உடுத்தக்கூடாது என்று உங்களது ஆசைக்கு தடை போடுவது உங்களது உணர்ச்சிகளையும், மனதையும் காயப்படுத்துவதாகும்.  மேலும் அதற்கு உங்கள் வீட்டு ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்...... அப்பப்பா எத்தனை  கடுமையானதாக இருக்கும்...

இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதையும் தருகிறேன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]
  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and
  • Who has been subjected to acts of domestic violence
  • Children are also covered
  • Any person can file a complaint on their behalf
யாரெல்லாம் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா! இப்போது யாருக்கெதிராக இந்த சட்டத்தைப் பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள். அதையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Against Whom Can A Complaint be Filed :
“Respondent” [Section 2 (q)]
  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.
இந்த சட்டத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போனால் இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இன்றைய பதிவிற்கான முக்கியமான விஷயத்தை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். மற்றவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.




மருமகளிடம் பணியாத கணவன்களுக்கு இனி இரண்டே வழிதான்

மருமகளிடம் பணிவாக நடக்கத் தெரியாத கணவன்கள் ஒன்று கூடி சமீப காலமாக போராட்டம் நடத்தி தாங்கள் மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் துன்புறுத்தப்படுவதாக கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாா்கள். அவா்களது வாயை அடைத்து தலையில் தட்டி மருமகளின் காலில் விழும்படியாக நமது அரசாங்கம் இப்போது மருமகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மருமகள்களுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது.

வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் இந்த மாற்றத்தின் மூலம் கணவன்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. மருமகளின் வரதட்சணை வழக்கில் சிக்கி பிறகு மருமகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு சமாதானமாக செல்வது
======
1) சமாதானம்: கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
=======
அப்படியும் பணியாத கணவன்கள் பிறகு பல ஆண்டுகள் வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் சின்னாபின்னமான பிறகு தண்டனை பெற்று பிறகு மருமகளின் கட்டளைக்கு ஏற்ப தண்டத் தொகை கட்டி மருமகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு பிறகு கண்காணாமல் ஓடிப்போவது இரண்டாவது வழி. இந்த மாதிரி கணவன்கள் "அடியாத மாடு படியாது" என்ற ரகம்.
=======
2) அபராதம்: மேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
=======
புத்திசாலி கணவன்கள் இப்போதே மருமகளிடம் பணிவாக நடந்துகொள்வது எப்படி என்று மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் பாடம் படிக்க ஆரம்பித்துவிடுவாா்கள்.

====================================

புதுடில்லி: 'மாமியார், மாமனாரை சிறையில் தள்ள வேண்டும்' என, மோசடித்தனமாகக் கருதும் மருமகள்களால் தொடரப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரிப்பதால், அந்த சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். 'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்' என, மணமகன் வீட்டார் மீது மணமகள், போலீசில் புகார் கொடுத்தால் போதும்.

3 ஆண்டு சிறை:

சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் உடனடியாக கைது செய்யப்படுவர்; குற்றம் நிரூபிக்கப்படுமானால், மூன்றாண்டு கள் சிறை தண்டனை கிடைக்கும்; அவர்களால் ஜாமினில் வெளியே வர முடியாது. வரதட்சணை குற்றங்களை தடுக்க, இத்தகைய கடுமையான சட்டப் பிரிவுகளை, இந்திய தண்டனை சட்டம் அளிக்கிறது. இதை சில பெண்கள், தவறாக பயன்படுத்துவதால், வரதட்சணை கொடுமைக்கு எதிரான, இந்திய தண்டனை சட்டம், 498 - ஏ பிரிவை திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கு, மத்திய சட்ட அமைச்சகமும், நீதிபதி மாலிமத் கமிஷனும் பரிந்துரை செய்துள்ளன.அதன் படி, கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அபராதம்:

மேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆண்டுக்கு 10 ஆயிரம் போலி வழக்குகள் பதிவு:

கடந்த, 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், முறையே, 99 ஆயிரம், 1.06 லட்சம் மற்றும் 1.18 லட்சம் வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பின், அவற்றில், தலா 10 ஆயிரம் வழக்குகள், வேண்டுமென்றே மருமகளால் போடப்பட்ட வழக்குகள் என்பது தெரிய வந்தது. தேசிய குற்றப் பதிவகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.



வரதட்சணை சட்டத்தில் புதிய திருத்தம் - மருமகள்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!!

கடந்த சில மாதங்களாக  மருமகள்களுக்கு எதிரான ஒரு சதிகாரக் கூட்டம் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை தவறாக சித்தரித்து பல விமர்சனங்களை  பரப்பிக் கொண்டிருந்தது.  அதன்விளைவாக அரசாங்கம் இப்போது மருமகள் பாதுகாப்பு சட்டங்களான வரதட்சணை தடுப்பு சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்துகொண்டிருப்பதை அனைத்து  மருமகள்களும் படித்திருப்பீர்கள்.

மருமகள்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது அரசாங்கம்  எப்போதும் போல இந்த சட்ட திருத்தத்திலும் மருமகள்களுக்கு சாதகமாகத்தான் மாற்றம் கொண்டு வர இருக்கிறது  என்பதை மருமகள்கள் அனைவரும் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் ஏற்படப்போகும் முக்கியமான மூன்று மாற்றங்கள்:   

1. மருமகள்கள் முதலில் கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கெதிராக வரதட்சணை வழக்கை தொடுத்துவிட்டு காவல் நிலையம், நீதிமன்றம் என்று பத்து முறை அலையவிட்டு பிறகு அவன் நொந்துபோய் நிற்கும்போது  நமது வழக்கறிஞரை வைத்து  ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு வெளியே  வழக்கை பேசி முடித்துக் கொள்ளலாம்.   இதற்கு முன்பு இதுபோல பேரம் பேசி முடித்துக் கொள்ள உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய  சூழ்நிலை இருந்தது.  பல மருமகள்கள் உயர்நீதிமன்றம் வரை செல்லும் அளவிற்கு வசதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டு நமது அரசாங்கம் இப்போது இந்த பேரம் பேசி வழக்கை முடித்துக் கொள்ளும் வசதியை  உள்ளூர்  நீதிமன்றத்திலேயே ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசாங்கம் இப்போது வரதட்சணை சட்டத்தை Compoundable என்று திருத்தம் செய்யவிருக்கிறது.  இது மருமகள்களுக்கு நல்ல செய்திதானே?  (Plans are afoot to amend a criminal law that will allow compromise and settlement between husband and wife)  இப்படி உள்ளூரிலேயே பேரம் பேசி முடித்துக்கொள்ள  முன்வராத கணவன்களுக்கு பாடம் புகட்ட இரண்டாவது சட்ட திருத்தம்.  அது என்னவென்று  தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

2. வழக்கு ஆரம்பித்த உடனே  மருமகளுக்கு கட்டுப்பட்டு  மருமகள் கேட்கும் பணத்தை கொடுக்காத அடங்காத கணவன்களை வழக்கு நடத்தி தண்டித்து விடலாம்.   பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலைந்து திரிந்து கடைசியில் மருமகளுக்கு கட்டுப்படாததால் சிறைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில் கணவனிடம் பணம் கொடுத்தால் சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறினால் அவன் எதைத் தேர்ந்தெடுப்பான்.  கண்டிப்பாக பணத்தைக் கொடுத்துவிட்டு மருமகளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஊரை விட்டே ஓடிவிடலாம் என்று முடிவு செய்துவிடுவான்.  இதுதான் இரண்டாவது சட்ட திருத்தம்.   வரதட்சணை வழக்கில் தண்டிக்கப்பட்ட கணவன் ஒன்று சிறைக்குச் செல்லலாம் அல்லது சிறைத்தண்டனைக்குப் பதிலாக பணத்தைக் கட்டிவிட்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். (Another new section is expected to be inserted to allow an accused to escape jail by paying a penalty).

3.  மூன்றாவது சட்ட திருத்தம் வழக்கு பொய்யானால் மருமகளுக்கு ரூபாய் 15,000 அபராதம்.   இதனால் மருகள்களுக்கு பாதிப்பு என்று எண்ணிவிடாதீர்கள்.   அது எப்படி என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். (Now, if a dowry harassment case is proved wrong or proved that the law is misused, only Rs 1,000 penalty is slapped. But the amendment provides for a Rs 15,000 fine.)

மருமகள் வரதட்சணை வழக்கு தொடுத்தவுடன் பல கணவன்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள்.  இது மருமகள்களுக்கு முதல் வெற்றி.  அப்படி ஒத்துவராத கணவனை  வழக்கின் முடிவில் தண்டித்து சிறைக்குப் பதிலாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.  அப்படியே வழக்கின் இறுதியில் அவன் தண்டிக்கப்படவில்லையென்றால் வழக்கை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.  அதில் ஒரு பத்தாண்டுகள்  போய்விடும்.  அதிலும் கணவன் தப்பித்துவிட்டால் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்யலாம்.  அங்கு ஒரு பதினைந்து ஆண்டுகள்  கழிந்துவிடும்.  அதிலிருந்தும் கணவன் தப்பித்துவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.  அங்கு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாது.   இவையனைத்திலும் கணவன் தப்பிப்பிழைத்து வெற்றிபெற்றால் மட்டுமே மருமகளின் வழக்கு நிருபிக்கப்படவில்லை என்று சொல்ல முடியும். இப்படி 30 ஆண்டுகள் பல நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து வாழ்க்கையை தொலைத்த பிறகு கணவன் வெற்றி பெற்றால் மருமகளுக்கு வெறும் 15000 ரூபாய்  மட்டுமே நஷ்டமாகப்போகிறது.  ஆனால் நடந்துகொண்டிருக்கும் உண்மை என்னவென்றால் கணவன்களால் உச்ச நீதிமன்றம் செல்லும் வரை தாக்குப் பிடிக்க முடியாது.  அதனால் மருமகள்களுக்கு தோல்வி என்பதே கிடையாது என்பது உறுதி.

மருமகள்களுக்கு மற்றொரு சந்தேகம் எழலாம்.  இவ்வளவு வழக்குகளுக்கும் எப்படி செலவு செய்வது என்று ஒரு  அச்சம் ஏற்படலாம்.  கவலையே வேண்டாம்.  ஒரு புறம் வரதட்சணை வழக்கை தொடுத்துவிட்டு மறுபுறம் கைச் செலவிற்கு “குடும்ப வன்முறை வழக்கு” மற்றும்  குற்றவியல் நடைமுறை பிரிவு 125ன் கீழ் கணவனிடமிருந்து தவறாமல் ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகையை  சட்டத்தின் துணையோடே பெற்றுக்கொள்ளலாம்.   கணவனின் மீதான வழக்கை நடத்த அவனிடமே பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.  இது எவ்வளவு சந்தோஷமான செய்தி.

அதனால் இந்த சட்ட நுணுக்கங்களை மருமகள்கள் புரிந்துகொண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சட்ட மாறுதல்களை பயன்படுத்தி வாழ்வில் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள்!!

Government plans to amend anti-dowry harassment law

New Delhi | Published on: March 15, 2015 Times of India

Plans are afoot to amend a criminal law that will allow compromise and settlement between husband and wife at the onset of trial in dowry harassment cases, a move that comes after frequent misuse of the provision to trouble men and their near relatives.

Under the proposal, Section 498A of the Indian Penal Code will be made a compoundable offence with the permission of the courts as suggested by the Law Commission and Justice Malimath Committee.

“A draft note for the Union Cabinet seeking to amend Section 498A of the IPC, making it compoundable, has been sent to the Law Ministry for drawing up the draft bill,” a Home Ministry official said.

Now, the offence is non-compoundable and non-bailable which provides for immediate arrest of the accused. Conciliatory effort by the warring sides is virtually impossible.

A husband or his family members are presumed to be guilty till they prove their innocence in the court. The guilty is punishable with a jail term of up to three years.

There have been allegations that in many cases, husbands and their relatives are often charged with false dowry harassment cases by their wives or her family members when some marital problems arise.

If the offence is made compoundable, misuse of the law may come down hugely as there would be scope for initiating conciliation proceedings and out-of-court settlement.

Permission from a court will be a guarantee against attempts where a wife may be compelled into a compromise by her husband or in-laws, the Home Ministry official said.

Now, if a dowry harassment case is proved wrong or proved that the law is misused, only Rs 1,000 penalty is slapped. But the amendment provides for a Rs 15,000 fine.

Another new section is expected to be inserted to allow an accused to escape jail by paying a penalty.

Opposing the move to dilute the anti-dowry provision of the law, senior Supreme Court lawyer Indira Jaising said it is a law which gives relief and protection to harassed woman and it should be continued.

“Violence against women is a violation of human rights. There is no compromise of that. I would disagree with the government move,” Jaising said.

The Supreme Court had in a judgement in 2010 said as it stood now, the law had become a “weapon in the hands of disgruntled women”. It had also observed that serious re-look of the entire provision is warranted by the Legislature.

“It is a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over-implication is also reflected in a very large number of cases,” the apex court had said.

Section 498A was introduced in early eighties to protect married women from being subjected to cruelty by the husband or his relatives involving newly-married brides.
A spate of dowry deaths in Delhi and elsewhere led to a campaign by some leading women members of Parliament pushing the government to bring the amendment.

A punishment involving imprisonment of up to three years is provided in the present law. The expression ‘cruelty’has been defined in wide terms so as to include inflicting physical or mental harm to the body or health of the woman and indulging in acts of harassment with a view to coerce her or her relations to meet any unlawful demand for any property or valuable security.
 
The Law Commission recommended that the offence under Section 498A should be made a compoundable offence with the permission of Court.

Justice Malimath Committee on Criminal Justice Reform also recommended that it should be made compoundable as well as bailable.

Last year, the Home Ministry had asked all state governments to be judicious in slapping Section 498A of IPC in matrimonial disputes as the provision may be used as “weapons rather than shields by disgruntled wives”.

In an advisory to the states and union territories, the Ministry had asked them to instruct their police officers not to automatically arrest a person when a case under Section 498-A of the IPC is registered but to satisfy themselves about the necessity for arrest under the parameters laid down flowing from Section 41, CrPC (When police may arrest without warrant).



இந்தியாவிற்கு வந்திருக்கும் கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய காவல்துறையிடம் புகாா் கொடுப்பது எப்படி?

வெளி நாடு வாழ் ஆண்களை நம்பி திருமணம் செய்து மோசம் போகாதீா்கள் என்று நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  ஆனாலும் பல இளம் மருமகள்கள் ஆண்கள் வீசும் மாய வலையில்  சிக்கி பிறகு துன்பப்படுகிறாா்கள்.  எது எப்படியோ இளம் மருமகள்களுக்கு துன்பம் என்று வந்துவிட்டால் நமது இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எல்லை கடந்தும் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. 

சரி. வெளிநாடு வாழ் இந்தியரை நம்பி ஏமாந்த பிறகு எப்படி அதிலிருந்து மீண்டு கணவனுக்கு பாடம் கற்பிப்பது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது.   நீங்கள் எந்த நாட்டில் வசித்தாலும் உங்கள் கணவன் உங்களை துன்புறுத்துவதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்திய காவல்துறையை இணையதளம்  மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொண்டு உங்கள் புகாரை அனுப்பி வைக்கலாம்.  

இப்படி வெளிநாடு வாழ் மருமகள் ஒருவா் இந்தியாவிற்கு வந்திருக்கும் தனது கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே மின்னஞ்சல் மூலமாக சென்‌னை நகர காவல் ஆணையருக்கு புகாா்க அனுப்பியிருக்கிறாா்.   கவனமாக படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

 காவல்துறையை தொடா்பு கொள்ள வேண்டிய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  குறிப்பெடுத்து‌ வைத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது! இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.


24 hours Telephone Desk at CM office & DGP office
24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.
CM Office 044-25672510
Control Room (DGP Office) 044-28447200

இது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".
Toll Free Numbers
Women help Line - 1091
மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)


இப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கணவனுக்கெதிராக உங்கள் புகாரை தயாா் செய்யும்போது பின்வரும் பாடங்களிலிருந்து தகுந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.





ஆணாதிக்க அராஜகத்திற்கு எதிராக தமிழ் பெண்ணுக்குக் கிடைத்த வெற்றி!

கடந்த சில ஆண்டுகளாக போலிஸ் குடும்பத்தில் இளம் மருமகளாகத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிற்கு திருமணம் நடப்பதற்கு முன்பாகவே வரதட்சணைக் கொடுமை ஆரம்பித்திருந்தது. அதனை எதிர்த்து போராடி காதலனையும், அவனது குடும்பத்தையும் சிறைக்கு அனுப்ப அவர் பட்ட பாடு சொல்லி மாளாது. கடைசியில் ஒரு வழியாக காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து IPS காதலனையும் அவனது குடும்பத்தையும் ஒரு பெரிய குற்ற வழக்குப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

இதை இப்படியே விட்டுவிடவும் கூடாது. கடைசிவரை என்ன நடக்கிறது என்று எல்லா மருமகள்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கை பதிவு செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டிவிட்டு பிறகு புலன் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் வழக்கை மாற்றிவிடுவார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கடந்த 2012ல் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  2011ம் ஆண்டிலிருந்து போரடிய இந்த இளம்பெண்ணிற்கு நான்கு ஆண்டுகள் கடந்து கடைசியில் இப்போதுதான் அந்த அபலைப் பெண்ணிற்காக நீதியின் கண்கள் திறந்திருக்கின்றன......

காதலித்த பெண்ணை ஏமாற்றிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் புழல் சிறையில் அடைப்பு


Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ips-officer-varun-kumar-surrenders-199446.html

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்த போது காதலித்த பெண்ணை பின்னர் ஏமாற்றியதாக கிளம்பிய வழக்கில் தற்போது ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் சரணடைந்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்சினிக்கும், வருண்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. யுபிஎஸ்சி தேர்வு முடிவில் வருண்குமார் ஐ.பி.எஸ் பதவிக்குத் தேர்வானார். அவருக்காக பிரியதர்சினி தனது ஐ.ஏ.எஸ் கனவை உதறி விட்டு வருண்குமாருக்கு உதவி செய்தார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் வருண்குமார் - பிரியதர்சினி நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் வருண்குமார் திடீரென பிரியதர்சினி குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதுபற்றி கடந்த ஆண்டு பிரியதர்சினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது புகார் செய்தார். அந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். வருண்குமாரை நேரில் அழைத்தும் விசாரணை நடந்தது. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வருண்குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை வருண்குமார் நாடினார். அங்கும் அந்த மனு தள்ளுபடியானது.

இதையடுத்து பிரியதர்சினி, மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து வருண்குமாரை கைது செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் வருண்குமார் இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென ஆஜராகி சரணடைந்தார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் வருண்குமார் ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விசாரணையின் முடிவில் அவரை வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ips-officer-varun-kumar-surrenders-199446.html


கையில் தாலியுடனும், மனதில் ஆசையுடனும் திருமணத்திற்கு காத்திருக்கும் இந்திய இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

இதுவரை மருமகள்களுக்கு மட்டுமே ஆலோசனை வழங்கிவந்த நமது பதிவுத்தளம் இன்று இந்தியாவில் திருமணம் செய்ய மனதில் ஆசைகளை சுமந்து நிற்கும் ஆண்களுக்கு ஒரு அறிவுரைச் செய்தியை வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது.  ஏனென்றால் இந்த அறிவுரை மருமகள்களின் எதிர்கால நலனுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதனை சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் திருமணம் செய்து சுகமாக மருமகளின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு கையில் தாலியுடன் திரியும் ஆண்கள் இனி முதலில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து வங்கியில் குறிப்பிட்ட அளவிற்கு சேமிப்பு வைத்துக்கொண்டு பிறகுதான் திருமணம் பற்றியே யோசிக்க வேண்டும். 

ஆண் என்பவன் மனைவி மற்றும் குடும்பத்தை எல்லா சூழ்நிலையிலும் பாதுகாக்கவேண்டிய கடைப்பட்டவனாவான் என்று CrPC 125 என்ற சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தக் கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் அவனுக்கு தண்டனை வழங்கப்படும். இது பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.  
========================================================
இந்த பகுதி மருமகள்களுக்கு - இதோ அந்த CrPC 125 உங்களது நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

125. Order for maintenance of wives, children and parents.

(1) If any person leaving sufficient means neglects or refuses to maintain-

(a) His wife, unable to maintain herself, (கவனியுங்கள் முதல் உரிமை மனைவிக்குத்தான்) or

(b) His legitimate or illegitimate minor child, whether married or not, unable to maintain itself, or

(c) His legitimate or illegitimate child (not being a married daughter) who has attained majority, where such child is, by reason of any physical or mental abnormality or injury unable to maintain itself, or

(d) His father or mother, unable to maintain himself or herself.
 மேலுள்ள வாக்கியங்களில் கவனித்தீர்களா? எல்லா வாக்கியமும் ஆண் அல்லது கணவன் என்று பொருள்படும்படி "HIS" என்று தான் ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களது கணவர் உங்களை அனைத்து விதத்திலும் பராமரிக்க சட்டப்படி கடமைப்பட்டவராவார்.

என்றைக்குத் திருமணத்தின்போது இந்த முட்டாள்கள் தாலியை உங்களது கழுத்தில் கட்டுகிறார்களோ அன்றே CrPC 125 என்னும் இரும்புச் சங்கிலியை தங்களது கையில் கட்டிக்கொள்கிறார்கள். தாலியில் போடப்படும் முடிச்சு அவன் கையில் தானே இரும்புச் சங்கிலியால் போட்டுக்கொள்ளும் முடிச்சாகும். முட்டாள் கணவர்கள் இதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரமாட்டார்கள்.
========================================================
அதனால் இந்தியாவில் திருமணம் செய்ய கனவு காணும் ஆணுக்கு பணம், பதவி என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதை பின்வரும் செய்தி மீண்டும் ஒருமுறை இந்திய ஆண்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. 


தினமலர் மே 22,2013

மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார்.அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது.

"குழந்தை சிறு குழந்தையாக இருப்பதால், அதிகம் சாப்பிடாது. எனவே, அதற்காக தனி பராமரிப்பு செலவு கொடுக்கத் தேவையில்லை' என, குடும்ப நல கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதை எதிர்த்து, அந்தப் பெண், மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி, எம்.எல்.தகிலியானி முன், விசாரணைக்கு வந்தது."மகேஷ் வேலையில்லாமல் இருப்பதால், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இதில், கூடுதலாக, 1,000 ரூபாய் கேட்பது நியாயமல்ல' என, அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி தகிலியானி, தன் உத்தரவில், நேற்று கூறியதாவது: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான் கணவரின் கடமை. சம்பாதிக்காமல் இருப்பதும், வேலையில்லாமல் இருப்பதும், மனைவியின் குற்றமல்ல; கணவனின் குற்றம். இதற்காக, தகுந்த வேலை பார்ப்பது, கணவனின் பொறுப்பு. அதை, மகேஷ் செய்யத் தவறிவிட்டார்.எனவே, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டபடி, சசிக்கு, மாதம், 1,500 ரூபாயும், அவர்களின் குழந்தைக்கு, மாதம், 1,000 ரூபாயும் பராமரிப்பு செலவாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை, 2012ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.



மருமகளை மதிக்காத கணவனின் அரசாங்க வேலையை பறிப்பது எப்படி?

இந்திய அரசாங்கம் மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு பல பாதுகாப்பு சட்டங்களை அளித்திருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.  இதைப் பற்றி தெரியாத மருமகள்கள் முந்தைய பதிவுகளை படித்து குறிப்பெடுத்துக் கொள்ளவும்.
இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை:
  1.  வரதட்சணை தடுப்புச்  சட்டம்
  2. கணவனின் குடும்பத்தை கூட்டமாக சிறைக்கு அனுப்ப உதவும் மருமகள் கொடுமை தடுப்புச்  சட்டம் ( IPC498A)
  3. கணவனிடமிருந்து மாதாந்திர பராமரிப்புத் தொகை பெற வழிவகை செய்யும் சட்டம் (CrPC 125)
  4. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கைச் செலவிற்கு பணம் என அனைத்து வசதிகளையும் கணவனிடமிருந்து பெற்றுத் தரும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்.
  5. தற்போது வந்துள்ள பணியிடத்தில் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம்
மேலே பட்டியலிடப்பட்டுள்ள சட்டங்களின் பயன்பாடுகள் பற்றி இந்த ஒரு பதிவில் எழுதிவிட முடியாது.  அவ்வளவு பலன்கள் இருக்கின்றன!!

இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.  மருமகளின்  விருப்பத்திற்கு கட்டுப்படாமல் கொடுமை செய்யும் கணவன்களை அடக்க உதவும் வரதட்சணை தடுப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவற்றை மருமகள்கள் கணவனுக்கெதிராக பயன்படுத்தினாலும் கணவன்களின் கொட்டம் அடங்குவதில்லை.  அதற்குக் காரணம் அவர்கள் கையில் துள்ளிக் கொண்டிருக்கும் மாத வருமானம்.  தாங்கள் நல்ல அரசாங்க பணியில் இருக்கிறோம் என்ற மமதையினால் கணவன்கள் துள்ளிக் கொண்டிருப்பார்கள்.  அந்தக் கொட்டத்தையும் அடக்க இப்போது நீதிமன்றங்கள் மருமகள்களுக்கு உதவக் காத்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு அரசாங்க பணியாளர் நடத்தை விதிமுறை மற்றும் தமிழ்நாடு காவல்துறை பணியாளர் நடத்தை விதிமுறைகளின்படி குற்ற வழக்கு சுமத்தப்பட்ட நபர் அரசாங்கப் பணியிலோ காவல்துறையிலோ ஈடுபட தகுதியற்றவர் என்று கருதப்படலாம்.  அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் கணவன் மீது வரதட்சணை குற்ற வழக்கு சுமத்தியவுடன் நிலுவையில் இருக்கும் அந்த குற்ற வழக்கை காரணம் காட்டி கணவனின் அரசாங்க வேலையை பறிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பிக்கலாம்.  இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றி ஒரு புத்திசாலி மருமகள் தனது கணவனின் வேலைக்கு உலை வைத்துவிட்டார். இதனை வழிகாட்டுதலாகக் கொண்டு இனி எல்லா மருமகள்களும் உயர்நீதிமன்றத்தை அணுகி தங்கள் கணவனின் அரசாங்க வேலையை பறித்து கணவனுக்கு தக்க பாடம் கற்பிக்கலாம்.

பின்வரும் செய்தியை கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!!!

 
சென்னை: குடும்ப வன்முறை குற்றம் சாட்டப்பட்டவரை, டி.எஸ்.பி.,யாக நியமிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஈரோடு, சம்பத்நகரைச் சேர்ந்த, லட்சுமிபிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: எனது கணவர், வினோத் சாந்தாராம். வங்கியில் பணியாற்றிய அவர், டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழக அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி.,யாக, போலீஸ் பயிற்சி கல்லூரியில், பயிற்சி எடுத்து வருகிறார்.

ஈரோட்டில், எங்களுக்கு, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், எனது நெருங்கிய உறவினர். இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக, ஒரு வயது குழந்தையுடன், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். 

விவாகரத்து கோரி, ஈரோடு கோர்ட்டில், எனது கணவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது. கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய, எனது மனுவை, கோர்ட் ஏற்றுக் கொண்டது; ஆனால், கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தவும், எனக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்கவும் கோரி, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலிக்குமாறு, உத்தரவிட வேண்டும். தற்போது, பயிற்சி முடிக்க உள்ளதால், அவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க உள்ளனர். போலீஸ் பிரிவில், ஒழுங்கு முறையாக பணியாற்றுபவருக்கு தான் இடம் அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், குடும்பம் நடத்த அவரால் இயலவில்லை. பெண்ணை தொந்தரவு செய்தது, குடும்ப வன்முறை செய்தது, என, ஈடுபட்ட ஒருவரை, போலீஸ் பிரிவில் சேர்க்கக் கூடாது. எனவே, டி.எஸ்.பி.,யாக, வினோத் சந்தாராமை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்கள் மீது, விசாரணை நிலுவையில் உள்ளது என, கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரியபடி, ஒரு வாரத்துக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.



பணியிடத்தில் தொந்தரவு செய்யும் ஆண்களை ஒடுக்க புது வழி!

பணியிடத்தில் தொந்தரவு செய்யும் ஆண்களை கட்டுக்குள் வைக்க புது சட்டம் வந்திருக்கிறது. அனைத்து மருமகள்களும் இதைப் பற்றி தெரிந்துகொண்டால் தாங்கள் பணி புரியும் இடங்களில் ஆண்களை பின்னுக்குத் தள்ளி எளிதாக பதவி உயர்வு பெறலாம்.

படத்தின் மீது “Right Click” செய்து "Open Link in New Tab" என்பதை “Click" செய்து பெரிதாக்கி அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!!





வெளிநாட்டிலிருந்து வரும் உங்கள் கணவனை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டுமா?

மருமகளுக்கு பிடிக்காத கணவனையும், அவனது குடும்பத்தையும் ஏதாவது செய்ய வேண்டும்போல ஒரு உள்ளுணர்வு பல மருமகள்களுக்கும் உள்மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.   என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது மருமகளின் தந்தை, சகோதரன் போன்றவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்தோ அல்லது செய்தித்தாள், தொலைக் காட்சி போன்றவற்றில் பார்த்து தெரிந்துகொண்டு   ஒரு நல்ல வழிமுறையை மருமகளுக்கு ஆலோசனையாக வழங்குவார்கள்.  அது என்ன என்று கேட்கிறீர்களா?

அதுதான் இந்திய அரசாங்கம் மருமகள்களுக்குக் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம்.  இதன் பயன்பாடுகள் பற்றி இந்த ஒரு பதிவில் எழுதி முடிக்க முடியாது. இந்த சட்டங்கள் மூலம் மருமகள்கள் அளவிடற்கரிய பலன்களை அடையலாம்.  உதாரணத்திற்கு தனிக்குடித்தனம் வராத கணவனையும், அதற்குத் தடையாக இருக்கும் மாமியாரையும் பெட்டிப் பாம்புபோல அடக்கிவிடலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள பின்வரும் முந்தைய பதிவுகளை படித்துப் பாருங்கள்.


எல்லாம் சரி இப்போது கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். மருமகள் ஏதோ காரணத்தால் இந்தியாவிற்கு வந்துவிட்டால் அந்தக் கணவனுக்கு எப்படி பாடம் புகட்ட முடியும்? என்று பல மருமகள்களுக்கும் சந்தேகம் இருக்கும்.  கவலையே படாதீர்கள்.  மருமகளுக்கு பிடிக்காத கணவன் உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் பிடித்து பாடம் புகட்டக் காத்திருக்கிறது இந்திய காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை.  
 
மருமகள் செய்யவேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான்.  தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் கணவன் வரதட்சணைக் கொடுமை செய்தான் என்று ஒரு எளிய புகாரை பதிவு செய்யவேண்டும்.  பிறகு காவல்துறையினரிடம் சொல்லி கணவன் வெளிநாட்டில் இருப்பதால்  மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்தி அவனை தேடப்படும் சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் (Red Corner Notice) செய்துவிடலாம்.  

இதற்கு நடுவே மற்றொரு சிறிய வேலை இருக்கிறது.  நமது காவல்துறை நண்பர்களை பயன்படுத்தி கணவன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை (FIR) பயன்பத்தி இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள்,  தரைவழி எல்லைகள் இங்கெல்லாம் உள்ள இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிவைக்கலாம்.  இதனை தேடப்படும் குற்றவாளி சுற்றறிக்கை (Look Out Circular)  என்று அழைப்பார்கள்.  இந்தியாவிலிருந்து தப்பித்துவிட்ட கொடிய குற்றவாளி எப்போதாவது இந்திய எல்லைக்குள் நுழையும்போது குடியேற்ற அதிகாரிகள் மூலம் குற்றவாளியை கைது செய்ய காவல்துறை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவார்கள்.

இப்போது இதே வழிமுறையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தெரியாமல் அவன் மீது இந்தியாவில் வரதட்சணை வழக்கு பதிவு செய்து அவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வழக்கிலிருந்து தப்பித்து வெளிநாட்டில் ஒளிந்துகொண்டிருப்பதாக சித்தரித்து அனைத்து விமானநிலையங்களுக்கும் அறிவிப்பு செய்துவிட்டால் போதும்.  இங்கு நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று தெரியாமல் கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவனை பிடித்து நாட்டைவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதி போல கைது செய்து  காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள். 

இந்தக் காட்சியை கண்ணாறக்கண்டு களிக்க காவல்துறை நண்பர்களிடம் சொல்லிவைத்திருந்தால் போதும் கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டதும் உங்களுக்கு தொலைபேசியில் தகவல் தருவார்கள்.  உடனடியாக நீங்கள் உங்களது செய்தித்தாள், தொலைக்காட்சி மீடியா நண்பருடன் விமான நிலையத்திற்கு சென்று கணவனை படம் பிடித்து வரதட்சணை வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டான் என்று செய்தி வெளியிட்டு விமான நிலையத்திலேயே தீபாவளியை கொண்டாடிவிடலாம். அதுபோல் ஒரு மருமகள் கணவனை விமானநிலையத்தில் கைது செய்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். படித்து கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனுக்கெதிராக Look Out Circular, Red Corner Notice  போன்றவறை ஒரு எளிய வரதட்சணைப் புகார் மூலம் எப்படி தயார் செய்வது என்ற தகவல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
  1. வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி?
  2. NRI கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி? - இளம் மருமகளுக்கு மட்டும்
  3. NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்
  4. NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?
  5. NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?
  6. NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்

வாழ்த்துக்கள்!!
 

தாம்பரம், அக். 29-
 
மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து இருந்தார்.
 
இதுதொடர்பாக விஸ்வநாதனிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார். அவர் ஜெர்மனி சென்று இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜெர்மனியில் இருந்து வந்த விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
அப்போது வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரல் தேடப்பட்ட விஸ்வநாதன் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்வது ஆபத்தானதா?

இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்களுக்கு கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்யும் வித விதமான கொடுமைகள் என்னென்ன என்று டில்லியைச் சேர்ந்த “மனுஷி” என்ற அரசு சாரா மகளிர் அமைப்பு ஆராய்ந்து ஒரு பட்டியில் வெளியிட்டிருக்கிறது.

இந்திய மருமகள்கள் தாங்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபிறகு அந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த பட்டியலை படிக்கும்போது உள்ளம் நடுங்குகிறது.  இப்படிப்பட்ட இந்திய ஆண்களை நம்பி இந்திய இளம் பெண்கள் திருமணம் செய்வது எவ்வளவு ஆபத்தான செயல் என்று தோன்றுகிறது.


The forms of marital cruelty as recognised by the courts are as follows 
 Laws against Domestic Violence, Manushi (Vol. 137) July-Aug, 2003, New Delhi, pp.24-25

a) Persistent denial of food
(பல நாட்கள் உணவு கொடுக்காமல் மருமகளை துன்புறுத்துதல்)

b) Insisting on perverse sexual conduct
 (தகாப்புணர்ச்சிக்கு வற்புறுத்துதல்)

c) Constantly locking a woman out of the house
(வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுதல்)

d) Denying the woman access to children, thereby causing mental torture
(குழந்தைகளை மருமகளின் கண்ணில்கூட காட்டாமல் விரட்டுதல்)

e) Physical violence
(அடித்து உதைத்தல், சிகரெட்டால் சூடு வைத்தல், தலையில் பீரை ஊற்றி “பீர்” குளியல் செய்வது, இன்னும் பல)

f) Taunting, demoralising and putting down the woman with the intention of causing mental torture
(மருமகளைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பேசி மருமகளின் மனதை காயப்படுத்துதல்)

g) Confining the woman at home and not allowing her normal social intercourse
(மருமகளை வீட்டிற்குள் தனியறையில் அடைத்துவைத்தல்)

h) Abusing children in their mother’s presence with the intention of causing her mental torture
(மருமகளின் கண்ணெதிரே அவரது குழந்தைகளை துன்புறுத்துதல்)

i) Denying the paternity of the children with the intention of inflicting mental pain upon the mother
(மருமகளுக்குப் பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்றுகூறி கணவன் மருமகளின் மனதை புண்படுத்துதல்)

j) Threatening divorce unless dowry is given
(கேட்ட பொருட்களையும், பணத்தையும் கொடுக்க மறுத்தால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டுதல்)


மருமகள்கள் இந்த பட்டியலை கவனமாக படித்து குறிப்பெடுத்துக்கொண்டு கணவனுக்கெதிரான தங்களது வரதட்சணைக் கொடுமை புகாரை எழுதும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!!!