"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்

வரதட்சணை கொடுமை வழக்கில் ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நான்கு மாதம் சிறை
ஜனவரி 08,2012 தினமலர்

சென்னை:ஒரு கோடி ரூபாய் கேட்டு வரதட்சணை கொடுமை செய்த வழக்கில், ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

நாகர்கோவிலை அடுத்துள்ள வள்ளிவிளையைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ஸ்டீபன். இவரது மகள் பியூலாவை, அதே ஊரைச் சேர்ந்த, பத்மநாபனின் மகன் சிவகுமாருக்கு, 2003ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். அப்போது வரதட்சணையாக, 1.5 கிலோ தங்கம், 6 லட்சம் மதிப்புள்ள கார், 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.சிவகுமார், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்துக்கு பின் சிவகுமாரும், பியூலாவும் சென்னையில் வசித்தனர். அப்போது, வரதட்சணை போதாது என்றும், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி பியூலாவை, கணவர், மாமனார் பத்மநாபன், மாமியார் பத்மா ஆகியோர் கொடுமை செய்தனர்.

பியூலா, தன் கணவர், மாமியார், மாமனார் மீது வரதட்சணை புகாரை, கன்னியாகுமரி போலீசாரிடம் கொடுத்தார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட், சிவகுமார் மற்றும் அவரது பெற்றோரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில், பியூலா அப்பீல் செய்தார்.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதி எஸ்.பழனிவேலு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது, வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ், சிவகுமாருக்கு 4 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.பத்மா, பத்மநாபன் ஆகிய இருவருக்கும், 2 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை காலத்தை ஏற்கனவே அனுபவித்து இருந்தால், விடுதலை செய்யலாம்.இவ்வாறு, நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
=====

மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பதிவு
NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?

இந்திய அரசின் மருமகள் உதவி மையம்

வெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:

National Commission for Women, India

4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi - 110 002
Phone: 91-11-23237166
91-11-23236988
Fax: 91-23236154
Complaints Cell:
91-11-23219750
Email: ncw@nic.in

Click Here to File Complaint Against NRI Husband
 Online Complaint Registration for NRI's




மருமகள்களே வழக்கறிஞரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!

மருமகள்களை ஏமாற்ற பல கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. சட்டம் படித்து உதவி செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் இதில் அடங்கும். மருமகள்கள்தான் விழிப்புணர்ச்சியுடன் இருந்து தங்களை அனைத்துவித தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஆசிரியை விவாகரத்து வழக்கில் போலி பெயரில் "ஒரிஜினல்' வழக்கறிஞர்கள் :விசாரணையில் அம்பலம்

ஜனவரி 01,2012 தினமலர்


மனைவிக்கு பதில் வேறு ஒரு பெண்ணை கோர்ட்டில் நிறுத்தி, விவாகரத்து பெற்ற வழக்கில், போலி பெயரில், ஒரிஜினல் வழக்கறிஞர்கள் ஆஜரானது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோவை, பீளமேட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா, 34; சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2004ல் இவருக்கும், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த, இன்ஜினியர் சிவகுமாருக்கும் திருமணம் நடந்தது. சிவகுமார், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவரை அணுகி, சிங்கப்பூரில் இருக்கும் மனைவிக்கு தெரியாமல், கோவை குடும்பக்கோர்ட்டில் இருந்து, விவாகரத்து பெற்றார். தகவல் அறிந்த சொர்ணலதா, உடனடியாக கோவை திரும்பி, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இன்ஜினியர், தனது பெற்றோருடன் கைது செய்யப்பட்டார்.

விவாகரத்து உத்தரவு பெற்றுத்தந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், சிவகுமாரின் மனைவியாக கோர்ட்டில் ஆஜரான பெண், நண்பர் மாரிமுத்து, இருதரப்பிலும் வழக்கறிஞர்களாக ஆஜரான போலி நபர்களை, போலீசார் தேடினர். கடந்த 28ம் தேதி, மாரிமுத்து கோர்ட்டில் சரணடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமார், சொர்ணலதா சார்பில், குடும்பக் கோர்ட்டில் ஆஜரானவர்கள் போலி வழக்கறிஞர்கள் அல்ல; போலி பெயரில் ஆஜரான ஒரிஜினல் வழக்கறிஞர்கள் தான் என்றும், எங்கும் தலைமறைவாகாமல் தினமும் கோர்ட்டுக்கு வருகின்றனர் என்ற தகவலும், தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசாரிடம் கேட்டபோது,""அவர்களை கைது செய்ய, நாள் குறித்து விட்டோம். இவ்வழக்கில், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், முன்ஜாமின் பெற ஐகோர்ட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால், மற்ற இரு வழக்கறிஞர்களை கைது செய்வதில் சிரமம் இருக்காது,'' என்றனர்.



கணவனின் ஓய்வூதியத்தை “கட்” செய்த வீரமான மருமகள்

சென்னை:மனைவி, குழந்தைகளை பராமரிக்காத ராணுவ வீரருக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் தாக்கல் செய்த மனு:எனக்கும், நீலகிரி வெலிங்டனில் பணியாற்றும் ராணுவ வீரர் சங்கர் என்பவருக்கும், 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு, 12 வயதில் மகன், ஒன்பது வயதில் மகள் உள்ளனர். வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னிடம் விவாகரத்து பெறும் வகையில், வெற்றுப் பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டினார்.நான் மறுக்கவே, என்னை தாக்கினார்.

ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என்னையும், குழந்தைகளையும் கைவிட்டு விட்டார். கடந்த ஆண்டு ஜூலை முதல், என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.எங்கள் இருவருக்கும் கூட்டாக வங்கியில் கணக்கு இருந்தது. ஏ.டி.எம்., மூலம் மாதம் 7,000 ரூபாய் எடுத்து வந்தேன். தற்போது அந்தக் கணக்கை முடித்து விட்டார். அவரது பணி ஆவணங்களில், "நாமினி' ஆக, என்னை தான் குறிப்பிட்டிருந்தார்.தற்போது, அவரது ஓய்வூதிய சலுகைகள் அனைத்தும், வேறொரு பெண்ணுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுகிறார். வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடுத்த வழக்கில், இடைக்கால நிவாரணமாக மாதம், 7,000 ரூபாய் எனக்கு வழங்க உத்தரவிட்டது.

எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக, 30 ஆயிரம் ரூபாய் மற்றும் இருப்பிட வசதி அளிக்க, என் கணவருக்கு உத்தரவிட்டது.என்னையும், குழந்தைகளையும் பராமரிக்காததால், ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது என, ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். எனக்கு வர வேண்டிய பராமரிப்புத் தொகையை தராமல், அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. எனவே, ஓய்வூதிய பலன்களை வழங்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜரானார். விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து, அதுவரை ஓய்வூதிய பலன்களை வழங்க இடைக்காலத் தடை விதித்தார்.




அடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

அடங்காத கணவன்களை வரதட்சணை சட்டங்கள் (IPC498A) மூலம் அடக்குவது எப்படி என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும். இதுவரை தெரிந்துகொள்ளாத மருமகள்கள் இந்த இணைப்புகளில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது புதிதாக வந்திருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் இன்னும் எப்படி அதிக பலத்துடன் அடக்கலாம் என்று செய்தித்தாளில் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.

முக்கியமான “பாயிண்ட்டுகளை” சிவப்பு நிறத்தில் கனமான எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள் >> அக்டோபர் 24,2011


குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:

"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.

ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
======

இனி இந்த சட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்....

  • ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஆண் மீது மட்டும்தான் புகார் தரமுடியும். ஏனென்றால் ஆண்கள்தான் எப்போதும் கொடுமை செய்யும் கொடுமைக்காரன்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கணவன், தந்தை, சகோதரன், கணவனின் சகோதரன், திருமணம் செய்யாமல் கூடி வாழும் துணைவன், நாத்தனார்களின் கணவன்கள் என எந்த ஆண் மீது வேண்டுமானாலும் இந்த சட்டத்தின் மூலம் புகார் கூறலாம்.

குறிப்பாக மகளின் காதலுக்குத் தடைபோடும் அப்பா மீதும் இந்த சட்டத்தை மகள் ஏவிவிடலாம். எல்லாம் குடும்ப வன்முறைதானே...அதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கிறது! இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே சென்று படித்துப் பாருங்கள்: காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!

  • கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
கணவனைப் பிடிக்க வில்லை. அவன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் மருமகள்கள் அதை குடும்ப வன்முறை தடுப்பு அலுவலரிடம் கூறி கணவனை அவன் சொந்த வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியாமல் தடையுத்தரவு வாங்கி விடலாம். மீறி வந்தால் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்.

அவன் வீட்டிற்கு வரவில்லையென்றால் செலவிற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று மருமகள்கள் கவலையோடு யோசிப்பது புரிகிறது. அதைப் பற்றி கவலையே படவேண்டாம். இந்த குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் கணவனை அவன் வீட்டிற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கலாம் ஆனால் மாதந்தோறும் குடும்ப பராமரிப்பிற்கு மட்டும் சரியாக பணத்தை அனுப்பவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பிறப்பிக்கலாம். எப்படிஇருக்கிறது இந்த புதிய சட்டம்!!!!!!

  • இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
முன்பிருந்தது போல் IPC498A வை மட்டும் பயன்படுத்தினால் ஜாமின் வாங்கிக்கொண்டு கணவன்கள் ஓடிவிடுவார்கள். இது பழைய நடைமுறை. அதனால்தான் இப்போது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மருமகள்களின் கரங்களை வலுப்படுத்த வந்திருக்கிறது. இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தினால் கணவனை அவனது சொந்த வீட்டைவிட்டே விரட்டலாம், அவனது வருமானத்தில் கணிசமான ஒரு தொகையை மாதா மாதம் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் அவன் குடும்ப சொத்தில் பங்குகூட வாங்கிக் கொள்ளலாம்.

இதன் விளைவாக அவன் என்ன செய்வதென்றே வழி தெரியாமல் மருமகள் சொல்லும் பேச்சிற்கு அடங்கி நடக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவான். அல்லது வேறு நல்ல தீர்வாக மருமகள் கேட்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிடுவான்.


இந்த இரண்டிற்கும் அவன் கட்டுப்படவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது IPC498A. இந்த IPC498A சட்டம் இப்போது தனித்து செயல்படாமல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவையானதை மருமகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனால் மேலே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் மருமகள் அனுபவிக்கலாம் அதே சமயம் IPC498A சட்டத்தையும் பயன்படுத்தி கணவனை கைது செய்து நீதிமன்றத்திலும் அலைய விடலாம். இந்த வசதி எப்படி இருக்கிறது....பிரமாதம்.

இப்படிப் பலவகையான வசதிகள் இருக்கின்றன இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில். அதனால் மருமகள்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு பக்குவமாகப் பயன்படுத்தி பலன் அடையாலாம். இப்படிப் பலர் இப்போது பயனடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்!

முக்கியமான பின்குறிப்பு: இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தாராளமாக ஆண்களுக்கெதிராக பயன்படுத்தலாம். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் குடும்ப வன்முறை செய்வதாகக் கூறி பெண்ணின் மீது ஒரு ஆணால் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஆண் மட்டுமே குடும்ப வன்முறை செய்பவன் என்பது உலகறிந்த உண்மை. மருமகள்களுக்கு எந்த வன்முறையும் செய்யத் தெரியாது! இதுவும் மருமகள்களுக்கு நல்லதுதானே!!



யாரிடம் வாலாட்டக் கூடாது தெரியுமா?

வரதட்சணை சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மருமகள்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக பலம் படைத்தவர்கள் சட்டம் படித்த வக்கில்கள்தான். அதனால் சட்டம் தெரிந்த மருமகள்களிடம் கணவன்களும் அவனது குடும்பமும் வாலாட்டக் கூடாது! சட்டம் படித்த வக்கில்களிடம் பொது மக்கள் வாலாட்டக் கூடாது!!

மருமகள்களின் தோழர்களான சட்டம் படித்த வக்கில்களுக்கு மருமகள்கள் தங்களது ஆதரவை அளிக்க வேண்டும்.

போலீசுக்கு எதிரான போராட்டம் என கூறி வக்கில்கள் நடத்திய மனித சங்கிலியை ஏதோ ஒரு அவசர காரணமாக கடக்க முயன்ற பொதுமக்களை வக்கில்கள் தாக்கினர். (15 அக்டோபர் 2011 தினமலரில் வந்த செய்தியும் படமும்)



மருமகள்களின் ஆயுத பூஜை!


ஆயுத பூஜையான இன்று மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் “மருமகள் பாதுகாப்பு சட்ட ஆயுதங்களைப்” பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்க அகிம்சை வழி ஆயுதங்களாக அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம் (The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)), மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (IPC498A), கணவனின் வன்முறையிலிருந்து மருமகளை காக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005) இவற்றைப் பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆயுத பூஜை நன்னாளில் மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சக்தி மிகு அகிம்சை வழி ஆயுதங்களை பின்வரும் இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்து அச்சடித்து இன்றைய பூஜையில் வைத்து பூஜை செய்து இந்த நகலை எப்போதும் கையில் வைத்துக்கொண்டால் கணவன் மற்றும் அவனது குடும்பத்தால் ஏற்படும் அனைத்துவித கொடுமைகளையும் அரசாங்கத்தின் உதவியோடு எதிர்த்து பாதுகாப்பு பெறலாம்.

பின்வரும் இணைப்புகளில் “PDF” வடிவில் இந்த சட்டங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

1. வரதட்சணை தடுப்புச் சட்டம்

தற்போது வரதட்சணை கேட்கும் அல்லது திருமணத்தின்போது வரதட்சணை கேட்ட கணவனை அல்லது திருமணத்தின்போது வரதட்சணை பெற்றுக்கொண்ட கணவனை இந்த சட்டத்தின் மூலம் எப்போது வேண்டுமானாலும் தண்டிக்கலாம்.

2. மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

வரதட்சணைக்காகவோ அல்லது மதிப்பு மிக்க பொருட்களுக்காகவோ அல்லது எந்தவித காரணமும் இன்றி மருமகளை மனளதளவிலோ அல்லது உடலளவிலோ துன்புறுத்தும் கணவன் மற்றும் அவனைச் சார்ந்த அனைவரையும் (உறவினர், நண்பர்கள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல்) இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கலாம்.

3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

மகள், மருமகள், மனைவி, சகோதரி என அனைத்து பெண்களும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் எந்த ஆண் உறவினராலும் (திருமணம் செய்யாமல் கூடிவாழும் துணைவன், கணவன், சகோதரன், தந்தை உட்பட) உடலியல், பாலியல், மனவியல், மற்றும் பொருளாதாரக் (Physical and Sexual Abuse, Verbal & Emotional Abuse and Economic Abuse) கொடுமைகளுக்கு ஆளானால் இந்த சட்டத்தின் மூலம் தகுந்த நிவாரணம் பெறலாம்.

இந்த ஆயுத பூஜை “சக்திமிக்க” பூஜையாக இருக்கட்டும்!

வாழ்த்துக்கள்!!


கணவனை அவமானப்படுத்தும் மனைவியருக்கு காத்திருக்கும் பரிசு!

ஆந்திர மாநில மருமகள்களுக்கு அமைச்சர் கொடுக்கும் அரிய வாய்ப்பு!
கரும்புத் தின்ன கூலி கொடுக்கப் போகிறார்களாம்!




கர்னூல்: "மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.

தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.

==================================================================
இதுபோன்ற நல்ல திட்டங்களை நாடு முழுதும் எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து இந்திய மருமகள்களும் பலனடைவார்கள்.
==================================================================



காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!

மருமகள்களே,

இதுவரை உங்களுக்குக் கொடுமை செய்யும் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்தி அடக்க உதவும் சட்டங்களைப் பற்றி மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். கணவனை அடக்க உதவும் அந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் பொதுவாக “வரதட்சணை சட்டங்கள்” என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இன்றுவரை இந்த சட்டப்பாதுகாப்புப் பெட்டகத்தில் Dowry Prohibition Act, IPC498A என்ற இரண்டு அற்புதமான சட்டங்கள்தான் மருமகள்களுக்கு பெரும் உதவி செய்து வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போது “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்” [Protection of Women from Domestic Violence Act,2005, (Come into Force on 26/10/2006)] என்ற சர்வ வல்லமை பொருந்திய சட்டம்தான் பரவலாக நடைமுறைக்கு வந்திருக்கிறது என்ற விஷயம் பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2005லேயே இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும் இப்போதுதான் இது சமீபகாலமாக மருமகளின் பயன்பாட்டிற்காக பெருமளவில் விடப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்படியே கொடுத்திருக்கிறேன் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
An Act to provide for more effective protection of the rights of women guaranteed under the Constitution who are victims of violence of any kind occurring within the family and for matters connected therewith or incidental thereto.

மேலுள்ள முக்கியமான வார்த்தையை கவனித்தீர்களா? பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம்.

இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதையும் தருகிறேன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]

  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and
  • Who has been subjected to acts of domestic violence
  • Children are also covered
  • Any person can file a complaint on their behalf
யாரெல்லாம் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா! இப்போது யாருக்கெதிராக இந்த சட்டத்தைப் பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள். அதையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Against Whom Can A Complaint be Filed :
“Respondent” [Section 2 (q)]
  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.
இந்த சட்டத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போனால் இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இன்றைய பதிவிற்கான முக்கியமான விஷயத்தை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். மற்றவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இதுவரை இருந்த சட்டங்கள் நிகழ்கால மருமகள்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போது வந்திருக்கும் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் எதிர்கால மருமகள்களுக்கும் நன்றாக உதவும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது எதிர்கால மருமகள்களால் இளமைக் காலத்தில் காதல் புரியாமல் இருக்க முடியாது. அதுபோன்ற சமயத்தில் பெற்றோர் ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை அடக்கும் ஆயுதமாகவும் இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று ஒரு வீரமிக்க எதிர்கால மருமகள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் மேலே சொல்லப்பட்டுள்ள சட்ட விளக்கத்தில் சிவப்பு நிற வாக்கியங்களை கவனியுங்கள்.

குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆணால் (தந்தை, சகோதரன் உட்பட) ஒரு பெண்ணுக்கு (மகள், மனைவி, சகோதரி, தாய்) உட்பட எந்த வகையான வன்முறை இழைக்கப்பட்டாலும் (மகளின் காதலை தந்தை கண்டிப்பதும் ஒரு வகையில் வன்முறைதான்) இந்த சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்ற விளக்கம் பின்வரும் செய்தியின் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் தனது காதலை தனது தந்தை கண்டித்ததால் குடும்ப வன்முறை சட்டத்தைக் காட்டி தனது தந்தையை அடங்கச் செய்திருக்கிறார். செய்தியை கவனமாகப் படித்து புரிந்துகொண்டால் உங்களுக்கே இந்த சட்டத்தின் மகிமை புரியும்! இன்னும் பல அரிய பயன்பாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

ஐக்கிய நாட்டு சபையின் இந்தியாவிற்கான பெண்கள் வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் உருவான சட்டத்தின் அருமை பெருமை அவ்வளவு சிறிதாகவா இருக்கும்!

[நிதி ஒதுக்கீட்டின் தற்போதைய நிலவரம் இது - The schemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).]

வாழ்த்துக்கள்!!


Stopped from seeing boyfriend, teen girl threatens to lodge case against father

22/09/11 Daily Bhaskar



Ahmedabad: A school girl of Ranip area in the city has threatened her doctor father that she will lodge a case of domestic violence against him if he does not allow her to meet her boyfriend. The father has approached police but cops say they cannot do much legally. However, they have offered to counsel the teenager.

Ranip police said Shruti (name changed), 14, a resident of Ranip, studies in class X and is in love with a boy of class XII of the same school. Her father, who is a doctor, spotted Shruti and the boy together on a number of occasions but thought they were just friends.

However, the doctor recently saw Shruti and the boy emerging from a multiplex in the city. He got angry and slapped her in the face asking her not to see the boy any longer. The girl did not say a word.

A few days after the theatre incident, the father once again found Shruti with her boyfriend at Kankaria. He was enraged and took the girl home. However, before the doctor could vent his anger, Shruti threw a book dealing with 'Protection of Women from Domestic Violence Act, 2005' towards him and threatened to file a case in court if he continued to 'harass' her.

The stunned father called up his friend, a city-based IAS officer, and told the whole story. The officer put him in contact with Ranip police station. Subsequently, the doctor met officials of Ranip police and narrated the whole case but cops told him that legally, they could not do much in the matter.

"Considering the nature of the case, there is not much that we can do. However, we have advised the doctor to visit us with the girl and her mother and we will try to counsel her about the expectations of her parents," Ranip police inspector Sudarshansinh Vala said.

Police said that the doctor has agreed to bring Shruti to police station. No formal police complaint has been lodged in this connection.

http://daily.bhaskar.com/article/GUJ-AHD-stopped-from-seeing-boyfriend-teen-girl-threatens-to-lodge-case-against-father-2449354.html





காதலிக்கும் இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

வருங்காலத்தில் மருமகளாகப் போகும் இளம் பெண்களுக்காக இந்த செய்தி.

காதலில் விழும் பல இளம்பெண்களை இளைஞர்கள் ஏமாற்றுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக காதலிக்காமல் இருக்கமுடியுமா?

அப்படியென்றால் எப்படி பாதுகாப்பாக காதலிப்பது என்று தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

சிலசமயங்களில் காதல் செய்துவிட்டு ஆண்கள் பெண்ணை ஏமாற்ற முற்படுவார்கள். அதுபோன்ற சமயத்தில் ஆணை வழிக்குக் கொண்டுவர பொதுவாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். பல சமயங்களில் இதுபோன்ற புகார்களை யாரும் சரியாக கவனிக்க மாட்டார்கள். அப்போது இளம் பெண்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாதல்லவா? இதுபோன்ற இளம் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக ஒரு பெண்கள் உதவி மையம் இருக்கிறது. இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் உங்களது காதல் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமே உதவி செய்கிறது.

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers (இலவச தொலைபேசி)

Women help Line - 1091


மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
(தினமலர் செப்டம்பர் 8/2011)

தமிழகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மூலம் இயங்கும் நடமாடும் போலீஸ் கவுன்சிலிங் வாகனம், புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.



சிவகங்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட போலீஸ் கவுன்சிலிங் வாகனம் "டிவி' உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது.

கடந்த 2001 அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உடனே தடுக்கவும், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன் கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்தால், மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுன்சிலிங் நடத்த, வாகனம் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள், டாக்டர், வக்கீல்கள், கவுன்சிலிங் உறுப்பினர்கள் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தனர்.

அதற்கு பின் வந்த தி.மு.க., அரசு, இலவச போலீஸ் கவுன்சிலிங் வாகன திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால், போலீஸ் கவுன்சிலிங் வாகனம் பொலிவிழந்து போனது.

புதுப்பொலிவு: மீண்டும் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் ஜெ., பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் வந்தால், உடனே நேரில் சென்று கவுன்சிலிங் நடத்துமாறும், இதற்காக வழங்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் வழங்கப்பட்ட "போலீஸ் நடமாடும் கவுன்சிலிங்' வாகனத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இதில், பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க, "டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்காக புதிதாக "டிவி' உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



பெண்களுக்கு உதவி செய்ய காவல்துறையால் இந்த பெண்கள் உதவி மையம் இயக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது அதே காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலிஸ்காரரே ஒரு இளம் பெண்ணை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள். ஐயோ பெண்களை யார்தான் காப்பாற்றுவார்களோ?



செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், காதலித்த பெண்ணை கைவிட்டு, வேறு திருமணம் செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பழைய செம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரர். இவருக்கும், வத்தலக்குண்டு பூசாரிபட்டி திவ்யாவிற்கும், நேற்று முன்தினம், செம்பட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை, திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நரசிம்மன் மகள் திவ்யா, "மணிகண்டன் என்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தை நிறுத்த வேண்டும்,' என, போலீசில் புகார் செய்தார். மாப்பிள்ளை அழைப்பில் இருந்த மணமகனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பெண் வீட்டாருக்கு இத்தகவலை தெரிவிக்காத மாப்பிள்ளை வீட்டார், "மணமகனுக்கு உடல்நிலை சரியில்லை. நேரம் சரியில்லாததால் மதியம் ஒரு மணிக்கு மேல் தாலிகட்ட வேண்டும்,' என, கூறி சமாளித்தனர். ஆனால் மண்டபத்தில் விருந்து, மொய் வசூல் நடந்தது. மொய் வசூல் முடித்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப முயற்சித்த போது, பெண் வீட்டார் தடுத்தனர். மோதல் ஏற்பட்டு, போலீசார் வந்த பிறகே, பெண் வீட்டாருக்கு விஷயம் தெரிந்தது.

காதலி திவ்யா, "என்னை திருமணம் செய்ய வேண்டும் அல்லது மணிகண்டனை கைது செய்ய வேண்டும்,' என, முடிவில் உறுதியாக இருந்தார். மாலையில், மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.





வரதட்சணை சட்டத்தின் பயன்பாடு

முந்தைய பதிவுகளில் வரதட்சணை சட்டத்தைப்பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தேன். அதனை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? - பாடம் 3 ல் குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளை மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்கிறேன். படித்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.



1. தனிக்குடித்தனம் போகவேண்டும் (இந்தவகையான பயன்பாட்டிற்கு பின்வரும் செய்தி ஒரு நல்ல செயல்முறை உதாரணம்)

2. மாமியார், மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்

3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்

4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்

5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்

6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்

7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.

தனிக்குடித்தனம் போகவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள பயன்பாட்டிற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுத்து விளக்குவதற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. வழக்கம் போல படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.



செப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி


தனிக்குடித்தனம் வராத கணவன் மீது வரதட்சணை வழக்கு


சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார்.

கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.



வாழ்த்துக்கள்!