"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகார் எழுதுவது எப்படி

கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கெதிராக வரதட்சணைப்புகார் எழுதுவது எப்படி? - இந்திய மருமகள்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு

இதுவரை மருமகளைப் போற்றும் சிறப்புச் சட்டங்களான IPC498A, Dowry Prohibition Act போன்றவற்றைப் பற்றியும் அதுதொடர்பான வெற்றிகரமான செய்திகளைப் பற்றியும் பல பதிவுகளில் படித்து மகிழ்ந்தீர்கள். இனி அவற்றை எப்படி செயல்முறைப்படுத்துவது என்று மருமகள்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உதாரணத்துடன் கூடிய பதிவை இன்று காண்போம்.

மருமகள்களுக்காக ஒரு மாதிரி முதல் தகவல் அறிக்கையையும் (FIR) இங்கே கொடுத்திருக்கிறேன். இது உண்மையாகவே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு FIR-ன் நகலாகும். அதனால் வரதட்சணை புகார் FIR எப்படி இருக்கும் என்று தெரியாத மருமகள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிபடிவத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

புகார் மனுவில் நீல நிற எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான் முக்கியமான வார்த்தைகள். அவற்றை நன்றாக கவனித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.

படத்தின் மீது ‘Click’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்.


பக்கம் 1
பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5
புகார் மனுவை படித்தபிறகு உங்களாலும் இதுபோல எழுதமுடியும் என்று இப்போது உங்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கும் என நம்புகிறேன்.

புகார் மனுவில் நீல நிற எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான் முக்கியமான வார்த்தைகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அவை எப்படி முக்கியமான வார்த்தைகள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் IPC498A பிரிவை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”



மேலே குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுப்படி கொடுமை என்பது உடலளவில் அல்லது மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். அதனால் மேற்கண்ட புகார் மனுவில் “எனது கணவரும் மாமியாரும் அடித்து துன்புறுத்தினார்கள்”, “எனது கணவர் கருப்பு சட்டை அணிந்துவந்து மனதளவில் துன்புறுத்தினார்”, “எனக்கு அரை வயிற்றுக்குக் கூட உணவு கொடுக்கவில்லை”, “ஃபோன் தொடர்பை துண்டித்து வீட்டுக் கைதியாக வைத்திருந்தனர்”, “கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் போன்ற வார்த்தைகள் எப்படி இந்த IPC498A சட்டப்பிரிவில் சொல்லப்பட்டதற்கேற்ப பக்குவமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மருமகள்கள் நன்றாக கவனிக்கவும்.

அது போல “மாமியாரும் அவரது குடும்பத்தாரும் நிச்சயதார்த்த தினத்தன்று கூட்டமாக அமர்ந்து வரதட்சணை கேட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ”, “நாத்தனார் வரதட்சணை வாங்க மூளையாக செயல்பட்டார்” போன்ற வார்த்தைகளையும் கவனியுங்கள். மாமியார் குடும்பத்தைக் கூட்டமாக சிறையில் தள்ளவேண்டுமென்றால் இதைவிட வேறெந்த அற்புதனமான வார்த்தையை பயன்படுத்தமுடியும்!

மருமகள்கள் கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் புகார் எழுதியிருக்கும் மருமகள் தன்னை டாக்டர், Ph.D. உயர் பட்டம் பெற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறியிருக்கும் சம்பவங்கள் நடந்திருப்பது வெளிநாட்டில். ஆனால் உயர் கல்வி படித்திருக்கும் இவர் அந்த நாட்டில் போலிஸில் புகார் செய்யாமல் இந்தியாவிற்கு வந்து பொறுமையாக பல மாதங்கள் கழித்து புகார் கொடுத்திருக்கிறார். இதை வெளிநாட்டுவாழ் மருமகள்கள் நன்கு கவனிக்கவேண்டும்.

நீங்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக புகார் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் நீங்கள் புகார் கொடுக்க தேர்வு செய்யவேண்டிய நாடு இந்தியா. என்ன இருந்தாலும் தாய்நாட்டுப்பற்றை விடமுடியுமா? இந்தியாவில் இதுபோன்ற வரதட்சணை புகார் கொடுத்தால் அதுவும் மருமகள் கையால் எழுதிக்கொடுத்தால் அதன் மதிப்பே தனிதான். ஏனென்றால் இந்தியாவில்தான் காவல்துறையில் இருப்பவர்களுக்கும், நீதித்துறையில் இருப்பவர்களுக்கும் சிந்திக்கும் திறன் என்பதே கிடையாது. அவர்கள்தான் மருமகள்கள் எது சொன்னாலும் அதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்வார்கள். அதில் நமக்கும் லாபம் இருக்கிறதல்லவா! மற்ற நாடுகளில் இது போல மருமகள்கள் நினைப்பதையெல்லாம் செய்வது மிகவும் கடினமான செயல்.

ஒருமுறைக்கு பலமுறை நன்கு படித்து இந்த மாதிரி புகார் படிவத்திலிருந்து முக்கியமான வார்த்தைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். வரதட்சணைப் புகார் எழுதுவது என்பது சமையல் செய்வது போலத்தான். சட்டப்பிரிவுகளை முதலில் படித்துக்கொள்ளுங்கள். பிறகு சட்டப்பிரிவுகளுக்கேற்றவாறு உங்களது புகாரில் வார்த்தைகளை உபயோகித்தால் உங்களின் புகார் மிகவும் உறுதியானதாக இருக்கும். போலிஸ் அதை படித்தவுடன் உடனடியாக கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

சட்டம் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞர்களின் உதவியை நாடுகிறார்கள். அப்படி எழுதப்பட்ட புகார்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விசேஷத்தை கவனித்தீர்களா? புகாரின் கடைசி பாகத்தில் யார் யாருக்கு எந்ததெந்தப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூட போலிஸிற்கே ஆலோசனை வழங்கும் விதமாக இந்த புத்திசாலி மருமகள் வழக்கறிஞரின் உதவியுடன் புகார் எழுதியிருக்கிறார்.

வழக்கறிஞரிடம் சென்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது கொடுத்தால்தான் இதுபோன்ற புகாரைப் பெறமுடியும். மருமகள்களுக்கு அந்த சிரமமெல்லாம் வேண்டாம். மருமகள்களின் பொருளாதார நலன் கருதி நான் இந்த புகாரின் மாதிரிப் படிவத்தை கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிறு திருத்தங்கள்தான். இதனை மாதிரிப்படிவமாகப் பயன்படுத்தி கணவர் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், சம்பவ நாள், மற்றும் சம்பவம் நடந்த இடம் இவற்றை மற்றும் மாற்றி உங்களுக்கேற்றவாறு சம்பவங்களை எழுதி வரதட்சணைப் புகார் கொடுக்கப் பயன்படுத்தலாம். மிகவும் எளிதான செயல்.

அது எப்படி இதை ஒரு டெம்ப்ளேட் போல பயன்படுத்த முடியும்? அது சாத்தியாமா? என்று சில புத்திசாலி மருமகள்கள் யோசிப்பது புரிகிறது. உங்களுக்கு அந்த சந்தேகம் இருந்தால் நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவையும் மேலே நான் கொடுத்துள்ள இந்த புகார் மனுவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டு புகார் மனுவிற்கும் உள்ள பல ஒற்றுமைகளைக் காண்பீர்கள். அதனால் சட்டப்பிரிவுகளுக்கேற்றவாறான குற்றச்சாட்டுகளுக்கான பாயிண்ட்டுகள் தான் முக்கியம். அவை எல்லா புகார்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று இப்போது உங்களால் உணரமுடியும் என்று நம்புகிறேன்.

நடிகர் பிரசாந்த் அவர்கள் மீது எழுதப்பட்ட புகாரைப் படித்து மேலும் பல நல்ல பாயிண்ட்டுகளை தெரிந்து கொள்ள ஆவலுடைய மருமகள்கள் இங்கே சென்று படிக்கவும் --> நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை (PDF Format)

எல்லாவற்றிற்கும் மேலாக மருமகள்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எந்த சட்டப்பிரிவின் கீழ் வரும் என்று காவல்துறையையும் சட்டத்துறையையும் யோசிக்க வைப்பதைவிட சட்டப்பிரிவிற்கு பொருந்துமாறு உங்களது குற்றச்சாட்டுகளை எழுதிவிட்டால் எல்லாருக்குமே வேலை எளிதாகிவிடும். நீங்களும் உங்களது குறிக்கோளை எளிதாக அடைந்துவிடலாமல்லவா? அதுதான் வரதட்சணை தொடர்பான மருமகள் பாதுகாப்பு சட்டங்களின் சிறப்பம்சம். அதனால் உங்களின் புகாரை எழுதுவதற்கு முன் சட்டப்பிரிவுகளை நினைவுபடுத்திக்கொண்டு பிறகு நீங்கள் எந்தவகையான குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்று யோசித்து பிறகு புகாரை எழுத ஆரம்பியுங்கள். இதுதான் இன்றுவரை பலகாலமாக இந்திய மருமகள்கள் பின்பற்றிவரும் இந்திய மரபு.

உங்களுக்கு குற்றச்சாட்டுகள் சொல்வதற்கு எதுவும் பாயிண்ட்டுகள் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்காகவே பல சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. குறிப்பாக IPC498A, IPC406, IPC506, IPC34, Dowry Prohibition Act போன்றவை பொதுவாக அனைத்துப் புகார்களிலும் பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவுகள். இவை எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பிரிவுகள். இந்த சட்டப்பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் புகார் எழுதுவதற்கான பாயிண்ட்டுகள் உங்களின் சிந்தனை அருவியிலிருந்து தானாகவே கொட்டும்.

மருமகள்களே, இப்போது உங்களின் வரதட்சணைப் புகாரை எப்படி எழுதுவது என்று ஒரு தெளிவும் தன்னம்பிக்கையும் பிறந்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

(பின்குறிப்பு: உண்மையாக வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மருமகள்கள் இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தவேண்டியதில்லை. அவர்கள் உள்ளது உள்ளபடி உண்மையை மட்டும் எழுதித்தருவதே போதுமானது. )


2 comments:

  1. இதுபோல இன்னும் ஆபாச க​தை நிரம்பிய "வரதட்ச​ணை ​கொடு​மை" முதல் தகவல் அறிக்​கை​யை படிக்க ​வேண்டுமா... மின் அஞ்சல் ​செய்யுங்கள்
    victim dot ipc498a at gmail dot com என்ற முகவரிக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்