வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 3
கணவரை வீட்டில் வளர்க்கும் நாய் போல் நடத்துவது எப்படி?இந்த மூன்றாவது பாடம் மிகவும் முக்கியமான பாடம். அதனால் முதல் இரண்டு பாடங்களை ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். கணவரை சமாளிக்க முடியாத திண்டாட்டத்தில் பாடங்களை மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று ஒரு முறை முதல் இரண்டு பாடங்களை நினைவு படுத்திக்கொள்ளவும்
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1
நான் முன்பே கூறியபடி இந்திய அரசால் இயற்றப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டங்களில் மிகவும் முக்கியமானது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498A. இதை நான் மருமகள்களின் அந்தரங்க தோழி என்று தான் சொல்வேன். ஏனென்றால் இது அந்த அளவிற்கு மருமகள்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
அப்படி என்ன மந்திரஜாலம் இதில் இருக்கிறது என்று நீங்கள் வியப்பாக கேட்கலாம். இந்த சட்டப்பிரிவின் கருத்துக்களை கீழே தருகிறேன் படியுங்கள். பிறகு நீங்களே மிகவும் வியந்து போவீர்கள்.
The ingredients of Section 498-A are as follows:
“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.
Explanation – For the purpose of this section ’cruelty’ means –
(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;
or
(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”
படித்து உயர் பட்டம் பெற்று வெளிநாடுகளில் பணிபுரியும் பல மருமகள்கள் கூட வெளிநாடுகளில் கணவன் கொடுமைப்படுத்தினாலும் ஏதோ தங்களுக்கு
ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாதது போல பாசாங்கு செய்து அங்குள்ள போலிஸை அணுகி புகார் செய்யாமல், இந்தியாவிற்கு ஓடிவந்து போலிஸில் புகார் கொடுக்கிறார்கள். அப்போது தான் அங்கு என்ன நடந்தது என்று இந்திய போலிஸுக்கோ, நீதிமன்றத்திற்கோ உண்மை தெரியாது. ஆனாலும் அனைவரும் மருமகள் சொல்வதை மட்டும் தான் நம்புவார்கள். அதுபோன்ற ஆங்கிலம் படிக்கத் தெரியாத பல மருமகள்களுக்காக இதை மொழிபெயர்ப்பு செய்து எளிய வடிவில் தருகிறேன்.
498A பிரிவின் படி கணவரோ அல்லது அவரைச் சார்ந்த யாராகிலும் (உறவினர், நண்பர், பக்கத்து வீட்டுகாரர்கள் உட்பட) மனைவியை கொடுமைப்படுத்தினால் அவர்கள் மூன்றாண்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதில் கொடுமை இரண்டு வகைப்படும்:
1. எந்தவொரு காரணமுமில்லாமல் கொடுமை செய்து அது மனைவியின் உடலையோ அல்லது மனதையோ புண்படுத்தினால் அது கணவர் மனைவிக்கு செய்யும் கொடுமையாகக் கருதப்படும்.
உதாரணத்திற்கு வீட்டில் டிவி ரிப்பேர் ஆகிவிட்டது ஆனால் கணவர் வேலைப்பளு காரணமாக அதை சரி செய்யவில்லை என்றால் டிவியில் வரும் மெகா சீரியல்களைப் பார்க்காமல் உங்களது மனம் ஏங்கித் தவித்து வாடினால் அது கணவர் உங்களுக்குச் செய்த கொடுமையாகக் கருதப்படும். இது உண்மை. இந்தக் காரணத்தால் பல கணவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை அடைந்திருக்கிறார்கள்.
அதனால் டிவி, ரேடியோ, செல்போன், டாய்லெட் அடைப்பு, குழாயில் தண்ணீர் வரவில்லை போன்ற காரணங்களை சின்ன விஷயமாக நினைத்து அவ்வளவு எளிதில் விட்டுவிடாதீர்கள். இவையெல்லாம் கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்க உதவும் கருவிகள்.
உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன். நடிகர் பிரசாந்த் அவர்களின் முன்னாள் மனைவி அவரது 498A புகாரில் பிரசாந்த் குடும்பத்தார் அவரை டாய்லெட் கழுவச் சொல்லி கொடுமை செய்ததாக எழுதியிருக்கிறார். அவர் கொடுத்த புகாரிலிருந்து சில பாயிண்ட்டுகள் உங்களின் வசதிக்காக தருகிறேன்.
1. She stated that her husband and herself were invited to Malaysia ..................... Her husband demanded electronic items such as LCD, TV, DVD Player, Home Theatre System, CDs and DVDs as Dowry, this resulted in huge expenses for her family.
2. Also she was not asked to lit the lamp in Pooja Room but in the living room.
(விளக்கேற்ற சொன்ன இடம் கூட 498A கேசு போட உதவும். மருமகள்களே Note this point)
3. She further complained that soon after the marriage, when she went to her in-laws house, Mr.Prashanth's bed room was not ready and the toilet was very worse. She was forced to stay in the living room.
4. Her mother-in-law and sister-in-law used to harass her for not bringing enough jewellery, sarees and Dowry.
5. Servants were not allowed to wash her clothes and to clean her toilet. She had to clean it on her own, and even the toiletries have to be sent from her parent's house.
6. Mother-in-law forced her to eat Non-Vegetarian
(நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் என்ன உணவு கொடுக்கிறார்கள் என்று கூட குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒரு சமையல் செய்திருந்தால் அதுவும் உங்களை மனதளவில் கொடுமை செய்ததாக அர்த்தம். மாமியார் வீட்டு சமையல் என்னைக்கு மருமகளுக்கு பிடித்திருக்கிறது? அதனால் மாமியார் வீட்டில் அவர்கள் சமைப்பதே உங்களை கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான். 498A கேசு போட இது ஒரு நல்ல காரணம்.)
முழு அறிக்கையும் படித்து மேலும் பல நல்ல பாயிண்ட்டுகளை தெரிந்து கொள்ள ஆவலுடைய மருமகள்கள் இங்கே சென்று படிக்கவும் -->
நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை (PDF Format)
2. கொடுமையில் இரண்டாவது உட்பிரிவு வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்தல். இது உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவுகள் 3 & 4 நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மறந்து போயிருந்தால் முதல் இரண்டு பாடங்களை படியுங்கள்.
இனி மேட்டருக்கு வருவோம். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தையும் அடக்கி அடிமைகளாக வைத்திருப்பது எப்படி என்று பார்ப்போம்.
இப்போது நான் உங்களுக்கு உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியத்தை சொல்லுகிறேன். கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் பிறந்து இந்தியக் குடிமகனான ஒவ்வொரு ஆணுக்கும் இந்தியாவில் பிறந்த உடனே நாய்களுக்கு லைசென்ஸ் கட்டுவது போல் இந்த 498A என்ற சங்கேத குறியீடு தானாகவே குறியிடப்பட்டுவிடுகிறது. இந்த ரகசியம் மருமகள் உட்பட யாருக்குமே தெரியாது. இது தான் ஆண்களை ஒட்ட நறுக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சங்கேதக் குறியீடு. இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் "Emasculation" என்று கூட சொல்லாம். அதாவது கணவரை எல்லாவிதங்களிலும் அடக்கும் சக்தி இந்த 498A விற்கு உண்டு.
அதிர்ஷ்டவசமாக இந்த 498Aஐ தேவைப்படும் நேரத்தில் முடுக்கிவிடும் ரிமோட் கண்ட்ரோல் மருமகளின் கையில் தான் கொடுக்கப்படுகிறது. உடனே எங்களுக்கு அது போல் ரிமோட் கண்ட்ரோல் எதுவுமே கொடுக்கப்படவில்லையே என்று நீங்கள் சுற்றும் முற்றும் ஏக்கத்தோடு பார்ப்பது புரிகிறது. இந்த அப்பாவித்தனம் தான் மருமகள்களை அடிமையாக வைத்திருக்கிறது.
இன்னும் அந்த ரிமோட் கண்ட்ரோல் எது என்று தெரியவில்லையா! அது தான் ஊரறிய மேளம் கொட்டி தாலி என்ற வடிவில் உங்கள் திருமணத்தின் போது உங்கள் கழுத்தில் கட்டிவிடுகிறார்களே. அது தான் அந்த ரிமோட் கண்ட்ரோல்.
தாங்கள் எதை இந்தப் பெண்ணிடம் கொடுக்கிறோம் என்று கூட தெரியாமல் முட்டாள்கள் சந்தோஷமாக உங்களிடம் கொடுக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவி மருமகள்கள் தாலி எதற்கு என்று புரட்சி பேசித் திரிகிறார்கள். கணவனையும் அவனது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக ஆட்டிவைக்கும் ரிமோட் கண்ட்ரோல் சுவிட்ச் தான் உங்களிடம் கொடுக்கப்படுகிறதென்று இப்போதாவது புரிந்ததா?
இப்போது எல்லா மருமகள் கையிலும் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது. பிறகென்ன கணவனை எப்படி நடத்தவேண்டுமோ அப்படியெல்லாம் நடத்துங்கள்.
நான் இந்த பட்டனை அழுத்தி அது சரியாக வேலை செய்யாது போய்விடுமோ என்று நீங்கள் அச்சப்படுவதும் எனக்குப் புரிகிறது. கவலையே படாதீர்கள். இது "Made in india Product" கண்டிப்பாக மருமகள்கள் விஷயத்தில் நன்றாகவே வேலை செய்யும். எப்படியென்றால் நீங்கள் இந்தப் பிரிவின் படி ஒரு புகார் கொடுத்ததுமே புகாரில் நீங்கள் குறிப்பிட்ட ஆட்களையெல்லாம் போலிஸ் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். ஏனென்றால் இந்த சட்டப்பிரிவு அப்படிப்பட்டது.
IPC 498A is:
1. Cognizable
2. Non-bailable
3. Non-compoundable
அதாவது இந்த சட்டப்பிரிவு படி புகார் பதிவு செய்தவுடனே அனைவரையும் கைது செய்யும் அதிகாரம் போலிஸுக்கு இருக்கிறது. நம்ம ஊர் போலிஸுக்கு சொல்லவே வேண்டாம் சட்டம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு விதமாக ஒன்பது வகையான வேலைகள் செய்வார்கள். உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள் ---> கஞ்சா கேசில் முதல் வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். அதனால் கணவரையும், மாமியார் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கைது செய்வது எப்படி என்று அவர்களுக்கு சொல்லித் தரவேண்டியதில்லை என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். கைது செய்த பிறகு கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ போலிஸிடம் ஜாமின் கொடுத்து வெளியே வரமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக கொடுத்த வழக்கை திரும்பப் பெற முடியாது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்த 498A பிரிவின் கீழ் ஒரு ஆளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் மும்பையில் பிடிபட்ட தீவிரவாதியை கூட விட்டாலும் விட்டுவிடுவார்கள் ஆனால் கணவரையும் அவரது குடும்பத்தையும் போலிஸும் நீதிமன்றங்களும் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள். பல கட்டங்களில் "சிறப்பாக" கவனிப்பார்கள். பதிவு செய்யப்பட்ட புகார் உண்மையா பொய்யா என்ற பேச்சிற்கே இடமில்லை.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வழக்கம் போல் அரசாங்கம் இந்த சட்டத்தை மருமகள்களுக்காகவே இயற்றியிருப்பதால் இந்தப் புகாரில் மருமகள்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். பொய் சொன்னால் கூட மருமகள்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.
இதுவரை இதுபோன்ற கேசுகளில் பல கணவர்கள் கடைசிவரை போராடி சின்னாபின்னப்பட்டு நீதிமன்றத்தில் இது பொய் என நிருபித்து வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கேசில் கூட பொய் கேசு எழுதித்தந்த மனைவியை அழைத்து நீதிமன்றம் நீ ஏன் பொய் சொன்னாய் என்று இன்றுவரை ஒரு கேள்வி கூட கேட்டதில்லையென்றால் பாருங்கள் மருமகள்களுக்கு எவ்வளவு ராஜமரியாதை இருக்கிறதென்று. அதனால் மருமகள்கள் இஷ்டம் போல விளையாடலாம். எல்லாமே இலவசம்.
இதில் இன்னொரு வசதி என்னவென்றால் நீங்கள் எந்த செலவுமே செய்யவேண்டியதில்லை. எல்லாவற்றையும் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் இதில் உங்களுக்கு நல்ல வருமானமும் இருக்கிறது. அந்த வியாபார ரகசியத்தைப் பற்றி அடுத்த ஒரு பதிவில் எழுதுகிறேன்.
அதனால் உங்களுக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் கணவரின் முகத்தைப்பார்த்து பயந்து பயந்து கேட்கவேண்டியதில்லை. தைரியமாக இதை செய் என்று உத்தரவே போடலாம். உங்கள் கணவரிடம் நீங்கள் 498A என்பதை ஒரு மந்திரச் சொல் போல பயன்படுத்தலாம். இந்த மந்திரத்தைக் கேட்டவுடன் நாய் வாலை மடக்கிக்கொண்டு அஞ்சுவது போல நடுங்கிக்கொண்டு காலடியில் கிடப்பார்.
இதை நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு
1. தனிக்குடித்தனம் போகவேண்டும்
2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.
இன்னும் பல காரணங்கள் உங்களுக்குத் தெரியும். இது போல எல்லாவித எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். அது தான் ரிமோட் கண்ட்ரோல் கையில் இருக்கிறதே பிறகெதற்கு கவலைப்படவேண்டும். புகாரில் எழுத காரணங்களா இல்லை? வரதட்சணை தவிர மனதளவில் வேதனைப்பட வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன அல்லவா? எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள்.
இந்த சட்டத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? யாரும் இதற்கு எதிர்ப்பு சொல்லமாட்டார்களா என்று ஒரு சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். மருமகள்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் இந்த சட்டத்திற்கெதிராக பாதிக்கப்பட்ட வயதான தாய்மார்களும் சகோதரிகளும் கிளம்பி அரசாங்கத்திடம் முறையிட்டனர். ஆனால் மருமகள்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் நமது அரசாங்கம் எல்லாப் பெண்களும் பெண்கள் அல்ல, மருமகள்கள் மட்டும் தான் இந்தியாவில் பெண்களாகக் கருதப்படுவார்கள் என்று சொல்லி வயதானப் பெண்களைக் காப்பாற்ற தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கையை விரித்துவிட்டது.
அதைப்பற்றிய செய்தி இதோ செய்தித்தாளில் வந்திருக்கிறது ---> தினமலர், நவம்பர் 2009
செய்தித்தாளில் வந்த செய்தியின் ஒரு பகுதி....
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும்.
கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்தன.
இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது.
பிறகென்ன அரசாங்கமே இந்த சட்டத்தை எல்லாவிதத்திலும் பயன்படுத்திக்கொள்வதற்கு மருமகள்களுக்கு பச்சைகொடி காட்டிவிட்டது. அதனால் இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமும் தயங்காதீர்கள்.
வழக்கம் போல் இந்த சட்டப்பிரிவை உள்நாடு வெளிநாடு என நாடு வித்தியாசமில்லாமல் இந்தியக்குடிமகள், வேறுநாட்டுக் குடிமகள் என யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்தலாம். மருமகளாக இருக்கவேண்டும் என்பது தான் ஒரே ஒரு நிபந்தனை.
மற்றொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் எப்போதும் இந்த 498A புகார் எழுதும் போது இந்த மருமகள்களின் மகாராணியை தனியாக எழுதக்கூடாது. அது இந்த மருமகள்களின் ரகசிய சினேகிதியை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். அதனால் அதற்கு தோழியாக IPC 406, 506, Dowry Prohibition Act sections 3,4,5,6 போன்ற தோழிகளையும் கூடவே அனுப்புவது தான் காலம் காலமாக நடந்து வரும் மரபு. இந்திய மருமகள்களாக இருந்து கொண்டு மரபு மீறலாமா?
இந்த துணை சட்டப்பிரிவுகளை இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.
மறக்காமல் 498A என்ற மந்திரத்தை எழுதி கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கண்ணில் படும்படியான இடங்களில் வீடு முழுவதும் மாட்டிவையுங்கள். பிறகு பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கிறதென்று.
வாழ்த்துக்கள்.
14 COMMENTS:
யம்மா. எங்கியோ வஞ்சப்புகழ்ச்சி அணி வாடை வீசுதே.
கண்ணகி வந்து மருமகளைப் பார்த்ததற்கு நன்றி.
அன்று கண்ணகி தனது கணவனுக்கு தவறாக தண்டணை வழங்கப்பட்டதற்காக தனது குடும்பப் பிரச்னைக்காக ஒரு மாநகரத்தையே எரித்து முன்னுதாரணம் காட்டியிருக்கிறார். அதனால் இந்தக் காலத்தில் மருமகள் குறைந்த பட்சம் தனது மாமியாரின் குடும்பத்தையாவது சிதைத்து பாடம் புகட்டவேண்டாமா?
"ஆண் பெண்னையோ பெண் ஆணையோ அடிமை படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல குடும்பம்.
நீங்கள் சட்டத்தை விளக்குவதாக கூறிக்கொண்டு; கீழ்த்தரமான முடிவுகளை எடுக்க வைக்க முயல்கிறீர்கள்.
ஏன் இந்திய ஆண்கள் அப்படி கொடுமைக்கார்களானார்கள்? எங்கே உள்ளது அடிப்படை பிரச்சனை? என்பதை கண்டறிந்து எழுதுவது எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையும்." இதை நான் சொன்னால் எனக்கு பெயர் "பெண்னடிமைவாதி"
அப்ப இது வராது.
பிரபு அவர்களே,
தலைவி காட்டிய வழியை பின்பற்றுகிறோம். அவ்வளவு தான்.
I want to teach men what their mothers didn't: Renuka Chaudhury
http://www.rediff.com/news/2007/aug/29men.htm
August 29, 2007
"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury at a function in New Delhi on Wednesday.
கட்டுரை எல்லாம் நல்லா இருக்கு. பாதிக்கப்படும் பெண்கள் எல்லாருக்கும் இது அருமருந்து. அனால் நீங்கள் கூறும் பயன்படுத்தும் விசயங்கள் தவறானவை. ஒரு சில பெண்கள் உண்மையில் இது போல பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
ஒன்று பயன்படுத்துங்கள் என்று தவறான விசயங்களுக்கு கூறுவது வஞ்சப் புகழ்ச்சி போல உள்ளது.
பித்தன் அவர்களே,
உங்களின் கருத்திற்கு நன்றி. இந்தியாவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வேறு நடைமுறை என்பது வேறு. காவல் துறையிலும் நீதித்துறையிலும் கையாளப்படுவது நடைமுறைசட்டம். புத்தகத்தில் எழுதிஇருக்கும் சட்டங்கள் கிடையாது. அதனால் தான் நான் நடைமுறை சட்டத்தைப் பற்றி விளக்குகிறேன். சட்டப்புத்தகத்திலுள்ள சட்டத்தை விளக்குவதற்கு இந்த பதிவு தேவையில்லை அதை ஏற்கனவே பல சட்டமேதைகள் எழுதிவைத்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மருமகள்களுக்குத் தேவை நடைமுறையில் பயன்படுத்தப்படும் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி. அது தான் இந்தக் கருத்துப்பதிவின் நோக்கமே.
தற்பொழுது பல மருமகள்கள் இந்த சட்டத்தை பலவழிகளில் நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பல மருமகள்களும் பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் இந்த பதிவுகள்.
நீங்கள் சட்டத்தை விளக்குவது நல்ல முயற்சி. பல வரிகள் குடும்ப உறவுகளை/புரிந்துணர்வுகளை பாழ்படுத்ததக்கதாக உள்ளது. இக்கட்டுரை அவசரமுடிவுகளை எடுக்க ஊக்குவிக்கும் முகமாக வரையப்பட்டுள்ளது. நானும் அவசர முடிவால் வாழ்க்கையை துளைத்தவள். நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது.
Lela அவர்களே,
உங்களின் கருத்திற்கு நன்றி. மருமகள்களுக்கு நடைமுறையில் உள்ள பாதுகாப்பு சட்டங்களை விளக்குவது மட்டுமே இந்தப் பதிவுகளின் நோக்கம். இந்தப் பதிவுகள் எப்படி உண்மையான உறவுகளையோ அல்லது புரிந்துணர்வுகளையோ பாழ்படுத்தமுடியும். அப்படியென்றால் இந்தப் பதிவுகளுக்கு இருக்கும் வலிமை கூட உறவுகளுக்கிடையே இருப்பதில்லையா?
நீங்கள் சட்டத்தை எப்படி பயன் படுத்துவது என்பது பற்றிய கட்டுரையில் பிழை உள்ளது நண்பரே. அதையும் மீறி சில விடயங்கள் உள்ளன. காவல்துறைக்கு பணம் கொடுத்தாள் , கணவன் குடும்பத்தை அடித்து துவைத்து அதன் பின் சிறைக்கு அனுப்பலாம் . சம்பத்தப்பட்ட மருமகளே நேரடியாக உதைக்க தனி விலை. காவல்துறை பாதுகாப்பிலே நீதிபதி முன் அடிப்பதென்றால் இன்னும் அதிகம் விலை கொடுக்க வேண்டும் . இது அடிப்பது பற்றிய விலை விபரம். அப்புறம் நீதிக்கு விலை விபரம். நீங்கள் எப்படி தண்டிக்க விரும்புகிறீர்களோ . அதற்கேற்ப தொகை நீதியரசருக்கு வழங்கி விட்டால் நீங்கள் சொல்லும் தண்டனையை கணவர் குடும்பத்திற்கு வாங்கி தர முடியும் விலைதான் கொஞ்சம் அதிகம். அந்த குடும்பத்தின் மொத்த சொத்தும் மருமகளுக்கே ! என்ன சரியா என் அருமை நண்பரே?
மாமனார் அவர்களே,
மருமகள்களுக்கு பாடம் நடக்கின்ற இடத்தில் நீங்கள் இது தவறு, அது தவறு என்று பிழை கண்டுபிடித்து அறிவுரை சொல்லத் தேவையில்லை.
மருமகள்களே,
உங்கள் வீட்டிலும் இதுபோல கிழ மாமனார்கள் இப்படியெல்லாம் பேசக்கூடாதம்மா, இது தவறு, அது தவறு என்று புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தால் அது போன்ற கிழங்களை ஒடுக்க ஒரு சிறப்பு சட்டம் இருக்கிறது. இதுகளுக்கெல்லாம் 498A சட்டப் பிரிவு மட்டும் போதாது கூடவே பாலியல் பலாத்காரம் என்ற ஒரு சிறப்புப் பிரிவும் தேவை. இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற கிழமாமனார்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூட 498A,வரதட்சணைப் புகார்களில் கொஞ்சம் சேர்த்து எழுதலாம். அதைப்பற்றி தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.
இப்போதைக்கு இந்த மாமனாரின் கருத்துக்களை யாரும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். இவர் மருமகள்களுக்கு நடக்கும் பாடத்தை திசை திருப்ப முயல்கிறார்.
I think the author of this page is someone to slept with millions of guys in India. That's why she teaching other women to do whatever they want and make their husbands as slave.
Dear Marumagal, no matter what, women are always under the men. You can say your mother also a women. She is my dad's wife before become my mom..
Girls, punish those really hurt you.. Never use the law for your lust..
//Anonymous said...
I think the author of this page is someone to slept with millions of guys in India. That's why she teaching other women to do whatever they want and make their husbands as slave.
Dear Marumagal, no matter what, women are always under the men. You can say your mother also a women. She is my dad's wife before become my mom..
Girls, punish those really hurt you.. Never use the law for your lust..//
உங்கள் எழுத்துக்களில் ஆணாதிக்க வாடையும் மன விகாரங்களும் அதிகமாக இருக்கிறது. இந்த மருமகள் பதிவில் இருக்கும் செய்திகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். மனதிற்கு தெளிவு பிறக்கும்.
இனிய மருமகளுக்கு அன்பு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்களது சேவை.
பனிமலர்.
Post a Comment