"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழலாம் என நினைத்துக்கொண்டு வெளிநாடு வாழ் இந்தியரை (NRI) திருமணம் செய்து பின்பு தாங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் வெளிநாட்டில் கிடைக்காதபோது தாங்கள் உடலாலும், மனதாலும் கொடுமைகளை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் கொடுமைக்கும் உள்ளாகிறோம் என்று திடீரென்று விழிப்புணர்ச்சி பெறும் அப்பாவி மருமகள்கள் தங்கள் NRI கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்வதற்காக இந்தியாவிற்கு வருவது மரபு.

அப்படி NRI கணவன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர விரும்பும் மருமகள்கள் புகார் எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. மருமகள் கொடுக்கும் வரதட்சணை புகாரிலிருந்து கணவன் தப்பித்து விடமுடியாதபடி சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் இந்த விஷயங்கள் அடைத்துவிடும். அவற்றை பட்டியலிட்டு சொல்கிறேன். அதற்கு நல்ல செயல் முறை உதாரணமாக ஒரு அருமையான செய்தி பத்திரிக்கையில் வந்திருக்கிறது. அதையும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

பின்வரும் “பாயிண்ட்டுகளுக்கு” பொருத்தமான வரிகள் பின் வரும் செய்தியில் இதே எண்ணிக்கை வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. வரதட்சணை புகார் எழுதும்போது உங்களது திருமணத்தில் கொடுத்த சீர்வரிசையை கணவன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை என்று திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதும் வரதட்சணைப் புகாரில் தயங்காமல் எழுதலாம். வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன்படி வரதட்சணை கொடுப்பது குற்றம். நீ ஏன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தாய்? என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது என்பது மருமகள்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

  2. திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்காமல் உடனடியாக நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டாலும் புகார் கொடுக்கும்போது இந்தியாவில் கணவன் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களில் கணவனும் அவனது குடும்பமும் கொடுமை செய்ததாக இந்தியாவில் சில சம்பவங்கள் நடந்ததாக எழுதவேண்டும். அப்போதுதான் வழக்கு நன்றாக உறுதியாக இருக்கும். குற்றம் வெளிநாட்டில் மட்டும் நடந்ததாக சொன்னால் சட்டத்தில் இருக்கும் சில நெறிமுறைகளை (Jurisdiction) மேற்கோள் காட்டி கணவனும் அவனது குடும்பமும் தப்பித்துவிடும். அதனால் இந்த “பாயிண்ட்டை” நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

  3. திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து நம் வசதிக்கேற்ப வரதட்சணை புகார் கொடுக்கும்போது அனைவருக்கும் சிறிது சந்தேகம் வரும். இத்தனை ஆண்டுகளாக நன்றாகத்தானே இருந்தாய் இப்போது என்ன? என்று கேட்பார்கள். அதனால் புகார் எழுதும்போது “திருமணம் ஆன அடுத்த நாள் முதலே கணவனும், அவனது குடும்பமும் கொடுமை செய்தார்கள், இருந்தாலும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அந்தக் கொடுமைகளையெல்லாம் பல ஆண்டுகள் பொறுத்துக்கொண்டேன். இப்போது அந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் புகார் கொடுக்கிறேன்”. என்ற வரிகளை கட்டாயம் புகாரில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் புகாரை படிப்பவர்கள் உங்களின் பொறுமையான குணத்தைப் பார்த்து பரிதாபப்படுவார்கள்.

  4. வெளிநாட்டில் வாழும் மருமகள்களுக்கு மற்றொரு வசதி என்னவென்றால் வெளிநாட்டில் பல கொடுமையான குற்றங்களை செய்து கணவன் என்னை துன்புறுத்தினான் அதனால் நான் இந்தியாவிற்கு வந்து புகார் கொடுக்கிறேன் என்று சொன்னால் இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் போலிஸ் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நம்பி விடுவார்கள். அதனால் வெளிநாட்டில் பல வித கொடுமைகள் நடந்ததாக இந்தியாவில் புகாரில் எழுதலாம். உதாரணத்திற்கு ஓடும் காரிலிருந்து கணவன் என்னை தள்ளிவிட்டான். அந்த நாட்டில் போவோரும் வருவோரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்தார்கள், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூட சொல்லாம். வெளிநாட்டில் என்ன நடக்கிறது என்று இந்தியாவில் யாருக்கும் தெரியாது! குறிப்பாக புகாரை பதிவு செய்யும் காவல்துறைக்கும், வழக்கை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கும் சுத்தமாக ஒன்றுமே தெரியாது. இது மருமகள்களுக்கு நல்லதுதானே!!

  5. மருமகள்களின் கடைசி ஆயுதம் இதுதான். NRI கணவன் செய்த எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு கடைசியில் NRI கணவனின் பெற்றோரிடம் அதாவது மாமியார், மாமனாரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் நான் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் மேலும் வரதட்சணை கொடுக்குமாறு மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் என்று புகாரில் எழுதினால் IPC498A, 5o6 (1), வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 4 இவற்றின் கீழ் கண்டிப்பாக மாமியார், மாமனார் கைதாவது உறுதி.

  6. சில சமயம் மருமகள்களுக்கு மாமியார் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் தேவைப்படலாம். அப்படி ஏதாவது தேவையென்றால் ஒரு பட்டியல் தயார் செய்து அவையெல்லாம் தனது திருமணத்திற்கு தனது பெற்றோர் கொடுத்தவை . இப்போது மாமியார் வீட்டில் அதை திருப்பித் தராமல் மிரட்டுகிறார்கள் என்று ஒரு வரி புகாரில் எழுதினால் போதும் IPC406 என்று மற்றொரு சட்டப் பிரிவையும் வழக்கில் சேர்த்து நன்றாக வலையை பின்னி விடுவார்கள். பிறகு இந்த வழக்கிலிருந்து கணவனையும், அவனது குடும்பத்தையும் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது.
உங்கள் புகாரை பதிவு செய்ததும் உடனடியாக காவல்துறை நண்பர்கள் மாமியார் வீட்டு கதவை தட்டி வீட்டில் இருப்பவர்களை அள்ளிக் கொண்டு வந்து சிறையில் அடைத்து விடுவார்கள். பிறகு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டால் நீங்கள் பட்டியலிட்டு கொடுத்த பொருட்களை திரும்பக் கொடுக்காதவரை ஜாமின் கிடையாது என்று நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் சொல்லிவிடுவார்.

NRI கணவன் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் கொடுப்பதற்கு முன் இவ்வளவு விஷயங்களையும் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கு புகார் சரியாக எழுதத் தெரியவில்லையென்றால் உங்கள் தெருவில் இருக்கும் ஏதாவது ஒரு வழக்கறிஞரை நேரில் சென்று பார்த்து உங்களது தேவைகளை சொல்லுங்கள். அவர் தனது சட்ட அறிவை நன்றாக பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானபடி புகாரை அழகாக எழுதித் தந்துவிடுவார். பிறகென்ன காவல்நிலையத்திற்குச் சென்று NRI கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளி தீபாவளி கொண்டாடி விடவேண்டியதுதான்!!!!! இப்படி புகார் கொடுக்கும்போது மறக்காமல் “மீடியாக்களுக்கும்” உங்களது புகாரின் நகலை கொடுத்து விடுங்கள். அவர்கள் மருமகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிடுவார்கள்.

இனி செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!



COIMBATORE: A couple was arrested in connection with a dowry harassment case on Tuesday by city police. Police have registered a case against the couple's son who is a software engineer in USA.

The couple has been identified as P A S Raj (65), a retired Air Force Commander and his wife Vimala Raj, 58, a retired school teacher of Rajiv Gandhi Nagar near Sowripalayam in the city.

Police said, a 24-year-old A Jenifer, hailing from Selaiyur in Chennai had completed a diploma in business management and got married to R Ajayraj (31), hailing from Rajiv Gandhi Nagar, on May 20, 2009. (1) Her parents gave 135 sovereigns of gold jewels and Rs 5 lakh as dowry to the groom's family. After the wedding, Jenifer moved to Coimbatore along with her husband and lived with her in-laws. Three weeks later, the couple left for USA.

On Tuesday, Jenifer lodged a complaint with the all women police station in Ramanathapuram alleging that (2) her husband Ajayraj mentally and physically tortured her both in India and USA. (3) Earlier, she had complained to her parents about the abuse but they had advised her to adjust and live with him. (4) Unable to bear the trauma, she overdosed on sleeping pills in an attempt to commit suicide. Her husband rushed her to a hospital in America. He also pleaded with her not to reveal the truth, promising not to torture her again, as he would go to prison.

However, Ajayraj failed to keep his word and began torturing Jenifer again. (5) She complained to her in-laws Raj and Vimala Raj and was taken aback with their response. They informed her that since they had not got the dowry they expected from her, they were looking for a bride for their son.

Jenifer came to India on January 3, 2012, and stayed at her parent's house in Saleiyur. (6) When she asked her in-laws to return the gold they had given as dowry, they refused to do so. Stuck in a rut, she eventually approached the police and registered a case against them under section 498(A), 406, 506 (i) and under section 4 of Tamil Nadu women harassment act against Ajayraj and his parents.

On Tuesday, Raj and Vimala Raj were arrested and they have been lodged in Coimbatore central prison. Presently Ajayraj is in USA.

"We have arrested the parents-in law of the victim," said Inspector K Munirabegam, Ramanathapuram.




14 comments:

  1. வணக்கம் உறவுகளே

    உங்களுக்கு பிடித்த வலைப்பதிவுகளையும், உங்களின் அருமையான இடுகைகளையும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள எமது வலையகம் உங்களுக்கு உதவுகிறது. எவ்வித லாபநோக்கமில்லாமல் தமிழர்களுக்காக தமிழில் ஆரம்பிக்க திரட்டி நம் "வலையகம்" ( http://valaiyakam.com/ ) ஆகும்.

    வலையகம் ஆனது வலைப்பதிவுகளுக்கான சமூக உறவு தமிழ் தளமாகும். உங்கள் முகநூல் கணக்கின் மூலம் நீங்கள் எளிதில் வலையகத்தில் பதிவு செய்யலாம். உங்களுக்கான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.

    உடனே இணையுங்கள் பகிருங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குங்கள்..

    முகநூல் கணக்கின் மூலம் உள்நுழைய: http://www.valaiyakam.com/register/

    தோழமையுடன்

    உங்களின்

    வலையகம் இணையம்

    http://valaiyakam.com/

    ReplyDelete
  2. //Unable to bear the trauma, she overdosed on sleeping pills in an attempt to commit suicide. Her husband rushed her to a hospital in America. He also pleaded with her not to reveal the truth, promising not to torture her again, as he would go to prison.//

    அமெரிக்காவில் தூக்க மாத்திரை நம்ம ஊரில் வாங்கற மாதிரி கடையில போய் வாங்க முடியாது. டாக்டர் சீட்டு இல்லாமல் கிடைக்காது. மருத்துவமனையில் இந்த மாதிரி கேசை கேள்வி கேக்காம உடமாட்டாங்க. இந்தியாவுல புகார வாங்கறவன் கேனையா இருந்தா மருமகளுங்க என்னா வேணும்னா புகார்ல எழுதுவாளுங்க போலருக்கு.

    ReplyDelete
  3. 1997 ம் ஆண்டு இதே போல் என் முன்னாள் மனைவி பொய் கேஸ் போட்டு என்னை உள்ளே அனுப்பினார். உள்ளே போய் இருந்து கொண்டு அமைதியாக கூலிக்கு ஆள் பிடித்து என் X மனைவியை வாகன விபத்தில் போட்டு தள்ளினேன். இன்று வரை விபத்தாக கேஸ் முடிக்கப்பட்டுள்ளது.
    ஆண்களுக்கு நான் கூறும் அறிவுரை என்ன வென்றால் உங்களை மனைவி பொய் போட்டு (பொய் கேஸ் போட்டால் மாத்திரம் ) உள்ளே அனுப்பினால் அமைதியா உள்ளே செல்லவும். அங்கு இருந்து கொண்டு மனைவி போட்டது பொய் கேஸ் என்பதற்கான ஆதாரங்களை சேர்க்கவும். அதை உடனடியாக போலீசிடம் கொடுக்க வேண்டாம். உள்ளே இருந்து கொண்டு கூலிக்கு கொலை செய்பவர்களை தேடி பிடித்து (உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலம்) அவர்கள் மூலம் உங்கள் மனைவியை போட்டு தள்ள வேண்டும். உங்களை அநியாயமாக உள்ளே தள்ளிய மனைவிக்கு அதுதான் சரியான தண்டனை.
    கவனிக்க வேண்டிய விடயங்கள்
    வெளி மாநிலங்களை சேர்ந்த கூலி கொலையாளிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
    கொலை செய்யப்படும் நாளில் எக்காரணம் கொண்டு ஜாமீனில் வரக் கூடாது.
    தற்செயலாக நடந்த விபத்து போல் அல்லது பணம் நகைக்காக நடந்த கொலை போல் இருக்க வேண்டும்.
    இவ் விடயத்தை உங்களுக்கும் உங்களின் தொடர்பாளராக இருக்கும் அந்த நம்பிக்கையனவரை விட வேறு யாருக்கும் தெரிய கூடாது. உங்கள் பெற்றோர் உட்பட.
    உங்கள் நபிக்கயானவரை அடிக்கடி உங்களை பார்க்க ஜெயில் வர அனுமதிக்க கூடாது.
    இவ்வாறு என் மனைவியை போட்டு தள்ளி ௧௫ வருடங்களாக எந்த வித பிரச்சினையும் இல்லாதது மருமம் செய்து வாழ்ந்து வருகின்றேன்.

    மேலதிக விடயங்களுக்கு parathan1960 @yahoo .com

    ReplyDelete
  4. // Parathan.K said...(parathan1960 @yahoo.com)//

    Parathan.K நீங்கள் எழுதியிருக்கும் செய்தி மிகவும் கொடிய குற்றமாக இருக்கிறது. நீங்கள் 1997 ல் உங்கள் மனைவியை கொலை செய்துவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து இப்போது வெளியே உலவிக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் செய்தியையும், ஈமெயில் ஐ.டி.யையும் தமிழக காவல்துறை தலைவருக்கும் (DGP)மற்றும் சைபர் கிரைம் பிரிவுக்கும், மற்றும் தமிழக மகளிர் ஆணையத்திற்கும் அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதைப்பபற்றி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும். உங்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லையென்றால் அடுத்த 3 நாட்களில் உங்களது செய்தி காவல்துறை தலைவருக்கும் மற்றும் மேற்குறிப்பிட்ட புலன்விசாரணை அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும்.

    நன்றி!

    ReplyDelete
  5. எனது கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். (adultery ) அவரிடம் ஆதாரங்கள் உள்ளது. வீடியோ மற்றும் போலீஸ் வாக்கு மூலம் உட்பட. என்னையும் என்னுடன் சம்பந்தப்பட்ட மற்றவரையும் ஒரு தடவை போலீஸ் lodge ல் (lodge ஒன்றில் தங்கியிருந்த போது) விசாரித்து வாக்கு மூலமும் எடுத்திருந்தனர். அதன் பின் எனது கணவர் இரண்டு தடவை நான் மற்ற நபருடன் (வீட்டில்) இருந்ததை கமெரா மூலம் எடுத்து சாட்சியாக வைத்துள்ளார்.
    இந்நிலையில் நான் ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. உங்களுடன் சம்பந்தப்பட்ட அந்த நபரையே மறுமணம் செய்து கொள்ளுங்கள்

      Delete
  6. தொப்புள் கொடி உறவுகளுக்கு,
    ஈழத்திலிருந்து சகோதரன் எழுதிக்கொள்வது யாதெனில், இந்த ப்ளாக் எழுதும் அம்மையாரின் கட்டுரைகளை பார்க்கும் போது இந்திய ஆண்கள் இந்திய பெண்களை மணப்பது தற்கொலைக்கு ஒப்பான விடயம் போல் உள்ளது.
    எனவே நீங்கள் ஈழத்தில் வந்து ஈழ பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். அங்கு சிறப்பான விடயம் என்னவெனில் தமிழ் நாட்டில் காணக்கிடைக்காத கலாச்சாரமான பெண்களை பார்க்கலாம்.
    அதுமட்டுமல்ல இலங்கையில் சீதனம் சட்டரீதியானது.(யாழ்ப்பாண தேசவழமை சட்டம்) எனவே சீதன கொடுமை என்று உங்களுக்கு வழக்கு போட மாட்டார்கள்.
    ஆனால் முக்கிய விடயம் யாழ்ப்பாண தேச வழமை படி மணமான பின் மணமகள் வீட்டிற்கு மணமகன் சென்று வாழ வேண்டும். (அதாவது வீட்டோடு மாப்பிள்ளை. இது அங்கு அசிங்கம் அல்ல. அனைத்து வீடுகளிலும் அப்படித்தான்.) ஆனால் நீங்கள் விரும்பினால் உங்கள் பெற்றோரையும் வைத்திருக்கலாம். ஒவ்வொரு தம்பதியினருக்கும் தனி தனி வீடு வழங்கப்படும். (உங்கள் தராதரத்திற்கு ஏற்ப)
    எப்படியிருந்தாலும் மணமகனுக்கு அதிக பட்ச மரியாதை தரப்படும்.
    போரில் பெருமளவான ஆண்கள் இறந்துள்ள படியால் அங்கு மாப்பிள்ளைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அங்குள்ள பெண்களை மணந்து தங்களின் வாழ்வை ஒளிமயமாக்குமாறு கேட்டு கொள்கிறேன். ஆனால் ஈழ பெண்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டத்தில் குடிஉரிமை பெற்ற ஆண்களை (ஈழ மற்றும் இந்திய ) பெரிதும் விரும்புகின்றனர்.

    ReplyDelete
  7. உங்களின் வலைதளத்தை இன்று தான் படித்தேன், பெண்களுக்காக போராடுகிறீர்கள் அவர்களின் உரிமைக்காக பல சட்ட விளக்கத்தை சொல்லி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள், ஆனாலும் சில நெருடல்கள் மருமகள் அளிக்கும் வழக்கு கடினமாக இறுக வேண்டும் என்பதற்காக நிறைய பொய் சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் இதெல்லாம் உங்களுக்கே அநியாயமாக இல்லையா? மேலும் பல வழக்குகளில் தம்பதியினருக்கு இடையே மன கசப்பு வரும் அதற்கும் சேர்த்து அவர்களின் பெற்றோர் மீது குற்றம் சுமத்த சொல்கிறீர்களே இது எந்த ஊர் நியாயம்? குற்றம் செய்தவர் மட்டும் தான் பாதிக்க பட வேண்டும் என்று நீங்கள் என்றும் நினைத்தது இல்லையா?
    மாமியார் வீட்டில் இருக்கும் பொருள் தேவை பட்டால் அதற்கும் பொய் புகார் அளித்து அபகரித்து கொள்ள யோசனை சொல்கிறீர்கள், அந்த பெண் சீதனமாக கொண்டு வந்த பொருளை புகழ் அளித்து பெற்று கொள்ளலாம், அனால் மாமியார் வீட்டில் அவர்கள் வாங்கிய பொருளை அபகரிக்க யோசனை சொலவத எந்த வகையில் நியாயம்? சற்று சிந்தித்து பாருங்கள்
    இந்திய அரசாங்கம் மருமகள் பாதிக்க கூடாது என்று ஒரு நல்ல எண்ணத்தில் பல சட்டங்களை போட்டு அவர்களை காப்பற்றுகிறது அந்த சட்டங்களை தவறாக பயன்படுத்தினால் ஒரு நாள் அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விடும், இலங்கை அன்பர் கவிஷன் சொன்னது போல் "ஈழத்திலிருந்து சகோதரன் எழுதிக்கொள்வது யாதெனில், இந்த ப்ளாக் எழுதும் அம்மையாரின் கட்டுரைகளை பார்க்கும் போது இந்திய ஆண்கள் இந்திய பெண்களை மணப்பது தற்கொலைக்கு ஒப்பான விடயம் போல் உள்ளது"" இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விடாதீர்கள்

    ReplyDelete
  8. This is too much.,,,,,satta aalosanai solveergal endru paarthaal,,aangaluku edhiraay pengalai thoondi vidugindreergale,,.naan vaiyru erindhu solgiren,...nee nallaavee irukka maattaay.,,,

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  9. இந்த மாதிரி யோசனை அளித்து எத்தனை குடும்பங்களை கெடுத்தாயோ அந்த பாவம் உன்னை சும்மா விடாது உன் வீட்டில் உனக்கோ உன் தம்பி தங்கை அண்ணன் அக்கா ஆகியோருக்கு இந்த நிலை வந்தால் நீ இப்படி தான் செய்வாயா இதே போல் நீயும் வாழ்க்கையில் ஒரு நாள் அனுபவிப்பாய்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்திற்கு நன்றி.

      Delete
  10. இப்படி மணமகள் கொடுமைன்னு சொல்ற உனக்கு தெரியுமா உன்னைப்போல பட்ட பெண்ணாலே நாங்க படுற வேதனை.இல்லாத பொய்ய சொல்லி வழக்கு போட்டு கணவனையும் அவன்குடும்பத்தயும் உள்ள தள்ளுவீங்க நாங்க எல்லாம் அனுபவிச்சிட்டு நாக்கு வழிப்போம்ன்னு நெனச்சியோ அண்ணன் பரதன் செய்ததுல எந்த தவறும் இல்ல. பொய் வழக்கு போடுற உன்ன போல பட்டவர்களுக்கு அதுதான் சரியான தீர்ப்பு

    ReplyDelete
  11. இப்படி மணமகள் கொடுமைன்னு சொல்ற உனக்கு தெரியுமா உன்னைப்போல பட்ட பெண்ணாலே நாங்க படுற வேதனை.இல்லாத பொய்ய சொல்லி வழக்கு போட்டு கணவனையும் அவன்குடும்பத்தயும் உள்ள தள்ளுவீங்க நாங்க எல்லாம் அனுபவிச்சிட்டு நாக்கு வழிப்போம்ன்னு நெனச்சியோ அண்ணன் பரதன் செய்ததுல எந்த தவறும் இல்ல. பொய் வழக்கு போடுற உன்ன போல பட்டவர்களுக்கு அதுதான் சரியான தீர்ப்பு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்