"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகளை வாழவிடாமல் தடுக்கும் மாமனாரின் மீது புகார் கொடுப்பது எப்படி?

பல குடும்பங்களில் கணவன் மருமகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி நடந்தாலும் அவனது குடும்பத்தில் இருக்கும் கிழடுகளான மாமியார், மாமனார் இரண்டும் சும்மா இருக்க முடியாமல் கணவனை மருமகளிடமிருந்து பிரிக்கும் வேலையில் ஈடுபடும். உதாரணத்திற்கு மருமகள் தனிக்குடித்தனம் போக விரும்பினால் பெரும்பாலான குடும்பங்களில் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பது இந்த கிழடுகள்தான்.

இதுபோன்ற சமயத்தில் மருமகள் சாதாரண காவல் நிலையத்தை அனுகாமல் தன்னுடைய புகாரை தெளிவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையர் இவர்களை நேரில் சென்று பார்த்து தன் கைப்பட புகாரை நேரடியாகக் கொடுத்தால் உடனடியாக மாமனார், மாமியார் மீது நடவடிக்கை பாயும் என்பது பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதாவது பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

ஒன்இந்தியா

நெல்லை: திருச்சி பரஞ்சோதிக்கு வந்த பஞ்சாயத்தைப் போல இப்போது சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி குடும்பத்திற்கும் ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது அவரது 2வது மனைவி டாக்டர் ராணி புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் தேர்தலில் பரஞ்ஜோதி ஜெயித்தார், பின்னர் அமைச்சரும் ஆனார்.ஆனால் ராணியின் புகார் வலுவானதாக இருந்ததால் அமைச்சர் பதவியை இழந்தார்.

இந்த நிலையில், சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் குடும்பத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் இளையராஜா. இவரது மனைவி சமுத்திரக்கனி. இவர் நெல்லை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில்,எனது கணவர் இளையராஜா. இவருக்கும், எனக்கும் கடந்த மே மாதம் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் என்னையும், எனது கணவரையும் அவரது தந்தை சங்கரலிங்கம் சேர்ந்து வாழ விடவில்லை. மேலும், நான் எனது கணவருடன் வசித்து வந்த வீட்டையும் பூட்டி விட்டார்.

என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்காமல் தடுத்து வரும் சங்கரலிங்கம் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு சங்கரன்கோவில் மகளிர் போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சங்கரலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியின் தந்தை மீது அவரது மருமகள் கொடுத்துள்ள புகாரால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்