"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்திய மருமகளை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள்!

இந்திய மருமகள்களுக்காக பெண்கள் அமைப்புகளும், தலைவிகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குச் சமமாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற பல அரிய சட்டங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பல மருமகள்களுக்கு இவற்றை எப்படி பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியவில்லை. இதுபோன்ற ஒரு பரிதாபமான சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி சில மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த மருமகள்களை மிரட்டி ஏமாற்றும் அநியாயங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளைப் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் - மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்" .

ஆனால் இந்தக் கொடுமை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பின்வரும் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்.



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கணவர் மனைவியிடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளபோது, கணவரை விட்டு கொடுக்க மனைவியிடம் மகளிர் தினத்தன்று, போலீசார் பேரம் பேசிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாரதி(36). இவர் 18 ஆண்டுகளுக்கு முன் வழுதூரை சேர்ந்த மத்திய போலீஸ் செல்வத்தை திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில், கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். ராமநாதபுரம் சி.ஜே.எம். கோர்ட்டில் விவகாரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி, மதுரையை சேர்ந்த முருகன் மகள் உஷாராணியை திருமணம் செய்தார் செல்வம். "இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியிடம் மனு கொடுத்தார் ஜெயபாரதி.

இதை விசாரிக்க ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். "இனி உன்னால் சேர்ந்து வாழ முடியாது. உனது கணவர் கொடுப்பதை வாங்கி கொண்டு செல்,'' என, ஜெயபாரதியிடம் பேரம் பேசியுள்ளனர் போலீசார் . இச்சம்பவம் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயபாரதி கூறியதாவது: வருமானம் இன்றி எனது தாலியை விற்று மகனை படிக்க வைத்து வருகிறேன். கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது மறுதிருமணம் செய்த எனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என போலீசில் கூறினால், "கொடுக்கும் பணத்தை வாங்கி செல். இல்லையேல் உனது மகன் வாழ்க்கை சீரழிந்துவிடும்,'' என மிரட்டுகின்றனர் என்றார்.

பஜார் இன்ஸ்பெக்டர் குணசுந்தரத்திடம் கேட்டபோது, "இரண்டாவது திருமணம் செய்ததற்கு உரிய ஆதாரங்களை கொண்டுவந்தால், நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூறினோம். கோர்ட்டில் வழக்கு உள்ளபோது குடும்ப பிரச்னையில் தலையிட மாட்டோம். அதுவும் இந்த வழக்கை கூடுதல் எஸ்.பி., விசாரித்து வரும்போது நான் எப்படி பேசுவேன்,''என்றார்.


இப்படி ஏமாற்றப்படும் இந்திய மருமகள்களுக்கு தீர்வே கிடையாதா? என்று ஏக்கத்தோடு தவிக்கும் மருமகள்களுகு வழிகாட்டுவதற்காக ஒரு செய்தி வந்திருக்கிறது.

பின்வரும் செய்தியில் பாருங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பது போலவே ஒரு மருமகள் கணவனுக்கெதிராக காவல்நியைத்தில் புகார் கொடுத்ததை கவனிக்காமல் ஒதுக்கியிருக்கிறார்கள். புத்திசாலியான மருமகள் தேசிய பெண்கள் வாரியத் தலைவியை நேரடியாக சந்தித்துப் புகார் கொடுத்தவுடன் இப்போது “வேலை” நடக்க ஆரம்பித்திருக்கிறது.

மருமகள்களே,

அடங்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்குவதற்காக இந்திய சட்டங்கள் உங்களுக்கு இலவசமாக வேலை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் போகும்போதுதான் நீங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பதுபோன்ற தடைகளை சந்திக்க நேரிடுகிறது.

உங்களைப் போன்ற மருமகள்களுக்கு உதவுவதற்காகவே அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து தனியாக ஒரு அமைச்சரகத்தையும், வாரியத்தையும் அமைத்திருக்கிறது. அவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த வாரியம் எங்கு இருக்கிறது, எப்படிப் போகவேண்டும் என்றுகூட நீங்கள் தவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் உங்கள் வீட்டு நாற்காலியில் அமர்ந்தபடியே “ஆன் லைனில்” புகார் கொடுக்கும் வசதியை உங்களுக்காகவே தந்திருக்கிறார்கள். இதுபோன்ற வசதிகள் இருக்கும்போது அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமையில் சிக்கி கணவனிடமும் அவனது குடும்பத்திடமும் துன்பப்படலாமா?

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கணவனை சிறையில் அடைக்க மருமகள்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தேசிய மருமகள் வாரியத்தில் புகார் கொடுக்கலாம்!!!
 Online Complaint Registration for NRI's

இந்த வசதியை ஒவ்வொரு இந்திய மருமகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது தோழிகளுக்கும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.



GURGAON: The wife of a reputed Gurgaon-based industrialist has lodged a police complaint against her husband, accusing him of domestic violence. She has alleged that the accused had been harassing her for the past 23 years.

Geeta Sachdeva, wife of industrialist and owner of Su-Kam Power Systems, Kunwer Sachdeva, has also filed a written complaint with the National Commission for Women (NCW) accusing him of physical and mental torture. According to Geeta, she probably would have still endured it, but for the brutal way in which he allegedly beat her up a few weeks ago at Ramgarh, which compelled her to approach authorities.

Geeta lodged an FIR at Ramgarh police station on March 12. The investigating officer in Ramgarh, Ram Bhardwaj said, "We have filed an FIR under sections 107 and 116 of CrPC and the investigations are on."

On returning to Gurgaon from Ramgarh, in the face of police reluctance to register a complaint, she approached the women's cell, which summoned Sachdeva, but he did not turn up.

Gurgaon police commissioner S S Deswal said, "It is a social problem and not a criminal act. They have been married for 25 years. If they are unable to adjust, a counselor should be able to help them. We will try to counsel them and resolve the matter. If that does not help, we will register a case of domestic violence."

Geeta later met Girija Vyas, chairperson of National Commission for Women (NCW) and lodged a complaint.

In his defence, the accused denied having beaten his wife. "I don't know what you are talking about. I was not in Ramgarh that day."

Sachdeva also added that they have already filed for mutual divorce and that his legal team has lodged a complaint with the police.

வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்