"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகள்னா இப்படித்தான் தைரியமாக இருக்கவேண்டும்

கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்க அஞ்சி நடுங்கும் மருமகள்கள் இந்த செய்தியைப் படித்தபிறகாவது கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கணவன் மீது புகார் கொடுப்பது மட்டும் பெருமைக்குரிய விஷயமல்ல. வழக்கின் கடைசியில் கணவனின் குடும்பத்தில் எத்தனை பேர் சிறைக்குச் செல்கிறார்கள் என்பதில்தான் மருமகளின் ஒட்டுமொத்த வெற்றியே அடங்கியிருக்கிறது.


சாத்தான்குளம் : பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர், மாமியார், நாத்தனார் உட்பட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது நாசரேத் மேலவெள்ளமடத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகள் முத்துமாலை என்ற பாப்பாத்தி(30). இவருக்கும் பாளையங்கோட்டை சுப்பையா மகன் சங்கருக்கும் திருமணம் நடந்தது. சங்கரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு பாப்பாத்தியை கொடுமை படுத்தினார்களாம்.

இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாப்பாத்தி புகார் செய்தார். எஸ்.ஐ., காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தி கணவர் சங்கர்(40), மாமியார் பத்ரகாளி(68), கணவரின் சகோதரர்கள் சண்முகசுந்தரம்(48), ஆறுமுகசேகர்(43), அருணாசலம் ரவி(46), சகோதரிகள் குமரேசன் மனைவி செல்வி(42), மாடசாமி மனைவி முத்துமாலை(38) ஆகியோரை கைது செய்தனர்.

வழக்கு சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்தது. இதில் அருணாசலரவி இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த சாத்தான்குளம் நீதிபதி ஜெயசிங் ஆறு பேருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் 13ஆயிரத்து 300ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வரதட்சணை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியில் இருப்பது போல ஒவ்வொரு இந்திய மருமகளும் கணவனின் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் இந்தியாவில் வரதட்சணை என்ற வழக்கமே ஒழிந்திருக்கும். மருமகள்கள் அனைவரும் ஒன்றுபட்டால் எல்லா மருமகள்களும் வளமாக வாழலாம். அதனால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மருமகளும் இந்த புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.


தைரியமான மற்றொரு எதிர்கால மருமகள்

திருமணத்தை நிறுத்திய பிளஸ்2 மாணவி; போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதினார் மார்ச் 24,2011 தினமலர்

கோவை : கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய பிளஸ்2 மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேர்வு எழுதினார். கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் கணேசன்(47); வியாபாரி. [...]

வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்