"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


ஐயோ பாவம்! ஆணியைக்கூட பிடுங்க முடியாத இந்தியக் கணவன்கள்

மருமகள்களே,

உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி! அரசாங்கமும், நீதிமன்றங்களும்
எப்போதும் மருமகள்பக்கம்தான் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. கவனமாகப் படியுங்கள்.

கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடுக்கும் மருமகள்களுக்கு எதிராக
சமீப காலமாக கணவன்கள் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்துவருகிறார்கள். அதனால் மருமகள்கள் சற்று பயந்துபோய் இருந்தார்கள் . இப்போது அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த செய்தியை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 7 இவற்றை ஒருமுறை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். மருமகள்களுக்காக அந்த முக்கியப் பிரிவுகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன். படித்து கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more,

4. Penalty for demanding dowry.-
If any person demands directly or indirectly, from the parents or other relatives or guardian of a bride or bridegroom as the case may be, any dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years and with fine which may extend to ten thousand rupees


மேலுள்ள சட்டப் பிரிவுகளில் பார்த்தீர்களா? பிரிவு 3ன்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவரை மருமகள்கள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்கும்போது திருமணத்திற்கு முன்பே கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டதாகவும், தாங்கள் அதைக் கொடுத்துதான் திருமணம் செய்ததாகவும் புகார் எழுதிக் கொடுத்து வருவதுதான் வழக்கம். அதற்கேற்றார்போல காவல்துறையும் கணவன் மீது மட்டுமே வரதட்சணை கேட்டதற்காக பிரிவு 4 மற்றும் வரதட்சணை பெற்றுக்கொண்டதற்காக பிரிவு 3 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துவந்தார்கள்.

ஆனால் பிரிவு 3ல் உள்ள சட்டத்திற்கு எதிராக நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தைரியமாக புகாரில் எழுத்துமூலமாக எழுதித்தந்தாலோ அல்லது பல லட்சங்களும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்ததாக செய்தித்தாளில் செய்தி வெளியிட்டாலோ யாரும் அதைப் பற்றி கவலையே படமாட்டார்கள்.

ஆனால், வெறிபிடித்த இந்தியக் கணவன்களின் கூட்டம் சமீபத்தில் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கி வரதட்சணை கொடுப்பதும் சட்டப்படி குற்றம். உயர்கல்வி கற்ற என்னுடைய மனைவி சட்டத்திற்கு எதிராக வரதட்சணை கொடுத்ததாக தானாகவே புகாரில் எழுதித்தந்திருக்கிறார். அதனால் அவர் மீதும் பிரிவு 3ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மருமகள்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ்வழக்குப் பதிவு செய்ய முயற்சித்து வந்தார்கள். சில நீதிமன்றங்களும் இந்த வெறிபிடித்த கணவன்களின் பேச்சைக் கேட்டு மருமகள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பெருமைக்குரிய மருமகள் ஒருவர் இந்தப் பிரச்சனையை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று கணவன் மீது வரதட்சணை வழக்குப்பதிவு செய்யும் தனது உரிமையை வெற்றிகரமாக நிலை நாட்டியிருக்கிறார். மருமகள்கள் வரதட்சணை கொடுத்ததாகச் சொன்னாலும் சட்டங்கள் கணவனை மட்டுமே தண்டிக்கவேண்டும் என்று சட்டத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்.

இந்திய மருமகள்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்வதற்காக நீதிமன்றமும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 7-ஐ காரணம் காட்டியிருக்கிறது. அதாவது பிரிவு 7ன் படி வரதட்சணை தொடர்பாக புகார் கொடுப்பவர் மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியாது. இதைத்தான் பல மருமகள்கள் இதுவரை சாதகமாக பயன்படுத்தி வருகிறோம் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது!

7. Cognisance of offences.- (2) Nothing in Chapter XXXVI of the Code of Criminal Procedure, 1973 (2of 1974), shall apply to any offence punishable under this Act.)

Notwithstanding anything contained in any law for the time being in force, a statement made by the person aggrieved by the offence shall not subject such person to a prosecution under this Act.


இந்த சட்டப்பிரிவு 7ல் உள்ள நுணுக்கத்தை நான் உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன். குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


ஒரு அரசு அலுவலகத்தில் உங்களுக்கு ஒரு பணி நடைபெறவேண்டுமென்றால் அந்த அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நான் லஞ்சம் கொடுக்கமாட்டேன் வேறு அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்சார அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் போ என்று சொல்லிவிட்டு குடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கேட்கமுடியாது. அதனால் புகார்தாரர் வேறுவழியின்றி லஞ்சம் கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால் லஞ்ச வழக்குகளில் லஞ்சம் கொடுப்பவரை விட லஞ்சம் கேட்பவர்தான் குற்றவாளி என்று சொல்லலாம்.


ஆனால் வரதட்சணை என்று வரும்போது, திருமணத்திற்கு முன்பே ஒருவன் வரதட்சணை கேட்டால் அவனை தூக்கியெறிந்துவிட்டு வேறு ஒரு ஆண்மகனை தேடிக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இது லஞ்ச வழக்குப்போன்ற விவகாரம் கிடையாது. இந்த ஆள் இல்லையென்றால் வாழ்க்கையில் நமக்கு திருமணமே நடக்காது என்று சொல்லமுடியாது.


அதனால் இந்த விஷயத்தில் வரதட்சணை கேட்பவனும் அதை ஏற்றுக்கொண்டு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்பவளும் சரி சமமாக குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என்று புத்திசாலித்தனமாக யோசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நீதிமன்றங்களில் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ? என்று மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். உங்களுக்கு தெம்பூட்டுவதற்காகத்தான் இந்த பின்வரும் செய்தியைத் தந்திருக்கிறேன்.



Hindustan TimesNew Delhi, March 09, 2011

A woman and her family members cannot be treated as accused under the Dowry Prohibition Act for giving dowry at the time of marriage, the Supreme Court has said.


A bench of Justices HS Bedi and CK Prasad upheld the Delhi High Court verdict that quashed a criminal case against a girl stating a dowry harassment victim was protected under the law and, could not be charged under the Act.


Two separate benches of the Delhi HC had taken divergent views on the issue. While Justice SN Dhingra (since retd) held the woman and her family could be prosecuted for giving dowry, Justice Ajit Bharihoke had said it could not be done.


The latter judgment held that section 7 of the Dowry Prohibition Act provided protection to the person who was a complainant under the law. Section 3 of the Act makes giving, accepting or abetting dowry an offence.


The SC order clarifies the legal position regarding the culpability of an alleged dowry-giver bride. It dismissed the appeal against Justice Bharihoke’s verdict filed by the husband who claimed that the judge could not have delivered it as the law was settled by Justice Dhingra.


The bench, however, dismissed the petition and said, “The girl is a victim and you want her to be prosecuted also. Then 498A (dowry harassment section) would be rendered nugatory.”

Vijary Aggarwal counsel for the woman who faced the case for giving dowry, contended there should be harmonious construction of the Act.


Justice Bharihoke had in October 2010 quashed a metropolitan magistrate’s order that directed registration of a case under the Act against a woman. The case was registered following a complaint made before the court by the husband.


Cases against women

Delhi police issues circular in 2007 asking its officers to register cases under the Dowry Act against women who marry despite dowry demand


Mar 19, 2010: Delhi court orders case against a woman saying she had willfully given dowry


Dec 4, 2008: Noida court orders case against woman.



சட்டங்களும், நீதிமன்றங்களும், அரசாங்கமும் எப்போதுமே மருமகள் பக்கம்தான் என்று தெரியாத முட்டாள் கணவன்கள் மருமகள்களுக்கு எதிராக முட்டி மோதிப் பார்த்து கடைசியில் ஆணியைக் கூட பிடுங்க முடியவில்லை. இவர்கள் எங்கே மருமகள்களுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தப் போகிறார்கள்?! அதனால் மருமகள்களுக்கு அடங்காத கணவனுக்கெதிராக வரதட்சணை சட்டங்களை கொஞ்சமும் தயங்காமல் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 7 இருக்கின்றவரையிலும், நீதிமன்றங்கள் அதை ஆராய்ந்து அறியாமல் அப்படியே படித்து பொருள் கொள்ளும் வரையிலும் மருமகள்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. வானமும், பூமியும் உள்ளவரை வரதட்சணை வழக்குகளில் உள்ள இந்த இரண்டு நடைமுறையிலும் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுவரை இந்திய மருமகள்களுக்குக் கொண்டாட்டம்தான்!

அதனால் கணவனுக்கெதிராக புகார் கொடுக்கும்போது சிக்கனமாக இல்லாமல் புத்திசாலித்தனமா கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக எழுதிக்கொடுங்கள். அப்போதுதான் நீதிமன்றங்கள் நீங்கள் சொல்வதில் பாதி அளவாவது கணவனிடமிருந்து வாங்கிக்கொடுக்கும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பாக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7 இருக்கின்ற வரையில் மருமகள்களுக்கு அடங்கி நடக்காத கணவன்களுக்கு 71/2தான்!

வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்