"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வெளிநாட்டு வாழ் மருமகள்களுக்கு ஓர் நற்செய்தி!

குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் மருமகள்களே உங்களுக்கெல்லாம் ஓர் இனிய செய்தி. வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் இருக்கும் கணவரின் குடும்பத்தாரை எப்படி உங்களின் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதற்கு ஒரு செயல்முறை விளக்கம் கீழுள்ள செய்தியில் இருக்கிறது.

நீங்கள் இந்தியக்குடியுரிமையை ரத்து செய்துவிட்டு வேறுநாட்டுப் பிரஜையாக குடியுரிமை வாங்கியிருந்தாலும் உங்கள் கணவர் உங்களை வெளிநாட்டில் ஏதாவது கொடுமை செய்வதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்தியப் போலிஸை அணுகலாம். நீங்கள் இருக்கும் நாட்டிலுள்ள போலிஸையோ அல்லது கோர்ட்டையோ நீங்கள் அணுகி எந்தவித சிக்கலும் அனுபவிக்க வேண்டியதில்லை. இந்தியாவில் எல்லாம் எளிதாக்கப்பட்டுவிட்டது. வேறு நாடுகளில் நடக்கும் குற்றத்திற்குக் கூட இந்தியாவிலேயே வழக்கு பதிவு செய்யலாம். நீங்கள் அதற்காக இந்தியாவிற்கு கூட வரத்தேவையில்லை. ஒரு போன் அல்லது ஈமெயில் செய்தால் போதும். போலிஸ் உடனடியாக உங்களது மாமியார், நாத்தனார் மற்றும் கணவரின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். பிறகென்ன வெளிநாட்டில் உங்களுடன் இருக்கும் கணவர் உங்கள் காலடியில் தான் விழவேண்டும். வேறு வழியே இல்லை.

வெளிநாட்டு வாழ் மருமகள்களின் நலனுக்காகவே இந்திய அரசு பல நல்ல சட்டங்களை இயற்றியிருக்கிறது. நீங்கள் புகார் கொடுக்கும் போது அப்படி இப்படி கொஞ்சம் சேர்த்து எழுதுங்கள். ஒன்றும் தவறில்லை. அப்போது தான் போலிஸ் மற்றும் பத்திரிக்கை போன்றவை நீங்கள் சொல்வதை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எழுதுவார்கள். கொஞ்சம் கூட தயங்காதீர்கள். எந்த பாதிப்பும் மருமகள்களுக்கு எப்போதும் ஏற்படாது, இதுவரை அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டதாக சரித்திரமே இல்லை. இந்திய அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது மருமகள்களின் காலம். அதிலும் வெளிநாட்டு மருமகள் என்றால் இந்தியாவில் எல்லாருமே தலையாட்டுவார்கள். இது அனைவருக்கும் தெரியும்.

அதனால் நீங்கள் இந்திய மருமகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு மருமகளாக இருந்தாலும் சரி இந்திய அரசு கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் சட்டங்களை செயல்படுத்தி சாதனைப் பெண்களாக தலைநிமிர்ந்து நில்லுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் சட்டப்பிரிவுகளில் மிகவும் முக்கியமானது IPC498a. இதன் முக்கியத்துவத்தையும் பயன்பாடுகளைப் பற்றியும் அடுத்துவரும் பதிவில் எழுதுகிறேன். அதுவரை உங்களுக்குத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளைப் பட்டியல் போட்டு தயாராக இருங்கள்.

இனி செய்தியைப் படித்து உங்களுக்குப் புரியாத விஷயங்களை எனக்கு எழுதுங்கள். நான் தெளிவுபடுத்துகிறேன்.

Notice against NRI hubby who asked for kinky sex
His wife has registered a complaint of harassment against him

Mumbai Mirror.com December 26, 2009


The Mahim police have issued a lookout notice on Friday against a Canada-based sales executive, after his wife registered a complaint of harassment against him. She also alleged that he demanded unnatural sex, but the police are yet to verify the claims.

“We will decide on the Sections to charge him with, after receiving the medical reports of the victim,” said Inspector Vinay Kulkarni of Mahim Police Station.

According to the police, xxxxxx, 34, was married to the complainant, a citizen of Canada, on September 1, 2008, at Laxmi Narayan Mandir in Khar. They met online and moved to Canada soon after the wedding.

The complainant, speaking from Canada said, “He lived with me in Canada for 10 months and did not work. We had a joint account which I did not check often. But I now am in debt of 50,000 Canadian dollars. He married me because he wanted to be a citizen of Canada.”

Her mother, who stays in Jogeshwari claimed, “After the marriage, on the first night at a hotel in Mumbai, he demanded unnatural sex. He even forced my daughter, after which they fought. In Canada too, xxxxxxxx made similar demands.”

The two also ended up filing complaints against each other. "The xxxxxxxxxxxx also took my daughter's jewellery worth Rs 7 lakh, and they used to ask for money,"she alleged further.

xxxxxxxxxx's mother xxxxxxx, who was arrested on December 5 and later released on bail, said, "All the allegations made by xxxxxxx's wife are incorrect. In fact, she has kept the gold jewellery we gifted her. We had her jewellery because she gave it to me for safe-keeping. I have deposited it with Mahim police."

This reporter asked her to get xxxxx to speak to Mumbai Mirror, but till the time of going to press, he did not respond.

"We have registered a complaint against xxxxxxxxi, his mother and sister , 40," said Kulkarni, adding, "All have been presently booked under Sections 406 (Punishment for criminal breach of trust), 498A (Husband or relative of husband of a woman subjecting her to cruelty) and 34 (Acts done by several persons in furtherance of common intention) of the Indian Penal Code."





11 comments:

  1. //நீங்கள் இந்தியக்குடியுரிமையை ரத்து செய்துவிட்டு வேறுநாட்டுப் பிரஜையாக குடியுரிமை வாங்கியிருந்தாலும் உங்கள் கணவர் உங்களை வெளிநாட்டில் ஏதாவது கொடுமை செய்வதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்தியப் போலிஸை அணுகலாம். நீங்கள் இருக்கும் நாட்டிலுள்ள போலிஸையோ அல்லது கோர்ட்டையே நீங்கள் அணுகி எந்தவித சிக்கலும் அனுபவிக்க வேண்டியதில்லை. இந்தியாவில் எல்லாம் எளிதாக்கப்பட்டுவிட்டது. வேறு நாடுகளில் நடக்கும் குற்றத்திற்குக் கூட இந்தியாவிலேயே வழக்கு பதிவு செய்யலாம். நீங்கள் அதற்காக இந்தியாவிற்கு கூட வரத்தேவையில்லை. ஒரு போன் அல்லது ஈமெயில் செய்தால் போதும். போலிஸ் உடனடியாக உங்களது மாமியார், நாத்தனார் மற்றும் கணவரின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். பிறகென்ன வெளிநாட்டில் உங்களுடன் இருக்கும் கணவர் உங்கள் காலடியில் தான் விழவேண்டும். வேறு வழியே இல்லை//

    ஆகா அருமை பாரதி(ஆமாம் எந்த பாராதி???) கண்ட கனவுநிறைவேறியது. பெண்(ஒன்லி மருமகளுக்கு மட்டும்) உரிமைக்காவும் பெண் சுதந்திரத்திற்காகவும் போராடி சென்னையில் போன்ற நகரங்களில் மட்டும் ஒர நாளைக்கு சுமார் 30ல் இருந்து 75(அதிகபட்சமாக) விவாக ரத்து வழக்குகள் பதிந்து பெண்களுக்கு விடுதலை தரும் இந்திய திருநாடு பெண் விடுதலை அடைந்துவிட்டது.

    //போலிஸ் உடனடியாக உங்களது மாமியார், நாத்தனார் மற்றும் கணவரின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.//

    தயவு செய்து திருந்தி எழுதவும்... திருமணத்திற்கு வந்த யாரையும் அல்லது வராதவர்களையும் வந்துட்டு சாப்பிட்டுவிட்டு மொய்போடதவர்களையும் கைது செய்து புழல் சிறையில் அடைக்கலாம். உதாரணமாக எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பருடைய தாயாரும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள்... தங்களுக்கு தேவைப்பட்டால் முழுத்தகவலையும் தரத்தயார்... எனது மின் அஞ்சல் tamizhsaran at gmail dot com

    ReplyDelete
  2. மனைவி, கள்ளக்காதலன் கைது

    இதொ இந்த அப்பாவி அபலை பெண்ணுக்கு தாங்கள் அறிவுரை கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்....

    கணவன் இறந்ததற்கு சடங்கு செய்யும் பொழுது பிடிபட்ட கள்ளக்காதல் "குத்து" விளக்கின் படுகொலைசம்பவத்தை படியுங்கள்

    மனைவி, கள்ளக்காதலன் கைது

    http://www.dinakaran.com/crimedetail.aspx?id=2996

    ReplyDelete
  3. //வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் இருக்கும் கணவரின் குடும்பத்தாரை எப்படி உங்களின் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதற்கு//

    இதெல்லாம் ஒரு பொழப்பு...

    ReplyDelete
  4. எதுக்கு இவ்வளவு பதிவுகள்? ஒரே ஒரு பதிவு போதுமே.

    "கல்யாணம் ஆனவுடன் சொத்துக்களை அபகரித்ததுக் கொண்டு கணவனின் முழுக் கூட்டத்தையும் கூண்டோடு தீர்த்துக் கட்டுவது எப்படி?"

    ReplyDelete
  5. எதுக்கு இவ்வளவு பதிவுகள்? ஒரே ஒரு பதிவு போதுமே.

    'கல்யாணம் ஆனவுடன் கணவனின்சொத்துக்களை அபகரித்ததுக் கொண்டு முழுக் குடும்பத்தையும் கூண்டோடு தீர்த்துக் கட்டுவது எப்படி?'

    ReplyDelete
  6. //வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் இருக்கும் கணவரின் குடும்பத்தாரை எப்படி உங்களின் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதற்கு//

    இதுவல்லவோ குடும்பப் பெண். இப்படித்தான் அடக்கி ஆளனுமா? இதயும் ஒரு பொழப்பா பதிவ வேற எழுதறீங்க. தூ

    ReplyDelete
  7. தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....

    ReplyDelete
  8. "தூ" என்று துப்பியவர்களுக்கு நன்றி. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். எல்லாம் அந்த நீதிதேவதைக்கே சமர்ப்பணம்.

    ReplyDelete
  9. "தூ" என்று துப்பியவர்களுக்கு நன்றி. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். எல்லாம் அந்த நீதிதேவதைக்கே சமர்ப்பணம்.

    அந்த நீதிதேவதையையும் வரதட்சணை கேட்டு வயிற்றில் உதைத்ததார் என்று எனது (முன்னாள்) மனைவியின் "முதல் தகவல் அறிக்கையில்" இணைக்க சொல்லி எல்லாம் வல்ல அந்த குடும்ப"குத்து" விளக்கை பிராத்திக்கின்றேன்...

    எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பரின் தாயாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்ததுபோல்...(FIR NO.4/2008 TAMBARAM WPS) இந்த கண்கட்டி மொனமாக இருக்கும் நீதிதேவதையும் புழல் சிறையை சுற்றிபார்த்துவிட்டு வரட்டும்...

    ReplyDelete
  10. மருமகளே....
    எங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".

    நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.

    யார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்