"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


காதலிக்கும் இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

வருங்காலத்தில் மருமகளாகப் போகும் இளம் பெண்களுக்காக இந்த செய்தி.

காதலில் விழும் பல இளம்பெண்களை இளைஞர்கள் ஏமாற்றுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக காதலிக்காமல் இருக்கமுடியுமா?

அப்படியென்றால் எப்படி பாதுகாப்பாக காதலிப்பது என்று தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

சிலசமயங்களில் காதல் செய்துவிட்டு ஆண்கள் பெண்ணை ஏமாற்ற முற்படுவார்கள். அதுபோன்ற சமயத்தில் ஆணை வழிக்குக் கொண்டுவர பொதுவாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். பல சமயங்களில் இதுபோன்ற புகார்களை யாரும் சரியாக கவனிக்க மாட்டார்கள். அப்போது இளம் பெண்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாதல்லவா? இதுபோன்ற இளம் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக ஒரு பெண்கள் உதவி மையம் இருக்கிறது. இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் உங்களது காதல் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமே உதவி செய்கிறது.

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers (இலவச தொலைபேசி)

Women help Line - 1091


மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
(தினமலர் செப்டம்பர் 8/2011)

தமிழகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மூலம் இயங்கும் நடமாடும் போலீஸ் கவுன்சிலிங் வாகனம், புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.



சிவகங்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட போலீஸ் கவுன்சிலிங் வாகனம் "டிவி' உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது.

கடந்த 2001 அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உடனே தடுக்கவும், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன் கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்தால், மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுன்சிலிங் நடத்த, வாகனம் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள், டாக்டர், வக்கீல்கள், கவுன்சிலிங் உறுப்பினர்கள் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தனர்.

அதற்கு பின் வந்த தி.மு.க., அரசு, இலவச போலீஸ் கவுன்சிலிங் வாகன திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால், போலீஸ் கவுன்சிலிங் வாகனம் பொலிவிழந்து போனது.

புதுப்பொலிவு: மீண்டும் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் ஜெ., பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் வந்தால், உடனே நேரில் சென்று கவுன்சிலிங் நடத்துமாறும், இதற்காக வழங்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் வழங்கப்பட்ட "போலீஸ் நடமாடும் கவுன்சிலிங்' வாகனத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இதில், பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க, "டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்காக புதிதாக "டிவி' உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



பெண்களுக்கு உதவி செய்ய காவல்துறையால் இந்த பெண்கள் உதவி மையம் இயக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது அதே காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலிஸ்காரரே ஒரு இளம் பெண்ணை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள். ஐயோ பெண்களை யார்தான் காப்பாற்றுவார்களோ?



செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், காதலித்த பெண்ணை கைவிட்டு, வேறு திருமணம் செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பழைய செம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரர். இவருக்கும், வத்தலக்குண்டு பூசாரிபட்டி திவ்யாவிற்கும், நேற்று முன்தினம், செம்பட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை, திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நரசிம்மன் மகள் திவ்யா, "மணிகண்டன் என்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தை நிறுத்த வேண்டும்,' என, போலீசில் புகார் செய்தார். மாப்பிள்ளை அழைப்பில் இருந்த மணமகனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பெண் வீட்டாருக்கு இத்தகவலை தெரிவிக்காத மாப்பிள்ளை வீட்டார், "மணமகனுக்கு உடல்நிலை சரியில்லை. நேரம் சரியில்லாததால் மதியம் ஒரு மணிக்கு மேல் தாலிகட்ட வேண்டும்,' என, கூறி சமாளித்தனர். ஆனால் மண்டபத்தில் விருந்து, மொய் வசூல் நடந்தது. மொய் வசூல் முடித்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப முயற்சித்த போது, பெண் வீட்டார் தடுத்தனர். மோதல் ஏற்பட்டு, போலீசார் வந்த பிறகே, பெண் வீட்டாருக்கு விஷயம் தெரிந்தது.

காதலி திவ்யா, "என்னை திருமணம் செய்ய வேண்டும் அல்லது மணிகண்டனை கைது செய்ய வேண்டும்,' என, முடிவில் உறுதியாக இருந்தார். மாலையில், மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்