"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வெளிநாட்டு இந்திய கணவனுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நெத்தியடி

வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்த எல்லைகள் எப்போதும் தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செய்தி. மருமகள்கள் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.


செப்டம்பர் 04,2011 தினமலர்

புதுடில்லி: "வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், அங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


ஆந்திராவைச் சேர்ந்தவர் தோட்டா வெங்கடேஸ்வரலு. இவர், தன் மனைவி சுனிதாவுடன், போஸ்ட்வானாவில் வசித்து வந்தார். இவரின் மனைவி சுனிதா, சமீபத்தில் போஸ்ட்வானாவில் இருந்து, ஆந்திராவுக்குத் திரும்பினார். ஆந்திராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், வெளிநாட்டில் வசிக்கும்போது தன் கணவர் வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாகப் புகார் தெரிவித்தார். ஆந்திராவில் உள்ள கூடுதல் முன்சீப் கோர்ட்டில், இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து, வெங்கடேஸ்வரலு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "வெளிநாட்டில் நடந்த ஒரு சம்பவத்துக்காக, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது. எனவே, என் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சிரியாக் ஜோசப், எஸ்.எஸ்.நிஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் வசிக்கும் ஒருவர், இங்கு குற்றச் செயலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே நடவடிக்கையை, அவர் வெளிநாட்டில் செய்த குற்றச் செயல்களுக்கும் எடுக்க முடியும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், வெளிநாட்டில் குற்றம் செய்தால், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும். அதேநேரத்தில், இந்த விசாரணையைத் துவங்குவதற்கு முன், மத்திய அரசிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


நான் முந்தைய பதிவுகளில் கூறியிருப்பது போல வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று மருமகள்கள் முடிவு செய்துவிட்டால் உடனடியாக அவர்கள் நாடவேண்டிய நாடு இந்தியா. இந்தியா மட்டுமே!

குற்றச் சம்பவம் வேறுநாடுகளில் நடந்தாலும் மருமகள்கள் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறை மற்றும் நீதித்துறைகளை நாடுவது அவ்வளவு நல்லது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் இருப்பது போல பரிசுத்தமான ஊழலற்ற காவல் மற்றும் நீதித்துறைகள் வேறு நாடுகளில் எங்குமே கிடையாது. அதனால் கணவன் செய்யும் கொடுமைகள் பற்றி மருமகள்கள் தங்கள் கணவனுடன் வசிக்கும் அந்த நாடுகளில் இருக்கும் காவல் துறையில் புகார் செய்வதை விட இந்தியாவிற்கு வந்து புகார் கொடுத்தால்தான் மருமகள் விரும்புவதை அடைய முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த வழிமுறையில் பல மருமகள்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மருமகள்கள் கணவன் மீது புகார் கொடுக்க இந்தியாவிற்குகூட நேரில் வரவேண்டும் என்று அவசியமில்லை. வெளிநாட்டில் தங்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீது வரதட்சணைப் புகாரை இந்தியாவில் பதிவு செய்யலாம்.

வெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:

National Commission for Women, India
4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi - 110 002
Phone: 91-11-23237166
91-11-23236988
Fax: 91-23236154
Complaints Cell:
91-11-23219750
Email: ncw@nic.in

Click Here to File Complaint Against NRI Husband


வாழ்த்துக்கள்!!!



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்