"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்தியாவிற்கு வந்திருக்கும் கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய காவல்துறையிடம் புகாா் கொடுப்பது எப்படி?

வெளி நாடு வாழ் ஆண்களை நம்பி திருமணம் செய்து மோசம் போகாதீா்கள் என்று நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  ஆனாலும் பல இளம் மருமகள்கள் ஆண்கள் வீசும் மாய வலையில்  சிக்கி பிறகு துன்பப்படுகிறாா்கள்.  எது எப்படியோ இளம் மருமகள்களுக்கு துன்பம் என்று வந்துவிட்டால் நமது இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எல்லை கடந்தும் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. 

சரி. வெளிநாடு வாழ் இந்தியரை நம்பி ஏமாந்த பிறகு எப்படி அதிலிருந்து மீண்டு கணவனுக்கு பாடம் கற்பிப்பது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது.   நீங்கள் எந்த நாட்டில் வசித்தாலும் உங்கள் கணவன் உங்களை துன்புறுத்துவதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்திய காவல்துறையை இணையதளம்  மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொண்டு உங்கள் புகாரை அனுப்பி வைக்கலாம்.  

இப்படி வெளிநாடு வாழ் மருமகள் ஒருவா் இந்தியாவிற்கு வந்திருக்கும் தனது கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே மின்னஞ்சல் மூலமாக சென்‌னை நகர காவல் ஆணையருக்கு புகாா்க அனுப்பியிருக்கிறாா்.   கவனமாக படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

 காவல்துறையை தொடா்பு கொள்ள வேண்டிய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  குறிப்பெடுத்து‌ வைத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது! இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.


24 hours Telephone Desk at CM office & DGP office
24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.
CM Office 044-25672510
Control Room (DGP Office) 044-28447200

இது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".
Toll Free Numbers
Women help Line - 1091
மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)


இப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கணவனுக்கெதிராக உங்கள் புகாரை தயாா் செய்யும்போது பின்வரும் பாடங்களிலிருந்து தகுந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.





1 comment:

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்