"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்திய மருமகள்களின் கரங்களை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

சமீப காலமாக பல அமைப்புகள் மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலைத்தளத்திலும் பலர் தங்களது எதிர்ப்புக் கருத்துக்களை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு சவால் விடும் விதமாக மருமகள் பாதுகாப்பு சங்கத் தலைவி ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு சட்டங்கள் இருக்கும்போதே பல மருமகள்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அந்தத் தலைவி. அதனால் மருமகள்கள் தங்களது வெற்றிக்கொடியை மாமியார் வீட்டில் நிலைநாட்டி தங்களது அதிகாரத்தின் கீழ் கணவனையும் அவனது குடும்பத்தையும் கொண்டுவந்தால்தான் இதற்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நான் கருதுகிறேன்.

அதனால் மருமகள்கள் அனைவரும் ஒன்று திரண்டு மருமகள் பாதுகாப்பு சட்டங்களையும், மருமகள் பாதுகாப்பு சங்கங்களையும் ஆதரித்து இந்திய மருமகள்களின் கரங்களை வலுப்படுத்துவோம் என்று சபதம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வரதட்சணை தடுப்பு சட்டத்தை நீக்கினால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்

தினமலர் நவம்பர் 11,2010

மதுரை : "" வரதட்சணை தடுப்பு சட்டத்தைநீக்கினால், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்,'' என, மதுரை ஏக்தா அமை ஒபின் ஆய்வாளர் பவளம்
தெரிவித்தார்.


மதுரை ஏக்தா பெண்கள் ஆதார அமைப்பின் 20வது ஆண்டுவிழா நடந்தது. ஏக்தா இயக்குனர் பிம்லா, முன்னாள் தலைவி ரோகிணிதேவி, உறுப்பினர்கள் ஜேசுரத்தினம், தேவமனோகரன், காந்திமதி பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை இதழியல் துறைத் தலைவி சாந்தா துவக்கி வைத்தார். பெண் கொடுமையை சித்தரிக்கும் போஸ்டர்களை, மதுரை லேடிடோக் கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா வெளியிட்டார்.

இ.பி.கோ., 498 சட்டம் குறித்த மலரை வெளியிட்டு, பவளம் பேசியதாவது :
கடந்த 1961 ல் வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டுவரப் பட்டது. ஆனால் 1970 க்கு பிறகு, வரதட்சணை சாவுகள் அதிகமானது. எனவே 1983 ல், இ.பி.கோ., 498 (ஏ) சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆரம்பம்முதலே சமுதாயத்தில் எதிர்ப்பு இருந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன், அவரது குடும்பத்தினர் மூலம் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டால், இச்சட்டத்தின் உதவியை நாடலாம். ஆனால் இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கணவரை மிரட்டி பணம் பறிப்பதற்கும், குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவதற்கும் இச்சட்டத்தை பெண்கள் பயன்படுத்துவதால், இதை நீக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆண், பெண் பாகுபாடில்லாமல், பொதுவான சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 1999 முதல் 2008 வரை, மொத்தம் 2091 வரதட்சணை சாவுகள் நிகழ்ந்துள்ளன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2146 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கணவன் மற்றும் கணவன் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்டதாக (இ.பி.கோ.,498) 12 ஆயிரத்து 752 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இச்சட்டத்தை நீக்கினால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்இன்னும் அதிகரிக்கும், என்றார்.


மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை கைகேயிக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் போன்றவை அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று மருமகள் மட்டுமே முடிவு செய்யமுடியும் (அதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த பதிவினைப் படியுங்கள்: வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை). மற்றவர்கள் இதில் எந்தக் குறையும் சொல்ல உரிமையற்றவர்களாவார்கள். அதனால் தற்போது இருக்கின்ற மருமகள் பாதுகாப்புச் சட்டங்களைப் போற்றிப் பாதுகாப்போம்! புதிய சட்டங்களை வரவேற்போம்!!

வாழ்த்துக்கள்!


மருமகள்களுக்கு இந்திய அரசின் தீபாவளி இனிப்பு

இந்திய அரசின் மருமகள் பாதுகாப்பு (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) சட்டங்கள் மூலம் வீட்டில் முடிசூடா அரசியாக வலம் வந்த மருமகள்கள் இனி நாட்டில் எல்லா இடங்களிலும் தங்களது ஆட்சியை நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை சேர்க்க இந்திய அரசாங்கம் இந்த தீபாவளி நன்னாளில் மருமகள்களுக்கு இனிப்பான செய்தியைத் தந்திருக்கிறது.



டெல்லி: பணிபுரியும் இடங்களில் செக்ஸ் தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அதில் செக்ஸ் தொல்லையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் `பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்-2010' என்ற சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பணி இடங்களில் `செக்ஸ் தொல்லை' என்பதற்கு உச்ச நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி உடலை தொடுதல், செக்ஸ் காரணத்துக்காக மிரட்டுதல் அல்லது வேண்டுகோள் விடுத்தல், உடல் மற்றும் வார்த்தை ரீதியாக விரும்பத்தகாத செயல்கள், வார்த்தைகளால் அல்லாத செக்ஸ் தொடர்பு போன்றவை செக்ஸ் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, பெண்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதிமொழி அளித்தோ அல்லது அச்சுறுத்தியோ செக்ஸ் தொல்லை கொடுப்பது மற்றும் செக்ஸ் தேவைக்காக பணியிடத்தில் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவது போன்றவையும் செக்ஸ் தொல்லைகளாக கருதப்படும்.

அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் அமைப்புசார நிறுவனங்களில் இத்தகைய தொல்லைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு இந்த சட்டத்தின் மூலமாக பாதுகாப்பு கிடைக்கும்.

பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளராகவோ, தொழில்ரீதியாகவோ, தினக் கூலி தொழிலாளராகவோ செல்லும் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தரப்பட்டாலும் இந்த சட்டப்படி தண்டனை தர முடியும்.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவிகள், மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் ஆகியோரும் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற முடியும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்காக, நிறுவனங்களிலேயே புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
10 பேருக்கு மேல் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களிலுமே இத்தகைய கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இது தவிர மாவட்ட கலெக்டர்களால் `புகார் கமிட்டியும்' அமைக்கப்படும். அதிலும் பெண்கள் புகார் தரலாம்.

பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் புகாரை முழுமையாக விசாரித்து தண்டனை அளிப்பதற்காக இந்த கமிட்டிகளுக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த சட்ட விதிகளை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.


பணி இடங்களில் செக்ஸ் தொல்லையை தடுக்கும் விதமாக இயற்றப்பட்டிருக்கும் இந்த சட்டம் பல பெண்களுக்கு தங்களின் அதிகாரத்தையும், உரிமையையும் மாமியார் வீட்டில் மட்டுமல்லாமல் பணிபுரியும் இடங்களிலும் நிலைநாட்டிக்கொள்ளப் பயன்படும் ஒரு அற்புத ஆயுதமாகப் பயன்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மருமகள்களுக்கு ஒரு டிப்ஸ்: இந்த சட்டத்தின் மூலம் பணிபுரியும் இடத்தில் ஒரு ஆண் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் புகார் கூற முடியும். ஆனால் ஒரு பெண் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக எந்த ஆணும் எந்த இடத்திலும் புகார் கொடுக்க வழி கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! :) அப்படிச் சொன்னாலும் அந்த ஆணை யாரும் நம்பமாட்டார்கள் என்பது ஒரு “+”.

மருமகள்களே உங்களது தோழிகளுக்கு இந்த சட்டத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக்கொடுங்கள்.

மறக்காமல் இந்திய அமைச்சரவைக்கு உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.

வாழ்த்துக்கள்!


இந்திய சமூகம் ஆபத்தானது: மருமகள்களே உஷார்!

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்திய சமூகமே சீரழிந்துகொண்டிருக்கிறது. மருமகள்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் மருமகள்களே இந்திய வரதட்சணை தடுப்புச்சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) நீங்கள் கையில் எடுத்தால்தான் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

உங்களுக்குக் கொடுமை ஏற்படும் வரை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக சட்டங்களை எப்படிப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று பின்வரும் முந்தைய பதிவுகளில் தெரிந்துகொள்ளுங்கள்.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4


இந்தியாவில் மருமகளாக இருப்பதில் இருக்கும் ஆபத்துக்களைப்பற்றி இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால் நீங்கள்தான் உங்களை புத்திசாலித்தனமாக காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.


அக்டோபர் 31,2010 தினமலர்

புதுடில்லி : ""இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது,'' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

சத்யநாராயணா திவாரி என்பவர் தனது மனைவி கீதாவை, அவரின் தந்தையிடமிருந்து மாருதி காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினார். 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதற்கு திவாரியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்களுக்கு அலகாபாத் ஐகோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: இந்திய சமூகம் தற்போது, நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, சுப்ரீம் கோர்ட் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், அதிக எண்ணிக்கையில் இத்தகைய வரதட்சணைக் கொலை வழக்குகள் வரத்தொடங்கியுள்ளன. புதிதாக திருமணம் செய்து கொண்டு, ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு போகும் இளம்பெண்கள், தனது கணவனாலும், மாமனார் மற்றும் மாமியாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் எரிக்கப்படுகின்றனர் அல்லது, வலுக்கட்டாயமாக தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர். இந்த நாகரிக சமூதாயத்தில், பெண்கள் பயங்கரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவுமே கையாளப்படுகின்றனர். பொதுவாக, இத்தகைய கொடூரச் செயலுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அரிதிலும், அரிதாகவே, வரதட்சணைக் கொலை வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அத்துடன் திவாரிக்கும் அவரின் தாயாருக்கும் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.


திருமணம் செய்து கனவுகளுடன் மாமியார் வீட்டிற்குள் புகுந்தால் மட்டும் போதாது மருமகள்களே. அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை எப்படிப் பக்குவமாக பயன்படுத்தவேண்டும் என்ற கலையையும் நீங்கள் கற்றிருக்கவேண்டும். வேறு எந்த வேலை தெரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒவ்வொரு இந்திய மருமகளும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று கற்றறிந்து வைத்திருக்கவேண்டும். இதுதான் உங்கள் திருமணக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள பயன்படும் மந்திரம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!




வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை

இந்திய மருமகள்களுக்கு வழிகாட்டும் இந்த நல்ல பதிவுகளுக்கு வந்துள்ள கருத்துக்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

பலர் இந்த பதிவுகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பதிவு.

கடுமையான விமர்சனங்களில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதனைத்தொடர்ந்து அவர்களை சாந்தப்படுத்தும் வகையில் சில கருத்துக்களையும் கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.

==================================================

Anonymous said...

என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்து மேற்கத்தியக் கலாச்சார வழியில் இந்தியக் குடும்ப அமைப்பை வழிநடத்த இதைவிட சிறந்த ஒரு வலைப்பதிவு இருக்க முடியுமா?

வயது போன காலத்தில் நாய் படும்பாடு படப்போகும் உங்களை மாதிரியான புத்திசாலியான மருமகள்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Wednesday, October 27, 2010 6:20:00 AM PDT

=======================

Anonymous said...

wht abt your family?Are you living with your DOG? I Mean your Husband?

Saturday, June 12, 2010 5:30:00 PM PDT

=======================

மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.

குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 14, 2010 12:55:00 PM PDT

======================
Anonymous said...

தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....

Wednesday, December 30, 2009 1:24:00 PM PST

=======================

மேலே கருத்து சொல்லியிருக்கும் அனைவரும் இந்தப் பதிவுகள் ஏதோ மருமகள்களுக்கு தவறான வழிகாட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

திருமணமாகி கணவனின் குடும்பத்திற்கு செல்லும் மருமகள்கள் எப்படி தங்களது ஆட்சியை மாமியார் குடும்பத்தில் நிலைநாட்டுவது என்பதைத்தான் இந்தப் பதிவுகள் சொல்கின்றன. மருமகள்கள் தங்களது கைமேலோங்கி இருக்கச்செய்தால் அவர்களை யாரும் வரதட்சணைக் கொடுமை செய்யமுடியாதல்லவா?

அதற்காகத்தானே பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களை அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இவற்றை எப்படி பக்குவமாக மருமகள்கள் செயல்படுத்தலாம் என்று சொல்லிக்கொடுத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகத்தானே தேசிய பெண்கள் வாரியம், மாநில பெண்கள் வாரியம், பெண்கள் அமைச்சகம், பெண்ணுரிமை சங்கங்கள், பெண்ணுரிமை பேசும் வழக்கறிஞர்கள், மருமகள் கொடுக்கும் எல்லா வரதட்சணை வழக்குகளையும் பதிவு செய்யும் காவல்துறை நண்பர்கள் என்று ஒரு பெரிய மருமகள் ஆதரவுக் கூட்டமே நாட்டில் இருக்கிறது. மருமகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்த நுண்ணிய வலைப்பின்னலுடன் கூடிய அரசாங்க அமைப்பை முதலில் நன்கு புரிந்துகொண்டால் உங்களுக்கு இந்த தவறான எண்ணங்கள் தோன்றாது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய இதிகாசமான இராமாயணத்தில் கூட கணவனை வழிக்குக் கொண்டுவர மனைவி கணவனை எப்படி மிரட்டியிருக்கிறார் என்று பக்குவமாக சொல்லியிருக்கிறார்கள். இந்திய இதிகாசங்களை மதிப்பவர்கள் மருமகள்கள் சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறாக நினைக்கமாட்டார்கள்.

இராமாயணத்தில் வரும் இந்த இரண்டு பாடல்களைப் படித்து பொருளை உணர்ந்துகொண்டால் மருமகள்கள் கணவனை தன்வழிக்குக்கொண்டுவர சட்டங்களை தங்கள் வசதிப்படி பயன்படுத்தலாம் என்பது தெளிவாகும்.


3. கைகேயி சூழ்ச்சிப் படலம்

கைகேயின் தீஞ்சொற்கள்

'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,
வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23


தசரதன் தனக்குக்கொடுத்த வரத்தை இப்போது செயல்படுத்தி ராமனை காட்டிற்கு அனுப்பாவிட்டால் சொல்லிய வார்த்தையை காப்பாற்றாத மன்னன் இவன் என்று சொல்லி தற்கொலை செய்துகொண்டு அதற்குக் காரணம் என்னுடைய கணவன் தசரதன்தான் என்று எழுதிவைத்து ஊரறிய உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று தசரதனின் மனைவி கைகேயி தனது கணவனை மிரட்டியிருக்கிறார் என்று இந்த பாடல் வரிகள் சொல்கின்றன.

அதனால் இந்தக்காலத்து மருமகள்கள் தங்கள் கணவனை தங்கள் வழிக்குக் கொண்டுவர வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பயன்படுத்துவது என்பது ஒன்றும் ஏதோ புதியதொரு செயலாகக் கருத இயலாது.


தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்

'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,
கால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29


கைகேயி அப்படி மிரட்டியவுடன் தசரதன் அவளின் காலில் வீழ்ந்து கதறி அவளின் கட்டளைக்கு அடிபணிந்திருக்கிறான். மாமன்னன் தசரதனே மனைவியின் மிரட்டலுக்கு அடிபணிந்து காலில் விழுந்திருக்கிறான் என்றால் இந்தக்காலத்துக் கணவன்கள் எம்மாத்திரம். அதனால் மருமகள்கள் IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற அரசாங்கம் கொடுத்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் தங்கள் வழிக்குகொண்டுவருவது என்பது இந்திய இதிகாச மரபினை அடிப்படையாகக்கொண்டு நடக்கின்ற ஒரு மரபாகும். இதனை குறையென்று சொல்லலாமா?

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்கூட டில்லி உயர்நீதிமன்றம் திருமணத்தின்போது பெண் வரதட்சணை கொடுப்பது தவறு கிடையாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் 3வது பிரிவுப்படி வரதட்சணைக் கொடுப்பது குற்றமாக இருந்தாலும் அதை ஒரு பெண் செய்யும்போது அது குற்றமாகாது. அதே சமயம் கணவன் என்னை மிரட்டி வரதட்சணை வாங்கினான் என்று சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு கணவனை மட்டுமே வரதட்சணை சட்டத்தின் 3வது மற்றும் 4வது பிரிவுப்படி தண்டிக்கும். அதனால் மருமகள்கள் சட்டங்களை தேவைக்கேற்றபடி தயங்காமல் பயன்படுத்தலாம்.

அந்த செய்தியினையும் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



New Delhi: Giving dowry for fear that a proposed marriage may otherwise be called off is not an offence, the Delhi High Court has held while quashing an FIR against a bride and her family for conceding the demands of the groom's family.


Justice Ajit Bharihoke quashed the criminal proceedings after the bride and her family convinced the court that dowry was given under pressure. For, the bridegroom's family had threatened to cancel the marriage.


“As per the allegations in the complaint made by the petitioner [bride], the demand for dowry was made by the father of the respondent [bridegroom] at the time of engagement ceremony when he allegedly asked her father to concede his demand for dowry, failing which he would call off the marriage.


“From the aforesaid facts, it is obvious that the petitioner and her parents were confronted with the unenviable situation of either conceding the demand or facing loss of honour of their family in society, and if under that fear, the petitioner and her parents conceded the demand for dowry, they cannot be faulted as they were victims of the circumstances,” the court said.


Granting the bride relief, the court said, “She cannot be subjected to prosecution for the offence under the Dowry Prohibition Act.”


The court passed the order on the petition filed by Pooja Saxena challenging a lower court's order which directed the police to register an FIR against her and her family members, who alleged dowry harassment by her husband and in-laws. Sameer Saxena and his family members were accused of committing cruelty to Pooja by harassing her for dowry. The woman, in an FIR with the Roop Nagar police station, claimed that her family members had given huge dowry to Mr. Saxena at the time of their marriage.


Mr. Saxena later pleaded before the lower court that criminal proceedings be initiated against his wife and her family as she herself had admitted to giving huge dowry, which was an offence under the statute. The lower court on March 10 passed an order directing registration of the FIR on a petition filed by Mr. Saxena. — PTI


இந்த தீர்ப்பின் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எப்படி பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்று அடுத்தபதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி

பல மருமகள்கள் பலவித கனவுகளோடு ஒரு “கணக்குப்போட்டு” தங்களது ஏக்கக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்துவெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏக்கக் கனவுகளோடு வெளிநாட்டிற்கு வாழப்போகும் பெண்ணிற்கு ஏற்படும் ஏமாற்றம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய பாவம் . அதற்குப் பிராயச்சித்தம்தான் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை சட்டங்கள். இதுபோன்ற மருமகள்களின் ஏக்கக்கனவுகள் ஏமாற்றமடைவதற்குக் காரணமான கணவன் மீது இந்தியாவில் வந்து வரதட்சணை வழக்குப் போடுவது தவறு கிடையாது.

அப்படி வழக்குப் போடும்போது “குடும்பம்” என்ற இந்திய மரபுப்படி இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து புகாரில் எழுதிவிட்டால் போலிஸ் உடனடியாக மாமியார் குடும்பத்தாரை எந்தக்கேள்வியும் கேட்காமல் பிடித்து சிறையில் தள்ளிவிடுவார்கள் என்ற உண்மை பல மருமகள்களுக்கும் தெரியும். அப்படித் தெரியாத மருமகள்கள் முந்தைய பதிவுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது வழக்கமாக நடக்கும் வரதட்சணை வழக்கு நடைமுறை. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் கணவனை எப்படி அரசாங்க உதவியுடன் தன்வழிக்குக் கொண்டுவருவது என்று பல மருமகள்களுக்குத் தெரியாது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்தவுடன் இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தை உள்நாட்டு போலிஸ் “கவனித்துக்கொள்ளும்”. வெளிநாட்டில் இருக்கும் கணவனை “கவனிக்க” சர்வதேச போலிஸ் (InterPol) மருமகள்களுக்கு உதவி செய்கிறது. காவல்துறை எங்கிருந்தாலும் அது மருமகள்களுக்கு அரவணைப்பாகத்தான் செயல்படும். இது உலக நியதி. இப்படி சர்வதேச போலிஸின் உதவியுடன் உங்கள் கணவனை வழிக்குகொண்டுவர நம் நாட்டு சி.பி.ஐ. மருமகள்களுக்கு உதவி செய்ய வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடக்கிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட போபால் விஷவாயு வழக்கில் தொடர்புடையவர், இந்திய மக்களின் பலகோடி ரூபாயில் நடைபெற்ற பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடையவர் போன்றவர்களை தப்பவிட்டாலும் இந்தியமருமகள்களின் மாப்பிள்ளைகளை தப்பவிடமாட்டார்கள் நம்ம ஊர் அதிகாரிகள். மருமகள் மீது அவ்வளவு பாசமுடையவர்கள் நம்ம ஊர் அதிகாரிகளும், தலைவர்களும். இவர்களின் பாசத்தை மருமகள்கள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவனை சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடலாம்.



NEW DELHI: CBI on Saturday filed an application before a Delhi court seeking closure of the Bofors pay off case against Italian businessman Ottavio Quattrocchi.

In the plea filed before Chief Metropolitan Magistrate Kaveri Baweja, the probe agency said all efforts to extradite Quattrocchi for facing the trial here has failed.



Prime Minister Manmohan Singh said that the Ottavio Quattrocchi case was proving to be an embarrassment for the government and that it was “not a good reflection on the Indian legal system that we harass people while the world says we have no case.”

Speaking for the first time on the issue after The Indian Express reported last week that the CBI got the Interpol to withdraw the Red-Corner Notice on Quattrocchi, Singh told CNN-IBN on Saturday: “The Quattrocchi case is an embarrassment for the Government of India... we have tried to extradite him from Malaysia, from Argentina... and the courts have said we don’t have a strong case. Now it is not a good reflection on the Indian legal system that we harass people while the world says we have no case.”


The PM added that the Interpol asked India “why do you want to keep him under the Red-Corner Notice?” “The law minister referred (the issue) to the AG who gave the advice that it should be lifted,” he said.



வெளிநாட்டில் இருக்கும் கணவனை சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் செய்ய மருமகள்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். உங்களுக்கு உதவியாக செயல்படும் காவல்துறை நண்பர்களை கொஞ்சம் “கவனித்தால்” போதும் உடனடியாக அவர்கள் சி.பி.ஐ. அமைப்பை தொடர்புகொண்டு வேண்டிய காரியங்களை செய்வார்கள். பிறகு சி.பி.ஐ. சர்வதேச போலிஸை தொடர்பு கொண்டு உங்கள் கணவனை சர்வதேச அளவில் தேடப்படும் கொடிய குற்றவாளி என்று அறிவித்துவிடுவார்கள். பிறகு சர்வதேச அளவில் உங்களது கணவன் மிகப்பெரிய குற்றவாளியாகக் கருதப்படுவார். எப்போது எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும் உடனடியாக சட்டைக் காலரை பிடித்துக்கொள்வார்கள். அதைப் பற்றிய செய்தியைப் பாருங்கள்.


தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.


போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலுள்ள செய்தியில் கவனித்தீர்களா. ஏமாற்றி திருமணம் செய்தாலும் அதற்கும் வரதட்சணைக் கொடுமைக்குச் சமமான வழக்குப் பதிவு செய்யப்படும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் செய்தியில் உள்ள பெரும்பாலான “ரெட்கார்னர் நோட்டீஸ்கள்” திருமணம் செய்து ஏமாற்றிய கணவர்களின் மீது பதிவு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக திருமணம் செய்து வெளிநாடுகளுக்குச் சென்று பிறகு கணவன் தனக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் இந்தியாவிற்கு வந்து நமது கலாச்சார நடைமுறைப்படி வரதட்சணைக் கொடுமை என்று IPC498A, Dowry Prohibition Act போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் இந்திய மருமகள்களின் வேண்டுகோளின்படிதான் இந்த சர்வதேச குற்றவாளி என்ற முத்திரை கணவன்கள் மீது குத்தப்படுகிறது.

அதனால் இந்த ரகசியத்தை மருமகள்கள் தெரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கலாம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் கணவனை உங்கள் வழிக்குக் கொண்டுவர இதை விட அருமையான வேறு வழி இருக்குமா? அது அவ்வளவு எளிதானதா என்று யோசிக்காதீர்கள். நம்ம ஊரில் ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றங்கள் இருக்கின்றன.

The Hindu Wednesday, Apr 28, 2004

NEW DELHI, APRIL 27. The Supreme Court today quashed the bailable arrest warrants issued by a Ahmedabad Magistrate against the President, A.P.J. Abdul Kalam, the Chief Justice of India, V.N. Khare, and two others on January 15 holding that the complaint was "ex-facie fraud".



அதனால் மருமகள் சொற்படி நடக்காத கணவனை சர்வதேசக் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை கிடையாது. இந்தியாவில் மருமகள்கள் முயற்சி செய்தால் எதுவும் செய்யலாம்.

உங்களுக்கு ஒரு போனஸ் செய்தி. மேலுள்ள வழிமுறையில் ஒரு மருமகள் மாமியாருக்கு விமான நிலையத்தில் எப்படி வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள்.



ஜெய்ப்பூர் : மருமகளிடம் வரதட்சணை கேட்ட வழக்கில், கலிபோர்னியாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் நேற்று டில்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய பெண் ஆர்த்தி. இவரது மகன் சாணக்கியாவுக்கும், நேகா பாலிவால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது, நேகாவின் பெற்றோரிடம் ஆர்த்தி குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர். நேகாவின் பெற்றோரால் அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. அதனால், கலிபோர்னியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில நாட்களிலேயே நேகா சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். வரதட்சணை கொடுத்த பின்னரே நேகாவை ஏற்றுக் கொள்வோமென, ஆர்த்தி கூறிவிட்டார்.இதையடுத்து, தன் மாமியார் ஆர்த்தி மற்றும் கணவர் சாணக்கியா மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேகா புகார் அளித்தார். 2009 ஜனவரியில் இந்த புகாரை அளித்தார். இந்நிலையில், நேற்று கலிபோர்னியாவிலிருந்து டில்லி வந்திறங்கிய ஆர்த்தியை டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்து, விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா அமெரிக்காவில் நடந்த கொடுமைக்கு மருமகள் அமெரிக்க போலிஸிடம் எந்தப் புகாரும் தெரிவிக்காமல் இந்தியாவிற்கு வந்துதான் வரதட்சணைப் புகார் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் மருமகள்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.


இப்போதாவது உங்களுக்கு சி.பி.ஐ. , சர்வதேச போலிஸ், இந்திய அரசாங்கம் போன்றவற்றை உங்களின் வசதிக்கேற்றவாறு எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். இதுபோல கணவனை சர்வதேசக் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கும் வசதி வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. இந்தியாவில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு மருமகள்களுக்காக உருவாக்கப்பட்டு அரசாங்கமும், அதிகாரிகளும் மருமகள்களுக்காக வியர்வை சிந்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பை வீணாக்கிவிடாதீர்கள். அதனால் கணவன் மற்றும் மாமியார் குடும்பத்திற்கெதிராக வரதட்சணை சட்டங்களை பயன்படுத்தும்போது சி.பி.ஐ., InterPol போன்ற அமைப்புகள் இந்திய மருமகள்களுக்கு கொடுக்கும் சிறப்புச் சலுகைகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!


முதலிரவிற்கு வர மறுத்த கணவன்

வரதட்சணைக் கொடுமை எந்த விதத்திலெல்லாம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. கொடுமையைப் பற்றி சொல்வதற்குக்கூட கூச்சமாக இருக்கிறது.




ஓமலூர் : ஓமலூர் அருகே வரதட்சணை கொடுக்காததால், முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் உட்பட ஆறு பேர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் ஹேமலதா (27). அவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புநேசன் (29) என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.
அவர்களுடைய முதலிரவு நேற்று முன்தினம் இரவு நடப்பதாக இருந்தது. பல்வேறு ஆசைகளுடன் அறைக்குள் நுழைந்த ஹேமலதாவிடம் கணவர் அன்புநேசன், "வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை வேண்டும்; அதன் பின்னர் தான் முதலிரவு நடக்கும்' என்றார்.

அதை கேட்டு அதிர்ந்த ஹேமலதா, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் அன்புநேசனிடம் பேசினர். அன்புநேசனுக்கு ஆதரவாக அவருடைய தந்தை கண்ணன், தாய் காளியம்மாள், சகோதரி சாந்தி, மாமா கரியபெருமாள், உறவினர் சரோஜா ஆகியோர் ஒன்று சேர்ந்து, வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை கொடுத்தால் தான் முதலிரவு நடக்கும் என்று கூறி விட்டனர்.

இதையடுத்து, ஹேமலதா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் உட்பட ஆறு பேர் மீது புகார் செய்தார். எஸ்.ஐ., மல்லிகா விசாரித்து வருகிறார்.



செய்தித்தாளில் வந்துள்ள செய்தியில் ஒரு இளம் மருமகளின் முதலிரவை தடுத்து வரதட்சணை கொடுமை நடந்துள்ளது. பாவம் அந்த இளம் மருமகள். பல ஆண்டுகளாக முதலிரவைப்பற்றி பலவித கனவு கண்டு ஏக்கங்களோடு முதலிரவு அறைக்குள் நுழையும்போது கொடுத்த வரதட்சணை போதாது இன்னும் வேண்டும் அப்போதுதான் முதலிரவைப்பற்றிய உனது ஏக்கக் கனவுகளை தீர்த்துவைப்பேன் என்று கொஞ்சமும் கருணையில்லாமல் கணவன் கூறியிருக்கிறார். என்ன ஒரு கொடுமை!

கொடுமையான எண்ணமுடையன் கூட பெண்சுகம் என்று வரும்போது எல்லாவித கொடுமைகளையும் மறந்துவிடுவான். ஆனால் இந்தக் கணவன் முதலிரவன்றே தனது முதலிரவுக்கனவுகளைக்கூட மறந்து வரதட்சணைக்காக தனக்கு முதலிரவு நடக்காமல் போனால் கூட பரவாயில்லை என்று உணர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறாரே!

(சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கணவர் முதலிரவன்று டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு புதுமனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்:+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்)

இந்திய ஆண்களுக்கு “உணர்ச்சியே” இல்லாமல் எல்லாம் மறத்துப் போய் விட்டதா? பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா? பெண்கள் நலவாரியம் இதைப் பற்றி ஒரு சர்வே எடுத்து ஒரு புள்ளிவிபரம் கொடுத்தால் இந்திய மருமகள்களுக்கு இந்திய ஆண்களின் உணர்ச்சிகளைப் பற்றியும் அது தொடர்பாக நடக்கும் வரதட்சணைக் கொடுமை பற்றியும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்.

இதுபோன்று இனிவரும் காலங்களில் இளம் இந்திய மருமகள்களின் உணர்ச்சிகளை வரதட்சணையின் பெயரால் கணவன்கள் புண்படுத்தாமல் இருக்க இரண்டு வழிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தலாம்.

1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்.

1961ல் எழுதப்பட்ட இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.


THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

8-B. Dowry Prohibition Officers.-(1) The State Government may appoint as many Dowry Prohibition Officers as it thinks fit and specify the areas in respect of which they shall exercise their jurisdiction and powers under this Act.

(2) Every Dowry Prohibition Officer shall exercise and perform the following powers and functions, namely, -

(a) to see that the provisions of this Act are complied with;

(b) to prevent, as far as possible, the taking or abetting the taking of, of the demanding of, dowry;

(c) to collect such evidence as may be necessary for the prosecution of persons committing offences under the Act; and

(d) to perform such additional functions as may be assigned to him by the State Government, or as may be specified in the rules made under this Act.




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
Dated: 22/02/2005
Coram The Honourable Mr.Justice M.CHOCKALINGAM

Tamil Nadu Dowry Prohibition Rules, 2004 defines dowry prohibition officer as the police officer as Deputy Superintendent of Police of the Division concerned. It has been clearly mentioned in 5(xviii) of the said rules that the marriages performed within his jurisdiction are likely to be visited by him or his staff along with the police officers . Therefore, for this action, the visit becomes necessary.



இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி திருமணம் நடக்கும் பகுதிகளில் சமூக நல அலுவலரும், காவல்துறை அதிகாரியும் திருமணங்களில் திடீரென்று ஆய்வு செய்து சட்டவிரோதமாக வரதட்சணை பரிமாற்றம் நடக்கிறதா என்று ஆய்வு செய்து வரதட்சணையற்ற திருமணங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் மேலே செய்தியில் சொல்லப்பட்டுள்ளது போல “திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.” என்ற செய்தி வந்திருக்காது அல்லவா? புதுமண மருமகளும் முதலிரவில் ஏமாற்றமடைந்திருக்கமாட்டார் அல்லவா?

இந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை 1961 முதல் இன்றுவரை இந்த அலுவலர்கள் யாரும் இதுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அதனால்தான் இதுபோன்ற பல இளம் இந்திய மருமகள்களின் “முதலிரவு ஏக்கக்கனவுகள்” வரதட்சணையின் பெயரால் சிதைக்கப்படுகிறது.


அதனால் இந்த “வயக்ரா” சட்டத்தையாவது காவல்துறையும், சமூகநலத்துறையும் கண்டிப்பாக விழிப்புணர்ச்சியுடன் இருந்து ஒவ்வொரு திருமணத்திலும் செயல்படுத்தவேண்டும் என்று கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தால் இளம் மருமகள்களின் முதலிரவு ஏக்கக்கனவுகள் சிதையாமல் இருக்குமல்லவா?

2. இரண்டாவது வழிமுறை என்னவென்றால் செய்தித்தாள்களில் நாம் அவ்வப்போது படிக்கும் செய்திகளில் சில ஊர்களில் இரு பிரிவினரின் வேற்றுமையால் பாதியில் நின்ற தேரோட்டத் திருவிழாவை போலிஸார் வடம்பிடித்து இழுத்து தேரை நிலைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதுபோல வரதட்சணைப் பிரச்சனையால் பாதியில் நின்றுபோகும் முதலிரவு வைபவங்களையும் போலிஸார் உதவியோடு முடித்துவைக்கலாம். அதாவது காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முதலிரவு முடியும்வரை பாதுகாப்புக் கொடுத்து இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி முதலிரவை முழுமையாக முடித்துவைக்க உதவி செய்யலாம். இதையும் கடுமையான சட்டமாக இயற்றவேண்டும்.

தேசிய மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் இந்த இரண்டு வழிமுறைகளையும் புதிய சட்டமாக இயற்ற அரசிற்கு பரிந்துரை செய்தால் வருங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகி முதலிரவு கனவுகளோடு காத்திருக்கும் மருமகள்களின் வாழ்க்கை எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் நல்லமுறையில் அமையும்.

உங்களுக்கு இந்த புதிய சட்டங்ளைப் பற்றிய கருத்துக்கள் பிடித்திருந்தால் தேசிய மகளிர் வாரியத்திற்கும், பெண்கள் நல அமைச்சகத்திற்கும் உங்களது பரிந்துரைகளை எழுதி அனுப்புங்கள். இந்திய மருமகள்களின் நலனை காப்பாற்றுங்கள்.

===================

முந்தைய பதிவிற்கு வந்த விவாத கருத்திற்கு விளக்கம்


முந்தைய பதிவில் ஒரு வாசகர் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை மருமகள்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தினால் நீதிமன்றம் கேள்வி கேட்கும், மனைவி மீது கணவர் வழக்குத் தொடருவார் என்று எழுதியிருந்தார். அதற்கு தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உதாரணம் காட்டியிருந்தார். அவர் கொடுத்த தகவலின் ஒரு பகுதி:


“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.”


அந்த விவாதக் கருத்துக்களை “Comments” பகுதியில் படித்துப்பாருங்கள்:
விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

இந்த வாசகர் சொல்வது போல அவ்வப்போது செய்தித்தாள்களில் நீதிமன்றம் இப்படி சொல்லியிருக்கிறது, அப்படி சொல்லியிருக்கிறது என்று வரும் செய்திகளைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் அஞ்சத்தேவையில்லை.

இதுபோல அவ்வப்போது செய்தித்தாள்களுக்கு செய்தி தரும் விதமாக நீதிமன்றங்கள் செய்தி சொல்வது பல காலமாக நடந்துவரும் ஒரு சாதாரண சம்பவம். அவ்வளவுதான்.

மேலுள்ள செய்தியில் வாசகர் சொன்னதுபோல தில்லி உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு தீர்ப்பு சொன்னது. ஆனால் அதற்கு முன்பாகவே 2005ல் இந்திய உச்ச நீதிமன்றம் “சட்ட தீவிரவாதம்” என்றுகூட மருமகள்களுக்கு எதிராக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 2008ல் சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்தி மட்டுமே. அதனால் மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த கொஞ்சமும் தயங்கவேண்டாம்.


மேலுள்ள செய்தியில் கூட மருமகளின் பெற்றோர் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தோம் என்று பகிரங்கமாக செய்தித்தாளில் வரும் அளவிற்கு தாங்கள் வரதட்சணை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக காவல்துறை என்ன அவர்கள் மீது வழக்கா பதிவு செய்திருக்கிறார்கள்? வரதட்சணை கேட்டார்கள் என்று மருமகள் சொன்னதும் கணவன் உட்பட கணவன் வீட்டார் ஆறு பேர் மீதும் “முதலிரவிற்கு மருமகளுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை” என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை மருமகளின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுத்ததற்காக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதை நன்றாக கவனித்தீர்களா?

அதனால் நீதிமன்றங்கள் அவ்வப்போது சொல்லும் தீர்ப்புகள் எல்லாம் சும்மா அழுகின்ற கணவன்களின் வாயில் சப்பக்கொடுக்கும் “லாலிபாப்” மிட்டாய் போன்றது.


இன்னும் சொல்லப்போனால் இந்த சட்டங்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் மருமகளை தண்டிக்க வழிசெய்யும் எந்த சட்டங்களும் இந்தியாவில் சுத்தமாக கிடையவே கிடையாது.

வரதட்சணைக் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று சொல்லும் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3 வது பிரிவை பயன்படுத்தி எந்தக் காவல்துறை அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ இந்திய மருமகளுக்கெதிராகவோ அல்லது வரதட்சணைக்கொடுத்த அவரது பெற்றோருக்கெதிராகவோ
இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்ததில்லை, தண்டனையும் கொடுத்ததில்லை.


THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:


இப்படி சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சட்டத்தையே செயல்படுத்தாத காவல்துறையும், நீதிமன்றங்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மருமகளை தண்டிக்கவேண்டும் என்று எந்த சட்டப் புத்தகத்திலும் சொல்லப்படாத, இல்லாத சட்டத்தையா செயல்படுத்திவிடுவார்கள்? அதனால் இந்திய மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் துணிந்து செயல்படலாம்.

இந்த செய்திகளிலிருந்து மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை நீங்கள் வரதட்சணை தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் வேறுவிதமான உங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இதைவிட அரசாங்கம்
வேறு எப்படி உங்களுக்கு வெளிப்படையாக சொல்லித்தரமுடியும்?

மருமகள்களை பாதுகாக்கும் சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) எப்படி புத்திசாலித்தனமாக கணவனின் குடும்பத்திற்கெதிராக பயன்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துகொண்டால் மருமகள்கள் எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் இருந்தாலும் தங்களது வெற்றிக்கொடியை பட்டொளி வீசி பறக்கவிடலாம்.


வாழ்த்துக்கள்!




விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

இன்று வெளிவந்துள்ள செய்தியில் இந்திய இந்துமத மருமகள்களுக்கு ஒரு நற்செய்தியை இந்திய அரசாங்கம் தந்திருக்கிறது. திருமணம் என்ற அடிமைத்தளையிலிருந்து எளிய முறையில் விடுதலை பெற இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல மருமகள்கள் திருமண பந்தத்திலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ஆனால் இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சட்ட திருத்தம் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகள்களுக்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கும்.


தில்லி,​​ ஜூன் 10: ​ விவா​க​ரத்து பெறு​வ​தற்​காக நடை​மு​றை​கள் எளி​தாக்​கப்​ப​ட​வுள்​ளன.​ எனவே,​​ இனி அதிக நாள்​கள் காத்​தி​ரா​மல் விரை​வில் விவா​க​ரத்து பெற​மு​டி​யும்.​இ​தற்​கான சட்​டத் திருத்​தத்​துக்கு மத்​திய அமைச்​ச​ரவை வியா​ழக்​கி​ழமை அனு​மதி வழங்​கி​யது.​இ ​தன்​படி,​​ இந்து திரு​ம​ணச் சட்​டம் 1955 மற்​றும் சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டம் 1954 ஆகி​ய​வற்​றில் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கின்​றன.​

இனி சேர்ந்து வாழவே முடி​யாது என்ற கட்​டத்​தி​லும்,​​ ஜோடி​யில் ஒரு​வர் காணா​மல் போய்​வி​டு​வது,​​ கொடு​மைப்​ப​டுத்​து​வது ஆகிய பிரச்​னை​களை மைய​மா​கக் கொண்டு ஜோடி​யில் ஒரு​வர் மட்​டும் விவா​க​ரத்து கோரும் போது,​​ இனி எளி​தா​க​வும்,​​ விரை​வா​க​வும் விவா​க​ரத்து கிடைக்​கும்.​

தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை பிர​த​மர் மன்​மோ​கன் சிங் தலை​மை​யில் மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ இதன் பின்,​​ செய்​தி​யா​ளர்​க​ளைச் சந்​தித்த மத்​திய தக​வல் மற்​றும் ஒலி​ப​ரப்​புத் துறை அமைச்​சர் அம்​பிகா சோனி கூறி​யது:​கொ​டு​மைப்​ப​டுத்​தப்​ப​டு ​வது அடிப்​ப​டை​யில் விவா​க​ரத்​துக் கேட்​ப​வர்​கள்,​​ ஒரு​வர் விவா​க​ரத்து கோரி மற்​றொ​ரு​வர் விவ​கா​ரத்து வேண்​டாம் என்ற நினைத்து வழக்​கைத் தாம​தப்​ப​டுத்​து​வது போன்ற பிரச்​னை​களை தீர்க்​கும் வகை​யில் சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

சட்​டக் குழு மற்​றும் உச்ச நீதி​மன்​றம் பரிந்​து​ரைத்​த​தன் அடிப்​ப​டை​யில் இந்த திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.​ பாலின பேதம்,​​ கொடூ​ர​மாக நடந்து கொள்​வது,​​ வேறு மதத்​துக்கு மாறு​வது,​​ சரா​சரி மனி​த​ராக செயல்​ப​டா​த​தது,​​ குணப்​ப​டுத்த முடி​யாத தொழு​நோய்,​​ பால்​வினை நோய் போன்​றவை விவா​க​ரத்து பெற புதிய கார​ணங்​க​ளாக சேர்ந்​துக் கொள்​ளப்​பட்​டுள்​ளன.​தம்​ப​தி​யர் இரு​வ​ரும் ஒரு​மித்து விவா​க​ரத்து பெறும் இந்து திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 13-பி,​​ சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 28 ஆகி​ய​வற்​றி​லும் சிறு திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

வி​வா​க​ரத்து கோரி தம்​பதி இரு​வ​ரும் ஒரு மன​தாக மனு செய்​யும் போது,​​ அந்த மனு 6 மாதத்​துக்​குள் திரும்​பப் பெறப்​ப​டா​விட்​டால் நீதி​மன்​றம் விரை​வில் விசா​ரித்து விகா​ரத்து வழங்​கும்.​ அதி​க​பட்​சம் 18 மாதங்​க​ளுக்​குள் அவர்​க​ளுக்கு விவா​க​ரத்து வழங்​கப்​பட்டு விடும்.​ இ​ரு​வ​ருமே விவா​க​ரத்து கோரும்​போது அவர்​கள் விரை​வில் பிரச்​னை​யைத் தீர்த்​துக் கொள்​ள​வும்,​​ கொடு​மைக்கு உள்​ளா​கும் பெண்​க​ளின் நலனை கருத்​தில் கொண்​டும் இந்த சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கி​றது என்​றார் அம்​பிகா சோனி.​இந்த சட்​டத் திருத்​தத்​துக்கு நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளும் ஒப்​பு​தல் பெற வேண்​டும்.​ அதன் பின்​னரே நடை​மு​றைக்கு வரும்.


இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.

என்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.

வேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.

விவாகரத்திற்கு தயாராகும் மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

மனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.

விவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.

வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.

“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.

வாழ்த்துக்கள்!




வெளிநாட்டுவாழ் மருமகள்களுக்கு இந்திய அரசின் பண மழை!

வெளிநாடுகளில் வாழும் இந்திய மருமகள்கள் பலரும் தங்களின் கணவனாலும் இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தாலும் பலவித துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற மருமகள்களுக்கு உதவி செய்வதற்காக இந்திய அரசாங்கம் வருடந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்து இந்திய தூதரகங்களுக்கு அனுப்பிவருகிறது. இந்த விஷயம் பல ஆண்டுகளாக பல மருமகள்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

உங்கள் கணவன் ஏதாவது தொந்தரவு செய்தாலோ அல்லது உங்கள் சொல்லிற்கு கீழ்படிந்து நடக்காமல் இருந்தாலோ உடனடியாக நீங்கள் அருகிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


=======================================================

புதுடில்லி:
இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் கணவர்களால் கொடுமைக்கு ஆளாகும் அவர்களின் மனைவிகள் நிராதரவாய் கைவிடப்படுகின்றனர்.சமீபகாலமாக, இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக, அப்பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு முதல் அனைத்து உதவிகளையும் செய்வதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சகம், சில திட்டங்களை அறிவித்துள்ளது.

இத்திட்டங்களை, வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் செயல்படுத்தும். கடந்த 2008-09ல் பெண்களுக்கான சட்டரீதியான செலவுகளுக்காக, ஒரு தூதரகத்துக்கு இரண்டு லட்ச ரூபாயும், 2009-10ல் 15 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டன. ஆனால் பல தூதரங்கள் இந்த பணத்தை பயன்படுத்தவே இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தான், இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்கின்றனர். வரதட்சணை கொடுமைக்கு ஆளாகின்றனர்; கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

இவை அனைத்தையும் சீர்தூக்கி பார்த்த பார்லிமென்ட் குழு, சட்ட உதவிகளுக்கான நிதி உதவியை அதிகரித்தல், மத்திய அமைச்சகத்தின் உதவிகள் பற்றிய விளம்பரங்கள் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தூதரகங்கள் இந்த உதவியை பயன்படுத்தி கொள்வதிலுள்ள சட்டரீதியான சிக்கல்களை நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளும்படி, மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
=====================================================


நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாலு காசு சம்பாதிக்கவும் முடியும். அது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்காமல் தொடர்ந்து படியுங்கள்.

வெளிநாட்டில் நன்கு சம்பாதித்து உங்கள் கணவன் சேமித்துவைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துக்களில் 50% பங்கை பெற்று உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய மிகவும் அருமையான வாய்ப்பு. நீங்கள் இருக்கும் நாட்டிலேயே விவாகரத்து வழக்கைத் தொடர்ந்து கணவனின் சொத்தில் சரிபாதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

விவாகரத்து தொடர்பான நீதிமன்ற செலவிற்கு தேவையான பணத்தை இந்திய தூதரகம் உங்களுக்குக் கொடுத்து உதவும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு சிறு வேலைதான்.

இந்தியாவில் இருக்கும் உங்கள் பெற்றோரிடம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீதும் இந்தியாவில் இருக்கும் அவன் குடும்பத்தின் மீதும் வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ய சொல்லிவிட்டு நீங்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கணவன் உங்களை கொடுமை செய்வதாகவும் அதனால் விவாகரத்து செய்வதற்கு நிதியுதவி வேண்டும் என்று ஒரு மனுக்கொடுத்தால் போதும். நீங்கள் இருக்கின்ற நாட்டிலேயே உங்களுக்கு விவாகரத்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இருக்கும் வரதட்சணை வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு கணவனின் குடும்பத்திடமும் உங்கள் பெற்றோர் பணம் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு வகையில் வருமானம்!

இது போன்ற பல அரிய வாய்ப்புகள் வெளிநாட்டு வாழ் மருமகள்களுக்கு இருக்கின்றது. தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்ற அரசாங்க நிதியுதவி விஷயங்கள் தெரியாமல் ஒரு தென்னிந்திய இளம் நடிகை கணவனின் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி கையில் காசில்லாமல் அமெரிக்காவில் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரது தந்தை மிகவும் வேதனையடைந்து இந்தியாவில் வரதட்சணைப் புகார் கொடுத்து மகளின் நிலையை எண்ணி எப்படி வருத்தப்பட்டிருக்கிறார் பாருங்கள்!


The marriage of the petitioner's son and one Gayatri, daughter of the de-facto complainant took place on 08.12.2006.The marriage was not a happy one and several differences arose between the married couple. The de-facto complainant has preferred the complaint against the petitioner herein, his wife and son, the son having married the complainant's daughter Gayatri. The complaint reads as follows :-

'I am S.Raghuram, residing at 79, 3rd Street, Kamdar Nagar, Nungambakkam, Chennai 34,

My second daughter R.Gayathri, aged 23 years had an arranged marriage with Mr. Deepak Chandra Sekar, Son of B.V.Chandra Sekar on the 8th of December 2006. The marriage was celebrated with great pomp at Mayor Ramanathan Chettiar Centre Valliammal Hall, MRC Nagar, Santhome High Road, Madras-28. The marriage was attended by a number of well-known film personalities, politicians etc., as I am a reputed dance director in the film field.

In May 2007 Mrs. Savithri Chandrasekar the mother of Deepak Chandrasekar went to USA to visit her son and stayed in his house. As she has got a taste of the wealth of our family. She wanted to extract a huge sum from us and started harassing and intimidating my daughter. She wanted to get Rs.1,50,00,000/- to cover the expenses of her daughter and son-in-law who are going to migrate to the U.S.A. She demanded the money from my daughter and asked her to get it from me immediately. She prevailed on my son-in-law also and he also started abusing harassing and ill-treating her. My daughter tells me that the situation became so bad that she was injured when her husband beat her up. She had to take medical treatment for the injury.

My daughter is on dependent visa and her husband is at present having only work permit (H1 Visa). My daughter has no money of her own and the intention of the Chandrasekar is to prevent her from seeking adequate legal aid to defend her self in the U.S.A court.

The complaint dated 02.07.2007 which was forwarded to the Commissioner of police has been registered in Cr. No. 8/07 on the file of the first respondent police on 25.08.2007 and for offences under sections 498(A) and 506(i)IPC and 4 of Dowry Prohibition Act. On receipt of the complaint the respondent police had filed charge sheet against the three accused for offences u/s.406 and 498A IPC. The lower court has taken cognizance for offences u/s. 498A, 406 and 506(i) IPC and issued summons to the accused.

(முழு சோகக் கதையையும் இங்கே சென்று பாருங்கள் -->
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 12.03.2010, Crl.O.P. No. 5887 of 2009)







இப்படித் துள்ளித்திரிந்து சந்தோஷமாக இருந்த இளம் பெண் திருமணம் என்ற அடிமை சாசனத்தின் மூலம் மருமகள் என்ற அடிமையாகி வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகி கையில் காசில்லாமல் அமெரிக்காவில் எப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறார்! நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண மருமகள்களின் நிலை வெளிநாடுகளில் எவ்வளவு மோசமாக இருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.

அதனால் வெளிநாடுவாழ் மருமகள்கள் போதிய சட்ட அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். வெளிநாட்டில் இருப்பதால் தட்டிக்கேட்க ஆளில்லை என்று கணவன் கொஞ்சம் அதிகமாக வாலாட்டினால் வீட்டில் இருந்தபடியே நீங்கள் இந்தியாவில் இருக்கும் தேசிய பெண்கள் நல வாரியத்தில் கம்ப்யூட்டர் மூலம் மின்னணுப் புகார் கொடுக்கலாம்.

கீழுள்ள இணைப்பிற்குச் சென்று கணவனைப் பற்றி புகார் கொடுத்தால் கணவன் எந்த நாட்டில் இருந்தாலும் இந்தியாவிற்கு கைதி போல காலரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.
Register Your Complaint online

இந்தச் செய்தியை உங்கள் கணவனிடம் காட்டிவிட்டுப் பிறகு பாருங்கள். உங்கள் கணவனின் கதை “வெளியில புலி,வீட்டில எலி” என்று மாறிவிடும்!

அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் கணவனை அடக்கி ஆளுங்கள்.

வாழ்த்துக்கள்!


வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்

வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகும் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக IPC498A, Dowry Prohibition Act பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டிய ஆதாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.

இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Reporting Dowry Harassment
What should your complaint include?
  • Details of marriage including wedding card, marriage certificate, photos, videos etc.
இப்போதே உங்களின் திருமண அழைப்பிதழை தேடி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். போட்டோ மற்றும் வீடியோவை தனியாக ஒரு DVD காப்பி செய்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எப்போது எந்த விசேஷம் நடந்தாலும் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்வது போல ஒரு தட்டில் பூ பழங்கள் வைத்து கொடுப்பதுபோல ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது அந்தத் தட்டில்தான் பணம் வைத்துக்கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். முடிந்தால் அந்தத்தட்டில் பணம் இருப்பது போல ஒரு செட்டப் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பானது. நீங்கள் கொடுப்பதை விட உங்களது பெற்றோர் கொடுப்பதுபோல புகைப்படம் எடுத்துக்கொள்வது மிக மிக சிறப்பானது. அந்தப் புகைப்படத்தை யார் பார்த்தாலும் வரதட்சணை பரிவர்த்தனை நடந்ததாக நம்பிவிடுவார்கள்.
  • Name(s) of accused persons and their details like addresses and passports etc.

யார் மீதெல்லாம் புகார் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றிய விவரங்களை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!
  • Details of harassment like duration, time period, place and type of harassment.
கணவனுக்குத் தெரியாமல் தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை தேதி, நேரம், இடம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக வெளி ஊர்களில் இருந்து நாத்தனார் உங்கள் கணவனுடனோ அல்லது உங்களுடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவரங்களை தவறாமல் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
  • Details of demand of dowry, if any
  • Bank statement, if you have drawn dowry from the bank
  • Details of the cheque if you have paid the dowry in that form
பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது பெற்றோர் வங்கியிலிருந்து தங்களது சொந்த செலவிற்கு பணம் எடுத்திருந்தாலும் அந்த விஷயங்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது வரதட்சணை கொடுப்பதற்காகத்தான் அந்தப் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக புகாரில் கணக்குக் காட்டிவிடலாம்.

  • Details of the person to whom it was handed over.
கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்.
  • In case of physical violence, details of injuries and type of weapon.
  • Doctor’s prescription or case sheets of the treatment of such injuries.
எப்போதாவது அரிதாக வீட்டு வேலை செய்யும்போது (?) சிறு காயம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான ஆதாரத்தை பத்திரமாக ஒரு ஃபைலில் அழகாக தேதிவாரியாக அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள். புகார் கொடுக்கும்போது கணவனும் அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக்காக அடித்துக் கொடுமை செய்யும்போது ஏற்பட்ட காயம் என்று புகாரில் சேர்த்துவிடலாம்.
  • Details of the elders who had arranged the marriage and who tried to patch up the differences.
  • Places where the mediation/counselling sessions were held
கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு வந்த பெரிசுகளின் பெயர்களை விலாசத்துடன் முழுவிவரத்தோடு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வயதான கிழவன்களை உங்கள் பக்கம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கிழங்கள்தான் ஜொல்லுவிட்டுக்கொண்டு மருமகள் சொல்வதெல்லாம் நியாயம் என்று எங்கு வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு சத்தியம் செய்யத் தவம் கிடக்கும்.
  • Details of witnesses, especially independent witnesses and your own children.
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆண் கிழடுகளை சரிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போதும் வழக்கு நடக்கும்போதும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ உங்கள் சார்பாக வாக்குமூலம் கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ உதவியாக இருக்கும். உங்களுக்கு குழந்தை இருந்தால் இப்போதே கணவனுக்கெதிராக பேசுவதற்கு தயார்படுத்தி வைத்து விடுங்கள். தேவையான சமயத்திற்கு உதவும்.
  • Any written agreements during marriage.
  • Details of gifts in the form of movable property like jewels/cash/garments/vehicles and immovable property like plots/flats.
  • Any written/voice communication between the partners, the victim and the parents in the form of letters, emails, voice records etc.
கணவன் தரப்பிலிருந்து யார் எப்போது பேசினாலும் அவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள். வரதட்சணை தொடர்பான பேச்சை நீங்களே ஆரம்பித்து அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிடுங்கள். அதே போல கடிதத்தில் ஏதாவது பணம், நகை போன்ற சொற்கள் எங்காவது இருந்தால் அந்தக் கடிதங்களை தனியாக ஒரு ஃபைலில் சேகரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • Reasons for the delay in lodging the complaint, if any.
  • Signature of the victim and contact number.

ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த புதிய வழிமுறைகள் இருந்தாலும் எனக்கு அனுப்பிவையுங்கள். மற்ற மருமகள்களும் பயனடையட்டும்.

வாழ்த்துக்கள்!


மருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை

கணவனால் ஏற்படும் இடைஞ்சல்களை எதிர்கொள்ள இந்திய மருமகள்களுக்கு தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதற்காக புதிய இளைஞர் பாதுகாப்புப் படை இந்தியாவில் உருவாகியிருக்கிறது. கணவனை சமாளிக்கமுடியாமல் தவிக்கும் மருமகள்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை சமாளிக்க இதுதான் சரியான வழி. வரதட்சணை கொடுமை செய்யப்படுவதாக மருமகள்கள் கருதினால் (எவையெல்லாம் மருமகள்களுக்கு வரதட்சணைக் கொடுமை என்று முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்) உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் IPC498a, Dowry Prohibition Act, மற்றும் Protection for Women Against Domestic Violence Act (DV Act) சட்டப்பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்துவிடுங்கள். மறக்காமல் மாமியார், நாத்தனார் பெயர்களை சேர்த்துவிடுங்கள். இவர்கள்தான் எல்லா குடும்பங்களிலும் மருமகளை எப்படிக் கொடுமை செய்வது என்று கணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் மூளையாக செயல்படுபவர்கள். அதனால் புகாரில் கணவன் பெயரை சேர்க்க மறந்தாலும் இந்த மாமியார், மாமனார், நாத்தனார் பெயர்களை சேர்க்க மறந்துவிடாதீர்கள். பிறகு அவர்கள் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படநேரிடும்.

இப்படி மருமகள்கள் புகார் கொடுத்தபிறகும் சில கணவன்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி மருமகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கலாம். என்ன செய்வது இந்தியாவில் மருமகள்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் நாம் நாடளும் உரிமையில் 33% வேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டிய கீழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதனால் மருமகள்கள் தங்களின் பாதுகாப்பை தாங்களேதான் பொறுப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும். அதற்கு இதுபோன்ற தனியார் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும் தவறில்லை.



Wild Hot Men Indian based website provide service to all females. Wild Hot Men listing of India's Male Escort Agencies and Independent India's Male Escorts in India. We have a listing of Delhi ( Ncr), mumbai, Bangolre, hydrabad,chennai, pune , nagpur, jaipur, calcutta, lucknow, chandigarh, bhopal , kearal, gujrat, orrisa and all over from india male escorts to suit your every desire. We firmly believe in providing the real thing.

Wild Hot Men Agency is always looking to recruit high class male escorts who like to travel and also love india's social scene.


இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவை எப்படி சமாளிப்பது என்று இப்போது மருமகள்களுக்கு ஒரு லேசான யோசனை இருக்கும். கவலையே படாதீர்கள். அதற்குத்தான் கணவன் இருக்கிறான். வரதட்சணைப் புகாரை காவல்நிலையத்தில் கொடுத்த கையோடு உங்கள் ஊரிலுள்ள நீதிமன்றத்தில் பராமரிப்புச் செலவிற்கு கணவனிடமிருந்து பணம் வேண்டும் என்று ஒரு மனுவை போடுங்கள். அந்த மனு எழுதுவதற்கான சட்டப்பிரிவு CrPC125. இந்த சட்டப்பிரிவைப் பற்றி தெரிந்துகொள்ள முந்தைய பதிவை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.


நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு நடந்து எப்போது பணம் கிடைக்குமோ என்று சில மருமகள்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கும். மருமகள்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இந்த CrPC125 என்பது சாதாரணமாக விவாகரத்து வழக்குகளின்போது கொடுக்கப்படும் ஜீவனாம்ச வழக்கல்ல. இது கிரிமினல் சட்டப் பிரிவின் கீழ் வரும் வழக்காகும். அதனால் இந்த மனுவை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்தவுடன் மருமகளின் மாதாந்திர பராமரிப்பு செலவிற்கு கணவன் பணம் கொடுக்கவேண்டும் என்று உடனடியாக உத்தரவு போட்டுவிடுவார்கள். பணம் கொடுக்கவில்லையென்றால் கணவனுக்கு சிறைவாசம்தான். அதனால் உங்களின் செலவிற்காக இந்தப் பணம் உங்களின் வீடுதேடி மாதந்தோறும் தானாக நடந்துவந்து கதவைத் தட்டும்.


மற்றொரு முக்கியாமான விஷயம் என்னவென்றால் இந்தப் பராமரிப்புத் தொகையைப் பெற மருமகள் கணவனுடன்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மருமகள் தங்களின் வசதிக்கேற்ப எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களின் பராமரிப்புச் செலவை கணவன் கொடுத்தாகவேண்டும் என்பதுதான் இந்திய சட்டம். இந்திய மருமகள்கள் செய்த புண்ணியத்தின் பலன்தான் CrPC125!


இப்போது உங்களின் பாதுகாப்பு பராமரிப்பு செலவை எப்படி சரிகட்டுவது என்று தெரிந்துகொண்டீர்களல்லவா? உடனே வேலையை ஆரம்பியுங்கள். உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!