"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

இன்று வெளிவந்துள்ள செய்தியில் இந்திய இந்துமத மருமகள்களுக்கு ஒரு நற்செய்தியை இந்திய அரசாங்கம் தந்திருக்கிறது. திருமணம் என்ற அடிமைத்தளையிலிருந்து எளிய முறையில் விடுதலை பெற இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல மருமகள்கள் திருமண பந்தத்திலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ஆனால் இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சட்ட திருத்தம் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகள்களுக்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கும்.


தில்லி,​​ ஜூன் 10: ​ விவா​க​ரத்து பெறு​வ​தற்​காக நடை​மு​றை​கள் எளி​தாக்​கப்​ப​ட​வுள்​ளன.​ எனவே,​​ இனி அதிக நாள்​கள் காத்​தி​ரா​மல் விரை​வில் விவா​க​ரத்து பெற​மு​டி​யும்.​இ​தற்​கான சட்​டத் திருத்​தத்​துக்கு மத்​திய அமைச்​ச​ரவை வியா​ழக்​கி​ழமை அனு​மதி வழங்​கி​யது.​இ ​தன்​படி,​​ இந்து திரு​ம​ணச் சட்​டம் 1955 மற்​றும் சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டம் 1954 ஆகி​ய​வற்​றில் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கின்​றன.​

இனி சேர்ந்து வாழவே முடி​யாது என்ற கட்​டத்​தி​லும்,​​ ஜோடி​யில் ஒரு​வர் காணா​மல் போய்​வி​டு​வது,​​ கொடு​மைப்​ப​டுத்​து​வது ஆகிய பிரச்​னை​களை மைய​மா​கக் கொண்டு ஜோடி​யில் ஒரு​வர் மட்​டும் விவா​க​ரத்து கோரும் போது,​​ இனி எளி​தா​க​வும்,​​ விரை​வா​க​வும் விவா​க​ரத்து கிடைக்​கும்.​

தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை பிர​த​மர் மன்​மோ​கன் சிங் தலை​மை​யில் மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ இதன் பின்,​​ செய்​தி​யா​ளர்​க​ளைச் சந்​தித்த மத்​திய தக​வல் மற்​றும் ஒலி​ப​ரப்​புத் துறை அமைச்​சர் அம்​பிகா சோனி கூறி​யது:​கொ​டு​மைப்​ப​டுத்​தப்​ப​டு ​வது அடிப்​ப​டை​யில் விவா​க​ரத்​துக் கேட்​ப​வர்​கள்,​​ ஒரு​வர் விவா​க​ரத்து கோரி மற்​றொ​ரு​வர் விவ​கா​ரத்து வேண்​டாம் என்ற நினைத்து வழக்​கைத் தாம​தப்​ப​டுத்​து​வது போன்ற பிரச்​னை​களை தீர்க்​கும் வகை​யில் சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

சட்​டக் குழு மற்​றும் உச்ச நீதி​மன்​றம் பரிந்​து​ரைத்​த​தன் அடிப்​ப​டை​யில் இந்த திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.​ பாலின பேதம்,​​ கொடூ​ர​மாக நடந்து கொள்​வது,​​ வேறு மதத்​துக்கு மாறு​வது,​​ சரா​சரி மனி​த​ராக செயல்​ப​டா​த​தது,​​ குணப்​ப​டுத்த முடி​யாத தொழு​நோய்,​​ பால்​வினை நோய் போன்​றவை விவா​க​ரத்து பெற புதிய கார​ணங்​க​ளாக சேர்ந்​துக் கொள்​ளப்​பட்​டுள்​ளன.​தம்​ப​தி​யர் இரு​வ​ரும் ஒரு​மித்து விவா​க​ரத்து பெறும் இந்து திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 13-பி,​​ சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 28 ஆகி​ய​வற்​றி​லும் சிறு திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

வி​வா​க​ரத்து கோரி தம்​பதி இரு​வ​ரும் ஒரு மன​தாக மனு செய்​யும் போது,​​ அந்த மனு 6 மாதத்​துக்​குள் திரும்​பப் பெறப்​ப​டா​விட்​டால் நீதி​மன்​றம் விரை​வில் விசா​ரித்து விகா​ரத்து வழங்​கும்.​ அதி​க​பட்​சம் 18 மாதங்​க​ளுக்​குள் அவர்​க​ளுக்கு விவா​க​ரத்து வழங்​கப்​பட்டு விடும்.​ இ​ரு​வ​ருமே விவா​க​ரத்து கோரும்​போது அவர்​கள் விரை​வில் பிரச்​னை​யைத் தீர்த்​துக் கொள்​ள​வும்,​​ கொடு​மைக்கு உள்​ளா​கும் பெண்​க​ளின் நலனை கருத்​தில் கொண்​டும் இந்த சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கி​றது என்​றார் அம்​பிகா சோனி.​இந்த சட்​டத் திருத்​தத்​துக்கு நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளும் ஒப்​பு​தல் பெற வேண்​டும்.​ அதன் பின்​னரே நடை​மு​றைக்கு வரும்.


இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.

என்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.

வேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.

விவாகரத்திற்கு தயாராகும் மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

மனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.

விவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.

வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.

“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.

வாழ்த்துக்கள்!




வெளிநாட்டுவாழ் மருமகள்களுக்கு இந்திய அரசின் பண மழை!

வெளிநாடுகளில் வாழும் இந்திய மருமகள்கள் பலரும் தங்களின் கணவனாலும் இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தாலும் பலவித துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற மருமகள்களுக்கு உதவி செய்வதற்காக இந்திய அரசாங்கம் வருடந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்து இந்திய தூதரகங்களுக்கு அனுப்பிவருகிறது. இந்த விஷயம் பல ஆண்டுகளாக பல மருமகள்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

உங்கள் கணவன் ஏதாவது தொந்தரவு செய்தாலோ அல்லது உங்கள் சொல்லிற்கு கீழ்படிந்து நடக்காமல் இருந்தாலோ உடனடியாக நீங்கள் அருகிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


=======================================================

புதுடில்லி:
இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் கணவர்களால் கொடுமைக்கு ஆளாகும் அவர்களின் மனைவிகள் நிராதரவாய் கைவிடப்படுகின்றனர்.சமீபகாலமாக, இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக, அப்பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு முதல் அனைத்து உதவிகளையும் செய்வதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சகம், சில திட்டங்களை அறிவித்துள்ளது.

இத்திட்டங்களை, வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் செயல்படுத்தும். கடந்த 2008-09ல் பெண்களுக்கான சட்டரீதியான செலவுகளுக்காக, ஒரு தூதரகத்துக்கு இரண்டு லட்ச ரூபாயும், 2009-10ல் 15 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டன. ஆனால் பல தூதரங்கள் இந்த பணத்தை பயன்படுத்தவே இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தான், இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்கின்றனர். வரதட்சணை கொடுமைக்கு ஆளாகின்றனர்; கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

இவை அனைத்தையும் சீர்தூக்கி பார்த்த பார்லிமென்ட் குழு, சட்ட உதவிகளுக்கான நிதி உதவியை அதிகரித்தல், மத்திய அமைச்சகத்தின் உதவிகள் பற்றிய விளம்பரங்கள் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தூதரகங்கள் இந்த உதவியை பயன்படுத்தி கொள்வதிலுள்ள சட்டரீதியான சிக்கல்களை நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளும்படி, மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
=====================================================


நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாலு காசு சம்பாதிக்கவும் முடியும். அது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்காமல் தொடர்ந்து படியுங்கள்.

வெளிநாட்டில் நன்கு சம்பாதித்து உங்கள் கணவன் சேமித்துவைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துக்களில் 50% பங்கை பெற்று உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய மிகவும் அருமையான வாய்ப்பு. நீங்கள் இருக்கும் நாட்டிலேயே விவாகரத்து வழக்கைத் தொடர்ந்து கணவனின் சொத்தில் சரிபாதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

விவாகரத்து தொடர்பான நீதிமன்ற செலவிற்கு தேவையான பணத்தை இந்திய தூதரகம் உங்களுக்குக் கொடுத்து உதவும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு சிறு வேலைதான்.

இந்தியாவில் இருக்கும் உங்கள் பெற்றோரிடம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீதும் இந்தியாவில் இருக்கும் அவன் குடும்பத்தின் மீதும் வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ய சொல்லிவிட்டு நீங்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கணவன் உங்களை கொடுமை செய்வதாகவும் அதனால் விவாகரத்து செய்வதற்கு நிதியுதவி வேண்டும் என்று ஒரு மனுக்கொடுத்தால் போதும். நீங்கள் இருக்கின்ற நாட்டிலேயே உங்களுக்கு விவாகரத்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இருக்கும் வரதட்சணை வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு கணவனின் குடும்பத்திடமும் உங்கள் பெற்றோர் பணம் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு வகையில் வருமானம்!

இது போன்ற பல அரிய வாய்ப்புகள் வெளிநாட்டு வாழ் மருமகள்களுக்கு இருக்கின்றது. தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்ற அரசாங்க நிதியுதவி விஷயங்கள் தெரியாமல் ஒரு தென்னிந்திய இளம் நடிகை கணவனின் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி கையில் காசில்லாமல் அமெரிக்காவில் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரது தந்தை மிகவும் வேதனையடைந்து இந்தியாவில் வரதட்சணைப் புகார் கொடுத்து மகளின் நிலையை எண்ணி எப்படி வருத்தப்பட்டிருக்கிறார் பாருங்கள்!


The marriage of the petitioner's son and one Gayatri, daughter of the de-facto complainant took place on 08.12.2006.The marriage was not a happy one and several differences arose between the married couple. The de-facto complainant has preferred the complaint against the petitioner herein, his wife and son, the son having married the complainant's daughter Gayatri. The complaint reads as follows :-

'I am S.Raghuram, residing at 79, 3rd Street, Kamdar Nagar, Nungambakkam, Chennai 34,

My second daughter R.Gayathri, aged 23 years had an arranged marriage with Mr. Deepak Chandra Sekar, Son of B.V.Chandra Sekar on the 8th of December 2006. The marriage was celebrated with great pomp at Mayor Ramanathan Chettiar Centre Valliammal Hall, MRC Nagar, Santhome High Road, Madras-28. The marriage was attended by a number of well-known film personalities, politicians etc., as I am a reputed dance director in the film field.

In May 2007 Mrs. Savithri Chandrasekar the mother of Deepak Chandrasekar went to USA to visit her son and stayed in his house. As she has got a taste of the wealth of our family. She wanted to extract a huge sum from us and started harassing and intimidating my daughter. She wanted to get Rs.1,50,00,000/- to cover the expenses of her daughter and son-in-law who are going to migrate to the U.S.A. She demanded the money from my daughter and asked her to get it from me immediately. She prevailed on my son-in-law also and he also started abusing harassing and ill-treating her. My daughter tells me that the situation became so bad that she was injured when her husband beat her up. She had to take medical treatment for the injury.

My daughter is on dependent visa and her husband is at present having only work permit (H1 Visa). My daughter has no money of her own and the intention of the Chandrasekar is to prevent her from seeking adequate legal aid to defend her self in the U.S.A court.

The complaint dated 02.07.2007 which was forwarded to the Commissioner of police has been registered in Cr. No. 8/07 on the file of the first respondent police on 25.08.2007 and for offences under sections 498(A) and 506(i)IPC and 4 of Dowry Prohibition Act. On receipt of the complaint the respondent police had filed charge sheet against the three accused for offences u/s.406 and 498A IPC. The lower court has taken cognizance for offences u/s. 498A, 406 and 506(i) IPC and issued summons to the accused.

(முழு சோகக் கதையையும் இங்கே சென்று பாருங்கள் -->
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 12.03.2010, Crl.O.P. No. 5887 of 2009)







இப்படித் துள்ளித்திரிந்து சந்தோஷமாக இருந்த இளம் பெண் திருமணம் என்ற அடிமை சாசனத்தின் மூலம் மருமகள் என்ற அடிமையாகி வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகி கையில் காசில்லாமல் அமெரிக்காவில் எப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறார்! நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண மருமகள்களின் நிலை வெளிநாடுகளில் எவ்வளவு மோசமாக இருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.

அதனால் வெளிநாடுவாழ் மருமகள்கள் போதிய சட்ட அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். வெளிநாட்டில் இருப்பதால் தட்டிக்கேட்க ஆளில்லை என்று கணவன் கொஞ்சம் அதிகமாக வாலாட்டினால் வீட்டில் இருந்தபடியே நீங்கள் இந்தியாவில் இருக்கும் தேசிய பெண்கள் நல வாரியத்தில் கம்ப்யூட்டர் மூலம் மின்னணுப் புகார் கொடுக்கலாம்.

கீழுள்ள இணைப்பிற்குச் சென்று கணவனைப் பற்றி புகார் கொடுத்தால் கணவன் எந்த நாட்டில் இருந்தாலும் இந்தியாவிற்கு கைதி போல காலரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.
Register Your Complaint online

இந்தச் செய்தியை உங்கள் கணவனிடம் காட்டிவிட்டுப் பிறகு பாருங்கள். உங்கள் கணவனின் கதை “வெளியில புலி,வீட்டில எலி” என்று மாறிவிடும்!

அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் கணவனை அடக்கி ஆளுங்கள்.

வாழ்த்துக்கள்!


வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்

வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகும் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக IPC498A, Dowry Prohibition Act பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டிய ஆதாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.

இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Reporting Dowry Harassment
What should your complaint include?
  • Details of marriage including wedding card, marriage certificate, photos, videos etc.
இப்போதே உங்களின் திருமண அழைப்பிதழை தேடி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். போட்டோ மற்றும் வீடியோவை தனியாக ஒரு DVD காப்பி செய்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எப்போது எந்த விசேஷம் நடந்தாலும் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்வது போல ஒரு தட்டில் பூ பழங்கள் வைத்து கொடுப்பதுபோல ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது அந்தத் தட்டில்தான் பணம் வைத்துக்கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். முடிந்தால் அந்தத்தட்டில் பணம் இருப்பது போல ஒரு செட்டப் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பானது. நீங்கள் கொடுப்பதை விட உங்களது பெற்றோர் கொடுப்பதுபோல புகைப்படம் எடுத்துக்கொள்வது மிக மிக சிறப்பானது. அந்தப் புகைப்படத்தை யார் பார்த்தாலும் வரதட்சணை பரிவர்த்தனை நடந்ததாக நம்பிவிடுவார்கள்.
  • Name(s) of accused persons and their details like addresses and passports etc.

யார் மீதெல்லாம் புகார் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றிய விவரங்களை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!
  • Details of harassment like duration, time period, place and type of harassment.
கணவனுக்குத் தெரியாமல் தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை தேதி, நேரம், இடம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக வெளி ஊர்களில் இருந்து நாத்தனார் உங்கள் கணவனுடனோ அல்லது உங்களுடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவரங்களை தவறாமல் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
  • Details of demand of dowry, if any
  • Bank statement, if you have drawn dowry from the bank
  • Details of the cheque if you have paid the dowry in that form
பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது பெற்றோர் வங்கியிலிருந்து தங்களது சொந்த செலவிற்கு பணம் எடுத்திருந்தாலும் அந்த விஷயங்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது வரதட்சணை கொடுப்பதற்காகத்தான் அந்தப் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக புகாரில் கணக்குக் காட்டிவிடலாம்.

  • Details of the person to whom it was handed over.
கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்.
  • In case of physical violence, details of injuries and type of weapon.
  • Doctor’s prescription or case sheets of the treatment of such injuries.
எப்போதாவது அரிதாக வீட்டு வேலை செய்யும்போது (?) சிறு காயம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான ஆதாரத்தை பத்திரமாக ஒரு ஃபைலில் அழகாக தேதிவாரியாக அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள். புகார் கொடுக்கும்போது கணவனும் அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக்காக அடித்துக் கொடுமை செய்யும்போது ஏற்பட்ட காயம் என்று புகாரில் சேர்த்துவிடலாம்.
  • Details of the elders who had arranged the marriage and who tried to patch up the differences.
  • Places where the mediation/counselling sessions were held
கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு வந்த பெரிசுகளின் பெயர்களை விலாசத்துடன் முழுவிவரத்தோடு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வயதான கிழவன்களை உங்கள் பக்கம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கிழங்கள்தான் ஜொல்லுவிட்டுக்கொண்டு மருமகள் சொல்வதெல்லாம் நியாயம் என்று எங்கு வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு சத்தியம் செய்யத் தவம் கிடக்கும்.
  • Details of witnesses, especially independent witnesses and your own children.
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆண் கிழடுகளை சரிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போதும் வழக்கு நடக்கும்போதும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ உங்கள் சார்பாக வாக்குமூலம் கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ உதவியாக இருக்கும். உங்களுக்கு குழந்தை இருந்தால் இப்போதே கணவனுக்கெதிராக பேசுவதற்கு தயார்படுத்தி வைத்து விடுங்கள். தேவையான சமயத்திற்கு உதவும்.
  • Any written agreements during marriage.
  • Details of gifts in the form of movable property like jewels/cash/garments/vehicles and immovable property like plots/flats.
  • Any written/voice communication between the partners, the victim and the parents in the form of letters, emails, voice records etc.
கணவன் தரப்பிலிருந்து யார் எப்போது பேசினாலும் அவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள். வரதட்சணை தொடர்பான பேச்சை நீங்களே ஆரம்பித்து அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிடுங்கள். அதே போல கடிதத்தில் ஏதாவது பணம், நகை போன்ற சொற்கள் எங்காவது இருந்தால் அந்தக் கடிதங்களை தனியாக ஒரு ஃபைலில் சேகரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • Reasons for the delay in lodging the complaint, if any.
  • Signature of the victim and contact number.

ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த புதிய வழிமுறைகள் இருந்தாலும் எனக்கு அனுப்பிவையுங்கள். மற்ற மருமகள்களும் பயனடையட்டும்.

வாழ்த்துக்கள்!


மருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை

கணவனால் ஏற்படும் இடைஞ்சல்களை எதிர்கொள்ள இந்திய மருமகள்களுக்கு தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதற்காக புதிய இளைஞர் பாதுகாப்புப் படை இந்தியாவில் உருவாகியிருக்கிறது. கணவனை சமாளிக்கமுடியாமல் தவிக்கும் மருமகள்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை சமாளிக்க இதுதான் சரியான வழி. வரதட்சணை கொடுமை செய்யப்படுவதாக மருமகள்கள் கருதினால் (எவையெல்லாம் மருமகள்களுக்கு வரதட்சணைக் கொடுமை என்று முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்) உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் IPC498a, Dowry Prohibition Act, மற்றும் Protection for Women Against Domestic Violence Act (DV Act) சட்டப்பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்துவிடுங்கள். மறக்காமல் மாமியார், நாத்தனார் பெயர்களை சேர்த்துவிடுங்கள். இவர்கள்தான் எல்லா குடும்பங்களிலும் மருமகளை எப்படிக் கொடுமை செய்வது என்று கணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் மூளையாக செயல்படுபவர்கள். அதனால் புகாரில் கணவன் பெயரை சேர்க்க மறந்தாலும் இந்த மாமியார், மாமனார், நாத்தனார் பெயர்களை சேர்க்க மறந்துவிடாதீர்கள். பிறகு அவர்கள் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படநேரிடும்.

இப்படி மருமகள்கள் புகார் கொடுத்தபிறகும் சில கணவன்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி மருமகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கலாம். என்ன செய்வது இந்தியாவில் மருமகள்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் நாம் நாடளும் உரிமையில் 33% வேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டிய கீழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதனால் மருமகள்கள் தங்களின் பாதுகாப்பை தாங்களேதான் பொறுப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும். அதற்கு இதுபோன்ற தனியார் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும் தவறில்லை.



Wild Hot Men Indian based website provide service to all females. Wild Hot Men listing of India's Male Escort Agencies and Independent India's Male Escorts in India. We have a listing of Delhi ( Ncr), mumbai, Bangolre, hydrabad,chennai, pune , nagpur, jaipur, calcutta, lucknow, chandigarh, bhopal , kearal, gujrat, orrisa and all over from india male escorts to suit your every desire. We firmly believe in providing the real thing.

Wild Hot Men Agency is always looking to recruit high class male escorts who like to travel and also love india's social scene.


இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவை எப்படி சமாளிப்பது என்று இப்போது மருமகள்களுக்கு ஒரு லேசான யோசனை இருக்கும். கவலையே படாதீர்கள். அதற்குத்தான் கணவன் இருக்கிறான். வரதட்சணைப் புகாரை காவல்நிலையத்தில் கொடுத்த கையோடு உங்கள் ஊரிலுள்ள நீதிமன்றத்தில் பராமரிப்புச் செலவிற்கு கணவனிடமிருந்து பணம் வேண்டும் என்று ஒரு மனுவை போடுங்கள். அந்த மனு எழுதுவதற்கான சட்டப்பிரிவு CrPC125. இந்த சட்டப்பிரிவைப் பற்றி தெரிந்துகொள்ள முந்தைய பதிவை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.


நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு நடந்து எப்போது பணம் கிடைக்குமோ என்று சில மருமகள்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கும். மருமகள்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இந்த CrPC125 என்பது சாதாரணமாக விவாகரத்து வழக்குகளின்போது கொடுக்கப்படும் ஜீவனாம்ச வழக்கல்ல. இது கிரிமினல் சட்டப் பிரிவின் கீழ் வரும் வழக்காகும். அதனால் இந்த மனுவை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்தவுடன் மருமகளின் மாதாந்திர பராமரிப்பு செலவிற்கு கணவன் பணம் கொடுக்கவேண்டும் என்று உடனடியாக உத்தரவு போட்டுவிடுவார்கள். பணம் கொடுக்கவில்லையென்றால் கணவனுக்கு சிறைவாசம்தான். அதனால் உங்களின் செலவிற்காக இந்தப் பணம் உங்களின் வீடுதேடி மாதந்தோறும் தானாக நடந்துவந்து கதவைத் தட்டும்.


மற்றொரு முக்கியாமான விஷயம் என்னவென்றால் இந்தப் பராமரிப்புத் தொகையைப் பெற மருமகள் கணவனுடன்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மருமகள் தங்களின் வசதிக்கேற்ப எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களின் பராமரிப்புச் செலவை கணவன் கொடுத்தாகவேண்டும் என்பதுதான் இந்திய சட்டம். இந்திய மருமகள்கள் செய்த புண்ணியத்தின் பலன்தான் CrPC125!


இப்போது உங்களின் பாதுகாப்பு பராமரிப்பு செலவை எப்படி சரிகட்டுவது என்று தெரிந்துகொண்டீர்களல்லவா? உடனே வேலையை ஆரம்பியுங்கள். உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!





கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகார் எழுதுவது எப்படி

கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கெதிராக வரதட்சணைப்புகார் எழுதுவது எப்படி? - இந்திய மருமகள்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு

இதுவரை மருமகளைப் போற்றும் சிறப்புச் சட்டங்களான IPC498A, Dowry Prohibition Act போன்றவற்றைப் பற்றியும் அதுதொடர்பான வெற்றிகரமான செய்திகளைப் பற்றியும் பல பதிவுகளில் படித்து மகிழ்ந்தீர்கள். இனி அவற்றை எப்படி செயல்முறைப்படுத்துவது என்று மருமகள்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உதாரணத்துடன் கூடிய பதிவை இன்று காண்போம்.

மருமகள்களுக்காக ஒரு மாதிரி முதல் தகவல் அறிக்கையையும் (FIR) இங்கே கொடுத்திருக்கிறேன். இது உண்மையாகவே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு FIR-ன் நகலாகும். அதனால் வரதட்சணை புகார் FIR எப்படி இருக்கும் என்று தெரியாத மருமகள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிபடிவத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

புகார் மனுவில் நீல நிற எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான் முக்கியமான வார்த்தைகள். அவற்றை நன்றாக கவனித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.

படத்தின் மீது ‘Click’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்.


பக்கம் 1
பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5
புகார் மனுவை படித்தபிறகு உங்களாலும் இதுபோல எழுதமுடியும் என்று இப்போது உங்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கும் என நம்புகிறேன்.

புகார் மனுவில் நீல நிற எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான் முக்கியமான வார்த்தைகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அவை எப்படி முக்கியமான வார்த்தைகள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் IPC498A பிரிவை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”



மேலே குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுப்படி கொடுமை என்பது உடலளவில் அல்லது மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். அதனால் மேற்கண்ட புகார் மனுவில் “எனது கணவரும் மாமியாரும் அடித்து துன்புறுத்தினார்கள்”, “எனது கணவர் கருப்பு சட்டை அணிந்துவந்து மனதளவில் துன்புறுத்தினார்”, “எனக்கு அரை வயிற்றுக்குக் கூட உணவு கொடுக்கவில்லை”, “ஃபோன் தொடர்பை துண்டித்து வீட்டுக் கைதியாக வைத்திருந்தனர்”, “கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் போன்ற வார்த்தைகள் எப்படி இந்த IPC498A சட்டப்பிரிவில் சொல்லப்பட்டதற்கேற்ப பக்குவமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மருமகள்கள் நன்றாக கவனிக்கவும்.

அது போல “மாமியாரும் அவரது குடும்பத்தாரும் நிச்சயதார்த்த தினத்தன்று கூட்டமாக அமர்ந்து வரதட்சணை கேட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ”, “நாத்தனார் வரதட்சணை வாங்க மூளையாக செயல்பட்டார்” போன்ற வார்த்தைகளையும் கவனியுங்கள். மாமியார் குடும்பத்தைக் கூட்டமாக சிறையில் தள்ளவேண்டுமென்றால் இதைவிட வேறெந்த அற்புதனமான வார்த்தையை பயன்படுத்தமுடியும்!

மருமகள்கள் கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் புகார் எழுதியிருக்கும் மருமகள் தன்னை டாக்டர், Ph.D. உயர் பட்டம் பெற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறியிருக்கும் சம்பவங்கள் நடந்திருப்பது வெளிநாட்டில். ஆனால் உயர் கல்வி படித்திருக்கும் இவர் அந்த நாட்டில் போலிஸில் புகார் செய்யாமல் இந்தியாவிற்கு வந்து பொறுமையாக பல மாதங்கள் கழித்து புகார் கொடுத்திருக்கிறார். இதை வெளிநாட்டுவாழ் மருமகள்கள் நன்கு கவனிக்கவேண்டும்.

நீங்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக புகார் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் நீங்கள் புகார் கொடுக்க தேர்வு செய்யவேண்டிய நாடு இந்தியா. என்ன இருந்தாலும் தாய்நாட்டுப்பற்றை விடமுடியுமா? இந்தியாவில் இதுபோன்ற வரதட்சணை புகார் கொடுத்தால் அதுவும் மருமகள் கையால் எழுதிக்கொடுத்தால் அதன் மதிப்பே தனிதான். ஏனென்றால் இந்தியாவில்தான் காவல்துறையில் இருப்பவர்களுக்கும், நீதித்துறையில் இருப்பவர்களுக்கும் சிந்திக்கும் திறன் என்பதே கிடையாது. அவர்கள்தான் மருமகள்கள் எது சொன்னாலும் அதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்வார்கள். அதில் நமக்கும் லாபம் இருக்கிறதல்லவா! மற்ற நாடுகளில் இது போல மருமகள்கள் நினைப்பதையெல்லாம் செய்வது மிகவும் கடினமான செயல்.

ஒருமுறைக்கு பலமுறை நன்கு படித்து இந்த மாதிரி புகார் படிவத்திலிருந்து முக்கியமான வார்த்தைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். வரதட்சணைப் புகார் எழுதுவது என்பது சமையல் செய்வது போலத்தான். சட்டப்பிரிவுகளை முதலில் படித்துக்கொள்ளுங்கள். பிறகு சட்டப்பிரிவுகளுக்கேற்றவாறு உங்களது புகாரில் வார்த்தைகளை உபயோகித்தால் உங்களின் புகார் மிகவும் உறுதியானதாக இருக்கும். போலிஸ் அதை படித்தவுடன் உடனடியாக கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

சட்டம் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞர்களின் உதவியை நாடுகிறார்கள். அப்படி எழுதப்பட்ட புகார்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விசேஷத்தை கவனித்தீர்களா? புகாரின் கடைசி பாகத்தில் யார் யாருக்கு எந்ததெந்தப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூட போலிஸிற்கே ஆலோசனை வழங்கும் விதமாக இந்த புத்திசாலி மருமகள் வழக்கறிஞரின் உதவியுடன் புகார் எழுதியிருக்கிறார்.

வழக்கறிஞரிடம் சென்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது கொடுத்தால்தான் இதுபோன்ற புகாரைப் பெறமுடியும். மருமகள்களுக்கு அந்த சிரமமெல்லாம் வேண்டாம். மருமகள்களின் பொருளாதார நலன் கருதி நான் இந்த புகாரின் மாதிரிப் படிவத்தை கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிறு திருத்தங்கள்தான். இதனை மாதிரிப்படிவமாகப் பயன்படுத்தி கணவர் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், சம்பவ நாள், மற்றும் சம்பவம் நடந்த இடம் இவற்றை மற்றும் மாற்றி உங்களுக்கேற்றவாறு சம்பவங்களை எழுதி வரதட்சணைப் புகார் கொடுக்கப் பயன்படுத்தலாம். மிகவும் எளிதான செயல்.

அது எப்படி இதை ஒரு டெம்ப்ளேட் போல பயன்படுத்த முடியும்? அது சாத்தியாமா? என்று சில புத்திசாலி மருமகள்கள் யோசிப்பது புரிகிறது. உங்களுக்கு அந்த சந்தேகம் இருந்தால் நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவையும் மேலே நான் கொடுத்துள்ள இந்த புகார் மனுவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டு புகார் மனுவிற்கும் உள்ள பல ஒற்றுமைகளைக் காண்பீர்கள். அதனால் சட்டப்பிரிவுகளுக்கேற்றவாறான குற்றச்சாட்டுகளுக்கான பாயிண்ட்டுகள் தான் முக்கியம். அவை எல்லா புகார்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று இப்போது உங்களால் உணரமுடியும் என்று நம்புகிறேன்.

நடிகர் பிரசாந்த் அவர்கள் மீது எழுதப்பட்ட புகாரைப் படித்து மேலும் பல நல்ல பாயிண்ட்டுகளை தெரிந்து கொள்ள ஆவலுடைய மருமகள்கள் இங்கே சென்று படிக்கவும் --> நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை (PDF Format)

எல்லாவற்றிற்கும் மேலாக மருமகள்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எந்த சட்டப்பிரிவின் கீழ் வரும் என்று காவல்துறையையும் சட்டத்துறையையும் யோசிக்க வைப்பதைவிட சட்டப்பிரிவிற்கு பொருந்துமாறு உங்களது குற்றச்சாட்டுகளை எழுதிவிட்டால் எல்லாருக்குமே வேலை எளிதாகிவிடும். நீங்களும் உங்களது குறிக்கோளை எளிதாக அடைந்துவிடலாமல்லவா? அதுதான் வரதட்சணை தொடர்பான மருமகள் பாதுகாப்பு சட்டங்களின் சிறப்பம்சம். அதனால் உங்களின் புகாரை எழுதுவதற்கு முன் சட்டப்பிரிவுகளை நினைவுபடுத்திக்கொண்டு பிறகு நீங்கள் எந்தவகையான குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்று யோசித்து பிறகு புகாரை எழுத ஆரம்பியுங்கள். இதுதான் இன்றுவரை பலகாலமாக இந்திய மருமகள்கள் பின்பற்றிவரும் இந்திய மரபு.

உங்களுக்கு குற்றச்சாட்டுகள் சொல்வதற்கு எதுவும் பாயிண்ட்டுகள் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்காகவே பல சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. குறிப்பாக IPC498A, IPC406, IPC506, IPC34, Dowry Prohibition Act போன்றவை பொதுவாக அனைத்துப் புகார்களிலும் பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவுகள். இவை எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பிரிவுகள். இந்த சட்டப்பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் புகார் எழுதுவதற்கான பாயிண்ட்டுகள் உங்களின் சிந்தனை அருவியிலிருந்து தானாகவே கொட்டும்.

மருமகள்களே, இப்போது உங்களின் வரதட்சணைப் புகாரை எப்படி எழுதுவது என்று ஒரு தெளிவும் தன்னம்பிக்கையும் பிறந்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

(பின்குறிப்பு: உண்மையாக வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மருமகள்கள் இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தவேண்டியதில்லை. அவர்கள் உள்ளது உள்ளபடி உண்மையை மட்டும் எழுதித்தருவதே போதுமானது. )


IPC498A சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி?

சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக பேசப்பட்ட பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் பற்றிய வரதட்சணை வழக்கைப் பற்றி எல்லா மருமகள்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பத்திரிக்கைகளில் பலவிதமான செய்திகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது கீழ்கண்ட உண்மைகள் தெரியவருகிறது. இவற்றிலிருந்து இந்திய மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. குறிப்பாக வரதட்சணை தொடர்பான சட்டங்களை தங்களுக்குச் சாதகமாக எப்படிக் கையாள்வது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இதை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் மருமகள்களின் நலன் கருதி இந்த செய்திகளின் தொகுப்பைப்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

செய்தி 1

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கும், ஷோயப் மாலிக்குக்கும் வரும் 15-ம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்பவர், ஷோயப் தன்னை ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டு விட்டார் என்றும் அதற்கான சான்றிதழையும் அவர் வெளியிட்டார். இதனால் ஷோயப்-சானியா திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால்
, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (IPC506), திருமண மோசடி(IPC420), வரதட்சணை கொடுமை (IPC498A) உள்ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் குறிப்பிடுகையில்,சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்' என்றார்.



செய்தி 2

ஆந்திர சிறுபான்மைத்துறை அமைச்சர் முகமது அகமதுல்லா, ஆந்திர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அபித் ரசூல் கான், முஸ்லிம் மத பெரியவர்கள் ஒன்று கூடி ஆயிஷா குடும்பத்துடனும், சோயப்புடனும் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சோயப் மாலிக், ஆயிஷா சித்திக்கை விவாகரத்து செய்வதாக எழுத்துப் பூர்வமாக நேற்று தெரிவித்தார். ஆயிஷாவை 'தலாக்' செய்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஆயிஷாவின் தாய் பரிசா தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், இந்த நடவடிக்கையை முழு மனதோடு ஏற்பதாகவும், இந்த முடிவை தான் ஆயிஷா எதிர்ப்பார்த்ததாகவும் கூறினார்.


செய்தி 3


ஐதராபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக ஆந்திர குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகின்றன. அதே சமயம், சோயப் நான்கு கோடி ரூபாயைத் தந்தால், ஆயிஷா தலையீடு செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.


செய்தி 4


Kyon paisa paisa karti hai? Shiraj Sareen Khan, president of the United Women Front said she wants the money for her organisation, not herself.


"I don't want money for myself. All I want is a donation for our organisation, which is fighting for vulnerable women like Ayesha. I heard that Shoaib gave Rs 15 crore to Ayesha before he signed the divorce papers. If this is true, at least 10 per cent of the amount should be donated to our organisation," said Shiraj Khan.


செய்தி 5

Soniaji, help!

"Ayesha says she plans to write to Prime Minister Manmohan Singh and Congress president Sonia Gandhi if people continue to pester her. She has not received the sort of money they think she did from Shoaib.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



இனி இந்த செய்திகளிலிருந்து IPC498A சட்டத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற பாடத்தை மருமகள்கள் தெரிந்துகொள்ளலாம்.

செய்தி 1 & 2-ன் படி மாலிக் ஆயிஷாவை திருமணம் செய்துவிட்டு இரண்டாவதாக வேறு திருமணம் செய்யமுற்பட்டதை அறிந்த ஆயிஷா தன்னை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். திருமணமே பொய் என்று சொல்லிய மாலிக்கை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக ஆயிஷாவின் தந்தை போலிஸில் IPC498A, 420, 506 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். வழக்கைத் திரும்பப்பெறவேண்டுமென்றால் மாலிக் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

இந்த வழக்குகளிலிருந்து தப்புவதற்காக மாலிக் தான் திருமணம் செய்துகொண்டதாக ஒப்புக்கொண்டு விவாகரத்து செய்வதற்கு சம்மதித்திருக்கிறார். அதன்படி ஆயிஷா தரப்பில் தாங்கள் கொடுத்த வழக்கை திரும்பப்பெற்றுக்கொண்டு விவாகரத்திற்கு சம்மதித்ததே போதும், மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஆயிஷா வழக்கைத் திரும்பப்பெறுவதற்கு பணம் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வந்து அதை ஆயிஷா மறுத்துள்ளார்.

எனவே மேற்கண்ட குற்ற சட்டப்பிரிவுகள்படி (IPC498A, 420,506) மாலிக் தவறு செய்தவராக கருதப்பட்டிருந்தால் அவரை ஏன் வழக்கிலிருந்து விடுதலை செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர் பணம் கொடுத்து வழக்கை முடித்துவிட்டாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

இரண்டாவது சந்தேகம். ஆயிஷா வழக்கைத் திரும்பப்பெற பணம் வாங்கவில்லை என்று மறுக்கிறார். அதனால் மாலிக் பணம் எதுவும் கொடுக்காமல் ஒரு முழம் பூவும், 100 கிராம் அல்வாவும் கொடுத்து தான் செய்த அத்தனை கொடுமைகளிலிருந்தும் ஆயிஷாவின் மனத்தை மாற்றி வழக்குகளை திரும்பப்பெறச் செய்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியென்றால் இந்திய மருமகள்கள் ஆண்கள் கொடுக்கும் ஒரு முழம் பூவிற்கும் அல்வாவிற்கும் மயங்கும் இழிநிலையிலா இருக்கிறார்கள்?

IPC498A என்பது தீவிரவாதிகளை தண்டிக்கக்கூடிய அளவிற்கான கொடிய தண்டனைக்குரிய சட்டம். ஒருவர் தன்னை அந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினார் என்று குற்றம் சாட்டிவிட்டு பிறகு விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் அந்த கொடுமைகள் எப்படி உடனடியாக மறைந்துவிடுமா? விவாகரத்து என்பது வேறு, கொடுமை என்பது வேறு. விவாகரத்துப் பெற்றாலும் ஒருவர் செய்த கொடுமைகளுக்கு தண்டனை கொடுக்கப்படவேண்டுமல்லவா? அது தானே நீதி?


பெண்கொடுமை, வரதட்சணை கொடுமை என்பதை ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கெதிரான குற்றமாகக் கருதாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கெதிராக இழைக்கப்பட்ட குற்றமாக இந்திய சட்டம் கருதுகிறது. அதனால்தான் இந்த IPC498A என்பதை மருமகள்களுக்கான சிறப்புச் சட்டமாக அரசாங்கம் இயற்றியிருக்கிறது (Crime against society, non cognizable, non bailable, non compoundable). அப்படியிருக்க இந்த கொடிய குற்றத்தை செய்தவரை எப்படி அவ்வளவு எளிதாக விட்டுவிடமுடியும்? இந்திய சட்டங்களும், வழக்கைப் பதிவு செய்த காவல்துறையும், பேச்சுவார்த்தை நடத்திய ஆந்திர அமைச்சரும், லோகல் காங்கிரஸ் தலைவரும் என்ன அவ்வளவு கேனைத்தனமானவர்களா? என்று கேட்டுப்பார்த்தால் இல்லை என்றுதான் பதில் வருகிறது.


இவையனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றாலும் முதல் செய்தியில் ஆயிஷா குறிப்பிட்டுள்ளபடி தனக்கு விவாகரத்து மட்டும் தான் வேண்டும் "பணம்", "அல்வா", "பூ" எது கொடுத்தாலும் வேண்டாம் என்றிருந்தால் அவர் விவாகரத்தைப் பெறுவதற்கு பயன்படுத்தியிருப்பது உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கக்கூடிய கிரிமினல் சட்டங்களான IPC498A, 506, 420. வெறும் விவாகரத்து மட்டும் பெறுவதற்கு இவர் ஏன் இந்த சட்டங்களைப் பயன்படுத்தினார்? இந்த சட்டங்களை இந்தக்காலத்தில் மருமகள்கள்தான் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திவருகிறார்கள் என்பது மருமகள்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இந்த செய்திகளை பகுத்தாய்ந்து பார்த்ததில் மாலிக் மீது வரதட்சணை கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் வரதட்சணை தொடர்பான எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. இல்லையென்றால் மாலிக்கை நீதிமன்றத்தில் விசாரிக்காமல் வெறும் கட்டப்பஞ்சாயத்து மட்டும் செய்து அவ்வளவு எளிதாக இந்திய அரசாங்கம் எப்படி இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து இரண்டே நாட்களில் விடுவித்திருப்பார்களா?


அதே சமயம் ஆயிஷாவிற்கு தேவைப்பட்டது விவாகரத்து மட்டுமே என்று அவரது கூற்றிலிருந்து தெரிகிறது. "பணமோ" அல்லது மாலிக் கொடுக்கும் "ஒரு முழம் பூவோ அல்லது அல்வாவோ" கிடையாது. வழக்கை திரும்பப்பெறுவதற்கு ஆயிஷா அவற்றைப் பெற்றுக்கொள்ளவுமில்லை என்று செய்தி சொல்கிறது. அதனால் "விவாகரத்தை மட்டும்" பெறுவதற்கு அவர் பயன்படுத்தியிருப்பது வரதட்சணை தொடர்பான பெண்கள் பாதுகாப்பு சட்டமான IPC498A. இதைப் பயன்படுத்தி மாலிக்கை மிரட்டி ஆயிஷா தனது குறிக்கோளை அடைந்துவிட்டாரா? உண்மையாக ஆயிஷா பாதிக்கப்பட்டிருந்தால் இந்திய அரசாங்கம் ஏன் மாலிக்கை அவ்வளவு எளிதாக விட்டுவிட்டார்கள்? ஒட்டுமொத்த சமுதாயத்திற்கெதிராக மாலிக் செய்த கொடுமையை எந்தக் காரணத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் குற்றமாகக் கருதாமல் விடுவித்திருக்கிறது?அப்படியென்றால் இந்திய அரசாங்கம் இந்திய மருமகள்களுக்கு துரோகம் செய்கிறதா?


அதனால் மேற்கண்ட பகுத்தாய்ந்த கருத்துக்களிலிருந்து இந்திய மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் உங்களுக்குத் தேவையானதை கணவர் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள நீங்கள் பயன்படுத்தவேண்டிய சட்டம் IPC498A. இதை பயன்படுத்தினால் எல்லாவற்றையும் அடையலாம். பணமோ, விவாகரத்தோ, அல்லது மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவோ, அல்லது கணவனை தனிக்குடித்தம் அழைத்துச்செல்லவோ பயன்படுத்தலாம். அதுவும் அரசாங்கத்தின் முழுஆதரவோடு பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த செய்திகளின் சாராம்சம்.


இந்த செய்திகளிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களின் குறிக்கோளை அடைய நீங்கள் எந்தவித தொடர்பும் இல்லாத வரதட்சணை தடுப்புச்சட்டங்களைப் பயன்படுத்தி பொய் புகார்களையும் தைரியமாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் தான் தவறு செய்யவில்லையென்றாலும் முட்டாள் கணவனும் அவனது கூட்டமும் ஒரு கையில் வெள்ளைக் கொடியை பிடித்துக்கொண்டு மறுகையில் தேர்தல் சீட் வாங்க சூட்கேசுடன் ஓடும் அரசியல்வாதி போல பெட்டிநிறைய பணத்துடன் உங்களைநாடி தானாக ஓடிவருவார்கள். அதனால் இந்த IPC498A சட்டத்தை எப்படி லாவகமாகப் பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளலாம் என்று சிந்தியுங்கள்.


மருமகள்களே இந்தியஅரசாங்கத்தின் ஆசியுடன் இந்த வரதட்சணை தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்தி உங்களின் வெற்றிக்கொடியை வீடெங்கும், நாடெங்கும், நாடுகடந்தும் நிலைநாட்டுங்கள்.


இன்னும் பல மருமகள்களுக்கு இந்த IPC498Aவை எப்படி தங்களின் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள பயன்படுத்துவது என்று சந்தேகம் இருக்கும். கீழுள்ள சட்டப்பிரிவை படித்துவிட்டு இது எப்படி ஆயிஷாவின் “விவாகரத்திற்கு மட்டும் ” பயன்பட்டிருக்கிறது என்று யோசித்தால் நீங்கள் உங்களுக்கேற்றவாறு கணவனுக்கும் மாமியாரின் குடும்பத்திற்கெதிராகவும் எப்படி இதை பயன்படுத்தலாம் என்று பல புதிய யோசனைகள் உங்களுக்கே தோன்றும்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –
(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”


மருமகள்களே இப்போது உங்களுக்கு IPC498Aவின் மகத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்குத்தேவையானபடி பயன்படுத்தி வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

மருமகள்களுக்கான இந்த எளிய IPC498A சட்ட பயன்பாட்டு வழிமுறையை வெளிப்படையாக விளக்கிக் காட்டியிருக்கும் மாலிக் & Co. கூட்டத்தாற்கும், ஆந்திர அரசியல் தலைவர்களுக்கும், ஆந்திர காவல் துறைக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மருமகள்கள் சார்பாக நன்றி!


காக்க காக்க மருமகளே காக்க!

இந்தப் பதிவுகளில் இதுவரை வரதட்சணை தடுப்புச் சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றியும் தெரிந்துகொண்ட மருமகள்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி வந்திருக்கிறது!

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 3 மற்றும் 4 வது பிரிவு பற்றி முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தேன். மாமியார் கொடுமையால் மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்
-->வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1

இந்த சட்டத்தின் 3-வது பிரிவுப்படி வரதட்சணை கொடுப்பதும் பெற்றுக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும். சட்டம் இப்படி இருந்தாலும் நமது அரசாங்கம் மிகவும் பெரிய மனதுடன் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்த மருமகளையோ அல்லது அவர்களது பெற்றோர்களையோ 3-வது பிரிவுப்படி தண்டித்திருக்கவில்லை.
ஆனால் அதற்கு மாறாக வரதட்சணைப் புகார் என்று வந்தால் சட்டமும் அரசாங்கமும் கணவனையும் அவனது குடும்பத்தையும் மட்டுமே இந்த சட்டங்கள் மூலம் “நன்றாக கவனித்து” வருகிறார்கள். இது எழுதப்படாத சட்டம்.

இவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் பல
படித்த மருமகள்களுக்கு வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்துவதில் சற்று நெருடலான விஷயமாக இருப்பது வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் உள்ள 3-வது பிரிவாகும். நான் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தேன் என்று புகார் எழுதும்போது சட்டத்தின் 3-வது பிரிவுப்படி கணவனை மட்டும் அரசாங்கம் தண்டிக்கிறதே என்று மருமகள்களின் மனம் வேதனை அடையுமல்லவா. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கும். அந்த மனசாட்சியும் உறுத்துமல்லவா?

அதனால் இதுபோன்ற நேர்மையான மருமகள்களின் மனஉறுத்தலை உணர்ந்துகொண்ட தேசிய பெண்கள் வாரியம் ஒரு தாய்மை உணர்வுடன் செயல்பட்டு மருமகள்கள் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எந்தவித மனஉறுத்தலும் இல்லாமல் தாராளமாக தடையின்றி பயன்படுத்திக்கொள்ள வசதியாக வரதட்சணை கொடுப்பவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற பெருந்தன்மையான கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்திருக்கிறது.

வரதட்சணை கொடுப்பதை சட்டத்தின் மூலம் தடுக்காமல் அதற்குமாறாக வரதட்சணை கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் நாட்டில் வரதட்சணையை அறவே ஒழித்துவிடலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள் நமது தலைவிகள். படித்த பெரிய தலைவிகள் சொல்வதில் ஏதாவது ஒரு உள் அர்த்தம் இருக்கும். இதன் உள்நோக்கத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில் மருமகள்களுக்கு உள்ள ஏராளமான நன்மைகள் உங்களுக்குப்புரியும். தலைவிகள் சொல்வதைக் கேட்டால் மருமகள்களுக்கு என்றும் நன்மைதான்.

அதனால் மருமகள்கள் அனைவரும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு முழு ஆதரவு கொடுத்து இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவவேண்டும். இந்த புதிய சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்தால் மருமகள்களின் கரங்கள் மேலும் வலுப்படும். கணவனின் குடும்பத்தில் கொடிகட்டிப் பறக்கலாம். எந்தவிதமான காரியங்களையும் எளிதாக சாதித்துக்கொள்ளலாம். கொடுப்பதுபோலக் கொடுத்து பிறகு அதை வரதட்சணை என்று சொல்லலாம். அல்லது எதுவும் கொடுக்காமலே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லலாம். அணு அளவும் பயப்படவேண்டாம். ஏனென்றால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கணவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் ஒரு கலக்கம் வந்துவிடும். அதைத் தக்கவிதத்தில் பயன்படுத்தும் முழுக்கட்டுப்பாடும் மருமகள் வசம்தான். பிறகென்ன கவலை.

இப்போது இருக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டமும் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்திருந்தாலும் இந்த சட்டத்திலிருந்தும், மருமகளிடமிருந்தும் தப்பிக்கவேண்டுமென்றால் இருக்கின்ற ஒரே வழி “காக்க காக்க மருமகளே காக்க” என்று மருமகளைத் தான் தினம் தினம் சுற்றி வரவேண்டும்.

இப்போது மருமகள்களுக்கு இந்த சட்ட திருத்தத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அதுதொடர்பான செய்தியை படித்து மகிழுங்கள்.


====================================================
மார்ச் 25,2010

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அல்லது கொடுக்கும் வரதட்சணையின் மதிப்புக்கு ஈடான அபராதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அது தண்டனையாக வழங்கப்படும்.

இவ்வாறு சட்டம் இருந்தாலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டுமே வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

வரதட்சணை கொடுப்பவர்கள், தானே முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க, இந்த திருத்தம் முதல் முறையாக வழி வகுத்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.


இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், மணமகள் வீட்டார், வரதட்சணை தொடர்பான புகார்களை தெரிவிக்க முன் வருவதில்லை. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதை தவிர மற்றொரு திருத்தமும், இச்சட்டத்தில் மேற்கொள் ளப்பட உள்ளது. அதாவது, மணமகன் அல்லது மணமகள் வீட்டார் தங்களுக்குள் வழங்கும் பரிசு பொருட்களும், தற்போதைய சட்டப்படி வரதட்சணையாக கருதப்படுகிறது. எனவே, இருவீட்டார் இடையே வழங்கப்படும் பரிசுப் பொ ருட்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது; இல்லையென்றால், அதுவும் வரதட்சணையாக கருதப்படும். சமூக நெருக்கடி காரணமாகவே, மணமகள் வீட்டார் வரதட்சணை கொடுக்கின்றனர் என்ற தொடர் விவாதத்தின் காரணமாகவே, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

======================================================



மருமகள்களுக்கு வெற்றி!!!

வெற்றிகரமாக மருமகள்களின் கூட்டணி இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றுவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து மருமகள்களும் அரசியல் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தயாராகுங்கள்.

இந்த இடஒதுக்கீட்டில் மருமகள் மட்டும் தான் பலனடையப்போகிறார்களா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நியாயமான கேள்விதான். கிழட்டு மாமியார்களை கட்சியில் தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட அனுமதிகொடுக்க எந்தக் கட்சித்தலைவர் விரும்புவார்? அப்படியே தப்பித்தவறி தேர்தலில் நின்றால் கிழட்டுப் பெண்களுக்கு ஓட்டுப்போடப்போவது யார்? சந்தேகமே இல்லை. கட்சிகளிலும் சரி வாக்காளர்களானாலும் சரி இளம் மருமகள்களை மட்டும் தான் அனைவரும் விரும்புவர். அதனால் மருமகள்களே தேர்தலில் நின்று அரசியல் களம்புக இன்றே தயாராகுங்கள்.

கண்டிப்பாக மருமகள்கள் தான் இனி நாட்டை ஆளப்போகிறார்கள். சட்டசபை நாடாளுமன்றம் இவற்றில் வெற்றிக் கொடி கட்டி கிழட்டு மாமியார் கூட்டத்தையும், கொடுமை செய்யும் கணவர் கூட்டத்தையும் புதுப்புதுச் சட்டங்களை இயற்றி நாட்டை விட்டே விரட்டுவோம்.






மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், பாஜக தலைவர்கள் சுஷ்மா
புதுதில்லி, மார்ச் 9: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம்தேதி (திங்கள்கிழமை) இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முனைப்புடன் இருந்தது. எனினும் அது நிறைவேறாமல் போகவே அதை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி கண்டது ஆளும் கூட்டணி.

மசோதா நிறைவேறியாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முழு முயற்சி மேற்கொண்டனர். இந்த தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்றும் இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் அறிவித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு.

மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிர்த்து 1 வாக்கும் பதிவாகின. சில கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.தமக்கு முன்கூட்டியே எதையும் தெரிவிக்காமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தாமலே மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தியதை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இக்கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், தாம் கேட்டுக்கொண்ட திருத்தங்கள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.1996 முதல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போனது. 14 ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.மகளிருக்கு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் அரசமைப்பு சட்ட 108வது திருத்த மசோதா திங்கள்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோதே சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் இருக்கை அருகே சென்று அங்கு இருந்த மசோதா பிரதியை பறித்துக் கிழித்து அன்சாரியை தாக்கவும் முற்பட்டனர்.அவையில் தொடர்ந்து அமளி தொடரவே திங்கள்கிழமை அவை நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி (பாரதிய ஜனதா கட்சி), பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட்), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

விவாதத்தை தொடங்கிவைத்து அருண் ஜேட்லி பேசுகையில், மகளிர் மசோதாவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாகவும் அதே நேரத்தில் மாநிலங்களவையில் நடந்த வெட்கித்தலைகுனியக் கூடிய சம்பவங்கள் இந்த நல்லதொரு தருணத்தை மழுங்கடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.இந்த மசோதா மூலமாக தலித்துகள், பழங்குடிகளுக்கு பாதிப்பு வராது. அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடு இந்த மசோதா மூலம் கிடைக்கும் என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.முன்னதாக, திங்கள்கிழமை நடந்த அமளியில் தொடர்புடையதாக 7 உறுப்பினர்களை, பட்ஜெட் கூட்டத் தொடரின் எஞ்சிய காலத்துக்கு சஸ்பென்ட் செய்ய அன்சாரி நடவடிக்கை எடுத்தார். அவைத்தலைவர் அன்சாரி விவாதமின்றி மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பாஜக, இடதுசாரி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். முதலில் விவாதம் நடத்தி அதன்பிறகே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இருப்பினும் முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறி அடுத்ததாக மசோதா மீது விவாதம் நடைபெறும் நிலை எப்போதும் இல்லாதவகையில் உருவானது.இந்த மசோதா சிறுபான்மையினருக்கோ அல்லது தலித்துகளுக்கோ எதிரானது அல்ல என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவகை செய்யும் உன்னத நடவடிக்கை என்று பிரதமர் மன்மோகன் வர்ணித்தார்.மசோதாவுக்கு ஆதரவளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி, மற்றும் பிற கட்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, மசோதாவை ஒத்திவைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை லாலு பிரசாதும் முலாயம் சிங்கும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை. இந்த மசோதா நிறைவேறுவதன் மூலம் 545 பேரைக் கொண்ட மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 181 பேர் இடம்பெறுவார்கள். 28 மாநில சட்டப்பேரவைகளில் மொத்தமுள்ள 4109 இடங்களில் 1370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும்.





மருமகள்களுக்கு நற்செய்தி!



இதுவரை வீட்டில் மட்டும் ஆட்சி செய்துவந்த மருமகள்கள் இனி சட்டசபை, பார்லிமென்ட் என அரசியலிலும் புகுந்து கலக்கலாம். மருமகள்களே இந்த இட ஒதுக்கீட்டிற்கு உங்களின் ஆதரவை முழுமனதுடன் தெரிவியுங்கள். இன்னும் சொல்லப்போனால் 50% இடஒதுக்கீடு கிடைக்க ஏதாவது செய்யமுடியுமா என்று உங்கள் தொகுதி MP-க்களிடமும் தேசிய மகளிர் வாரியத்திடமும் கோரிக்கை வையுங்கள்.

புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் கிரிஜா வியாஸ் கூறியது: அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் விரும்புகிறது. இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் யோசித்து முடிவுக்கு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவர்களுக்கு அவகாசம் உள்ளது. மகளிர்க்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பது மட்டுமே இந்த மசோதாவின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டி எதிர்கால சந்ததிகளின் நலனுக்காகவும் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா நிறைவேற அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த ஒதுக்கீடு எதிர்கால பெண்களின் நலனுக்காக என்று பெண்கள் வாரியத்தலைவி சொல்லியிருக்கிறார். அதனால் 50% இடஒதுக்கீடு கேளுங்கள். உங்களது எதிர்காலத் தோழிகள் பலன் அடையட்டும்.

இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டால் எல்லா மருமகள்களும் தைரியமாக அரசியலில் ஈடுபட்டு நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடலாம். எத்தனை ஆண்டுகள் ஆண்கள் இயற்றும் சட்டங்களைப் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் வாழவேண்டும்? பெண்களே பல புதிய சட்டங்களை இயற்றி வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை எப்படி அடக்கி ஆளலாம் என்ற புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கலாம். நாட்டின் ஆட்சியே மருமகள்களின் கையில் வந்த பிறகு வீட்டில் ஆட்சி செய்வது மிகவும் எளிதாகிவிடும் அல்லவா. அதனால் படித்த மருமகள்கள் முழுமனதுடன் அரசியலில் ஈடுபடவேண்டும். அதற்கு இந்த இடஒதுக்கீடு ஒரு பொன்னான வாய்ப்பு.

இந்த இடஒதுக்கீடு சட்டமாக வந்தாலும் என்னுடைய கணவரோ அல்லது மாமியார் வீட்டிலோ அரசியலில் ஈடுபட விடமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். மருமகளின் விருப்பத்திற்கு அடிபணியாதவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்குத்தான் குடும்ப வன்முறை சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதனைப் பற்றி அடுத்தப் பதிவில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த செய்தியைப் படித்து சந்தோஷமடையுங்கள்.


புது தில்லி, மார்ச் 7: மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்படுகிறது.உலக மகளிர் தினத்தின் 100-வது ஆண்டு நாளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சதி இந்த மசோதா என அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தர உள் ஒதுக்கீடு தேவை என இக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.இன்று தாக்கல்: அரசமைப்பு சட்ட 108-வது திருத்த மசோதா என்கிற மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விவாதத்துக்காக மாநிலங்களவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி திங்கள்கிழமை தாக்கல் செய்கிறார்.

பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதியாகிவிட்டது.மாநிலங்களவையில் காலியிடம் நீங்கலாக தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குறைந்தது 155 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.மாநிலங்களவையில் 165 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர்.

இவர்கள் தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அக் கட்சியைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.பேசலாம்- அமைச்சர் பன்சால்: தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டம் என்பது தேங்கி நிற்கக் கூடியது அல்ல. மசோதா குறித்து புது வித ஆலோசனைகள் இருந்தால் அது குறித்து பேசி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது- மொய்லி: மகளிர் மசோதா நிறைவேற தாங்கள்தான் காரணம் என எந்தக் கட்சியும் தனி உரிமை கோர முடியாது என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான பெருமை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரியது என்றார் அவர்.

முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சதி- லாலு, முலாயம்
தற்போது தாக்கல் செய்யப்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து லாலு மேலும் கூறியதாவது: மகளிர் மசோதா என்பது மாபெரும் அரசியல் பிழை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, சச்சார் குழு அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்த திராணியில்லாத மத்திய அரசு, திசை திருப்பும் செயலாக மகளிர் மசோதாவை எடுத்துக் கொண்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எம்.பி.யாக தேர்வு பெற இட ஒதுக்கீடு அவசியமா? கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்னிடம் தெரிவித்து வருகின்றனர் என்றார் லாலு.முஸ்லிம்கள், தலித்துகள் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்வு செய்யப்பட கூடாது என காங்கிரஸýம், பாஜகவும் கூட்டாக சதியில் ஈடுபட்டுள்ளன என்றார் முலாயம் சிங் யாதவ்.

குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இந்த மாநிலங்களில் இருந்து முஸ்லிம் பெண் எப்படி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என முலாயம் கேள்வி எழுப்பினார்.மகளிர் மீது உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

13 ஆண்டு போராட்டம் கடந்த 13 ஆண்டுகளாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1997-ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த சமயத்தில் முதல்முறையாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, அவரது சொந்தக் கட்சி (ஜனதா தளம்) எம்.பி.க்களே அவரது கையிலிருந்து மசோதா நகலை பிடுங்கி கிழித்து எறிந்தனர்.பாரதிய ஜனதா தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோதும் அமளி ஏற்பட்டது.

ஆண் எம்.பி.க்கள் எதிர்ப்பு?
காங்கிரஸýம், பாஜகவும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளபோதிலும், அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான ஆண் எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கொறடா உத்தரவை மீறினால் கட்சி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் வேண்டாவெறுப்பாகவே இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் தெரிகிறது.







தாலி நிலைத்திருக்க நாலு முடிச்சு!

சட்டப்பாடங்களுக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்காக மருமகள்களுக்கு உபயோகமான ஒரு சிறு செய்தி.

தாலியில் போடப்படும் மூன்று முடிச்சு நிலைத்திருக்க நான்காவதாக ஒரு முடிச்சு போடவேண்டுமாம். தமிழ்நாட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள். மருமகள்களே நீங்கள் இதுபோல தாலி நிலைக்க உங்கள் வீட்டிலிருந்து வைரத்தால் ஆன கழுத்தணியை போட்டு நான்காவது முடிச்சு போட்டுக்கொண்டீர்களா?




1. உரிமைக்காக முதல் முடிச்சு - கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உரிமை. நான் முன்பே கூறியிருப்பது போல் இது தான் IPC 498A ரிமோட் கண்ட்ரோல். மறந்து போனவர்கள் முந்தைய பதிவுகளைப் படிக்கவும்.

2. உறவுக்காக இரண்டாம் முடிச்சு - கணவனுடன் சேர்த்து அவனது உறவினர் அனைவரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்வதற்காக கொடுக்கப்படும் உரிமை. அதனால் வரதட்சணைப் புகார் எழுதும்போது கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா உறவினர்களையும் சேர்த்து கூட்டமாக எழுதலாம். இப்போது தான் எனக்குக் கூட இந்த இரண்டாம் முடிச்சின் அர்த்தம் புரிகிறது. நான் இதுவரை பார்த்த வரதட்சணைப் புகார்களிலெல்லாம் மருமகள்கள் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லோருடைய பெயரையும் சேர்த்து எழுதியிருந்தார்கள். அவர்களின் "தாலி சென்டிமென்ட்" இப்போது தான் புரிகிறது!

3. ஊருக்காக மூன்றாவது முடிச்சு - இதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. ஒன்று ஊரில் இருக்கும் கணவருடன் தொடர்புடைய யாரைவேண்டுமானாலும் வரதட்சணை வழக்கில் சேர்க்கலாம் என்று ஒரு அர்த்தம். இரண்டாவது அர்த்தம் மருமகளுக்குக் கட்டுப்படாத கணவனையும் அவனது குடும்பத்தையும் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து தொலைக்காட்சி, செய்தித்தாள் என எல்லாவற்றிலும் செய்தியை போட்டு கணவனின் குடும்பத்தை ஊரறிய அவமானப்படுத்தலாம் என்றும் பொருள் கொள்ளலாம். பிறகு கணவன் தானாக வழிக்கு வருவான்.

ஆகா! மருமகள்களுக்காக பிற்காலத்தில் சட்ட மேதைகள் எழுதப்போகும் பலசட்டங்களை நமது முன்னோர்கள் எப்படி சுருக்கமாக மருமகள்களுக்கு புரியும் விதமாக மூன்று முடிச்சில் முடிந்து வைத்திருக்கிறார்கள். அருமை!

இந்த மூன்று முடிச்சுகளின் முழுப்பலனும் கிடைக்க நான்காவதாக ஒரு முடிச்சும் போட்டுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். ஒரு வேளை வாஸ்த்து சாஸ்த்திரப்படி இது சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். அல்லது திருமணத்தில் போடப்படும் இந்த நகையை எதிர்காலத்தில் கணவனும் அவனது குடும்பமும் கேட்ட வரதட்சணை என்று வழக்கில் சேர்க்க ஒரு ஆதாரமாக உதவும் என்ற உயர்வான நோக்கத்திலும் சொல்லியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் மேலே சொல்லியபடி தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுகள் உங்களுக்கு பலமாக அமைய இந்த நான்காவது முடிச்சு உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன்.

அதனால் நான்காவது முடிச்சு போட்டுக்கொள்ள விரைவில் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இதுவரை அப்படி செய்யவில்லையென்றால் உங்கள் வீட்டில் உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் ஒரு பகுதியிலிருந்து பணத்தைப்பெற்று நான்காவது முடிச்சைப் போட்டுக்கொள்ளுங்கள். பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதரர்களும், பெற்றோரும் பெண்ணின் திருமணத்திற்காக நிறைய செலவு செய்துவிட்டதாக பொய்கணக்குக் கூறி அத்தோடு உங்கள் கணக்கை முடித்துவிட்டு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்.

அரசாங்கம் எப்போதோ பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றிவிட்டது. ஆனால் தந்தையும், சகோதரர்களும் கூட்டணியமைத்து அந்த சட்டங்களை மதிக்காமல் தங்கள் வீட்டு பெண்களையே ஏமாற்றுகிறார்கள். அந்த சட்டங்களைப் பற்றி முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்: பந்தாடப்படும் (மரு) மகள்கள்

இதுபோன்று ஏமாற்றுக்கார தந்தையும் சகோதரர்களும் இருக்கும் வரை எத்தனை பெரியார்கள் வந்து பெண்ணுரிமைக்காகப் போராடினாலும் பெண்களுக்கு சமஉரிமையை இந்த ஆணாதிக்க சமுதாயம் கொடுக்கப்போவதில்லை.