"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்

வரதட்சணை கொடுமை வழக்கில் ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நான்கு மாதம் சிறை
ஜனவரி 08,2012 தினமலர்

சென்னை:ஒரு கோடி ரூபாய் கேட்டு வரதட்சணை கொடுமை செய்த வழக்கில், ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

நாகர்கோவிலை அடுத்துள்ள வள்ளிவிளையைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ஸ்டீபன். இவரது மகள் பியூலாவை, அதே ஊரைச் சேர்ந்த, பத்மநாபனின் மகன் சிவகுமாருக்கு, 2003ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். அப்போது வரதட்சணையாக, 1.5 கிலோ தங்கம், 6 லட்சம் மதிப்புள்ள கார், 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.சிவகுமார், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்துக்கு பின் சிவகுமாரும், பியூலாவும் சென்னையில் வசித்தனர். அப்போது, வரதட்சணை போதாது என்றும், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி பியூலாவை, கணவர், மாமனார் பத்மநாபன், மாமியார் பத்மா ஆகியோர் கொடுமை செய்தனர்.

பியூலா, தன் கணவர், மாமியார், மாமனார் மீது வரதட்சணை புகாரை, கன்னியாகுமரி போலீசாரிடம் கொடுத்தார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட், சிவகுமார் மற்றும் அவரது பெற்றோரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில், பியூலா அப்பீல் செய்தார்.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதி எஸ்.பழனிவேலு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது, வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ், சிவகுமாருக்கு 4 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.பத்மா, பத்மநாபன் ஆகிய இருவருக்கும், 2 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை காலத்தை ஏற்கனவே அனுபவித்து இருந்தால், விடுதலை செய்யலாம்.இவ்வாறு, நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
=====

மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பதிவு
NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?

இந்திய அரசின் மருமகள் உதவி மையம்

வெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:

National Commission for Women, India

4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi - 110 002
Phone: 91-11-23237166
91-11-23236988
Fax: 91-23236154
Complaints Cell:
91-11-23219750
Email: ncw@nic.in

Click Here to File Complaint Against NRI Husband
 Online Complaint Registration for NRI's




மருமகள்களே வழக்கறிஞரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!

மருமகள்களை ஏமாற்ற பல கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. சட்டம் படித்து உதவி செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் இதில் அடங்கும். மருமகள்கள்தான் விழிப்புணர்ச்சியுடன் இருந்து தங்களை அனைத்துவித தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஆசிரியை விவாகரத்து வழக்கில் போலி பெயரில் "ஒரிஜினல்' வழக்கறிஞர்கள் :விசாரணையில் அம்பலம்

ஜனவரி 01,2012 தினமலர்


மனைவிக்கு பதில் வேறு ஒரு பெண்ணை கோர்ட்டில் நிறுத்தி, விவாகரத்து பெற்ற வழக்கில், போலி பெயரில், ஒரிஜினல் வழக்கறிஞர்கள் ஆஜரானது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோவை, பீளமேட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா, 34; சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2004ல் இவருக்கும், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த, இன்ஜினியர் சிவகுமாருக்கும் திருமணம் நடந்தது. சிவகுமார், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவரை அணுகி, சிங்கப்பூரில் இருக்கும் மனைவிக்கு தெரியாமல், கோவை குடும்பக்கோர்ட்டில் இருந்து, விவாகரத்து பெற்றார். தகவல் அறிந்த சொர்ணலதா, உடனடியாக கோவை திரும்பி, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இன்ஜினியர், தனது பெற்றோருடன் கைது செய்யப்பட்டார்.

விவாகரத்து உத்தரவு பெற்றுத்தந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், சிவகுமாரின் மனைவியாக கோர்ட்டில் ஆஜரான பெண், நண்பர் மாரிமுத்து, இருதரப்பிலும் வழக்கறிஞர்களாக ஆஜரான போலி நபர்களை, போலீசார் தேடினர். கடந்த 28ம் தேதி, மாரிமுத்து கோர்ட்டில் சரணடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமார், சொர்ணலதா சார்பில், குடும்பக் கோர்ட்டில் ஆஜரானவர்கள் போலி வழக்கறிஞர்கள் அல்ல; போலி பெயரில் ஆஜரான ஒரிஜினல் வழக்கறிஞர்கள் தான் என்றும், எங்கும் தலைமறைவாகாமல் தினமும் கோர்ட்டுக்கு வருகின்றனர் என்ற தகவலும், தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசாரிடம் கேட்டபோது,""அவர்களை கைது செய்ய, நாள் குறித்து விட்டோம். இவ்வழக்கில், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், முன்ஜாமின் பெற ஐகோர்ட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால், மற்ற இரு வழக்கறிஞர்களை கைது செய்வதில் சிரமம் இருக்காது,'' என்றனர்.