"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனை அவமானப்படுத்தும் மனைவியருக்கு காத்திருக்கும் பரிசு!

ஆந்திர மாநில மருமகள்களுக்கு அமைச்சர் கொடுக்கும் அரிய வாய்ப்பு!
கரும்புத் தின்ன கூலி கொடுக்கப் போகிறார்களாம்!




கர்னூல்: "மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.

தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.

==================================================================
இதுபோன்ற நல்ல திட்டங்களை நாடு முழுதும் எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து இந்திய மருமகள்களும் பலனடைவார்கள்.
==================================================================



காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!

மருமகள்களே,

இதுவரை உங்களுக்குக் கொடுமை செய்யும் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்தி அடக்க உதவும் சட்டங்களைப் பற்றி மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். கணவனை அடக்க உதவும் அந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் பொதுவாக “வரதட்சணை சட்டங்கள்” என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இன்றுவரை இந்த சட்டப்பாதுகாப்புப் பெட்டகத்தில் Dowry Prohibition Act, IPC498A என்ற இரண்டு அற்புதமான சட்டங்கள்தான் மருமகள்களுக்கு பெரும் உதவி செய்து வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போது “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்” [Protection of Women from Domestic Violence Act,2005, (Come into Force on 26/10/2006)] என்ற சர்வ வல்லமை பொருந்திய சட்டம்தான் பரவலாக நடைமுறைக்கு வந்திருக்கிறது என்ற விஷயம் பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2005லேயே இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும் இப்போதுதான் இது சமீபகாலமாக மருமகளின் பயன்பாட்டிற்காக பெருமளவில் விடப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்படியே கொடுத்திருக்கிறேன் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
An Act to provide for more effective protection of the rights of women guaranteed under the Constitution who are victims of violence of any kind occurring within the family and for matters connected therewith or incidental thereto.

மேலுள்ள முக்கியமான வார்த்தையை கவனித்தீர்களா? பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம்.

இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதையும் தருகிறேன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]

  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and
  • Who has been subjected to acts of domestic violence
  • Children are also covered
  • Any person can file a complaint on their behalf
யாரெல்லாம் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா! இப்போது யாருக்கெதிராக இந்த சட்டத்தைப் பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள். அதையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Against Whom Can A Complaint be Filed :
“Respondent” [Section 2 (q)]
  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.
இந்த சட்டத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போனால் இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இன்றைய பதிவிற்கான முக்கியமான விஷயத்தை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். மற்றவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இதுவரை இருந்த சட்டங்கள் நிகழ்கால மருமகள்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போது வந்திருக்கும் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் எதிர்கால மருமகள்களுக்கும் நன்றாக உதவும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது எதிர்கால மருமகள்களால் இளமைக் காலத்தில் காதல் புரியாமல் இருக்க முடியாது. அதுபோன்ற சமயத்தில் பெற்றோர் ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை அடக்கும் ஆயுதமாகவும் இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று ஒரு வீரமிக்க எதிர்கால மருமகள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் மேலே சொல்லப்பட்டுள்ள சட்ட விளக்கத்தில் சிவப்பு நிற வாக்கியங்களை கவனியுங்கள்.

குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆணால் (தந்தை, சகோதரன் உட்பட) ஒரு பெண்ணுக்கு (மகள், மனைவி, சகோதரி, தாய்) உட்பட எந்த வகையான வன்முறை இழைக்கப்பட்டாலும் (மகளின் காதலை தந்தை கண்டிப்பதும் ஒரு வகையில் வன்முறைதான்) இந்த சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்ற விளக்கம் பின்வரும் செய்தியின் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் தனது காதலை தனது தந்தை கண்டித்ததால் குடும்ப வன்முறை சட்டத்தைக் காட்டி தனது தந்தையை அடங்கச் செய்திருக்கிறார். செய்தியை கவனமாகப் படித்து புரிந்துகொண்டால் உங்களுக்கே இந்த சட்டத்தின் மகிமை புரியும்! இன்னும் பல அரிய பயன்பாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

ஐக்கிய நாட்டு சபையின் இந்தியாவிற்கான பெண்கள் வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் உருவான சட்டத்தின் அருமை பெருமை அவ்வளவு சிறிதாகவா இருக்கும்!

[நிதி ஒதுக்கீட்டின் தற்போதைய நிலவரம் இது - The schemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).]

வாழ்த்துக்கள்!!


Stopped from seeing boyfriend, teen girl threatens to lodge case against father

22/09/11 Daily Bhaskar



Ahmedabad: A school girl of Ranip area in the city has threatened her doctor father that she will lodge a case of domestic violence against him if he does not allow her to meet her boyfriend. The father has approached police but cops say they cannot do much legally. However, they have offered to counsel the teenager.

Ranip police said Shruti (name changed), 14, a resident of Ranip, studies in class X and is in love with a boy of class XII of the same school. Her father, who is a doctor, spotted Shruti and the boy together on a number of occasions but thought they were just friends.

However, the doctor recently saw Shruti and the boy emerging from a multiplex in the city. He got angry and slapped her in the face asking her not to see the boy any longer. The girl did not say a word.

A few days after the theatre incident, the father once again found Shruti with her boyfriend at Kankaria. He was enraged and took the girl home. However, before the doctor could vent his anger, Shruti threw a book dealing with 'Protection of Women from Domestic Violence Act, 2005' towards him and threatened to file a case in court if he continued to 'harass' her.

The stunned father called up his friend, a city-based IAS officer, and told the whole story. The officer put him in contact with Ranip police station. Subsequently, the doctor met officials of Ranip police and narrated the whole case but cops told him that legally, they could not do much in the matter.

"Considering the nature of the case, there is not much that we can do. However, we have advised the doctor to visit us with the girl and her mother and we will try to counsel her about the expectations of her parents," Ranip police inspector Sudarshansinh Vala said.

Police said that the doctor has agreed to bring Shruti to police station. No formal police complaint has been lodged in this connection.

http://daily.bhaskar.com/article/GUJ-AHD-stopped-from-seeing-boyfriend-teen-girl-threatens-to-lodge-case-against-father-2449354.html





காதலிக்கும் இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

வருங்காலத்தில் மருமகளாகப் போகும் இளம் பெண்களுக்காக இந்த செய்தி.

காதலில் விழும் பல இளம்பெண்களை இளைஞர்கள் ஏமாற்றுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக காதலிக்காமல் இருக்கமுடியுமா?

அப்படியென்றால் எப்படி பாதுகாப்பாக காதலிப்பது என்று தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

சிலசமயங்களில் காதல் செய்துவிட்டு ஆண்கள் பெண்ணை ஏமாற்ற முற்படுவார்கள். அதுபோன்ற சமயத்தில் ஆணை வழிக்குக் கொண்டுவர பொதுவாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். பல சமயங்களில் இதுபோன்ற புகார்களை யாரும் சரியாக கவனிக்க மாட்டார்கள். அப்போது இளம் பெண்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாதல்லவா? இதுபோன்ற இளம் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக ஒரு பெண்கள் உதவி மையம் இருக்கிறது. இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் உங்களது காதல் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமே உதவி செய்கிறது.

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers (இலவச தொலைபேசி)

Women help Line - 1091


மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
(தினமலர் செப்டம்பர் 8/2011)

தமிழகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மூலம் இயங்கும் நடமாடும் போலீஸ் கவுன்சிலிங் வாகனம், புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.



சிவகங்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட போலீஸ் கவுன்சிலிங் வாகனம் "டிவி' உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது.

கடந்த 2001 அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உடனே தடுக்கவும், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன் கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்தால், மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுன்சிலிங் நடத்த, வாகனம் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள், டாக்டர், வக்கீல்கள், கவுன்சிலிங் உறுப்பினர்கள் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தனர்.

அதற்கு பின் வந்த தி.மு.க., அரசு, இலவச போலீஸ் கவுன்சிலிங் வாகன திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால், போலீஸ் கவுன்சிலிங் வாகனம் பொலிவிழந்து போனது.

புதுப்பொலிவு: மீண்டும் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் ஜெ., பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் வந்தால், உடனே நேரில் சென்று கவுன்சிலிங் நடத்துமாறும், இதற்காக வழங்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் வழங்கப்பட்ட "போலீஸ் நடமாடும் கவுன்சிலிங்' வாகனத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இதில், பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க, "டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்காக புதிதாக "டிவி' உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



பெண்களுக்கு உதவி செய்ய காவல்துறையால் இந்த பெண்கள் உதவி மையம் இயக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது அதே காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலிஸ்காரரே ஒரு இளம் பெண்ணை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள். ஐயோ பெண்களை யார்தான் காப்பாற்றுவார்களோ?



செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், காதலித்த பெண்ணை கைவிட்டு, வேறு திருமணம் செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பழைய செம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரர். இவருக்கும், வத்தலக்குண்டு பூசாரிபட்டி திவ்யாவிற்கும், நேற்று முன்தினம், செம்பட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை, திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நரசிம்மன் மகள் திவ்யா, "மணிகண்டன் என்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தை நிறுத்த வேண்டும்,' என, போலீசில் புகார் செய்தார். மாப்பிள்ளை அழைப்பில் இருந்த மணமகனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பெண் வீட்டாருக்கு இத்தகவலை தெரிவிக்காத மாப்பிள்ளை வீட்டார், "மணமகனுக்கு உடல்நிலை சரியில்லை. நேரம் சரியில்லாததால் மதியம் ஒரு மணிக்கு மேல் தாலிகட்ட வேண்டும்,' என, கூறி சமாளித்தனர். ஆனால் மண்டபத்தில் விருந்து, மொய் வசூல் நடந்தது. மொய் வசூல் முடித்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப முயற்சித்த போது, பெண் வீட்டார் தடுத்தனர். மோதல் ஏற்பட்டு, போலீசார் வந்த பிறகே, பெண் வீட்டாருக்கு விஷயம் தெரிந்தது.

காதலி திவ்யா, "என்னை திருமணம் செய்ய வேண்டும் அல்லது மணிகண்டனை கைது செய்ய வேண்டும்,' என, முடிவில் உறுதியாக இருந்தார். மாலையில், மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.





வரதட்சணை சட்டத்தின் பயன்பாடு

முந்தைய பதிவுகளில் வரதட்சணை சட்டத்தைப்பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தேன். அதனை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? - பாடம் 3 ல் குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளை மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்கிறேன். படித்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.



1. தனிக்குடித்தனம் போகவேண்டும் (இந்தவகையான பயன்பாட்டிற்கு பின்வரும் செய்தி ஒரு நல்ல செயல்முறை உதாரணம்)

2. மாமியார், மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்

3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்

4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்

5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்

6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்

7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.

தனிக்குடித்தனம் போகவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள பயன்பாட்டிற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுத்து விளக்குவதற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. வழக்கம் போல படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.



செப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி


தனிக்குடித்தனம் வராத கணவன் மீது வரதட்சணை வழக்கு


சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார்.

கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.



வாழ்த்துக்கள்!


வெளிநாட்டு இந்திய கணவனுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நெத்தியடி

வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்த எல்லைகள் எப்போதும் தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செய்தி. மருமகள்கள் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.


செப்டம்பர் 04,2011 தினமலர்

புதுடில்லி: "வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், அங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


ஆந்திராவைச் சேர்ந்தவர் தோட்டா வெங்கடேஸ்வரலு. இவர், தன் மனைவி சுனிதாவுடன், போஸ்ட்வானாவில் வசித்து வந்தார். இவரின் மனைவி சுனிதா, சமீபத்தில் போஸ்ட்வானாவில் இருந்து, ஆந்திராவுக்குத் திரும்பினார். ஆந்திராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், வெளிநாட்டில் வசிக்கும்போது தன் கணவர் வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாகப் புகார் தெரிவித்தார். ஆந்திராவில் உள்ள கூடுதல் முன்சீப் கோர்ட்டில், இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து, வெங்கடேஸ்வரலு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "வெளிநாட்டில் நடந்த ஒரு சம்பவத்துக்காக, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது. எனவே, என் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சிரியாக் ஜோசப், எஸ்.எஸ்.நிஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் வசிக்கும் ஒருவர், இங்கு குற்றச் செயலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே நடவடிக்கையை, அவர் வெளிநாட்டில் செய்த குற்றச் செயல்களுக்கும் எடுக்க முடியும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், வெளிநாட்டில் குற்றம் செய்தால், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும். அதேநேரத்தில், இந்த விசாரணையைத் துவங்குவதற்கு முன், மத்திய அரசிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


நான் முந்தைய பதிவுகளில் கூறியிருப்பது போல வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று மருமகள்கள் முடிவு செய்துவிட்டால் உடனடியாக அவர்கள் நாடவேண்டிய நாடு இந்தியா. இந்தியா மட்டுமே!

குற்றச் சம்பவம் வேறுநாடுகளில் நடந்தாலும் மருமகள்கள் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறை மற்றும் நீதித்துறைகளை நாடுவது அவ்வளவு நல்லது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் இருப்பது போல பரிசுத்தமான ஊழலற்ற காவல் மற்றும் நீதித்துறைகள் வேறு நாடுகளில் எங்குமே கிடையாது. அதனால் கணவன் செய்யும் கொடுமைகள் பற்றி மருமகள்கள் தங்கள் கணவனுடன் வசிக்கும் அந்த நாடுகளில் இருக்கும் காவல் துறையில் புகார் செய்வதை விட இந்தியாவிற்கு வந்து புகார் கொடுத்தால்தான் மருமகள் விரும்புவதை அடைய முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த வழிமுறையில் பல மருமகள்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மருமகள்கள் கணவன் மீது புகார் கொடுக்க இந்தியாவிற்குகூட நேரில் வரவேண்டும் என்று அவசியமில்லை. வெளிநாட்டில் தங்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீது வரதட்சணைப் புகாரை இந்தியாவில் பதிவு செய்யலாம்.

வெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:

National Commission for Women, India
4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi - 110 002
Phone: 91-11-23237166
91-11-23236988
Fax: 91-23236154
Complaints Cell:
91-11-23219750
Email: ncw@nic.in

Click Here to File Complaint Against NRI Husband


வாழ்த்துக்கள்!!!