"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்திய சமூகம் ஆபத்தானது: மருமகள்களே உஷார்!

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்திய சமூகமே சீரழிந்துகொண்டிருக்கிறது. மருமகள்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் மருமகள்களே இந்திய வரதட்சணை தடுப்புச்சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) நீங்கள் கையில் எடுத்தால்தான் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

உங்களுக்குக் கொடுமை ஏற்படும் வரை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக சட்டங்களை எப்படிப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று பின்வரும் முந்தைய பதிவுகளில் தெரிந்துகொள்ளுங்கள்.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4


இந்தியாவில் மருமகளாக இருப்பதில் இருக்கும் ஆபத்துக்களைப்பற்றி இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால் நீங்கள்தான் உங்களை புத்திசாலித்தனமாக காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.


அக்டோபர் 31,2010 தினமலர்

புதுடில்லி : ""இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது,'' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

சத்யநாராயணா திவாரி என்பவர் தனது மனைவி கீதாவை, அவரின் தந்தையிடமிருந்து மாருதி காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினார். 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதற்கு திவாரியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்களுக்கு அலகாபாத் ஐகோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: இந்திய சமூகம் தற்போது, நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, சுப்ரீம் கோர்ட் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், அதிக எண்ணிக்கையில் இத்தகைய வரதட்சணைக் கொலை வழக்குகள் வரத்தொடங்கியுள்ளன. புதிதாக திருமணம் செய்து கொண்டு, ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு போகும் இளம்பெண்கள், தனது கணவனாலும், மாமனார் மற்றும் மாமியாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் எரிக்கப்படுகின்றனர் அல்லது, வலுக்கட்டாயமாக தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர். இந்த நாகரிக சமூதாயத்தில், பெண்கள் பயங்கரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவுமே கையாளப்படுகின்றனர். பொதுவாக, இத்தகைய கொடூரச் செயலுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அரிதிலும், அரிதாகவே, வரதட்சணைக் கொலை வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அத்துடன் திவாரிக்கும் அவரின் தாயாருக்கும் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.


திருமணம் செய்து கனவுகளுடன் மாமியார் வீட்டிற்குள் புகுந்தால் மட்டும் போதாது மருமகள்களே. அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை எப்படிப் பக்குவமாக பயன்படுத்தவேண்டும் என்ற கலையையும் நீங்கள் கற்றிருக்கவேண்டும். வேறு எந்த வேலை தெரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒவ்வொரு இந்திய மருமகளும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று கற்றறிந்து வைத்திருக்கவேண்டும். இதுதான் உங்கள் திருமணக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள பயன்படும் மந்திரம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!




வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை

இந்திய மருமகள்களுக்கு வழிகாட்டும் இந்த நல்ல பதிவுகளுக்கு வந்துள்ள கருத்துக்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

பலர் இந்த பதிவுகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பதிவு.

கடுமையான விமர்சனங்களில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதனைத்தொடர்ந்து அவர்களை சாந்தப்படுத்தும் வகையில் சில கருத்துக்களையும் கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.

==================================================

Anonymous said...

என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்து மேற்கத்தியக் கலாச்சார வழியில் இந்தியக் குடும்ப அமைப்பை வழிநடத்த இதைவிட சிறந்த ஒரு வலைப்பதிவு இருக்க முடியுமா?

வயது போன காலத்தில் நாய் படும்பாடு படப்போகும் உங்களை மாதிரியான புத்திசாலியான மருமகள்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Wednesday, October 27, 2010 6:20:00 AM PDT

=======================

Anonymous said...

wht abt your family?Are you living with your DOG? I Mean your Husband?

Saturday, June 12, 2010 5:30:00 PM PDT

=======================

மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.

குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 14, 2010 12:55:00 PM PDT

======================
Anonymous said...

தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....

Wednesday, December 30, 2009 1:24:00 PM PST

=======================

மேலே கருத்து சொல்லியிருக்கும் அனைவரும் இந்தப் பதிவுகள் ஏதோ மருமகள்களுக்கு தவறான வழிகாட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

திருமணமாகி கணவனின் குடும்பத்திற்கு செல்லும் மருமகள்கள் எப்படி தங்களது ஆட்சியை மாமியார் குடும்பத்தில் நிலைநாட்டுவது என்பதைத்தான் இந்தப் பதிவுகள் சொல்கின்றன. மருமகள்கள் தங்களது கைமேலோங்கி இருக்கச்செய்தால் அவர்களை யாரும் வரதட்சணைக் கொடுமை செய்யமுடியாதல்லவா?

அதற்காகத்தானே பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களை அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இவற்றை எப்படி பக்குவமாக மருமகள்கள் செயல்படுத்தலாம் என்று சொல்லிக்கொடுத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகத்தானே தேசிய பெண்கள் வாரியம், மாநில பெண்கள் வாரியம், பெண்கள் அமைச்சகம், பெண்ணுரிமை சங்கங்கள், பெண்ணுரிமை பேசும் வழக்கறிஞர்கள், மருமகள் கொடுக்கும் எல்லா வரதட்சணை வழக்குகளையும் பதிவு செய்யும் காவல்துறை நண்பர்கள் என்று ஒரு பெரிய மருமகள் ஆதரவுக் கூட்டமே நாட்டில் இருக்கிறது. மருமகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்த நுண்ணிய வலைப்பின்னலுடன் கூடிய அரசாங்க அமைப்பை முதலில் நன்கு புரிந்துகொண்டால் உங்களுக்கு இந்த தவறான எண்ணங்கள் தோன்றாது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய இதிகாசமான இராமாயணத்தில் கூட கணவனை வழிக்குக் கொண்டுவர மனைவி கணவனை எப்படி மிரட்டியிருக்கிறார் என்று பக்குவமாக சொல்லியிருக்கிறார்கள். இந்திய இதிகாசங்களை மதிப்பவர்கள் மருமகள்கள் சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறாக நினைக்கமாட்டார்கள்.

இராமாயணத்தில் வரும் இந்த இரண்டு பாடல்களைப் படித்து பொருளை உணர்ந்துகொண்டால் மருமகள்கள் கணவனை தன்வழிக்குக்கொண்டுவர சட்டங்களை தங்கள் வசதிப்படி பயன்படுத்தலாம் என்பது தெளிவாகும்.


3. கைகேயி சூழ்ச்சிப் படலம்

கைகேயின் தீஞ்சொற்கள்

'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,
வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23


தசரதன் தனக்குக்கொடுத்த வரத்தை இப்போது செயல்படுத்தி ராமனை காட்டிற்கு அனுப்பாவிட்டால் சொல்லிய வார்த்தையை காப்பாற்றாத மன்னன் இவன் என்று சொல்லி தற்கொலை செய்துகொண்டு அதற்குக் காரணம் என்னுடைய கணவன் தசரதன்தான் என்று எழுதிவைத்து ஊரறிய உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று தசரதனின் மனைவி கைகேயி தனது கணவனை மிரட்டியிருக்கிறார் என்று இந்த பாடல் வரிகள் சொல்கின்றன.

அதனால் இந்தக்காலத்து மருமகள்கள் தங்கள் கணவனை தங்கள் வழிக்குக் கொண்டுவர வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பயன்படுத்துவது என்பது ஒன்றும் ஏதோ புதியதொரு செயலாகக் கருத இயலாது.


தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்

'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,
கால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29


கைகேயி அப்படி மிரட்டியவுடன் தசரதன் அவளின் காலில் வீழ்ந்து கதறி அவளின் கட்டளைக்கு அடிபணிந்திருக்கிறான். மாமன்னன் தசரதனே மனைவியின் மிரட்டலுக்கு அடிபணிந்து காலில் விழுந்திருக்கிறான் என்றால் இந்தக்காலத்துக் கணவன்கள் எம்மாத்திரம். அதனால் மருமகள்கள் IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற அரசாங்கம் கொடுத்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் தங்கள் வழிக்குகொண்டுவருவது என்பது இந்திய இதிகாச மரபினை அடிப்படையாகக்கொண்டு நடக்கின்ற ஒரு மரபாகும். இதனை குறையென்று சொல்லலாமா?

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்கூட டில்லி உயர்நீதிமன்றம் திருமணத்தின்போது பெண் வரதட்சணை கொடுப்பது தவறு கிடையாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் 3வது பிரிவுப்படி வரதட்சணைக் கொடுப்பது குற்றமாக இருந்தாலும் அதை ஒரு பெண் செய்யும்போது அது குற்றமாகாது. அதே சமயம் கணவன் என்னை மிரட்டி வரதட்சணை வாங்கினான் என்று சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு கணவனை மட்டுமே வரதட்சணை சட்டத்தின் 3வது மற்றும் 4வது பிரிவுப்படி தண்டிக்கும். அதனால் மருமகள்கள் சட்டங்களை தேவைக்கேற்றபடி தயங்காமல் பயன்படுத்தலாம்.

அந்த செய்தியினையும் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



New Delhi: Giving dowry for fear that a proposed marriage may otherwise be called off is not an offence, the Delhi High Court has held while quashing an FIR against a bride and her family for conceding the demands of the groom's family.


Justice Ajit Bharihoke quashed the criminal proceedings after the bride and her family convinced the court that dowry was given under pressure. For, the bridegroom's family had threatened to cancel the marriage.


“As per the allegations in the complaint made by the petitioner [bride], the demand for dowry was made by the father of the respondent [bridegroom] at the time of engagement ceremony when he allegedly asked her father to concede his demand for dowry, failing which he would call off the marriage.


“From the aforesaid facts, it is obvious that the petitioner and her parents were confronted with the unenviable situation of either conceding the demand or facing loss of honour of their family in society, and if under that fear, the petitioner and her parents conceded the demand for dowry, they cannot be faulted as they were victims of the circumstances,” the court said.


Granting the bride relief, the court said, “She cannot be subjected to prosecution for the offence under the Dowry Prohibition Act.”


The court passed the order on the petition filed by Pooja Saxena challenging a lower court's order which directed the police to register an FIR against her and her family members, who alleged dowry harassment by her husband and in-laws. Sameer Saxena and his family members were accused of committing cruelty to Pooja by harassing her for dowry. The woman, in an FIR with the Roop Nagar police station, claimed that her family members had given huge dowry to Mr. Saxena at the time of their marriage.


Mr. Saxena later pleaded before the lower court that criminal proceedings be initiated against his wife and her family as she herself had admitted to giving huge dowry, which was an offence under the statute. The lower court on March 10 passed an order directing registration of the FIR on a petition filed by Mr. Saxena. — PTI


இந்த தீர்ப்பின் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எப்படி பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்று அடுத்தபதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!