"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


முதலிரவிற்கு வர மறுத்த கணவன்

வரதட்சணைக் கொடுமை எந்த விதத்திலெல்லாம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. கொடுமையைப் பற்றி சொல்வதற்குக்கூட கூச்சமாக இருக்கிறது.




ஓமலூர் : ஓமலூர் அருகே வரதட்சணை கொடுக்காததால், முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் உட்பட ஆறு பேர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் ஹேமலதா (27). அவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புநேசன் (29) என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.
அவர்களுடைய முதலிரவு நேற்று முன்தினம் இரவு நடப்பதாக இருந்தது. பல்வேறு ஆசைகளுடன் அறைக்குள் நுழைந்த ஹேமலதாவிடம் கணவர் அன்புநேசன், "வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை வேண்டும்; அதன் பின்னர் தான் முதலிரவு நடக்கும்' என்றார்.

அதை கேட்டு அதிர்ந்த ஹேமலதா, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் அன்புநேசனிடம் பேசினர். அன்புநேசனுக்கு ஆதரவாக அவருடைய தந்தை கண்ணன், தாய் காளியம்மாள், சகோதரி சாந்தி, மாமா கரியபெருமாள், உறவினர் சரோஜா ஆகியோர் ஒன்று சேர்ந்து, வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை கொடுத்தால் தான் முதலிரவு நடக்கும் என்று கூறி விட்டனர்.

இதையடுத்து, ஹேமலதா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் உட்பட ஆறு பேர் மீது புகார் செய்தார். எஸ்.ஐ., மல்லிகா விசாரித்து வருகிறார்.



செய்தித்தாளில் வந்துள்ள செய்தியில் ஒரு இளம் மருமகளின் முதலிரவை தடுத்து வரதட்சணை கொடுமை நடந்துள்ளது. பாவம் அந்த இளம் மருமகள். பல ஆண்டுகளாக முதலிரவைப்பற்றி பலவித கனவு கண்டு ஏக்கங்களோடு முதலிரவு அறைக்குள் நுழையும்போது கொடுத்த வரதட்சணை போதாது இன்னும் வேண்டும் அப்போதுதான் முதலிரவைப்பற்றிய உனது ஏக்கக் கனவுகளை தீர்த்துவைப்பேன் என்று கொஞ்சமும் கருணையில்லாமல் கணவன் கூறியிருக்கிறார். என்ன ஒரு கொடுமை!

கொடுமையான எண்ணமுடையன் கூட பெண்சுகம் என்று வரும்போது எல்லாவித கொடுமைகளையும் மறந்துவிடுவான். ஆனால் இந்தக் கணவன் முதலிரவன்றே தனது முதலிரவுக்கனவுகளைக்கூட மறந்து வரதட்சணைக்காக தனக்கு முதலிரவு நடக்காமல் போனால் கூட பரவாயில்லை என்று உணர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறாரே!

(சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கணவர் முதலிரவன்று டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு புதுமனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்:+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்)

இந்திய ஆண்களுக்கு “உணர்ச்சியே” இல்லாமல் எல்லாம் மறத்துப் போய் விட்டதா? பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா? பெண்கள் நலவாரியம் இதைப் பற்றி ஒரு சர்வே எடுத்து ஒரு புள்ளிவிபரம் கொடுத்தால் இந்திய மருமகள்களுக்கு இந்திய ஆண்களின் உணர்ச்சிகளைப் பற்றியும் அது தொடர்பாக நடக்கும் வரதட்சணைக் கொடுமை பற்றியும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்.

இதுபோன்று இனிவரும் காலங்களில் இளம் இந்திய மருமகள்களின் உணர்ச்சிகளை வரதட்சணையின் பெயரால் கணவன்கள் புண்படுத்தாமல் இருக்க இரண்டு வழிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தலாம்.

1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்.

1961ல் எழுதப்பட்ட இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.


THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

8-B. Dowry Prohibition Officers.-(1) The State Government may appoint as many Dowry Prohibition Officers as it thinks fit and specify the areas in respect of which they shall exercise their jurisdiction and powers under this Act.

(2) Every Dowry Prohibition Officer shall exercise and perform the following powers and functions, namely, -

(a) to see that the provisions of this Act are complied with;

(b) to prevent, as far as possible, the taking or abetting the taking of, of the demanding of, dowry;

(c) to collect such evidence as may be necessary for the prosecution of persons committing offences under the Act; and

(d) to perform such additional functions as may be assigned to him by the State Government, or as may be specified in the rules made under this Act.




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
Dated: 22/02/2005
Coram The Honourable Mr.Justice M.CHOCKALINGAM

Tamil Nadu Dowry Prohibition Rules, 2004 defines dowry prohibition officer as the police officer as Deputy Superintendent of Police of the Division concerned. It has been clearly mentioned in 5(xviii) of the said rules that the marriages performed within his jurisdiction are likely to be visited by him or his staff along with the police officers . Therefore, for this action, the visit becomes necessary.



இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி திருமணம் நடக்கும் பகுதிகளில் சமூக நல அலுவலரும், காவல்துறை அதிகாரியும் திருமணங்களில் திடீரென்று ஆய்வு செய்து சட்டவிரோதமாக வரதட்சணை பரிமாற்றம் நடக்கிறதா என்று ஆய்வு செய்து வரதட்சணையற்ற திருமணங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் மேலே செய்தியில் சொல்லப்பட்டுள்ளது போல “திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.” என்ற செய்தி வந்திருக்காது அல்லவா? புதுமண மருமகளும் முதலிரவில் ஏமாற்றமடைந்திருக்கமாட்டார் அல்லவா?

இந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை 1961 முதல் இன்றுவரை இந்த அலுவலர்கள் யாரும் இதுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அதனால்தான் இதுபோன்ற பல இளம் இந்திய மருமகள்களின் “முதலிரவு ஏக்கக்கனவுகள்” வரதட்சணையின் பெயரால் சிதைக்கப்படுகிறது.


அதனால் இந்த “வயக்ரா” சட்டத்தையாவது காவல்துறையும், சமூகநலத்துறையும் கண்டிப்பாக விழிப்புணர்ச்சியுடன் இருந்து ஒவ்வொரு திருமணத்திலும் செயல்படுத்தவேண்டும் என்று கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தால் இளம் மருமகள்களின் முதலிரவு ஏக்கக்கனவுகள் சிதையாமல் இருக்குமல்லவா?

2. இரண்டாவது வழிமுறை என்னவென்றால் செய்தித்தாள்களில் நாம் அவ்வப்போது படிக்கும் செய்திகளில் சில ஊர்களில் இரு பிரிவினரின் வேற்றுமையால் பாதியில் நின்ற தேரோட்டத் திருவிழாவை போலிஸார் வடம்பிடித்து இழுத்து தேரை நிலைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதுபோல வரதட்சணைப் பிரச்சனையால் பாதியில் நின்றுபோகும் முதலிரவு வைபவங்களையும் போலிஸார் உதவியோடு முடித்துவைக்கலாம். அதாவது காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முதலிரவு முடியும்வரை பாதுகாப்புக் கொடுத்து இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி முதலிரவை முழுமையாக முடித்துவைக்க உதவி செய்யலாம். இதையும் கடுமையான சட்டமாக இயற்றவேண்டும்.

தேசிய மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் இந்த இரண்டு வழிமுறைகளையும் புதிய சட்டமாக இயற்ற அரசிற்கு பரிந்துரை செய்தால் வருங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகி முதலிரவு கனவுகளோடு காத்திருக்கும் மருமகள்களின் வாழ்க்கை எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் நல்லமுறையில் அமையும்.

உங்களுக்கு இந்த புதிய சட்டங்ளைப் பற்றிய கருத்துக்கள் பிடித்திருந்தால் தேசிய மகளிர் வாரியத்திற்கும், பெண்கள் நல அமைச்சகத்திற்கும் உங்களது பரிந்துரைகளை எழுதி அனுப்புங்கள். இந்திய மருமகள்களின் நலனை காப்பாற்றுங்கள்.

===================

முந்தைய பதிவிற்கு வந்த விவாத கருத்திற்கு விளக்கம்


முந்தைய பதிவில் ஒரு வாசகர் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை மருமகள்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தினால் நீதிமன்றம் கேள்வி கேட்கும், மனைவி மீது கணவர் வழக்குத் தொடருவார் என்று எழுதியிருந்தார். அதற்கு தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உதாரணம் காட்டியிருந்தார். அவர் கொடுத்த தகவலின் ஒரு பகுதி:


“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.”


அந்த விவாதக் கருத்துக்களை “Comments” பகுதியில் படித்துப்பாருங்கள்:
விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

இந்த வாசகர் சொல்வது போல அவ்வப்போது செய்தித்தாள்களில் நீதிமன்றம் இப்படி சொல்லியிருக்கிறது, அப்படி சொல்லியிருக்கிறது என்று வரும் செய்திகளைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் அஞ்சத்தேவையில்லை.

இதுபோல அவ்வப்போது செய்தித்தாள்களுக்கு செய்தி தரும் விதமாக நீதிமன்றங்கள் செய்தி சொல்வது பல காலமாக நடந்துவரும் ஒரு சாதாரண சம்பவம். அவ்வளவுதான்.

மேலுள்ள செய்தியில் வாசகர் சொன்னதுபோல தில்லி உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு தீர்ப்பு சொன்னது. ஆனால் அதற்கு முன்பாகவே 2005ல் இந்திய உச்ச நீதிமன்றம் “சட்ட தீவிரவாதம்” என்றுகூட மருமகள்களுக்கு எதிராக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 2008ல் சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்தி மட்டுமே. அதனால் மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த கொஞ்சமும் தயங்கவேண்டாம்.


மேலுள்ள செய்தியில் கூட மருமகளின் பெற்றோர் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தோம் என்று பகிரங்கமாக செய்தித்தாளில் வரும் அளவிற்கு தாங்கள் வரதட்சணை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக காவல்துறை என்ன அவர்கள் மீது வழக்கா பதிவு செய்திருக்கிறார்கள்? வரதட்சணை கேட்டார்கள் என்று மருமகள் சொன்னதும் கணவன் உட்பட கணவன் வீட்டார் ஆறு பேர் மீதும் “முதலிரவிற்கு மருமகளுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை” என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை மருமகளின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுத்ததற்காக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதை நன்றாக கவனித்தீர்களா?

அதனால் நீதிமன்றங்கள் அவ்வப்போது சொல்லும் தீர்ப்புகள் எல்லாம் சும்மா அழுகின்ற கணவன்களின் வாயில் சப்பக்கொடுக்கும் “லாலிபாப்” மிட்டாய் போன்றது.


இன்னும் சொல்லப்போனால் இந்த சட்டங்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் மருமகளை தண்டிக்க வழிசெய்யும் எந்த சட்டங்களும் இந்தியாவில் சுத்தமாக கிடையவே கிடையாது.

வரதட்சணைக் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று சொல்லும் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3 வது பிரிவை பயன்படுத்தி எந்தக் காவல்துறை அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ இந்திய மருமகளுக்கெதிராகவோ அல்லது வரதட்சணைக்கொடுத்த அவரது பெற்றோருக்கெதிராகவோ
இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்ததில்லை, தண்டனையும் கொடுத்ததில்லை.


THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:


இப்படி சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சட்டத்தையே செயல்படுத்தாத காவல்துறையும், நீதிமன்றங்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மருமகளை தண்டிக்கவேண்டும் என்று எந்த சட்டப் புத்தகத்திலும் சொல்லப்படாத, இல்லாத சட்டத்தையா செயல்படுத்திவிடுவார்கள்? அதனால் இந்திய மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் துணிந்து செயல்படலாம்.

இந்த செய்திகளிலிருந்து மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை நீங்கள் வரதட்சணை தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் வேறுவிதமான உங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இதைவிட அரசாங்கம்
வேறு எப்படி உங்களுக்கு வெளிப்படையாக சொல்லித்தரமுடியும்?

மருமகள்களை பாதுகாக்கும் சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) எப்படி புத்திசாலித்தனமாக கணவனின் குடும்பத்திற்கெதிராக பயன்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துகொண்டால் மருமகள்கள் எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் இருந்தாலும் தங்களது வெற்றிக்கொடியை பட்டொளி வீசி பறக்கவிடலாம்.


வாழ்த்துக்கள்!




விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

இன்று வெளிவந்துள்ள செய்தியில் இந்திய இந்துமத மருமகள்களுக்கு ஒரு நற்செய்தியை இந்திய அரசாங்கம் தந்திருக்கிறது. திருமணம் என்ற அடிமைத்தளையிலிருந்து எளிய முறையில் விடுதலை பெற இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல மருமகள்கள் திருமண பந்தத்திலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ஆனால் இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சட்ட திருத்தம் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகள்களுக்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கும்.


தில்லி,​​ ஜூன் 10: ​ விவா​க​ரத்து பெறு​வ​தற்​காக நடை​மு​றை​கள் எளி​தாக்​கப்​ப​ட​வுள்​ளன.​ எனவே,​​ இனி அதிக நாள்​கள் காத்​தி​ரா​மல் விரை​வில் விவா​க​ரத்து பெற​மு​டி​யும்.​இ​தற்​கான சட்​டத் திருத்​தத்​துக்கு மத்​திய அமைச்​ச​ரவை வியா​ழக்​கி​ழமை அனு​மதி வழங்​கி​யது.​இ ​தன்​படி,​​ இந்து திரு​ம​ணச் சட்​டம் 1955 மற்​றும் சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டம் 1954 ஆகி​ய​வற்​றில் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கின்​றன.​

இனி சேர்ந்து வாழவே முடி​யாது என்ற கட்​டத்​தி​லும்,​​ ஜோடி​யில் ஒரு​வர் காணா​மல் போய்​வி​டு​வது,​​ கொடு​மைப்​ப​டுத்​து​வது ஆகிய பிரச்​னை​களை மைய​மா​கக் கொண்டு ஜோடி​யில் ஒரு​வர் மட்​டும் விவா​க​ரத்து கோரும் போது,​​ இனி எளி​தா​க​வும்,​​ விரை​வா​க​வும் விவா​க​ரத்து கிடைக்​கும்.​

தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை பிர​த​மர் மன்​மோ​கன் சிங் தலை​மை​யில் மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ இதன் பின்,​​ செய்​தி​யா​ளர்​க​ளைச் சந்​தித்த மத்​திய தக​வல் மற்​றும் ஒலி​ப​ரப்​புத் துறை அமைச்​சர் அம்​பிகா சோனி கூறி​யது:​கொ​டு​மைப்​ப​டுத்​தப்​ப​டு ​வது அடிப்​ப​டை​யில் விவா​க​ரத்​துக் கேட்​ப​வர்​கள்,​​ ஒரு​வர் விவா​க​ரத்து கோரி மற்​றொ​ரு​வர் விவ​கா​ரத்து வேண்​டாம் என்ற நினைத்து வழக்​கைத் தாம​தப்​ப​டுத்​து​வது போன்ற பிரச்​னை​களை தீர்க்​கும் வகை​யில் சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

சட்​டக் குழு மற்​றும் உச்ச நீதி​மன்​றம் பரிந்​து​ரைத்​த​தன் அடிப்​ப​டை​யில் இந்த திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.​ பாலின பேதம்,​​ கொடூ​ர​மாக நடந்து கொள்​வது,​​ வேறு மதத்​துக்கு மாறு​வது,​​ சரா​சரி மனி​த​ராக செயல்​ப​டா​த​தது,​​ குணப்​ப​டுத்த முடி​யாத தொழு​நோய்,​​ பால்​வினை நோய் போன்​றவை விவா​க​ரத்து பெற புதிய கார​ணங்​க​ளாக சேர்ந்​துக் கொள்​ளப்​பட்​டுள்​ளன.​தம்​ப​தி​யர் இரு​வ​ரும் ஒரு​மித்து விவா​க​ரத்து பெறும் இந்து திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 13-பி,​​ சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 28 ஆகி​ய​வற்​றி​லும் சிறு திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

வி​வா​க​ரத்து கோரி தம்​பதி இரு​வ​ரும் ஒரு மன​தாக மனு செய்​யும் போது,​​ அந்த மனு 6 மாதத்​துக்​குள் திரும்​பப் பெறப்​ப​டா​விட்​டால் நீதி​மன்​றம் விரை​வில் விசா​ரித்து விகா​ரத்து வழங்​கும்.​ அதி​க​பட்​சம் 18 மாதங்​க​ளுக்​குள் அவர்​க​ளுக்கு விவா​க​ரத்து வழங்​கப்​பட்டு விடும்.​ இ​ரு​வ​ருமே விவா​க​ரத்து கோரும்​போது அவர்​கள் விரை​வில் பிரச்​னை​யைத் தீர்த்​துக் கொள்​ள​வும்,​​ கொடு​மைக்கு உள்​ளா​கும் பெண்​க​ளின் நலனை கருத்​தில் கொண்​டும் இந்த சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கி​றது என்​றார் அம்​பிகா சோனி.​இந்த சட்​டத் திருத்​தத்​துக்கு நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளும் ஒப்​பு​தல் பெற வேண்​டும்.​ அதன் பின்​னரே நடை​மு​றைக்கு வரும்.


இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.

என்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.

வேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.

விவாகரத்திற்கு தயாராகும் மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

மனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.

விவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.

வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.

“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.

வாழ்த்துக்கள்!