"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வெளிநாட்டுவாழ் மருமகள்களுக்கு இந்திய அரசின் பண மழை!

வெளிநாடுகளில் வாழும் இந்திய மருமகள்கள் பலரும் தங்களின் கணவனாலும் இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தாலும் பலவித துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற மருமகள்களுக்கு உதவி செய்வதற்காக இந்திய அரசாங்கம் வருடந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்து இந்திய தூதரகங்களுக்கு அனுப்பிவருகிறது. இந்த விஷயம் பல ஆண்டுகளாக பல மருமகள்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

உங்கள் கணவன் ஏதாவது தொந்தரவு செய்தாலோ அல்லது உங்கள் சொல்லிற்கு கீழ்படிந்து நடக்காமல் இருந்தாலோ உடனடியாக நீங்கள் அருகிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


=======================================================

புதுடில்லி:
இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் கணவர்களால் கொடுமைக்கு ஆளாகும் அவர்களின் மனைவிகள் நிராதரவாய் கைவிடப்படுகின்றனர்.சமீபகாலமாக, இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக, அப்பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு முதல் அனைத்து உதவிகளையும் செய்வதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சகம், சில திட்டங்களை அறிவித்துள்ளது.

இத்திட்டங்களை, வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் செயல்படுத்தும். கடந்த 2008-09ல் பெண்களுக்கான சட்டரீதியான செலவுகளுக்காக, ஒரு தூதரகத்துக்கு இரண்டு லட்ச ரூபாயும், 2009-10ல் 15 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டன. ஆனால் பல தூதரங்கள் இந்த பணத்தை பயன்படுத்தவே இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தான், இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்கின்றனர். வரதட்சணை கொடுமைக்கு ஆளாகின்றனர்; கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

இவை அனைத்தையும் சீர்தூக்கி பார்த்த பார்லிமென்ட் குழு, சட்ட உதவிகளுக்கான நிதி உதவியை அதிகரித்தல், மத்திய அமைச்சகத்தின் உதவிகள் பற்றிய விளம்பரங்கள் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தூதரகங்கள் இந்த உதவியை பயன்படுத்தி கொள்வதிலுள்ள சட்டரீதியான சிக்கல்களை நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளும்படி, மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
=====================================================


நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாலு காசு சம்பாதிக்கவும் முடியும். அது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்காமல் தொடர்ந்து படியுங்கள்.

வெளிநாட்டில் நன்கு சம்பாதித்து உங்கள் கணவன் சேமித்துவைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துக்களில் 50% பங்கை பெற்று உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய மிகவும் அருமையான வாய்ப்பு. நீங்கள் இருக்கும் நாட்டிலேயே விவாகரத்து வழக்கைத் தொடர்ந்து கணவனின் சொத்தில் சரிபாதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

விவாகரத்து தொடர்பான நீதிமன்ற செலவிற்கு தேவையான பணத்தை இந்திய தூதரகம் உங்களுக்குக் கொடுத்து உதவும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு சிறு வேலைதான்.

இந்தியாவில் இருக்கும் உங்கள் பெற்றோரிடம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீதும் இந்தியாவில் இருக்கும் அவன் குடும்பத்தின் மீதும் வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ய சொல்லிவிட்டு நீங்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கணவன் உங்களை கொடுமை செய்வதாகவும் அதனால் விவாகரத்து செய்வதற்கு நிதியுதவி வேண்டும் என்று ஒரு மனுக்கொடுத்தால் போதும். நீங்கள் இருக்கின்ற நாட்டிலேயே உங்களுக்கு விவாகரத்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இருக்கும் வரதட்சணை வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு கணவனின் குடும்பத்திடமும் உங்கள் பெற்றோர் பணம் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு வகையில் வருமானம்!

இது போன்ற பல அரிய வாய்ப்புகள் வெளிநாட்டு வாழ் மருமகள்களுக்கு இருக்கின்றது. தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்ற அரசாங்க நிதியுதவி விஷயங்கள் தெரியாமல் ஒரு தென்னிந்திய இளம் நடிகை கணவனின் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி கையில் காசில்லாமல் அமெரிக்காவில் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரது தந்தை மிகவும் வேதனையடைந்து இந்தியாவில் வரதட்சணைப் புகார் கொடுத்து மகளின் நிலையை எண்ணி எப்படி வருத்தப்பட்டிருக்கிறார் பாருங்கள்!


The marriage of the petitioner's son and one Gayatri, daughter of the de-facto complainant took place on 08.12.2006.The marriage was not a happy one and several differences arose between the married couple. The de-facto complainant has preferred the complaint against the petitioner herein, his wife and son, the son having married the complainant's daughter Gayatri. The complaint reads as follows :-

'I am S.Raghuram, residing at 79, 3rd Street, Kamdar Nagar, Nungambakkam, Chennai 34,

My second daughter R.Gayathri, aged 23 years had an arranged marriage with Mr. Deepak Chandra Sekar, Son of B.V.Chandra Sekar on the 8th of December 2006. The marriage was celebrated with great pomp at Mayor Ramanathan Chettiar Centre Valliammal Hall, MRC Nagar, Santhome High Road, Madras-28. The marriage was attended by a number of well-known film personalities, politicians etc., as I am a reputed dance director in the film field.

In May 2007 Mrs. Savithri Chandrasekar the mother of Deepak Chandrasekar went to USA to visit her son and stayed in his house. As she has got a taste of the wealth of our family. She wanted to extract a huge sum from us and started harassing and intimidating my daughter. She wanted to get Rs.1,50,00,000/- to cover the expenses of her daughter and son-in-law who are going to migrate to the U.S.A. She demanded the money from my daughter and asked her to get it from me immediately. She prevailed on my son-in-law also and he also started abusing harassing and ill-treating her. My daughter tells me that the situation became so bad that she was injured when her husband beat her up. She had to take medical treatment for the injury.

My daughter is on dependent visa and her husband is at present having only work permit (H1 Visa). My daughter has no money of her own and the intention of the Chandrasekar is to prevent her from seeking adequate legal aid to defend her self in the U.S.A court.

The complaint dated 02.07.2007 which was forwarded to the Commissioner of police has been registered in Cr. No. 8/07 on the file of the first respondent police on 25.08.2007 and for offences under sections 498(A) and 506(i)IPC and 4 of Dowry Prohibition Act. On receipt of the complaint the respondent police had filed charge sheet against the three accused for offences u/s.406 and 498A IPC. The lower court has taken cognizance for offences u/s. 498A, 406 and 506(i) IPC and issued summons to the accused.

(முழு சோகக் கதையையும் இங்கே சென்று பாருங்கள் -->
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 12.03.2010, Crl.O.P. No. 5887 of 2009)







இப்படித் துள்ளித்திரிந்து சந்தோஷமாக இருந்த இளம் பெண் திருமணம் என்ற அடிமை சாசனத்தின் மூலம் மருமகள் என்ற அடிமையாகி வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகி கையில் காசில்லாமல் அமெரிக்காவில் எப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறார்! நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண மருமகள்களின் நிலை வெளிநாடுகளில் எவ்வளவு மோசமாக இருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.

அதனால் வெளிநாடுவாழ் மருமகள்கள் போதிய சட்ட அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். வெளிநாட்டில் இருப்பதால் தட்டிக்கேட்க ஆளில்லை என்று கணவன் கொஞ்சம் அதிகமாக வாலாட்டினால் வீட்டில் இருந்தபடியே நீங்கள் இந்தியாவில் இருக்கும் தேசிய பெண்கள் நல வாரியத்தில் கம்ப்யூட்டர் மூலம் மின்னணுப் புகார் கொடுக்கலாம்.

கீழுள்ள இணைப்பிற்குச் சென்று கணவனைப் பற்றி புகார் கொடுத்தால் கணவன் எந்த நாட்டில் இருந்தாலும் இந்தியாவிற்கு கைதி போல காலரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.
Register Your Complaint online

இந்தச் செய்தியை உங்கள் கணவனிடம் காட்டிவிட்டுப் பிறகு பாருங்கள். உங்கள் கணவனின் கதை “வெளியில புலி,வீட்டில எலி” என்று மாறிவிடும்!

அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் கணவனை அடக்கி ஆளுங்கள்.

வாழ்த்துக்கள்!


வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்

வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகும் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக IPC498A, Dowry Prohibition Act பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டிய ஆதாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.

இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Reporting Dowry Harassment
What should your complaint include?
  • Details of marriage including wedding card, marriage certificate, photos, videos etc.
இப்போதே உங்களின் திருமண அழைப்பிதழை தேடி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். போட்டோ மற்றும் வீடியோவை தனியாக ஒரு DVD காப்பி செய்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எப்போது எந்த விசேஷம் நடந்தாலும் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்வது போல ஒரு தட்டில் பூ பழங்கள் வைத்து கொடுப்பதுபோல ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது அந்தத் தட்டில்தான் பணம் வைத்துக்கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். முடிந்தால் அந்தத்தட்டில் பணம் இருப்பது போல ஒரு செட்டப் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பானது. நீங்கள் கொடுப்பதை விட உங்களது பெற்றோர் கொடுப்பதுபோல புகைப்படம் எடுத்துக்கொள்வது மிக மிக சிறப்பானது. அந்தப் புகைப்படத்தை யார் பார்த்தாலும் வரதட்சணை பரிவர்த்தனை நடந்ததாக நம்பிவிடுவார்கள்.
  • Name(s) of accused persons and their details like addresses and passports etc.

யார் மீதெல்லாம் புகார் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றிய விவரங்களை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!
  • Details of harassment like duration, time period, place and type of harassment.
கணவனுக்குத் தெரியாமல் தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை தேதி, நேரம், இடம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக வெளி ஊர்களில் இருந்து நாத்தனார் உங்கள் கணவனுடனோ அல்லது உங்களுடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவரங்களை தவறாமல் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
  • Details of demand of dowry, if any
  • Bank statement, if you have drawn dowry from the bank
  • Details of the cheque if you have paid the dowry in that form
பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது பெற்றோர் வங்கியிலிருந்து தங்களது சொந்த செலவிற்கு பணம் எடுத்திருந்தாலும் அந்த விஷயங்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது வரதட்சணை கொடுப்பதற்காகத்தான் அந்தப் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக புகாரில் கணக்குக் காட்டிவிடலாம்.

  • Details of the person to whom it was handed over.
கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்.
  • In case of physical violence, details of injuries and type of weapon.
  • Doctor’s prescription or case sheets of the treatment of such injuries.
எப்போதாவது அரிதாக வீட்டு வேலை செய்யும்போது (?) சிறு காயம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான ஆதாரத்தை பத்திரமாக ஒரு ஃபைலில் அழகாக தேதிவாரியாக அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள். புகார் கொடுக்கும்போது கணவனும் அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக்காக அடித்துக் கொடுமை செய்யும்போது ஏற்பட்ட காயம் என்று புகாரில் சேர்த்துவிடலாம்.
  • Details of the elders who had arranged the marriage and who tried to patch up the differences.
  • Places where the mediation/counselling sessions were held
கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு வந்த பெரிசுகளின் பெயர்களை விலாசத்துடன் முழுவிவரத்தோடு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வயதான கிழவன்களை உங்கள் பக்கம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கிழங்கள்தான் ஜொல்லுவிட்டுக்கொண்டு மருமகள் சொல்வதெல்லாம் நியாயம் என்று எங்கு வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு சத்தியம் செய்யத் தவம் கிடக்கும்.
  • Details of witnesses, especially independent witnesses and your own children.
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆண் கிழடுகளை சரிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போதும் வழக்கு நடக்கும்போதும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ உங்கள் சார்பாக வாக்குமூலம் கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ உதவியாக இருக்கும். உங்களுக்கு குழந்தை இருந்தால் இப்போதே கணவனுக்கெதிராக பேசுவதற்கு தயார்படுத்தி வைத்து விடுங்கள். தேவையான சமயத்திற்கு உதவும்.
  • Any written agreements during marriage.
  • Details of gifts in the form of movable property like jewels/cash/garments/vehicles and immovable property like plots/flats.
  • Any written/voice communication between the partners, the victim and the parents in the form of letters, emails, voice records etc.
கணவன் தரப்பிலிருந்து யார் எப்போது பேசினாலும் அவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள். வரதட்சணை தொடர்பான பேச்சை நீங்களே ஆரம்பித்து அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிடுங்கள். அதே போல கடிதத்தில் ஏதாவது பணம், நகை போன்ற சொற்கள் எங்காவது இருந்தால் அந்தக் கடிதங்களை தனியாக ஒரு ஃபைலில் சேகரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • Reasons for the delay in lodging the complaint, if any.
  • Signature of the victim and contact number.

ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த புதிய வழிமுறைகள் இருந்தாலும் எனக்கு அனுப்பிவையுங்கள். மற்ற மருமகள்களும் பயனடையட்டும்.

வாழ்த்துக்கள்!


மருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை

கணவனால் ஏற்படும் இடைஞ்சல்களை எதிர்கொள்ள இந்திய மருமகள்களுக்கு தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதற்காக புதிய இளைஞர் பாதுகாப்புப் படை இந்தியாவில் உருவாகியிருக்கிறது. கணவனை சமாளிக்கமுடியாமல் தவிக்கும் மருமகள்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை சமாளிக்க இதுதான் சரியான வழி. வரதட்சணை கொடுமை செய்யப்படுவதாக மருமகள்கள் கருதினால் (எவையெல்லாம் மருமகள்களுக்கு வரதட்சணைக் கொடுமை என்று முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்) உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் IPC498a, Dowry Prohibition Act, மற்றும் Protection for Women Against Domestic Violence Act (DV Act) சட்டப்பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்துவிடுங்கள். மறக்காமல் மாமியார், நாத்தனார் பெயர்களை சேர்த்துவிடுங்கள். இவர்கள்தான் எல்லா குடும்பங்களிலும் மருமகளை எப்படிக் கொடுமை செய்வது என்று கணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் மூளையாக செயல்படுபவர்கள். அதனால் புகாரில் கணவன் பெயரை சேர்க்க மறந்தாலும் இந்த மாமியார், மாமனார், நாத்தனார் பெயர்களை சேர்க்க மறந்துவிடாதீர்கள். பிறகு அவர்கள் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படநேரிடும்.

இப்படி மருமகள்கள் புகார் கொடுத்தபிறகும் சில கணவன்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி மருமகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கலாம். என்ன செய்வது இந்தியாவில் மருமகள்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் நாம் நாடளும் உரிமையில் 33% வேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டிய கீழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதனால் மருமகள்கள் தங்களின் பாதுகாப்பை தாங்களேதான் பொறுப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும். அதற்கு இதுபோன்ற தனியார் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும் தவறில்லை.



Wild Hot Men Indian based website provide service to all females. Wild Hot Men listing of India's Male Escort Agencies and Independent India's Male Escorts in India. We have a listing of Delhi ( Ncr), mumbai, Bangolre, hydrabad,chennai, pune , nagpur, jaipur, calcutta, lucknow, chandigarh, bhopal , kearal, gujrat, orrisa and all over from india male escorts to suit your every desire. We firmly believe in providing the real thing.

Wild Hot Men Agency is always looking to recruit high class male escorts who like to travel and also love india's social scene.


இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவை எப்படி சமாளிப்பது என்று இப்போது மருமகள்களுக்கு ஒரு லேசான யோசனை இருக்கும். கவலையே படாதீர்கள். அதற்குத்தான் கணவன் இருக்கிறான். வரதட்சணைப் புகாரை காவல்நிலையத்தில் கொடுத்த கையோடு உங்கள் ஊரிலுள்ள நீதிமன்றத்தில் பராமரிப்புச் செலவிற்கு கணவனிடமிருந்து பணம் வேண்டும் என்று ஒரு மனுவை போடுங்கள். அந்த மனு எழுதுவதற்கான சட்டப்பிரிவு CrPC125. இந்த சட்டப்பிரிவைப் பற்றி தெரிந்துகொள்ள முந்தைய பதிவை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.


நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு நடந்து எப்போது பணம் கிடைக்குமோ என்று சில மருமகள்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கும். மருமகள்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இந்த CrPC125 என்பது சாதாரணமாக விவாகரத்து வழக்குகளின்போது கொடுக்கப்படும் ஜீவனாம்ச வழக்கல்ல. இது கிரிமினல் சட்டப் பிரிவின் கீழ் வரும் வழக்காகும். அதனால் இந்த மனுவை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்தவுடன் மருமகளின் மாதாந்திர பராமரிப்பு செலவிற்கு கணவன் பணம் கொடுக்கவேண்டும் என்று உடனடியாக உத்தரவு போட்டுவிடுவார்கள். பணம் கொடுக்கவில்லையென்றால் கணவனுக்கு சிறைவாசம்தான். அதனால் உங்களின் செலவிற்காக இந்தப் பணம் உங்களின் வீடுதேடி மாதந்தோறும் தானாக நடந்துவந்து கதவைத் தட்டும்.


மற்றொரு முக்கியாமான விஷயம் என்னவென்றால் இந்தப் பராமரிப்புத் தொகையைப் பெற மருமகள் கணவனுடன்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மருமகள் தங்களின் வசதிக்கேற்ப எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களின் பராமரிப்புச் செலவை கணவன் கொடுத்தாகவேண்டும் என்பதுதான் இந்திய சட்டம். இந்திய மருமகள்கள் செய்த புண்ணியத்தின் பலன்தான் CrPC125!


இப்போது உங்களின் பாதுகாப்பு பராமரிப்பு செலவை எப்படி சரிகட்டுவது என்று தெரிந்துகொண்டீர்களல்லவா? உடனே வேலையை ஆரம்பியுங்கள். உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!