"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்"

வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? பாடம் 4

வழக்கம் போல் முன்பு சொல்லிய மற்ற பாடங்களை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது தான் இந்தப் பாடம் எளிதாகப் புரியும்.

மருமகள்களை ஏமாற்றும் மாமக்கள்!
தலைப்பு சரிதான். எழுத்துப்பிழையோ என்று எண்ண வேண்டாம். மாமாக்கள் அல்ல. மா மக்கள் என்றால் பெரிய மனிதர்கள் என்று அர்த்தம்.

இதுவரை மருமகள்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), பெண்கொடுமை சட்டம் (IPC498A) போன்ற சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படித் திறமையாகப் பயன்படுத்தி கணவனையும், மாமியார் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது, தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வது எப்படி என்பதையும் சில உதாரணங்களுடன் தெரிந்துகொண்டீர்கள். இனி இவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைப் பற்றி விளக்குகிறேன்.

"சாமி வரங்கொடுத்தாலும் அதை பூசாரி தடுப்பது போல" என்று உங்கள் வீட்டில் இருக்கும் சில பெரிசுகள் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கும். அதற்கு முழு அர்த்தத்தை நீங்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்தும்போது தான் உணர்ந்து கொள்வீர்கள்.

அதாவது அரசாங்கம் என்ற கடவுள் உங்களின் வாழ்க்கையை வளமாக்க வரம் கொடுப்பதுபோல பல சட்டங்களைக் கொடுத்திருந்தாலும் அவற்றை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவற்றைத்தடுக்கும் பூசாரிகள் போல பலர் இடையூறு செய்து அந்த வரங்களின் பலனை தாங்கள் அனுபவிக்க முயற்சிசெய்வார்கள். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் தான் நீங்கள் விழிப்புடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து சட்டங்களின் முழுப்பலனை அனுபவிக்க முடியும்.

முந்தைய செய்தியில் +2 மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகாரை போலிஸ் சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்று செய்தி வந்திருந்ததைப் பார்த்தோம். இது போன்ற பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியும் விளக்கியிருந்தேன். இது மருமகள்களுக்கு ஏற்படும் முதல்கட்ட இடையூறு. இதைத்தாண்டி வந்து வெற்றிகரமாக புகாரைப் பதிவு செய்த பிறகு அடுத்த கட்டமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பலனில் பங்குபோட சிலர் முயற்சிசெய்வார்கள். ஏமாந்துவிடாதீர்கள்!

ஏதோ மருமகளுக்கு நல்லது செய்வதற்காகவே இந்தப் புனிதப் பணியில் ஈடுபடுவது போல சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு முன்வருவார்கள். விட்டுவிடாதீர்கள். குறிப்பாக புகாரைப் பதிவு செய்த நபரும், புகாரை எழுதுவதற்கு உங்களுக்கு உதவி செய்த சட்டம் படித்தவரும் கூட்டணியாகச் சேர்ந்துகொண்டு "பஞ்சாயத்து" என்ற பெயரில் உங்களின் வருமானத்தில் பங்குபோட முயற்சி செய்வார்கள். இது எப்படி நடக்கும் என்று விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்.

முந்தைய பாடங்களில் சொல்லப்பட்டதுபோல எல்லா மருமகள்களும் வரதட்சணைகொடுமைக்காக இந்த சட்டங்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. சிலருக்குப் பணத் தேவை இருக்கலாம், சிலருக்கு இருக்கின்ற ஆளை வெட்டிவிட்டு வேறொரு ஆளுடன் சேர்ந்துகொள்ளலாம் என்ற பல உயரிய நோக்கங்கள் இருக்கலாம். இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியப்படாதீர்கள். நான் எழுதுவதற்காக ஏதோ சும்மா சொல்வதாக நினைக்கவேண்டாம். அதற்கான ஆதாரமாக தினமலரில் வந்துள்ள செய்தியின் ஒரு பகுதியைப் பாருங்கள் :


இளைய தலைமுறையினர், தற்போதைய அவசர கால வாழ்க்கையில் கணவனோ மனைவியோ இருவரில், ஒருவர் தன்னை விட பணத்திலும் குணத்திலும் சிறந்தவர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பழைய கணவன் அல்லது மனைவியைக் கழட்டி விடுகின்றனர். இதனால், கணவன் மனைவி உறவு என்பது பாதுகாப்பில்லாமல் தொடர்கிறது.


செய்தியில் இருப்பது போல கணவன்கள் நினைத்தபடி மனைவியை அவ்வளவு எளிதாகக் கழற்றிவிட முடியாது. ஆனால் மனைவிக்கு 498A போன்ற சட்டங்கள் கைகொடுத்து அவர்களது எண்ணத்தை எளிதாக ஈடேற்றிவைக்கின்றன.

இது போன்று சட்டத்தின் மூலம் உதவிபெறும் மருமகள்கள் போகிற போக்கில் கைச்செலவிற்கு பணம் தேவையென்றால் இந்த 498A கேசைப் போட்டுவிட்டால் முட்டாள் கணவன்கள் கைதானவுடன் சொல்லிவைத்தது போலவே கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிந்தாலும் எவ்வளவு பணம் வேண்டுமோ கொடுத்துவிட்டு கேசை முடித்துவிட்டு தப்பிப்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு நிறைய கணவன்கள் இருக்கிறார்கள் நாட்டில்.

ஏனென்றால் கைதானவுடன் தான் இந்த முட்டாள்களுக்கு ஞானம் வரும். திருமணத்தின் போது தாங்கள் மனைவியிடம் கொடுத்த "498A ரிமோட் கண்ட்ரோல்" இப்போது தான் ஞாபகத்திற்கே வரும். மருமகள்களுக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ள சட்டங்கள் இருப்பது போல கணவன்களுக்கு எந்த சட்டங்களும் இந்த நாட்டில் கிடையாது என்று அப்போதுதான் தேவலோகத்திலிருந்து புதியதாக ஒரு வாக்கு அவர்களின் காதில் ஒலிக்கும்! அதுவரை முட்டாளாக இருந்த கணவனுக்கு உடனடியாக ஞானம் பிறக்கும்!

அதனால் குடும்பத்தோடு கைதாகி வாழ்நாள் முழுவதும் சீரழிவதைவிட கையில் இருக்கின்ற காசை போட்டு இந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு எங்காவது கண்காணாமல் போய்விடலாம் என்று முடிவுசெய்து மருமகள் தரப்பிலிருந்து பேரம் பேசுவதற்கு ஏதாவது சிக்னல் வருகிறதா என்று வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடப்பார்கள்.

இது போன்ற நேரத்தில்தான் மருமகள்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இறைச்சி வாசத்தைக் குறிவைத்துப் பறந்து வரும் பிணந்திண்ணிக் கழுகுகள் போல சிலர் மருமகள்களுக்கும் அவரது கணவனின் குடும்பத்திற்கும் இடையே பேரம் பேசி வேலையை முடித்துத்தருவதாக வருவார்கள்.

ஆனால் இவர்கள் சொன்னபடி வேலையை முடிக்காமல் கணவனிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ஏதோ பாவப்பட்டு அவர்கள் வீட்டு காசை உங்களுக்கு பிச்சை போடுவது போல ஒரு தொகையை உங்களுக்குக் கொடுப்பார்கள். சிலசமயம் கொடுக்காமலும் போகலாம்!

இதுபோன்று அப்பாவித்தனமாக ஏமாந்து விடாமல் பேச்சுவார்த்தையில் நீங்களே நேரடியாக ஈடுபட்டு வேண்டியதை நேரடியாகப் பெற்றுக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் உறவிற்கு நடுவில் இடைத்தரகர்கள் எதற்கு? கடவுள் வரம் கொடுத்திருப்பது உங்களுக்கு அதற்கு நடுவில் பூசாரி எதற்கு? கிடைத்த வரத்தின் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள மருமகள்கள் மட்டுமே உரிமையுடையவர்கள்.

இது போல மருமகள்களின் நியாயமான வருமானத்தில் மாமக்கள் "கையைவைத்த" சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அதனால் மருமகள்கள் தாங்கள் உழைத்து சுயமாக சம்பாதிக்கும் பணத்தில் அடுத்தவர் குறுக்கிட்டுப் பங்கிடுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதே சமயம் நீங்கள் இருக்கும் போது உங்களது கணவரை அடுத்தவர் ஏமாற்றவும் இடமளிக்கக்கூடாது. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் பாசம் இருக்குமல்லவா? தங்கள் கண்ணெதிரேயே கணவரை அடுத்தவர்கள் ஏமாற்றுவதைப் பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் இல்லை.

இது வேலியே பயிரை மேயும் காலம்! அதனால் நாட்டு நடப்பை விழிப்புடன் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதோ சமீபத்தில் நடந்த சம்பவம்:


தினமலர்: ஜனவரி 16,2010

நகரி:வரதட்சணை வழக்கில் இருவீட்டாரையும் சமரசம் செய்து வைப்பதாக கூறி, பணம் வசூலித்த டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கும், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மசூதித் தெருவைச் சேர்ந்த குருவப்பாவின் மகள் அருணாவிற்கும், 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத் தம்பதிக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கணவனும் அவரது பெற்றோரும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் பணம் கொண்டு வரும்படி தொந்தரவு செய்வதாகவும், 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, அருணா புங்கனூர் போலீசில் புகார் செய்தார்.இதன் மீது வழக்கு பதிவு செய்த அப்போதைய புங்கனூர் எஸ்.ஐ., ராமகிருஷ்ணா, பத்ரிநாத் குடும்பத்தினரிடம் ஒரு தொகையை வசூல் செய்து தருவதாகவும், சமாதானம் செய்வதாகவும், அருணாவிடம் கூறி பணம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. பத்ரிநாத்திடம் இருந்து வாங்கிய பணத்தில், அதிக தொகையை போலீசாரே எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில், பத்ரிநாத்திடம் இருந்து போலீசார் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள, அருணா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழக்கு விசாரணையையும் புங்கனூர் போலீசார் துரிதப்படுத்தவில்லை. பத்ரிநாத்திடம் வாங்கிய பணத்தை, போலீசார் அருணாவிடமும் கொடுக்கவில்லை. பத்ரிநாத்திடமும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், அருணா, பத்ரிநாத் ஆகிய இரு குடும்பத்தினரும், சித்தூர் மாவட்ட எஸ்.பி., லட்சுமிரெட்டியை நேரில் சந்தித்து, நடந்த விவரங்களை கூறினர்.அதன் பேரில், பலமநேர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள், பத்மாகரரெட்டி,சீனிவாசுலு, எஸ்.ஐ., ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் நாராயணமூர்த்தி, நாகராஜ் ஆகிய ஆறு பேர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் அறிக்கைப்படி, மாநில டி.ஜி.பி., கிரிஸ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.



இதுபோல அப்பாவி மருமகள்களை ஏமாற்றும் விஷயங்களில் ஆண் பெண் என்ற பேதமே இல்லாமல் தான் நடக்கிறது இந்த ஏமாற்றுவேலைகள். அதற்கான உதாரணம் இதோ செய்தியாக வந்திருக்கிறது:




சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


போலிஸ் மட்டுமல்ல சில வக்கீல்களும் இந்தமாதிரி வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக உங்களுக்கு உதவி செய்வது போல பாசமாக இருக்கும் வக்கீல்களை நம்பாதீர்கள்.

நீங்கள் உங்கள் கணவரிடமிருந்து பெறப்போகும் மொத்த தொகையில் பெரும்பகுதியை உங்களுக்கே தெரியாமல் "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல" பக்குவமாக எடுத்துக்கொள்ளும் திறமைபடைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை என்று பெரிதாகப் பேசி உங்களை வட்டமடிக்கும் வக்கீல்களை சுத்தமாக நம்பாதீர்கள்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்தக் கேசுகளை பதிவு செய்ய உங்களுக்கு வக்கீலின் உதவியே தேவையில்லை. நீங்கள் போய் போலிஸில் புகார் கொடுத்தவுடன் வழக்கை அரசாங்கமே ஏற்று நடத்தும். அரசாங்க வக்கீல் தான் அரசு பணத்தில் இந்த வழக்கை நடத்துவார். அதனால் மருமகள்கள் தனியாக வழக்கறிஞர் வைத்து கேசை நடத்தவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதே போல பஞ்சாயத்து செய்வதற்கும் எந்த இடைத்தரகரும் தேவையில்லை. பேரத்தை நீங்களே நேரடியாகப் பேசி முடித்து முழுத்தொகையையும் பெற்று உழைப்பின் பலனை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

இதோ அரசு வழக்கறிஞர் ஒருவர் மருகளை ஏமாற்ற முயற்சி செய்த செய்தி:



கோவை : கோவையில் வரதட்சணை வழக்கில், தொழிலதிபரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட அரசு உதவி வக்கீலை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர். கோவை, கணபதி, சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் ராஜகோபால் (60). இவரது மகள் சபீதா(20) எம்.இ., பட்டதாரி. இவருக்கும், கோவை ஆவராம்பாளையத்தில் வசிக்கும் துரை என்பவருக்கும், 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.

வரதட்சணை கேட்டு கணவர் துரை துன்புறுத்துவதாக, சபீதா போலீசில் புகார் செய்தார். சமீபத்தில், வழக்கின் விசாரணையை முடித்த போலீசார், கணவர் துரை உள்ளிட்டோர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் கேட்டு, வழக்கு ஆவணங்களை, கோவை அரசு உதவி வக்கீல் நாகராஜனுக்கு அனுப்பினர். கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையான ஆதார ஆவணங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்கு, ராஜகோபாலனிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார் வக்கீல் நாகராஜன். இது தொடர்பாக ராஜகோபால், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதுவரை அரசு துறை அதிகாரிகளை மட்டுமே பொறிவைத்து பிடித்த போலீஸ் அதிகாரிகள், இந்த புகாரை மிகவும் சவாலாக எடுத்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கினர்.

போலீசாரின் ஆலோசனைப்படி, அரசு உதவி வக்கீல் நாகராஜனிடம் ஒரு லட்சம் ரூபாயில் ரூ.15 ஆயிரத்தை முன் பணமாக தருகிறேன் என ராஜகோபால் கூறினார். லஞ்ச ஒழிப்பு துறையினர், "பினாப்தலின்' ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜகோபாலிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று காலை தனது வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கிய அரசு உதவி வக்கீல் நாகராஜனை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து வக்கீல் நாகராஜன் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.1.5 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்நடவடிக்கை கோர்ட் ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று அப்பாவி மருமகள்கள் ஏமாற்றப்படுவதை தேசிய பெண்கள் வாரியமும் உறுதிபடுத்தியிருக்கிறது:


"National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it is lack of awareness that is exploited by lawyers and police"


இது ஒன்றும் பழைய காலமல்ல. மருமகள்களை இனியும் யாரும் ஏமாற்றமுடியாது. இடைத்தரகர்களை அணுகி ஏமாந்துவிடாதீர்கள்! குறிப்பாக "மாமக்களிடம்" ஏமாந்துவிடாதீர்கள்! தைரியமாக களத்தில் இறங்குங்கள். பணப் பரிவர்த்தனையை நேரடியாகப் பேசி முடியுங்கள். மருமகள்களுக்கு கிடைக்கவேண்டிய முழு உரிமையையும் சட்டங்களின் பலன்களையும் நேரடியாக அனுபவியுங்கள்.

வாழ்த்துக்கள்!





+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்

நேற்று செய்தித்தாளில் பரபரப்பாக ஒரு வீரமான இளம் மருமகளைப் பற்றி செய்தி வந்திருந்தது கவனித்தீர்களா?

அக்காவை பெண் பார்க்கச் சென்றவருக்கு +2 படிக்கும் தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டனர் பெண்ணின் பெற்றோர். ஆனால் என்ன காரணத்தாலோ தெரியவில்லை இந்த புது மருமகள் திருமணமான அடுத்த நாளே போலிஸில் வரதட்சணை புகார் கொடுத்திருக்கிறார். அதை போலிஸ் பதிவு செய்ய மறுத்திருக்கிறார்கள். இந்த வீரமான மருமகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். இந்த இளம் மருமகளிடமிருந்து பல மருமகள்கள் வீரத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

செய்தித்தாளில் வந்த செய்தியைப் பாருங்கள்:

======================================================

திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்

தினமலர்: ஜனவரி 19,2010

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், மண்டபம் கேம்ப் மணிகூண்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் மகன் சரவணன் என்பவருக்கும் 2009ம் ஆண்டு நவ., 29ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
சரவணன், ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். திருமணம் நடந்த மூன்று நாட்களிலே அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் விசாரித்ததில், சரவணன் மற்றும் அவரது தாயார் கஸ்தூரி, அண்ணன் மனைவி முனீஸ்வரி ஆகியோர் மேலும், 20 சவரன் நகை மற்றும் டூவீலர் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார். இம்மனு, பிரதீப்குமார் எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அனிதா கூறியதாவது:

எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார். உன்னை பிடிக்கவில்லை. உனது அக்காவைத்தான் திருமணம் செய்ய இருந்தேன். நான் கேட்கிறபடி கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொலை செய்து, வேறு திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அடித்தார். இவ்வாறு அனிதா கூறினார்.

======================================================


இனி இந்த செய்தியிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான சட்டங்கள் தொடர்பான குறிப்புகளைக் காண்போம்:

  • எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர்கள் இந்திய வரதட்சணைத் தடுப்புச் சட்டப்படி குற்றவாளிகள் கிடையாது.
  • திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கிறது.

வரதட்சணை கொடுத்ததாக பகிரங்கமாக செய்தித்தாளில் அறிவிப்பு செய்தாலும் வரதட்சணை கொடுத்த பெற்றோர்கள் வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 3-ன் படி தண்டிக்கப்படமாட்டார்கள. நான் முன்பு எழுதிய பதிவுகளில் சொன்னது போல இதுவரை வரதட்சணை கொடுப்பவர்களை தண்டித்த சம்பவம் இந்திய சட்ட வரலாற்றில் நடந்ததே கிடையாது. அதனால் மருமகள்கள் செய்தித்தாளுக்கு செய்தியளிக்கும்போது அற்பத்தனமாக இல்லாமல் பெருந்தன்மையுடன் கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். அப்போது தான் நீங்கள் சொல்லும் அளவிற்கு போலிஸும் நீதிமன்றமும் கணவரிடமிருந்து வசூல் செய்து தருவார்கள். கிடைத்தவரை லாபம் தானே!

  • தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார்.

எப்போதும் கணவர் மீது மட்டும் புகார்கொடுத்தால் அது வரதட்சணை தடுப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வதாகக் கருதப்படும். அதனால் முடிந்த அளவிற்கு ஆட்களை சேருங்கள். "சிங்கம் மட்டும் தான் சிங்கிளாக வரும், பன்றி கூட்டமாகத்தான் வரும்". மருமகளைப் பொறுத்தவரை கணவரின் குடும்பம் பன்றிக் கூட்டத்திற்கு சமம். அதனால் எப்போதும் வரதட்சணைப் புகாரில் கூட்டமாக எழுதுங்கள்.

  • திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார்.

இந்தக் கணவருக்கு புது மனைவியின் போதையைவிட டாஸ்மாக் போதை மிகவும் பிடித்திருக்கிறது. உலகத்திலுள்ள எந்த ஆணுக்கும் புதுமனைவி என்றால் ஒரு தனி போதை இருக்கும். ஆனால் அதையும் மிஞ்சும் அளவிற்கு நல்ல தரமான சாராயத்தை விற்பனை செய்வதற்காக அரசாங்கத்தை இந்த இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும்!

  • இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால்....நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார்.
இந்த +2 மாணவியை அவரின் வீரச்செயலுக்காக இந்திய மருமகள்கள் சார்பாக பாராட்டியே ஆகவேண்டும். படித்துப் பட்டம் பெற்ற எத்தனையோ மருமகள்கள் வரதட்சணைப் புகார் கொடுக்காமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இதுபோன்ற வீரமான இளம் மருமகள்கள் ஒரு கலங்கரை விளக்காக இருக்கிறார்கள்.

இதுபோன்று நீங்கள் கொடுக்கும் புகாரை போலிஸ் வாங்க மறுத்தாலோ அல்லது நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ கொஞ்சமும் தயங்காமல் 100 ( To Report A Crime - Control Room 100) என்ற எண்ணுக்கு போன் செய்து கண்ட்ரோல் ரூமில் காவல்நிலையத்தில் புகாரை வாங்கமறுப்பதாக சொல்லுங்கள். பிறகு பாருங்கள் போலிஸ் எப்படி அவசரகதியில் உங்கள் புகாரை பதிவுசெய்கிறார்களென்று தெரியும்.

அதனால் நீங்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தால் தான் விடிவுகாலம் கிடைக்கும் என்று பயந்துவிடாதீர்கள். கலெக்டரிடம் மனு கொடுப்பதெல்லாம் பழைய ஸ்டைல். இப்போது நேரடியாக முதல்வர் அல்லது டிஜிபி அலுவலகத்திற்கு போன்செய்து புகார் கொடுக்கலாம். இதோ உங்களின் வசதிக்காக அந்த தொலைபேசி எண்கள். குறித்துவைத்துக்கொள்ளுங்கள். கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ வாலாட்டினால் உடனடியாக புகார் கொடுக்கலாம். அதை வாங்க மறுக்கும் போலிஸைப் பற்றிப் புகார் கொடுக்க இந்த எண்கள் பயன்படும்.

24 hours Telephone Desk at CM office & DGP office

24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.

CM Office 044-25672510

Control Room (DGP Office) 044-28447200


இது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers

Women help Line - 1091

மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்கள் தங்களுக்கு எதுவும் கிடையாதா என்று ஏக்கத்தோடு எண்ணிக்கொண்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது! இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.


மின்னஞ்சல் மூலமாக மாமியார் மீதும் கணவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க


இப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!





மனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி

மருமகள்களே இதுவரை நீங்கள் வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் பற்றிய மூன்று பாடங்களைப் படித்திருக்கிறீர்கள்.

நீங்கள் இதுவரை படித்த பாடங்களில் வரதட்சணை தடுப்புச்சட்டம் (Dowry Prohibition Act) மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC498A) ஆகிய சட்டப்பிரிவுகளைப் பற்றி விளக்கியிருந்தேன்.

அடுத்த முக்கியமான பாடமான குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்திற்கு போவதற்கு முன் இதுவரை நடத்தப்பட்ட பாடங்கள் எந்த அளவிற்கு எளிமையாக இருந்தது, எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரிந்து கொள்ள இது ஒரு சுய பரிசோதனை. மருமகள்கள் தங்களுக்குள்ள சட்டங்களைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்ற அக்கறையில் மருமகள்களுக்காவே இந்த சிறப்பு செயல்முறை விளக்கப் பாடத்தை உருவாக்கியிருக்கிறேன்.

"செத்தால் தான் சுடுகாடு தெரியும்" என்று ஒரு சொல்வழக்கு இருக்கிறது. அது மருமகள் விஷயத்தில் எடுபடாது. அதனால் வரதட்சணை அல்லது மருமகள் கொடுமை தடுப்புச்சட்டத்தை எப்போது பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் கொடுமைக்கு உள்ளாகும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு முன்பாகவே இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கொடுமைகளைப்பற்றி நன்கு பகுத்துணர்ந்துகொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் எப்போதும் நீங்கள் விழிப்பாக இருந்து உங்களுக்கு கணவராலும் அவரது குடும்பத்தாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழைக்கப்படும் கொடுமைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப சட்டங்களைப் பயன்படுத்தி அவர்களை அடக்கியாள முடியும்.

மருமகள்கள் சட்டத்தை நன்கு புரிந்துகொள்வதற்காகவே பெண்களின் தோழர், மருமகள்களின் விடுதலை விரும்பி பாரதியாரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். கீழே உள்ள வீடியோவில் அதைக் காணுங்கள். பிறகு நீங்கள் கண்ட காட்சிகளில் உள்ள பெண்ணுரிமை சட்டங்கள் தொடர்பான சில விளக்கங்களை வீடியோவைப் பார்த்த பிறகு தொடரலாம்.





மருமகள்களே, வீடியோவைப் பார்த்து விட்டீர்களா. இப்போது சட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு சில விளக்கங்களைக் காணலாம். அதற்கு முன் IPC498A வை ஒரு முறை நினைவிற்கு கொண்டு வாருங்கள். மறந்து போன மருமகள்கள் இங்கே சென்று ஒரு முறை படித்துக்கொள்ளவும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பாடம் 3

1. காட்சியின் தொடக்கத்தில் பால்காரர், மளிகைக் கடைக்காரார், வீட்டின் சொந்தக்காரர் ஆகிய மூவரும் தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அவை கொடுக்கப்படவில்லை.

2. அடுத்த காட்சியில் இந்த மூவரும் பாரதியாரின் மனைவியிடம் கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்டு மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இது மனைவிக்கு கணவனால் மறைமுகமாக ஏற்பட்ட கொடுமையாகும். இதில் மனதளவில் பாதிப்பு ஏற்படலாம். இது IPC498A பிரிவின் கீழ் வரும் கொடுமையாகும்.

உங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் கணவராலோ அல்லது அவரது குடும்பத்தாலோ உருவாக்கப்படுகிறதா என்று விழிப்புடன் கவனியுங்கள்.

3. அடுத்து வரும் காட்சியில் மனைவி வீட்டில் சமைப்பதற்கு கூட அரிசி இல்லாமல் பக்கத்து வீட்டில் சென்று அவமானப்பட்டு கடன் வாங்கி வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்கள் மனைவியை அவமானப்படுத்தினால் அதுவும் கணவனால் மறைமுகமாக ஏற்படுத்தப்பட்ட கொடுமையாகக் கருதலாம். அதனால் இதுவும் IPC498A பிரிவின் கீழ் கணவனும் அவனைச் சார்ந்தவர்களும் (கணவனுக்கு தெரிந்தவராக பக்கத்துவீட்டுக்காரர்களாக இருந்தால் கூட போதும்) கொடுமை செய்ததாகக் கருதப்படும்.

உங்கள் கணவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ தெரிந்தவர்கள், நண்பர்கள், அல்லது உறவினர்கள் இது போல உங்களது மனம் புண்படும்படி நடந்து கொள்கிறார்களா என்று கவனமாக கண்காணியுங்கள்.

4. கடைசியில் வரும் காட்சி தான் அப்பட்டமான IPC498A பிரிவின் கீழ் வரும் கொடுமையை நேரடியாக விளக்கும் காட்சியாகும். கணவன் தன் மனைவிக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுக்கவில்லை. அப்படியே மனைவி அவமானப்பட்டாவது கடன் வாங்கி வந்து சமைப்பதற்கு தயார் செய்தாலும் சமைப்பதற்குத் தேவையான அந்தப் பொருட்களை மனைவிக்குத் தெரியாமல் உணவு சமைக்க முடியாதபடி தூக்கியெறிந்து வீணடிப்பது மிகப்பெரிய கொடுமையாகக் கருதப்படும். இது மிகச்சரியாக IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்யவேண்டிய புகாராகும்.

உங்களுக்கு நேரத்திற்கு உணவு கொடுக்கப்படுகிறதா அல்லது உங்களுக்கு இருக்கும் உணவை யாராவது எடுத்து எங்காவது மறைத்துவைத்து விடுகிறார்களா, குறிப்பாக மாமியார்கள் இதுபோல உங்களுக்குப் பிடித்த உணவுவகைகளை பீரோவில் வைத்து பூட்டிவைத்து விடுகிறார்களா என்று மிகுந்த விழிப்புடன் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள். சில சமயம் சமைக்கும்போது மாமியார் கைதவறியோ அல்லது மறதியாகவோ
சமையலறையில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட்டால் அது உங்களின் கண்களிலிருந்து அந்தப் பொருட்களை மறைப்பதற்காகச் செய்யும் கொடுஞ்செயலாகக் கருதப்படவேண்டும். இந்தவகையான கொடுமையை தாங்கள் மாமியார் வீட்டில் அனுபவித்ததாக பல மருமகள்கள் தங்களது புகார்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் கவனமுடன் இருங்கள்.

மேலும் இந்த வீடியோவில் மற்றொரு சட்டமும் அடங்கியிருக்கிறது. அது தான் இந்திய குற்றநடைமுறைச் சட்டப் பிரிவு 125. இந்திய குற்றநடைமுறை சட்டப் பிரிவு 125-ன் (Code of Criminal Procedure-CrPC 125) படி ஆண் என்பவன் (நன்றாக கவனிக்கவும் ஆண் மட்டும் தான்) தனது மனைவி, குழந்தை, மற்றும் பெற்றோர்களை தகுந்த உணவு, உடை, உறைவிடம் கொடுத்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவன் தண்டனைக்குள்ளாவான். இந்திய சட்டப்படி இது கொடிய கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் பெண் அல்லது மனைவி எவ்வளவு வசதியாக இருந்தாலும், கைநிறைய சம்பாதிக்கும் நல்ல பணியில் இருந்தாலும் இது போன்ற செலவுகள் செய்து தனது கணவனையோ அல்லது குழந்தைகளையோ, தனது பெற்றோரையே பராமரிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சட்டத்தில் மனைவியருக்கும், மருமகள்களுக்கும் முழு விலக்கு அளித்து அரசாங்கம் அவர்களுக்கு மரியாதை செய்திருக்கிறது. அதே சமயம் பெண்கள் தங்களின் பெற்றோர் வீட்டிலும், கணவரின் குடும்பத்திலும் உள்ள சொத்துக்களில் சமபங்கு பெறுவதற்கு முழு உரிமையையும் கொடுத்து இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்த சட்டங்களைப் பயன்படுத்தி கையில் நாலு காசு சேர்த்துக்கொள்ளுங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுவது தான் மனைவியருக்கும், மருமகள்களுக்கும் பாதுகாப்பு.

மேலுள்ள வீடியோவில் கடைசி காட்சியில் மனைவிக்கு இது போன்ற பாராமரிப்புகள் சரியாக செய்யப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. மாறாக உணவு சமைக்கமுடியாதபடி உணவுப்பொருட்கள் தரையில் வீசப்பட்டு மேலும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். அந்த அப்பாவி மனைவியின் கெட்டகாலம், அப்போது ஆங்கிலேயரின் ஆட்சி இருந்ததால் இதுபோன்ற CrPC 125, Indian Penal Code 498A போன்ற சட்டங்கள் இல்லை. அதனால் பாரதியார் இதுபோன்ற மனைவியர் பாதுகாப்பு சட்டங்களிலிருந்து தப்பித்திருக்கலாம். அவரது நல்லகாலம் தப்பித்துக்கொண்டார்.

இதோ அந்த CrPC 125 உங்களது நோட்டுப்புத்தகத்தில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

125. Order for maintenance of wives, children and parents.

(1) If any person leaving sufficient means neglects or refuses to maintain-

(a) His wife, unable to maintain herself, (கவனியுங்கள் முதல் உரிமை மனைவிக்குத்தான்) or

(b) His legitimate or illegitimate minor child, whether married or not, unable to maintain itself, or

(c) His legitimate or illegitimate child (not being a married daughter) who has attained majority, where such child is, by reason of any physical or mental abnormality or injury unable to maintain itself, or

(d) His father or mother, unable to maintain himself or herself.


மேலுள்ள வாக்கியங்களில் கவனித்தீர்களா? எல்லா வாக்கியமும் ஆண் அல்லது கணவன் என்று பொருள்படும்படி "HIS" என்று தான் ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களது கணவர் உங்களை அனைத்து விதத்திலும் பராமரிக்க சட்டப்படி கடமைப்பட்டவராவார்.

என்றைக்குத் திருமணத்தின்போது இந்த முட்டாள்கள் தாலியை உங்களது கழுத்தில் கட்டுகிறார்களோ அன்றே CrPC 125 என்னும் இரும்புச் சங்கிலியை தங்களது கையில் கட்டிக்கொள்கிறார்கள். தாலியில் போடப்படும் முடிச்சு அவன் கையில் தானே இரும்புச் சங்கிலியால் போட்டுக்கொள்ளும் முடிச்சாகும். முட்டாள் கணவர்கள் இதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரமாட்டார்கள். அதுவரை நமக்குக் கொண்டாட்டம் தானே!

IPC498A ன் ரிமோட் கண்ட்ரோலை உங்களிடம் கொடுத்தது போல வழக்கம்போல் CrPC125 சங்கிலியின் மறுமுனையும் உங்கள் வசம் தான் ஒப்படைக்கப்படுகிறது. அதனால் மருமகள்களே உங்களுக்கு என்னவேண்டுமோ எல்லாவற்றையும் கொஞ்சம் கூட தயங்காமல் தைரியமாகக்கேட்டு உரிமையோடு வாங்கிக்கொள்ளுங்கள். சங்கிலியை லேசாக அசைத்து ஒரு குறிப்புக் காட்டினால் போதும் ஓடிவந்து வேண்டியதைக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம், போலிஸ், ஜெயில் தான்!

இந்த சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுக்குத் தேவையானதை உரிமையுடன் பெறுவதற்கு நீங்கள் கணவருடன் இருக்கவேண்டும் என்ற அவசிய கூட கிடையாது. கணவனின் ஒட்டு மொத்தக் கூட்டமும் பிடிக்காமல் தனியாகப் பிரிந்து வாழ்ந்தாலும் இந்த பராமரிப்புகளை குறையின்றி பெறலாம்.

மாமியார் வீடு பிடிக்கவில்லை, தனியாக வேறு வீட்டில் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்து அதற்குக் கணவர் ஒத்துழைக்கவில்லை என்றால் அது உங்களை மனதளவில் கொடுமை செய்வதற்கு சமம். அதனால் இதை IPC498A பிரிவின் கீழ் கொடுமை என்று கணவர் மீதும் மாமியார் மீதும் புகார் கொடுத்துவிட்டு நீங்கள் தனியாக வசதியான ஒரு வீடு பார்த்து இருந்து கொண்டு இந்த CrPC 125 பிரின் கீழ் ஒரு வழக்கைப் போட்டால் மாதந்தோறும் உங்களின் "அனைத்து வகையான" பராமரிப்பிற்கும் (Complete Maintenance) தேவையான பணம் உங்கள் வீட்டு வாசற்படிக்கே வந்து கதவைத்தட்டும். நீங்கள் எந்த வேலையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இதை விட வேறு என்ன வேண்டும்? சொர்க்கத்தில் கூட இது போன்ற வசதி கிடைக்குமா என்பது சந்தேகமே!

எனவே இந்திய மருமகளாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்கவேண்டும் என ஆனந்தக் கும்மியடியுங்கள். இந்திய மருமகள்களுக்கு மட்டுமே இந்த சிறப்பான பிறப்புரிமையை இந்திய அரசு செய்துகொடுத்திருக்கிறது. அதனால் இந்தப் பிறவியிலேயே இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் மருமகள்களுக்கு இது போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.

இப்போது ஓரளவிற்கு உங்களுக்கு IPC498A-வைப்பற்றிய செயல்முறை விளக்கம் நன்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். இன்று மற்றொரு புதிய சட்டப்பிரிவான CrPC125 பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். இவற்றையெல்லாம் இங்கு படித்தபிறகு எந்த மருமகளாவது இந்த சட்டங்களை இதுவரை பயன்படுதியிருக்கிறீர்களா? அப்படி பயன்படுத்தியிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்வதாக ஒரு சிறு சந்தோஷமடைவேன்.

வாழ்த்துக்கள்.



அவசரமாக முடிவெடுக்காதீர்கள் - மருமகள்களுக்கு மட்டும்

வரதட்சணை தடுப்புச்சட்ட பாடங்களுக்கு இடையே இந்த முக்கியமான செய்தியை மருமகள்களுக்கு அவசரமாக சொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் போலிஸ் ஒருவர் ஆள்மாறாட்டம் காரணமாக கொலை செய்யப்பட்ட செய்தியை எல்லா மருமகள்களும் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். அந்த செய்தியைப் படிக்காதவர்களுக்காக இதோ அந்த செய்தி: தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள் . ஆனால் இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் கதையை யாரும் அந்த அளவிற்கு கூர்ந்து நோக்கியிருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்த சம்பவங்களிலிருந்து மருமகள்கள் ஒரு முக்கியமான பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.

இந்த கொலைக்குப் பின்னால் ஒரு மருமகளால் அவசரகதியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு இருக்கிறது. தனக்கும் தன் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் தன் கணவரின் மீது இருந்த பாசத்தால் தன்னால் வாழ இயலாத வாழ்க்கையை தனது கணவரும் வாழக்கூடாது என்று அவரை வாழவிடாமல் செய்வதற்கு அவசரப்பட்டு வேறு விதமான முடிவை அவர் தேர்வு செய்திருக்கிறார். அந்தக் குழப்பத்தில் வேறு ஒரு அப்பாவி பலியாகிவிட்டார். அந்த மருமகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தை செய்தித்தாளில் வெளியிட்டிருக்கிறார்கள். இதோ அந்த செய்தி:

கைதான எஸ்.ஐ. மனைவி பரபரப்பு வாக்குமூலம்
தினகரன் 1/13/2010

நெல்லை : நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. வெற்றிவேலை கடந்த 7ம் தேதி ஒரு கும்பல் படுகொலை செய்தது. விசாரணையில், குடும்ப தகராறில் கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனை கொல்ல திட்டமிட்ட அவரது மனைவியின் உறவினர்கள் ஆள் மாறாட்டத்தில் இந்த கொலையை செய்தது தெரிந்தது.

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நேற்று இவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்போது போலீசாரிடம் சிவகாமி அளித்த வாக்குமூலம்: எனக்கும், சிவசுப்பிரமணியனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆடம்பரமான முறையில் நடந்தது. திருமணம் நடந்து ஒருசில நாட்கள் மட்டுமே சிவசுப்பிரமணியன் என்னுடன் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு பிரிந்து சென்று விட்டார். என்னை திருமணம் செய்து என் வாழ்க்கையை நாசமாக்கியவர், வேறு யாருடனும் வாழக் கூடாது என்று நான் தெரிவித்ததால் எனது உறவினர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அவரை கொலை செய்ய ஆழ்வார்குறிச்சி சென்றவர்கள் ஆள்மாறாட்டத்தால் சிவசுப்பிரமணியனுக்கு பதில் எஸ்.ஐ. வெற்றிவேலை கொலை செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



இவர் ஏன் இப்படிக் கணவரை கொலை செய்ய முற்பட்டார் என்று ஆராய்ந்து பார்த்தால் "கொலையும் செய்வாள் பத்தினி" என்ற பழங்காலத்துப் பழமொழியை தவறாகப் புரிந்து கொண்டு இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பழங்காலத்து முறைகளெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? மருமகள்கள் இப்போது எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறார்கள். அதனால் காலமாற்றத்திற்கேற்ப மருமகள்கள்களும் மாறவேண்டும்.

அதற்காகத்தானே மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தனக்கு கணவர் துரோகம் செய்துவிட்டதாக நினைக்கும் மருமகள்கள் தான் வாழ இயலவில்லையென்றால் தன் கணவரும் வாழக்கூடாது, கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழக்கூடாது என்று நினைக்கும் போது அதை செயல்படுத்திக்கொள்ள பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே.

தான் வாழ இயலாத வாழ்க்கையை அடுத்தவரும் வாழக்கூடாது என்று நினைப்பது வராலாற்றுக் காலம் முதல் இருந்துகொண்டுதானே இருக்கிறது. ராமாயணத்தில் கூட இராவணின் தங்கை சூர்ப்பநகை தனக்கு இராமன் கிடைக்கவில்லையென்பதால் சீதைக்கும் அந்த வாழ்க்கை கிடைக்கக் கூடாது என்றுதானே ராவணனை தூண்டிவிட்டு இராமாயணத்தில் போரே ஏற்பட்டது? அது போலத்தான் மருமகளும் தன்னால் வாழ முடியவில்லையென்றால் கணவரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ வாழக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது இயற்கை தானே?

தனக்குப் பிடிக்காத ஒருவரை பழிவாங்க நினைத்து கொலை செய்ய நினைப்பது மிகவும் தவறு. அப்படி ஒரு முடிவெடுப்பது சட்டப்படி மிகவும் தவறு. அதற்குப் பதிலாக காலம் முழுதும் அந்த நபரும் அவரை சார்ந்தவர்களும் கஷ்டப்படவேண்டும் என்பதற்காகவே பல சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களைத்தானே மருமகள்கள் பயன்படுத்த வேண்டும். அது தானே சட்டங்களை மதித்து நடக்கும் மருமகள்கள் சட்டங்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதற்காகத் தானே IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்றவை மருமகள்களுக்காகவே இருக்கின்றன.

இதை சூர்ப்பநகை அன்றே செந்திருக்கிறாள். அதனால்தான் அவள் நடந்த விஷயங்களைக் கூறி ராமனை மட்டும் பிரச்சனையில் சிக்க வைக்காமல் சீதையைப் பற்றியும் கொஞ்சம் இராவணனிடம் போட்டுக்கொடுத்து ராமனின் குடும்பத்திலுள்ள அவனது மனைவியான சீதைக்கும் பிரச்சனை வரும் அளவிற்கு பிரச்சனையைப் பெரிதாக்கி அதன்பிறகு வரிசையாக பல ஆட்களை இந்த பிரச்சனைகளில் சிக்கவைத்து கடைசியில் வரலாற்றுப் புகழ்மிக்க பெரும் போராக மாற்றினாள்.

அதனால், தான் வாழ இயலாத வாழ்க்கையை கணவர் மட்டுமல்ல அவரது குடும்பத்திலுள்ள எவரும் வாழக்கூடாது என்று மருமகள்களுக்கு ஒரு எண்ணம் தோன்றி அதன் விளைவாக வரதட்சணை கேசுகளில் கணவரின் குடும்பதிலுள்ள அனைவரின் பெயரையும் புகாரில் சேர்த்து எழுதுவதென்பது சூர்ப்பநகை காலந்தொட்டே வழிவழியாக நடக்கும் வரலாற்று மரபு அல்லவா!
அதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியுமா?

இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மாமியாரின் குடும்பத்திலிருந்து ஐந்து பேராவது வழக்கில் சிக்குவார்கள். இந்த எண்ணிக்கைக்கு குறைந்து இது வரை எந்த வரதட்சணை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக சரித்திரமே கிடையாது.

இந்த வழக்குகளில் சிக்கினால் கணவரால் திரும்பவும் ஒரு நல்ல வாழ்க்கை வாழவே முடியாது. ஏனென்றால் ஆயுளின் பாதிக் காலம் வரை நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் நிம்மதியை தொலைத்து நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். மருமகள்கள் தங்களின் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள இதை விட வேறு சிறந்த பாதுகாப்பான வழிமுறை ஏதாவது இருக்கிறதா?

இப்படி எளிய சட்டங்கள் இருக்கும்போது கொலை போன்ற கொடிய செயல்களில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வது அறிவிற்சிறந்த மருமகள் எடுக்கும் சரியான முடிவாகுமா? அப்படியில்லாமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் நினைத்த காரியத்தையும் சாதித்துவிட்டு சந்தோஷமாக இருப்பது தானே புத்திசாலித்தனம்? யோசியுங்கள்.

இனிவரும் காலங்களில் மருமகள்கள் இது போன்ற கொலை முயற்சிகளில் ஈடுபட்டு சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் அந்த சட்டங்களையே பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தையும் சிக்கலில் மாட்டிவைப்பது தான் புத்திசாலி மருமகள்களுக்கு அழகாகும்.

இது போன்று உணர்ச்சி வசப்பட்டு
பழைய காலத்து முறைகளில் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கி தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் மருமகள்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற ஒரு மிகச் சிறப்பான சட்டப்பிரிவை இயற்றிருக்கிறது.

இந்த சட்டம் மருமகள்களுக்கு ஒரு கற்பக விருக்ஷ்ம் என்றே சொல்லலாம். இந்த சட்டப்பிரிவின் மூலம் எல்லாவித எண்ணங்களையும் மருமகள்கள் அடையப்பெறலாம். என்ன இல்லை இந்த சட்டப்பிரிவிற்குள்? இந்த சட்டப்பிரிவிற்குள் சென்றால் மருமகள் வரதட்சணை சட்டத்தையும் பயன்படுத்தலாம், IPC498A சட்டத்தையும் பயன்படுத்தலாம், கணவரை அவரது சொந்த வீட்டை விட்டே விரட்டலாம், ஆடம்பரச் செலவிற்கு பணம் கேட்கலாம் இப்படி பல வசதிகள் இருக்கின்றன.

இந்த சட்டத்தைப் பயன்படுத்துவோர் தனியாக
வரதட்சணை சட்டம், IPC498A போன்ற புகார்களை தரவேண்டும் என்ற அவசியமில்லை. சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால் இந்த குடும்ப பாதுகாப்புச் சட்டத்தை மருமகள்களின் பலம் மிக்க ரகசிய பாதுகாவலன் என்று கூட சொல்லலாம். மருமகள் பாதுகாப்புச்சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு ஒரு பரிசுப்பெட்டகம் போல் மருமகள்களுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பெருமைகளை வேறொரு பதிவில் எழுதுகிறேன். அதுவரை அவசரப்படாமல் யோசித்து முடிவெடுங்கள்.

வாழ்த்துக்கள்.





உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 3

கணவரை வீட்டில் வளர்க்கும் நாய் போல் நடத்துவது எப்படி?

இந்த மூன்றாவது பாடம் மிகவும் முக்கியமான பாடம். அதனால் முதல் இரண்டு பாடங்களை ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். கணவரை சமாளிக்க முடியாத திண்டாட்டத்தில் பாடங்களை மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று ஒரு முறை முதல் இரண்டு பாடங்களை நினைவு படுத்திக்கொள்ளவும்

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 2

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1


நான் முன்பே கூறியபடி இந்திய அரசால் இயற்றப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டங்களில் மிகவும் முக்கியமானது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498A. இதை நான் மருமகள்களின் அந்தரங்க தோழி என்று தான் சொல்வேன். ஏனென்றால் இது அந்த அளவிற்கு மருமகள்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

அப்படி என்ன மந்திரஜாலம் இதில் இருக்கிறது என்று நீங்கள் வியப்பாக கேட்கலாம். இந்த சட்டப்பிரிவின் கருத்துக்களை கீழே தருகிறேன் படியுங்கள். பிறகு நீங்களே மிகவும் வியந்து போவீர்கள்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;
or
(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”

படித்து உயர் பட்டம் பெற்று வெளிநாடுகளில் பணிபுரியும் பல மருமகள்கள் கூட வெளிநாடுகளில் கணவன் கொடுமைப்படுத்தினாலும் ஏதோ தங்களுக்கு
ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாதது போல பாசாங்கு செய்து அங்குள்ள போலிஸை அணுகி புகார் செய்யாமல், இந்தியாவிற்கு ஓடிவந்து போலிஸில் புகார் கொடுக்கிறார்கள். அப்போது தான் அங்கு என்ன நடந்தது என்று இந்திய போலிஸுக்கோ, நீதிமன்றத்திற்கோ உண்மை தெரியாது. ஆனாலும் அனைவரும் மருமகள் சொல்வதை மட்டும் தான் நம்புவார்கள். அதுபோன்ற ஆங்கிலம் படிக்கத் தெரியாத பல மருமகள்களுக்காக இதை மொழிபெயர்ப்பு செய்து எளிய வடிவில் தருகிறேன்.

498A பிரிவின் படி கணவரோ அல்லது அவரைச் சார்ந்த யாராகிலும் (உறவினர், நண்பர், பக்கத்து வீட்டுகாரர்கள் உட்பட) மனைவியை கொடுமைப்படுத்தினால் அவர்கள் மூன்றாண்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதில் கொடுமை இரண்டு வகைப்படும்:

1. எந்தவொரு காரணமுமில்லாமல் கொடுமை செய்து அது மனைவியின் உடலையோ அல்லது மனதையோ புண்படுத்தினால் அது கணவர் மனைவிக்கு செய்யும் கொடுமையாகக் கருதப்படும்.

உதாரணத்திற்கு வீட்டில் டிவி ரிப்பேர் ஆகிவிட்டது ஆனால் கணவர் வேலைப்பளு காரணமாக அதை சரி செய்யவில்லை என்றால் டிவியில் வரும் மெகா சீரியல்களைப் பார்க்காமல் உங்களது மனம் ஏங்கித் தவித்து வாடினால் அது கணவர் உங்களுக்குச் செய்த கொடுமையாகக் கருதப்படும். இது உண்மை. இந்தக் காரணத்தால் பல கணவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை அடைந்திருக்கிறார்கள்.

அதனால் டிவி, ரேடியோ, செல்போன், டாய்லெட் அடைப்பு, குழாயில் தண்ணீர் வரவில்லை போன்ற காரணங்களை சின்ன விஷயமாக நினைத்து அவ்வளவு எளிதில் விட்டுவிடாதீர்கள். இவையெல்லாம் கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்க உதவும் கருவிகள்.

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன். நடிகர் பிரசாந்த் அவர்களின் முன்னாள் மனைவி அவரது 498A புகாரில் பிரசாந்த் குடும்பத்தார் அவரை டாய்லெட் கழுவச் சொல்லி கொடுமை செய்ததாக எழுதியிருக்கிறார். அவர் கொடுத்த புகாரிலிருந்து சில பாயிண்ட்டுகள் உங்களின் வசதிக்காக தருகிறேன்.

1. She stated that her husband and herself were invited to Malaysia ..................... Her husband demanded electronic items such as LCD, TV, DVD Player, Home Theatre System, CDs and DVDs as Dowry, this resulted in huge expenses for her family.

2. Also she was not asked to lit the lamp in Pooja Room but in the living room.

(விளக்கேற்ற சொன்ன இடம் கூட 498A கேசு போட உதவும். மருமகள்களே Note this point)


3. She further complained that soon after the marriage, when she went to her in-laws house, Mr.Prashanth's bed room was not ready and the toilet was very worse. She was forced to stay in the living room.

4. Her mother-in-law and sister-in-law used to harass her for not bringing enough jewellery, sarees and Dowry.

5. Servants were not allowed to wash her clothes and to clean her toilet. She had to clean it on her own, and even the toiletries have to be sent from her parent's house.

6.
Mother-in-law forced her to eat Non-Vegetarian


(நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் என்ன உணவு கொடுக்கிறார்கள் என்று கூட குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒரு சமையல் செய்திருந்தால் அதுவும் உங்களை மனதளவில் கொடுமை செய்ததாக அர்த்தம். மாமியார் வீட்டு சமையல் என்னைக்கு மருமகளுக்கு பிடித்திருக்கிறது? அதனால் மாமியார் வீட்டில் அவர்கள் சமைப்பதே உங்களை கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான். 498A கேசு போட இது ஒரு நல்ல காரணம்.)


முழு அறிக்கையும் படித்து மேலும் பல நல்ல பாயிண்ட்டுகளை தெரிந்து கொள்ள ஆவலுடைய மருமகள்கள் இங்கே சென்று படிக்கவும் -->
நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை (PDF Format)


2. கொடுமையில் இரண்டாவது உட்பிரிவு வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்தல். இது உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவுகள் 3 & 4 நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மறந்து போயிருந்தால் முதல் இரண்டு பாடங்களை படியுங்கள்.

இனி மேட்டருக்கு வருவோம். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தையும் அடக்கி அடிமைகளாக வைத்திருப்பது எப்படி என்று பார்ப்போம்.

இப்போது நான் உங்களுக்கு உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியத்தை சொல்லுகிறேன். கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் பிறந்து இந்தியக் குடிமகனான ஒவ்வொரு ஆணுக்கும் இந்தியாவில் பிறந்த உடனே நாய்களுக்கு லைசென்ஸ் கட்டுவது போல் இந்த 498A என்ற சங்கேத குறியீடு தானாகவே குறியிடப்பட்டுவிடுகிறது. இந்த ரகசியம் மருமகள் உட்பட யாருக்குமே தெரியாது. இது தான் ஆண்களை ஒட்ட நறுக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சங்கேதக் குறியீடு. இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் "Emasculation" என்று கூட சொல்லாம். அதாவது கணவரை எல்லாவிதங்களிலும் அடக்கும் சக்தி இந்த 498A விற்கு உண்டு.

அதிர்ஷ்டவசமாக இந்த 498Aஐ தேவைப்படும் நேரத்தில் முடுக்கிவிடும் ரிமோட் கண்ட்ரோல் மருமகளின் கையில் தான் கொடுக்கப்படுகிறது. உடனே எங்களுக்கு அது போல் ரிமோட் கண்ட்ரோல் எதுவுமே கொடுக்கப்படவில்லையே என்று நீங்கள் சுற்றும் முற்றும் ஏக்கத்தோடு பார்ப்பது புரிகிறது. இந்த அப்பாவித்தனம் தான் மருமகள்களை அடிமையாக வைத்திருக்கிறது.

இன்னும் அந்த ரிமோட் கண்ட்ரோல் எது என்று தெரியவில்லையா! அது தான் ஊரறிய மேளம் கொட்டி தாலி என்ற வடிவில் உங்கள் திருமணத்தின் போது உங்கள் கழுத்தில் கட்டிவிடுகிறார்களே. அது தான் அந்த ரிமோட் கண்ட்ரோல்.

தாங்கள் எதை இந்தப் பெண்ணிடம் கொடுக்கிறோம் என்று கூட தெரியாமல் முட்டாள்கள் சந்தோஷமாக உங்களிடம் கொடுக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவி மருமகள்கள் தாலி எதற்கு என்று புரட்சி பேசித் திரிகிறார்கள். கணவனையும் அவனது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக ஆட்டிவைக்கும் ரிமோட் கண்ட்ரோல் சுவிட்ச் தான் உங்களிடம் கொடுக்கப்படுகிறதென்று இப்போதாவது புரிந்ததா?

இப்போது எல்லா மருமகள் கையிலும் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது. பிறகென்ன கணவனை எப்படி நடத்தவேண்டுமோ அப்படியெல்லாம் நடத்துங்கள்.

நான் இந்த பட்டனை அழுத்தி அது சரியாக வேலை செய்யாது போய்விடுமோ என்று நீங்கள் அச்சப்படுவதும் எனக்குப் புரிகிறது. கவலையே படாதீர்கள். இது "Made in india Product" கண்டிப்பாக மருமகள்கள் விஷயத்தில் நன்றாகவே வேலை செய்யும். எப்படியென்றால் நீங்கள் இந்தப் பிரிவின் படி ஒரு புகார் கொடுத்ததுமே புகாரில் நீங்கள் குறிப்பிட்ட ஆட்களையெல்லாம் போலிஸ் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். ஏனென்றால் இந்த சட்டப்பிரிவு அப்படிப்பட்டது.
IPC 498A is:

1. Cognizable
2. Non-bailable
3. Non-compoundable

அதாவது இந்த சட்டப்பிரிவு படி புகார் பதிவு செய்தவுடனே அனைவரையும் கைது செய்யும் அதிகாரம் போலிஸுக்கு இருக்கிறது. நம்ம ஊர் போலிஸுக்கு சொல்லவே வேண்டாம் சட்டம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு விதமாக ஒன்பது வகையான வேலைகள் செய்வார்கள். உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள் ---> கஞ்சா கேசில் முதல் வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். அதனால் கணவரையும், மாமியார் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கைது செய்வது எப்படி என்று அவர்களுக்கு சொல்லித் தரவேண்டியதில்லை என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். கைது செய்த பிறகு கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ போலிஸிடம் ஜாமின் கொடுத்து வெளியே வரமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக கொடுத்த வழக்கை திரும்பப் பெற முடியாது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்த 498A பிரிவின் கீழ் ஒரு ஆளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் மும்பையில் பிடிபட்ட தீவிரவாதியை கூட விட்டாலும் விட்டுவிடுவார்கள் ஆனால் கணவரையும் அவரது குடும்பத்தையும் போலிஸும் நீதிமன்றங்களும் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள். பல கட்டங்களில் "சிறப்பாக" கவனிப்பார்கள். பதிவு செய்யப்பட்ட புகார் உண்மையா பொய்யா என்ற பேச்சிற்கே இடமில்லை.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வழக்கம் போல் அரசாங்கம் இந்த சட்டத்தை மருமகள்களுக்காகவே இயற்றியிருப்பதால் இந்தப் புகாரில் மருமகள்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். பொய் சொன்னால் கூட மருமகள்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.

இதுவரை இதுபோன்ற கேசுகளில் பல கணவர்கள் கடைசிவரை போராடி சின்னாபின்னப்பட்டு நீதிமன்றத்தில் இது பொய் என நிருபித்து வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கேசில் கூட பொய் கேசு எழுதித்தந்த மனைவியை அழைத்து நீதிமன்றம் நீ ஏன் பொய் சொன்னாய் என்று இன்றுவரை ஒரு கேள்வி கூட கேட்டதில்லையென்றால் பாருங்கள் மருமகள்களுக்கு எவ்வளவு ராஜமரியாதை இருக்கிறதென்று. அதனால் மருமகள்கள் இஷ்டம் போல விளையாடலாம். எல்லாமே இலவசம்.

இதில் இன்னொரு வசதி என்னவென்றால் நீங்கள் எந்த செலவுமே செய்யவேண்டியதில்லை. எல்லாவற்றையும் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் இதில் உங்களுக்கு நல்ல வருமானமும் இருக்கிறது. அந்த வியாபார ரகசியத்தைப் பற்றி அடுத்த ஒரு பதிவில் எழுதுகிறேன்.

அதனால் உங்களுக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் கணவரின் முகத்தைப்பார்த்து பயந்து பயந்து கேட்கவேண்டியதில்லை. தைரியமாக இதை செய் என்று உத்தரவே போடலாம். உங்கள் கணவரிடம் நீங்கள் 498A என்பதை ஒரு மந்திரச் சொல் போல பயன்படுத்தலாம். இந்த மந்திரத்தைக் கேட்டவுடன் நாய் வாலை மடக்கிக்கொண்டு அஞ்சுவது போல நடுங்கிக்கொண்டு காலடியில் கிடப்பார்.

இதை நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு

1. தனிக்குடித்தனம் போகவேண்டும்
2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.

இன்னும் பல காரணங்கள் உங்களுக்குத் தெரியும். இது போல எல்லாவித எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். அது தான் ரிமோட் கண்ட்ரோல் கையில் இருக்கிறதே பிறகெதற்கு கவலைப்படவேண்டும். புகாரில் எழுத காரணங்களா இல்லை? வரதட்சணை தவிர மனதளவில் வேதனைப்பட வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன அல்லவா? எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள்.

இந்த சட்டத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? யாரும் இதற்கு எதிர்ப்பு சொல்லமாட்டார்களா என்று ஒரு சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். மருமகள்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் இந்த சட்டத்திற்கெதிராக பாதிக்கப்பட்ட வயதான தாய்மார்களும் சகோதரிகளும் கிளம்பி அரசாங்கத்திடம் முறையிட்டனர். ஆனால் மருமகள்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் நமது அரசாங்கம் எல்லாப் பெண்களும் பெண்கள் அல்ல, மருமகள்கள் மட்டும் தான் இந்தியாவில் பெண்களாகக் கருதப்படுவார்கள் என்று சொல்லி வயதானப் பெண்களைக் காப்பாற்ற தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கையை விரித்துவிட்டது.

அதைப்பற்றிய செய்தி இதோ செய்தித்தாளில் வந்திருக்கிறது ---> தினமலர், நவம்பர் 2009

செய்தித்தாளில் வந்த செய்தியின் ஒரு பகுதி....
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும்.

கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்தன.

இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது.

பிறகென்ன அரசாங்கமே இந்த சட்டத்தை எல்லாவிதத்திலும் பயன்படுத்திக்கொள்வதற்கு மருமகள்களுக்கு பச்சைகொடி காட்டிவிட்டது. அதனால் இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமும் தயங்காதீர்கள்.
வழக்கம் போல் இந்த சட்டப்பிரிவை உள்நாடு வெளிநாடு என நாடு வித்தியாசமில்லாமல் இந்தியக்குடிமகள், வேறுநாட்டுக் குடிமகள் என யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்தலாம். மருமகளாக இருக்கவேண்டும் என்பது தான் ஒரே ஒரு நிபந்தனை.

மற்றொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் எப்போதும் இந்த 498A புகார் எழுதும் போது இந்த மருமகள்களின் மகாராணியை தனியாக எழுதக்கூடாது. அது இந்த மருமகள்களின் ரகசிய சினேகிதியை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். அதனால் அதற்கு தோழியாக IPC 406, 506, Dowry Prohibition Act sections 3,4,5,6 போன்ற தோழிகளையும் கூடவே அனுப்புவது தான் காலம் காலமாக நடந்து வரும் மரபு. இந்திய மருமகள்களாக இருந்து கொண்டு மரபு மீறலாமா?

இந்த துணை சட்டப்பிரிவுகளை இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

மறக்காமல் 498A என்ற மந்திரத்தை எழுதி கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கண்ணில் படும்படியான இடங்களில் வீடு முழுவதும் மாட்டிவையுங்கள். பிறகு பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கிறதென்று.

வாழ்த்துக்கள்.


மருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 2

கணவர் வீட்டிலுள்ள குழந்தைகளை சிறையிலடைப்பது எப்படி?

இன்றைய பதிவில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பற்றிய இரண்டாவது பாடத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் முதல் பாடத்தை படிக்காத மருமகள்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளவும் --> வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1. அப்போது தான் இந்த இரண்டாவது பாடம் நன்கு புரியும்.

நீங்கள் உங்கள் கணவராலும் , அவரது குடும்பத்தாராலும் பலவிதங்களில் வரதட்சணை கொடுமை அனுபவிப்பதாக உணர்ந்தால் அவற்றிக்கு ஒரு முடிவு கட்ட இந்திய அரசு பல பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை கொடுத்திருக்கிறது.

வரதட்சணை கொடுமையை எப்படி அடையாளம் காண்பது என்று பல மருமகள்களுக்கு ஒரு ஐயம் இருக்கலாம். அவர்களுக்கான விளக்கம் இதோ:

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருமகள்களுக்கு கணவர் வீட்டில் எதையெல்லாம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறார்களோ அவையெல்லாம் வரதட்சணை கொடுமை என்று சொல்லலாம். உதாரணத்திற்கு நாத்தனாரின் பச்சிளம் குழந்தை வீட்டில் அழுதுகொண்டிருந்தால் அதுவும் உங்களை வரதட்சணைக்காக மனதளவில் துன்புறுத்துவதாக புகாரில் எழுதலாம். தவறொன்றுமில்லை. அதை உண்மையில்லை, வரதட்சணை கேட்பதற்காக குழந்தை அழவில்லை என்று நிருபிக்கவேண்டியது அவர்கள் தான். புகாரை எழுதித்தருவதோடு மருமகள்களின் வேலை முடிந்தது. அதற்குப் பிறகு போலிஸ், கைது, நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது குடும்பம் என்று இவர்களுக்குள் நடக்கும் கூத்து தான் எல்லாம். மருமகள்கள் ஜம்மென்று இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கவேண்டியது தான் வேலை. வேறொன்றுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இப்படி உங்களது மாமியார் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் வரதட்சணை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கலாம். வயது வித்தியாசமே பார்க்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தை முதல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர், சிறுமி வரை அனைவரையும் புகாரில் எழுதலாம். எந்தக்காரணத்தை வைத்து குழந்தைகளை சேர்ப்பது என்று தயங்கவேண்டாம். அந்தக் குழந்தைகள் உங்கள் கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற ஒரு காரணம் போதாதா?

அந்தக் குழந்தைகள் எப்படி என்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தமுடியும் என்று நீங்கள் புத்திசாலித்தனமாக யோசிப்பது புரிகிறது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் கொடுக்கப்போகும் புகாரை பதிவுசெய்து விசாரிக்கப்போகும் போலிஸ் தான் அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

ஆனால் மருமகள்களின் நல்ல காலம் போலிஸுக்கு அந்த அளவிற்கு யோசிக்கவேண்டும் என்ற பயிற்சியெல்லாம் காவல்துறையில் கொடுக்கமாட்டார்கள். இது 100% உண்மை. அதனால் நீங்கள் புகார் எழுதும்போது மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய பெயரையும் எழுதலாம்.

மறக்காமல் குழந்தைகள் பெயர்களையும் சேர்த்துவிடுங்கள். பிறகு மாமியார் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் தனியாகப் பிரித்து பெற்றோர்களை மட்டும் சிறைக்கு அனுப்பிய பாவம் உங்களை வந்து சேரும். குழந்தையையும் தாயையும் பிரித்த அந்தப் பழியை மருமகள் எதற்கு சுமக்கவேண்டும்?

இப்போதும் உங்கள் மனதில் எப்படி இது சாத்தியமாகும் என்ற ஒரு சந்தேகம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்காகத்தான் நான் இரண்டு செய்திகளை கீழே தந்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். பாயிண்ட்டுகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

செய்தி 1:

வரதட்சணை வழக்கில் பிறந்து 59 நாட்களே ஆன பெண் குழந்தையை ஒரு மருமகள் குற்றவாளியாக சேர்த்து வெற்றிகரமாக புகார் தந்திருக்கிறார். அந்தக் குழந்தையையும் போலிஸ் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அந்தக் குழந்தைக்கும் ஒரு வழக்கறிஞர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து அந்தக் குழந்தைக்கு ஒரு நீதிபதியும் ஜாமின் வழங்கியிருக்கிறார். இது நடந்தது மாநகரமான மும்பையில்.
இனி செய்தியை வாசியுங்கள்.


Two-month-old Zoya gets dragged into a dowry harassment case filed by her father's first wife. Legal experts, child rights activists react in shock at her having to get anticipatory bail to avoid arrest

In a case straight out of Ripley's Believe It Or Not, the Mumbai Sessions court last Wednesday (June 17, 2009) granted anticipatory bail for what must have been their youngest applicant ever a two-month-old baby: Zoya aka Mehak Shamshuddin Khan. Lucky for her, or Zoya could have ended up behind bars.

Mother Reshma Khan of two-month-old baby Zoya said the family was called for an inquiry to Nehru Nagar police station. She sat there with the baby in her arms for 10 hours without reprieve, from 1 pm till 10 pm. She even had to feed her baby in front of the police and visitors

Zoya, who has got bail on a surety amount of Rs 10,000, is a member of the Khan family from Kurla who have been accused by Shakila Khan (27) in a dowry harassment case and for a criminal breach of trust. The sessions judge S N Sardesai in his order granted bail for seven of the eight applicants who applied for the anticipatory bail.

Shakila lodged a complaint against Zoya's father and her divorced spouse Shamsuddin Khan at the Nehru Nagar police station and named the entire family in her letter, including Zoya, her biological mother (Shamsuddin's second wife), a neighbour and four relatives. Shakila accused them of harassing and demanding dowry of Rs one lakh and torturing her, the police said.

Khan's lawyers Anil Bhole and Lata Vhotkar said the police initially thought that the matter would be resolved between both parties amicably. "However, when Shakila submitted a complaint letter against Shamsuddin and his family in which his second wife Reshma's baby was also mentioned, he had to rush for anticipatory bail for all his family members," said Bhole.

The police registered the case on Wednesday evening against Khan and his family members, acting on Shakila's complaint letter submitted earlier.

"Shakila and Shamsuddin divorced two years ago and he has since remarried and had Zoya with his second wife," said Nasim Bano Khan, Shamsuddin's mother. The entire family, apart from Shamsuddin, was summoned to the Nehru Nagar police station on Friday for questioning. "We were at the police station from 1 pm to 10 pm. Who would have looked after my baby while we were being questioned by the policemen? Our baby is so small, so I have to still bring her along every time," said a distraught Reshma.

The case so far
Police have filed a case against Shamshuddin Khan (divorced husband of Shakila), his second wife, daughter, mother, brother, two sisters and one neighbour for dowry harassment (section 498), criminal breach of trust (section 406) and acts done by several persons in furtherance of common intention (section 34). Shamsuddin's bail application was rejected and he was arrested by the Nehru Nagar police station on Saturday.


மேலுள்ள செய்தியில் மற்றொரு குறிப்பும் உள்ளது. கவனித்தீர்களா? மாமியார் வீட்டிற்கு அருகில் வசித்தவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதனால் மருமகள்களுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அது யாராக இருந்தாலும் சரி அனைவரும் வரதட்சணை கொடுமை செய்த குற்றவாளிகளாக சேர்த்துவிடலாம். அதனால் உங்கள் வீட்டருகில் உங்களை மதிக்காமல் யாராவது நடந்து கொண்டால் அவர்களையும் ஒரு வழி செய்துவிடலாம். இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இருக்கும் வரை மருமகள்களை யாரும் அசைக்க முடியாது.


செய்தி 2:


வரதட்சணை கேட்டு மருமகள் கொல்லப்பட்டதாக எழுதப்பட்ட வழக்கில் போலிஸ் கடைசி வரை புலன் விசாரணை செய்து கணவரின் 5 மற்றும் 6 வயதுள்ள L.K.G. படிக்கும் இரண்டு தங்கைகளையும் மருமகளை கொலைசெய்ய திட்டமிட்டு கூட்டாக கொலை செய்ததாக விசாரணை அறிக்கை தயார் செய்து இப்போது கைது செய்வதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


What IPC? Cops set to arrest kids for killing 'bhabhi'

Times of India News,

SASARAM: Can Class I and LKG kids torture and assault a woman to death? Or, to be more liberal, can children of this age collude with their grown-up kin to execute a killing in their household? Indian Penal Code (IPC)'s Section 82 says: "Nothing is an offence which is done by a child under seven years of age." But either Kaimur police have not read the rule book or they care a damn about it.

In yet another instance of sham police investigations making ridiculous conclusions in criminal cases, Chaniya Khatun, 6, and her sister Soni Khatun, 5, along with six other family members have been held guilty by police of having killed an 18-year-old woman.

With Kaimur superintendent of police P K Srivastava agreeing to the Bhabhua DSP Sanjay Kumar's supervision note and ordering the arrest of the accused, the eight, including the two girls, are likely to be arrested "any moment now". "I have already procured a warrant of arrest against the eight accused," said R K Singh, station house officer of Sonhan police station.

It was the Sonhan PS which lodged an FIR in the case on September 2 this year after the court of Bhabhua chief judicial magistrate (CJM) forwarded a complaint case to it for investigation. In his complaint, filed in the CJM's court on August 18, one Shah Mohammad of Khair village alleged that his 18-year-old daughter Akhtari Begum, who was married to one Md Tajuddin of Pawandi village in Rohtas district, was killed by her husband and in-laws on July 26 for dowry. As it happens in such cases, all the in-laws were named as accused.

On September 24, Bhabhua DSP Kumar along with the investigating officer visited Pawandi and supervised the case. He also interrogated the minor sisters and arrested the girl's father-in-law. His supervision note concluded that the accusation appeared to be true as those named accused had tortured and assaulted Akhtari to death for dowry. Akhtari was the wife of the brother of Chaniya and Soni, who study in a primary school.

Srivastava just okayed the DSP's findings and ordered the arrest of the accused. In case they elude police, their property will be attached, he further ordered.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இப்போது மருமகள்களுக்கு குழந்தைகளையும் வரதட்சணை புகாரில் சேர்ப்பதற்கு ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கும் என நினைக்கிறேன். வழக்கம் போல் உள்நாடு வெளிநாடு என நாடு வித்தியாசம் பார்க்காமல் எல்லா மருமகள்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாட்டு மருமகள்களுக்கு ஒரு குறிப்பு - மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகள் பெயரை புகாரில் சேர்க்க நீங்கள் இந்தியாவில் இல்லையே என்று வருத்தப்படவேண்டாம். இந்தியாவிலுள்ள மாமியார் வீட்டிலிருந்து குழந்தை போன் செய்து என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியது என்றும் எழுதலாம். போலிஸ் உடனே குழந்தையின் பெயரை IPC 498A, 506(2) என்ற பிரிவுகளில் சேர்த்து கைது செய்துவிடுவார்கள்.

வாழ்த்துக்கள்!